சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி பத்மினி Top 10 விஷயங்கள்

நடிகர்திலகத்தோட முதல் காமெடி படம் எது தெரியுமா ? கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
அந்த முதல் காமெடி படத்துல சிவாஜிக்கு ஜோடியா நடிச்சது பத்மினி

சிவாஜியோட முதல் பட விநியோகம் எது தெரியுமா ?அமரதீபம்…
இந்த படத்துலேயும் நடிச்சவர் பத்மினி

சிவாஜியோட  முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…
இதுலயும் நடிச்சிருப்பார் பத்மினி.

சிவாஜி செஞ்ச முதல் இரட்டை வேட படம் உத்தமபுத்திரன்…
இதுலயும் பத்மினிதான்

தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம் எதுன்னு தெரியுமா  ?வீரபாண்டிய கட்டபொம்மன்.இதுலயும் பத்மினி நடிச்சிருப்பாங்க.

ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது வாங்குன படம் வீரபாண்டிய கட்டபொம்மன்…அப்ப சிவாஜியோட அயல்நாட்டுக்கு கூட போனவரும் பத்மினி.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிச்ச முதல் படம் எது தெரியுமா ? வியட்நாம் வீடு...
இதுலயும் ஜோடியா நடிச்சிருப்பாங்க பத்மினி .

இப்படி சிவாஜியோட  பல முதல் முதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல  பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. 

ஒவ்வோரு நடிகருக்கும் ஒரு நடிகை பொருத்தமான ஜோடியா அமைஞ்சிருக்கும்.இந்த காலத்துலே இதை கெமிஸ்ட்ரி அப்படிங்கறாங்க.சிவாஜி எப்படி சினிமாலே டாப்போ அதே மாதிரி முதல் டாப் கெமிஸ்ட்ரி ஜோடின்னா சிவாஜி பத்மினிதான்.

சம்பூர்ண ராமாயணம் பட ஷுட்டிங்குக்காக ஓஹேனக்கல் போயிருந்தாங்க.ஷூட்டிங் முடிஞ்சதும் எல்லாரும் ரெஸ்ட் எடுக்க போயிடுவாங்க.
சிவாஜியோ துப்பாக்கியும் கையுமா வேட்டைக்கு கிளம்பிருவார்.நடு ராத்திரி வரைக்கும் வேட்டையாடிட்டுத்தான் வருவார்.ஒரு நாள் முயல் கிடைச்சிருக்கு.அதை அப்பவே பத்மினிக்கு கொண்டு வந்து கொடுத்தார் சிவாஜி.

ஆரம்பகாலத்துல சிவாஜியை கணேஷ்னுதான் பத்மினி கூப்பிடுவார்.சிவாஜி பத்மினியை எப்பவும் பப்பின்னுதான் கூப்பிடுவார்.
உற்சாகமா இருந்தார்னா பேப் அப்பிடின்னு கூப்பிடுவார்.

1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தாங்க.ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில வர்ற ‘ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ங்கற பாட்டு இடையிலே சிவாஜியோட கண்ணை பறிச்சுட்டாங்கறத பாத்த பின்னாலே ஜோடியா நடிச்ச பத்மினி அதை பாத்து ஒரு ஆக்ரோசமா சத்தம் போடணும்.அது வரைக்கும் சாதாரணமா நடிச்சுட்டு இருந்தவங்க இந்த ஷாட் வந்தப்போ 'வீல்'னு அலறுவாங்க.ஸ்டுடியோவே அசந்து போச்சு.இது பத்தி சிவாஜி ரொம்ப இயல்பா இருக்கு பப்பி ,நல்லா இருந்துச்சு அப்படின்னு பாராட்டியிருக்கார்.சிவாஜி சொன்னதை பத்மினி,
அவருகிட்ட இருந்து லேசிலே பாராட்டு வாங்க முடியாது.
அவரே பாராட்டிட்டார்னா அதுக்கு மேலே பெரிய பாராட்டு எதும் இருக்க முடியாதுன்னு சொல்லி இருக்காங்க.மத்தவங்க
பத்மினியோட இந்த நடிப்பை பாராட்டுனப்போ ,
இதுக்கெல்லாம் காரணம் சிவாஜிதான்.அவர்கிட்ட இருந்துதான் எப்படி நடிக்கணுமின்னு நான் கத்துகிட்டேன்னு சொல்லியிருக்காங்க.

பத்மினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கறப்போ சிவாஜி ,
‘நான் நாடகத்தில் நடிச்சு பழகுனவன். முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டறதுக்கு கத்து  பேர்  வாங்குனவள். உனக்குச் சொல்லிக் கொடுக்கறதுல  எனக்கு என்ன சிரமம்?’னு சொல்லி இருக்கார். 

சிவாஜி காலையிலே ஏழு மணிக்கெல்லாம் வந்து மேக்கப் எல்லாம் போட்டு தயாரா இருப்பாரு.நாங்க லேடீஸ் இல்லையா எவ்வளவு வேகமா மேக்கப் போட்டு ரெடியானாலும் 10 மணிஆயிடும்.நான் மேக்கப் போட்டு வர்றப்போ அவரு தயாரா உக்காந்து இருப்பார்.அதை பாத்து எனக்கு வெட்கம் வந்துடும்.


ஒரு டஜன் படங்கள்ல சிவாஜி நடிச்சுட்டு இருப்பார் .ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி கதைகள்.நானும் அப்ப பல அவரோட பல படங்கள்ல நடிச்சிட்டிருப்பேன்.ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் எப்படி குழப்பமில்லாமே அதே சமயம் ரொம்ப சிறப்பாகவும் எப்படி மாறி மாறி கரெக்ட்டா பண்றார்னு ரொம்ப ஆச்சர்யமாஇருக்கும்.
அவரு ஒரு பிறவி நடிகர்.

சிவாஜியோட முக்கியமான பல படங்கள்ல பத்மினி நடிச்சிருந்தாலும் சிவாஜியோட கனவுப்படமான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல பத்மினி நடிச்சிருந்தும் சிவாஜிக்கு ஜோடியா நடிக்கலே.

எல்லாப் படத்துலேயும் சிவாஜிக்கு அடங்கி நடிக்கிற மாதிரி நடிச்ச பத்மினி லட்சுமி வந்தாச்சு படத்துலே தன்னோட அதிகாரத்தை காட்டற மாதிரி கேரக்டர்லே நடிச்சிருப்பார்.

பிரபலமான ஜோடியா நடிச்சிகிட்டுருந்த காலகட்டத்துலேயே சிவாஜிக்கு சித்தியா,அண்ணியா மங்கையர்திலகம்,
எதிர்பாபாரதது படங்கள்ல நடிச்சிருந்தார் பத்மினி.இது எந்த காலகட்டத்துலேயும் எந்த நடிகையும் செய்யாத விஷயம்.

தீபம் படத்துலேயும் ,ராமன் எத்தனை ராமனடி படத்துலேயும் ஒரே ஒரு சீன் மட்டும் நடிச்சிருந்தார் பத்மினி.

ஜோடியா நடிச்ச நடிகைள்ல சிவாஜிய அடிக்கற மாதிரி காட்சியிலே நடிச்ச ஒரே ஒரு நடிகையும் பத்மினிதான்.எதிர்பாராதது படத்துலே சிவாஜியை அறையோ அறைன்னு நிஜமாவே அறைஞ்சு நடிச்சிருப்பார் பத்மினி.

38 வயசு ஆன பின்னாலே பத்மினி சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாங்க.
A.P.நாகராஜன் தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக கூப்பிட்டப்போ அவர் பத்மினிகிட்ட சொன்ன விஷயம் : மோகனாம்பாள்னா பத்மினி,சிக்கல் சண்முகசுந்தரம்னா சிவாஜி,நீங்க இல்லாமே இந்த படத்தை எடுக்க மாட்டேன்னு சொன்னதை பாத்து அந்த படத்துலே நடிச்சாங்க பத்மினி.

1979 ஆம் வருஷம் மியூசிக்அகாடமியிலே பத்மினி ராமாயணத்தை ரெண்டுநாள் மேடை நாட்டிய நாடகமா நடத்துனாரு.நாடகம் நடக்கையிலே திடீர்னு மேடைக்கு கமலாஅம்மாவோட சிவாஜி வந்தார்.வந்தவரு ஒரு ஆள் உயரத்துக்கு ஒரு மாலையை தானே மேடைக்கு தூக்கிட்டு வந்து பத்மினிக்கு போட்டாரு.இது பத்மினிக்கே ஆச்சர்யமாத்தான் இருந்துச்சு.ஏன்னா சிவாஜி நாடகம் பாக்க வர்றதைப்பத்தி பத்மினிகிட்டே சொல்லாமே  ப்ளசண்ட் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சிவாஜி அப்படி செஞ்சார்.

ஒலிம்பிக் விளையாட்டுக்களை பாக்கறதுக்காக 1996 வாக்குலே சிவாஜி அமெரிக்கா போனாரு.சிவாஜி அமெரிக்கா வர்றார்னு பத்மினி ஏர்போட்டுக்கு வந்து சிவாஜியை பாத்தார்.அப்ப பத்மினி ஹார்ட் ஆபரேசன் எல்லாம் பண்ணி தோற்றத்துலே கொஞ்சம் மாறி இருந்தாங்க.சிவாஜிக்கு 
அடையாளம் தெரியலே.பத்மினின்னு தெரிஞ்ச பின்னாலே கண் கலங்கிட்டாரு.

அமெரிக்காலே இருந்து பத்மினி எப்ப தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அன்னை இலத்துக்கு வராம இருக்க மட்டாங்க.சிவாஜியோட பிறந்தநாள் கல்யயாண நாள்னு எந்த விசேஷமா இருந்தாலும் போன்லயாவது கூப்பிட்டு வாழ்த்து சொல்லிடுவார் பத்மினி.ஆனா சிவாஜிக்கு பத்மினியோட பிறந்த நாள் கூட தெரியாது.

மிக பிரபலங்களோட டாப்டென் மூவி லிஸ்ட்டை பாத்தா ஒல்வொருத்தரோட லிஸ்டும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
ஆனா பெரும்பான்மையா எல்லோரோட லிஸ்ட்டிலேயும் தில்லானா மோகனாம்பாள் இருக்கும்.

பத்மினியோட டான்சுக்கான டாப்பான படமா தில்லானா மோகனாம்பாளை சொன்னாலும் அதை விட பத்மினியை ரொம்ப ஆட வெச்சது திருவருட்செல்வர் படத்துலே வர்ற மன்னவன் வந்தானடி பாட்டுத்தான்.
தில்லானா மோகனாம்பாளில் ஒட்டுமொத்தமாக கொட்டுன கடும் உழைப்பை மிஞ்சுகிற மாதிரி, ஒரே ஒரு நாட்டியத்துக்காக பத்மினி ஆடுனது திருவருட்செல்வரில் இடம் பெற்ற ‘மன்னவன் வந்தானடி…’ பாடல் காட்சிக்குத்தான்.திரையில ஏறக்குறைய ஏழு நிமிடங்கள் வரும்.
‘மன்னவன் வந்தானடி…’ பாடல பத்தி பத்மினி சொன்னது:
‘இந்தப் பாட்டுல நீங்க ஒன்பது உருவங்களுக்கு முன்னால் நடனம் ஆடணும்னு ஏ.பி.என். சொன்னப்போ உற்சாகமாக இருந்துச்சு. ஷூட்டிங்கின்போது அதன் சிக்கல் புரிஞ்சது.வண்ணச்சித்திரமான திருவருட்செல்வரில், ஒவ்வொரு பதுமை முன்பும் நான் வெவ்வேறு ஆடைகளில் ஆட வேண்டும். கேட்பானேன்?
சரியான சோதனை. பத்து நாள்கள் இடைவிடாமல் உடை மாற்றி மாற்றி ஆடியதில், நான் அல்லாடிப் போனேன். சிக்கலான மேக் அப் வேறு. பாட்டில் சில அடிகள் படமானதும், நான் புதிய காஸ்ட்யூமில் வருவேன். அடுத்த வரிகளுக்குத் தொடர்ந்து ஆடுவேன். அதுபோல் ஒன்பது தடவைகள் நடந்தது.
இனிமையான கர்நாடக இசை நாதமும், அதற்கேற்ப எனது ஆடலும் பிரம்மாண்ட தர்பாரில் நடிகர் திலகம் வந்து நிற்கும் கம்பீரமான தோற்றமும், என்றும் என் மனத்தை விட்டு அகலாது. அதற்காக நான் பட்ட பாடு அம்மாடி! அந்த மாதிரி வேறு எந்தப் பாட்டுக்காவது நான் கஷ்டப்பட்டிருப்பேனா... சந்தேகம்தான்’.னு பத்மினி இந்த பாட்டுக்கு ஆடுனதைப் பத்தி சொல்லி இருக்காங்க.

சிவாஜி பத்மினியோட முதல் படம் பணம்.
கடைசி படம் லட்சுமி வந்தாச்சு.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற