காதல் பாட்டோ சோகப்பாட்டோ தத்துவ பாட்டோ எந்த பாட்டா இருந்தாலும் வரிகளை கொட்டிகிட்டே வர்றப்போ இடையிலே சான்ஸ் கிடைச்சா தன் சொந்த அனுபவத்தையோ நாட்டு நடப்பையோ அரிசியலைக் கூட கலந்து அடிச்சிடுவார் கண்ணதாசன்.அப்ப அவரோட மூடு எப்படி இருக்குதோ அதுக்கு தகுந்த படி வார்த்தைகளை கொட்டி எழுதிடுவார்.அப்படி சினிமா உலகத்துலே அவர் எழுதின பாட்டுகள் அதிகம்.இப்படிப்பட்ட ஒரு பாட்டுலதான் முக்கியமான அரசியலை கலந்து எழுதியிருந்தார் கண்ணதாசன்.அதுவும் ஒரு சாமி பாட்டுலே ,அதுவும் ஒரு அம்மனை பத்தி பாடற பாட்டுலே .பொதுவா மத்த கவிஞர்களா இருந்தா இதை தனி பாட்டாத்தான் எழுதுவாங்க.சாமி பாட்டுலே எல்லாம் எழுத மாட்டாங்க.கண்ணதாசன் தான் தைரியமா இதை செய்வாரு.கண்ணதாசன் எந்த படத்துலே,என்ன சாமி பாட்டுலே எதுக்காக அதை எழுதுனாரு அப்படிங்கறத இதுல பாக்கலாம்.
அதுக்கு முன்னாலே இந்த பாட்டுலே அந்த அரசியல் வரிகளை ஏன் கலந்தார்னு சொல்றதுக்கு முன்னாலே அந்த அரசியல் விஷயத்தை பாக்கலாம்.
1967 லே தமிழ்நாட்டுல நடந்த சட்டசபைத் தேர்தலிலே விருதுநகர்லே போட்டியிட்ட காமராஜர் தோத்துட்டார்.1200 வாக்கு வித்தியாசத்துலே.9 வருஷமா தமிழ்நாட்டை எப்படியெல்லாம் ஆட்சி செஞ்சார் காமராஜர் .எத்தனை திட்டங்கள் ,எத்தனை வேலை வாய்ப்புக்கள் ,எத்தனை தொழில் வளர்ச்சிகள் அவருடைய காலத்துலே சிறப்பா அமைஞ்சிருந்தது.ஒரு பைசா லஞ்சம் ஊழல் செய்யாத முதலமைச்சரா காமராஜர் தான் இருந்தாரு.இப்படிப்பட்ட தலைவரை தோக்கடிச்சது நியாயமாங்கற கேள்வி இன்னைக்கு வரைக்கும் இருக்குது.தமிழ்நாட்டு
அரசியல்லே காமராஜரோட தோல்வியை யாராலயுமே ஏத்துக்க முடியலே.
ஆனாலும் தோத்தாச்சு .என்ன பண்றது .அடுத்த எலெக்சன் வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.
மறுபடியும் காங்கிரஸ் ஆட்சி வரணும் .
காமராஜர் மறுபடியும் முதல்வர் ஆகணும்ங்கற விருப்பம் எல்லோருக்கும் இருந்துச்சு.
அதை மனசுலே வச்சுட்டுத்தான் கவியரசர் இந்த பாட்டுல அந்த வரிகளை சேத்தார்.
பட்டிக்காடா பட்டணமா படத்துல சிவாஜி பாடற மாதிரி ஒரு பாட்டு. அம்பிகையே ஈஸ்வரியேங்கற பாட்டு.இது ஊர்த்திருவிழாவிலே அம்பிகையைப்பத்தி சிவாஜி பாடற பாட பாட்டு.இந்த பாட்டுலே எப்படி அரசியலை சேக்க முடியும்.கவியரசராலே முடியாததா?
அம்பிகையே ஈஸ்வரியேன்னு பாட்டுக்கான வரிகளை எழிதிட்டே வந்துட்டு இருந்தவர் பாட்டோட கடைசியிலே ,
சிவகாமி உமையவளே முத்துமாரி - உன்
செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி - இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறின்னு ..
இந்த வரிகளை கொண்டு முடிச்சுட்டார்.
இந்த வரிகள்லே சிவாகாமிங்கற பேர் காமராஜரோட தாயார் பெயராகும்.அவங்களோட மகனான காமராஜரே மறுபடி முதல்வரா வரணும்னு அவரை இந்த மக்கள் ஜெயிக்க வைக்கணும்னு வரிகளை அமைச்சிருப்பார் கண்ணதாசன்.
சாமி பாட்டுலே கூட எப்படி அழகா எந்த உறுத்தலும் இல்லாம ஒரு அரசியலை சொல்லி இருக்கார் பாருங்க கண்ணதாசன்.
இது கண்ணதாசனோட விருப்பமா இருந்தாலும் 1967 சட்டசபை தேர்தல்லே காமராஜர் தோத்த பின்னாலே அவருக்கு தமிழ்நாட்டு முதல்வர் பதவியை வகிக்கணும்னு ஆசை இல்லேதான் சொல்லணும்.
1971 மக்களைவைத் தேர்தல் நடந்தப்போ நாகர்கோவில் தொகுதியில் நின்னு அதுல ஜெயிச்சு சாகற வரைக்கும் அந்த தொகுதி MP யா இருந்தார் காமராஜர்.அவருக்கு இருந்த மன வேதனை எல்லாம் காங்கிரஸ் ரெண்டா பிரிஞ்சதும்,மிசா சட்டமும் ,அதை பலவந்தமா நடத்துன இந்திராகாந்தியோட நடவடிக்கைகளும்தான்.இந்த மாதிரி பிரச்சினைகள் ஏதும் நடக்காம இருந்திருந்தா காமராஜர் மறுபடியும் முதல்வர் ஆகி இருக்கலாம்.
பட்டிக்காடா பட்டணமா படத்துல வந்த அம்பிகையே ஈஸ்வரியே பாடலை சிவாஜி பாடற மாதிரி இருந்ததாலே ,காமராஜரை பத்தி சொல்ல இதை விட பொருத்தமான வாய்ப்பு இருக்காதுன்னு நினைச்சு தான் இந்த அரசியல் நிகழ்வுகளை வெச்சு கண்ணதாசன் எழுதி இருந்தார்னு சொல்லலாம்.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக