சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

9 வேஷம் சிவாஜி செய்ய இன்ஸ்பிரேசன் இதுதான்

ஒரு நடிகர் ரெண்டு வேஷம் போட்டு பாத்திருக்கு தமிழ் சினிமா .மூணு வேஷம் போட்டு நடிச்சதையும் பாத்திருக்கு.இதுக்கு மேலே அஞ்சு வேஷமா ஆறு வேஷமா ஒரே நடிகர் ஒரு படத்துல நடிச்சா எப்படியிருக்கும்.வேஷம்னா மேக்கப் மட்டும்  மாத்தி மாத்தி நடிக்கிறதில்லே.ஒரு கேரக்டராகவே நடிக்கிற மாதிரி பல கேரக்டருங்க ஒரே படத்துலே பண்ணுனா பாக்கறதுக்கு எப்படியிருக்கும் அப்படிங்கறதுதான்.
1964 ஆம் வருஷம் வரைக்கும் தமிழ்சினிமாலே அந்த மாதிரி மேஜிக் நடக்கலே.அந்த வருஷந்தான் அது நடந்துச்சு.
சிவாஜியோட நவராத்திரி படம் வந்தப்போ மேலே சொன்ன விஷயம் நடந்துருச்சு.
சிவாஜி இந்த வேஷங்களை செய்யணும்ங்கற எண்ணம் சிவாஜி சினிமாலே நடிக்கறதுக்கு முன்னாலேயே சிவாஜிக்கு இருந்திருக்குன்னு சொன்னா அது ஆச்சர்யமான செய்தி இல்லே. அது தான் உண்மை.
சிவாஜி நாடகத்துல   நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலே சிவாஜிக்கு புடிச்ச ஒரு நாடக நடிகர் சாமண்ணா.
இவரு நடிச்ச நாடகங்களை சிவாஜி அடிக்கடி போய் பார்ப்பார்.
இந்த சாமண்ணா நடிச்ச ஒரு  நாடகந்தான் "டம்பாச்சாரி "
அப்படிங்கற நாடகம்.
இது காமெடியான ஒரு காதல் நாடகம்தான்.தான் காதலிக்கிற பெண்ணை தன்னை விரும்ப வெச்சு அவ காதலை விரும்பி சொல்ல வைக்கிற ஒரு தமாஷ் நாடகம் இந்த டம்பாச்சாரி நாடகம்.
இதுல என்னப்பா பெரியவிஷயம் இருக்குன்னு நினைக்கலாம்.விஷயம் நாடக கதையிலே இல்லே.டம்பாச்சாரிலே சாமண்ணா செஞ்ச பல விதமான வேஷந்தான் விசேஷம்.காதலியை தன்னோட வழிக்கு கொண்டு வர வேண்டி சாமண்ணா போடற பல வேஷங்கள்தான் நாடகத்தோட பலமே.
இந்த நாடகத்துலே சாமண்ணா தவசிப்பிள்ளை,மாமா,
அமீனா,செட்டியார்,வக்கீல்,
நாரதர்,அப்பர்சாமி ,
தமிழ்ப்புலவர்,சட்டிப்பரதேசி,வெள்ளைக்கார இன்ஜீனியர்னு இப்படி பல வேஷங்களை செஞ்சு நாடகம் பாக்கற எல்லோரையும் அசர வைப்பார்.இந்த கேரக்டர்களையும் பாருங்க ,ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாமே எவ்வளவு வித்தியாசாமா இருக்குன்னு.இதுலயும் வெள்ளைக்கார இன்ஜீனியரா நடிச்சு ,வெள்ளைக்காரன் தமிழ் பேசறது மாதிரி  சாமண்ணா நடிச்சததெல்லாம் காமெடியோட உச்சமா இருந்ததாம்.
இது சினிமா இல்லே.டைம் எடுத்து மேக்கப் மாத்தி  போட்டு நடிக்கறதுக்கு.நாடகத்துலே ஸ்கீரீன் மறுபடி ஏர்றதுக்குள்ளே 
மேக்கப் போட்டு சடார்னு ஸ்டேஜுல வந்து நிக்கணும். 
குரலை மாத்தி பேசணும்.பாடி லாங்குவேஜை மாத்தணும்.ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியா வித்தியாசமான நடிப்பை காட்டணும்.இந்த சாமண்ணாவோட நடிப்புக்காகவே நாடகம் சக்கை போடு போட்டது.

இந்த நாடகத்தை சிவாஜியும் பாத்தார்.சாமண்ணாவோட அந்த வேஷங்கள் மாதிரியே நாமும் பல வேஷங்களை போட்டு நடிக்கணுங்கற ஒரு ஆசைய அப்பவே தன் மனசுலே விதைச்சுட்டார்.சினிமாவுக்கு வந்து ரொம்ப ரொம்ப பிசியாவே நடிச்சிட்டு இருந்தார் சிவாஜி.டம்பாச்சாரி நாடகம்  மாதிரி ஒரு கதையயையும் எந்த டைரக்டரும் சிவாஜிகிட்டே ரொம்ப நாள் கொண்டு வரவே இல்லே.
1962 லே பந்துலுதான் பலே பாண்டியா படத்துலே சிவாஜிக்கு மூணு வேஷத்துலே நடிக்க வெச்சார்.சிவாஜியோட அந்த மூணு வேச நடிப்பை பாத்து சினிமா பீல்டுலே இருந்தவங்களே அசந்து போனாங்க.இத்தனைக்கும் அந்த படத்துலே சிவாஜி நடிச்சது மொத்தம் 11 நாள்தான்.

இந்த படம் வந்து ரெண்டு வருஷம் கழிச்சு A.P.நாகராஜன் ஒரு கதையை ரெடி பண்ணி இருந்தார்.கண்டிப்பா இந்த படத்தை சிவாஜிதான் செஞ்சாகணும்ற எண்ணம் அவருக்கு இருந்துச்சு.சிவாஜி அந்த டயத்துலே வேற எந்த படத்துக்கும் கால்ஷீட் உடனடியா ஏதும் தர முடியாதுங்கற நிலைமை.வி.கே.ராமசாமி சிவாஜியோட நெருங்கிய நண்பர் அப்படிங்கறதாலே அவர் மூலமா அந்த படத்துலே சிவாஜியா நடிக்க வெக்கலாம்ணு நாகராஜன் ஐடியா பண்ணுணாரு.
வி.கே. ராமசாமி சிவாஜிகிட்டே விஷயத்தை சொல்ல,ஏன் ராமு நான் எப்படி இடைவெளி இல்லாமே நடிச்சுகிட்டு இருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும்.இந்த டயத்துலே திடீர்னு இந்த படத்துலே நடிக்கனும்னு கேட்டா எப்படின்னு சிவாஜி விகேஆரைப் பாத்து கேக்க ,முதல்ல கதையைக் கேளுங்க ,மத்தத அப்புறம் பேசிக்லாம்னு சொல்லிட்டாரு.
நாகராஜனும் சிவாஜிக்கு கதையை சொல்லிட்டு,இந்த படத்துக்காக நீங்க Day கால்ஷீட் ஏதும் தர வேணாம்.இந்த படம் பூராவும் நைட்லே நடக்கறது மாதிரியான கதை.கொஞ்ச நாள் மட்டும் நீங்க பகல்ல நடிச்ச முடிச்ச பின்னாலே நைட் கால்ஷீட்லே நடிக்க வாய்ப்பு கொடுங்க.நான் அதுக்குள்ளே நீங்க சம்பந்தப்பட்ட காட்சிகளை  எடுத்து முடிச்சிடுவேன்னு சொல்லிட்டாரு.
சிவாஜி ரொம்ப நாளா செய்யணும்ங்கற அந்த கான்செப்ட் இப்ப வருது.தன்னோட நடிப்பு பசிக்கு இது சரியா அமையும் அப்டிங்கற ஒரு முக்கிய காரணம்தான் இந்த படத்துலே சிவாஜி நடிக்க சம்மதம் சொல்ல வெச்சதுன்னு சொல்லலாம்.
எத்தனையோ வருஷத்துக்கு முன்னாலே பாத்த டம்பாச்சாரி நாடக கனவு 1964 லே தான் நிறைவேறுச்சு.நான் ஆரம்பத்துலே சொன்ன விஷயம் ஒரே நடிகர் பல கேரக்டர்களை ஒரே படத்துலே சிவாஜி செஞ்சதுதான் இதுல ரொம்ப ஸ்பெசல்.சாமண்ணா மாதிரி பல மேக்கப் போட்டு ஒரே கேரக்டரா இல்லாமே வெவ்வேற கேரக்டரா நடிச்சதுதான் சிறப்பு.
டாக்டர்,தொழுநோயாளி,
பாகவதர்,விவசாயி,போலீஸ் ஆபீசர்,குடிகாரன்,முரடன்,
பணக்கார கண்ணியவான்,
அப்படின்னு நவராத்திரி சிவாஜியோட ஆசையையும் தமிழ் ரசிக  மக்களோட ஆசையையும் ஒரு சேர நிறைவேத்திடுச்சு.இதுக்கு மேலே எந்த நடிகனாலேயும் இப்படி ஒரு நடிப்பை கொடுக்க முடியாதுன்னு இன்னைக்கு வரைக்கும் பேச வெச்சிட்டு இருக்கற  படம் நவராத்திரி.

இந்த நேரத்துலேதான்,
கர்ணன் படத்துக்காக பந்துலு ரொம்ப செலவு செஞ்சிருக்கார்னு சிவாஜி முரடன் முத்து படத்தை இலவசமா நடிச்சு கொடுத்தார்.
முரடன் முத்து படத்தை பந்துலு சிவாஜியோட 100 வது படமா வெளியிடனும்னு ஆசைப்பட்டார்.சிவாஜி அற்புதமா நடிச்சு தமிழ் சினிமாவுலேயே ஒரு அதிசய படமா எடுக்கப்பட்ட நவராத்திரி படத்தைதான் சிவாஜியோட 100 வது படமா வெளியிடணும்னு எல்லோரும் சொல்ல நவராத்திரியே 100 வது படம் அப்படிங்கற அறிவிப்போடு வெளியாச்சு.

நவராத்திரி படத்துக்காக ஒன்பது சிவாஜி இருக்கற  மாதிரி ஒரு பெரிய பேனர் மெட்ராசுலே ஜெமினி ரவுண்டானா பக்கத்துலே வெச்சிருந்தாங்க. ஒரு நடிகர் ஒன்பது வேஷத்துலே இருக்கற அந்த பேனரே ரொம்ப அதிசயமா இருந்துச்சு.அந்த பேனரை பாக்கறதுக்காக வெளியூர்லே இருந்தெல்லாம் மக்கள் வந்து கூட்டம் கூட்டமா பாத்தாங்க அப்படிங்கறது சிறப்பு செய்தி.


செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற