நாதஸ்வரம்னு ஒரு வார்த்தையை சொன்னா சினிமா ரசிகர்களுக்கு தில்லானா மோகனாம்பாள் நினைவும் கூடவே வரும். அந்த படம் அடிச்சு தூக்குன விதம் அப்படி .ஹைகிளாஸ் சினிமாக்களை மட்டும் பாக்கற ஆடியன்ஸை மட்டுமில்லே ,தரையிலே உக்காந்து அலப்பறை பண்ற ரசிகர்களையும் அசுரத்தனமா பாக்க வெச்ச படம்.இந்த படத்துக்காக நாதஸ்வரம் வாசிச்ச சேதுராமன் பொன்னுச்சாமி எல்லா கல்யாணம் கச்சேரிகளுக்கு
வாசிச்ச மாதிரி சும்மா வந்து வாசிச்சிட்டு போயிடல.நாதஸ்வரத்துக்கு கொடுத்த காத்தை வயத்துல இருந்து நெஞ்சுக்கு வரவழைச்சு தொண்டையிலே
இருந்து அதை வெளிப்படுத்தனப்போ
அது இசையா இல்லை இசை மழையா இருந்துச்சு.
அவங்க மத்த கச்சேரிகளுக்கு வாசிச்சதை கேட்டு மட்டும் தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு புக் பண்ணிடலே .அவங்களை சிவாஜிக்கு முன்னாலே வாசிக்க வச்சு சிவாஜி அதை கேட்டு ரசிச்சு ஆஹா ஓகோன்னு பாராட்டுன பின்னாலே தான் ஒப்பந்தம் செஞ்சாங்க.சேதுராமன் பொன்னுச்சாமியும் சிவாஜிக்கு முன்னாலே அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ மட்டுமில்லே,அஞ்சரை மணி நேரம் வாசிச்சாங்க.இப்படிப்பட்ட அருமையான வாசிப்பை இந்த படத்துலே நாம பயன்படுத்திக்கணும்னு APN
இவங்களை தில்லானா மோகனாம்பாள் படத்துலே ஒப்பந்தம் செய்யறப்போ ஒரு சிக்கல் வந்துச்சு.
தில்லானா மோகனானாம்பாள் கதையில சிக்கலாருக்கு தம்பி இல்லை.அப்படியிருக்க சினிமாவில் தம்பி எப்படி வந்தார்.தம்பியாக எவிஎம் ராஜன்.அந்த கதையில் ராஜன் எப்படி வந்தார் .அது ஒரு சுவாராஸ்யமான தகவல். அது வேற கதை.
இது சிவாஜி ,சேதுராமன் பொன்னுச்சாமி வாசிப்ப கேக்கறதுக்கு முன்னாலே நடந்தது.
அதாவது கதைப்படி சிக்கல் சண்முக சுந்தரம்னு ஒரே ஒரு பாத்திரம்தான், அவருக்கு சகோதரர் பாத்திரம் எதையும் திரு. கொத்தமங்கலம் சுப்பு உருவாக்கல. ஆனால் படத்தில நாதஸ்வரம் வாசிக்கறதுக்காக மதுரை திரு எம்.பி.என்.சேதுராமனை அணுகி, நடிகர்திலகத்துக்காக படத்தில் வாசிக்க வேணும்னு கேட்டப்போ , 'நான் மட்டும் தனியாக எங்கும் வாசிக்கறதில்லை. என் தம்பி பொன்னுசாமிக்கும் சேர்த்து வாய்ப்பு கொடுக்கற மாதிரி இருந்தால் சொல்லுங்க,நாங்க ரெண்டு பேரும் வந்து படத்தில் வாசிக்கிறோம்'னு கறாராகப் பேசுனதால புதுசா இடையில செருகப்பட்ட பாத்திரம்தான் சண்முகசுந்தரத்தின் தம்பி தங்கரத்தினம் பாத்திரம். அதில் ஏ.வி.எம்.ராஜன் நடிக்க வைக்கப்பட்டார். ஸாரி, 'நடிக்க' வைக்கப்படவில்லை. அதே சமயம் கதையிலே எந்த திருத்தமும் பண்ணக்கூடாதுன்னு சிவாஜியோட சும்மா கூட வந்து போவார் ஏவி. எம் ராஜன்
சிவாஜியோட நாதஸ்வரம் வாசிச்சது போக மத்த நேரங்களில் கூட்டத்தோடு சும்மா இருப்பார்.
1968-ல் அவரும் ஒரு கதாநாயகனாக வலம் வந்துகொண்டிருந்த நேரத்துலே படத்தோட சிறப்புக்காக அவரும் நடிக்க ஒத்துகிட்டார்.
தங்கவேலுவுக்கும், டி.ஆர்.ராமச்சந்திரனுக்கும், ஈ.ஆர்.சகாதேவனுக்கும் வழங்கப்பட்ட வாய்ப்புக்கூட ராஜனுக்கு இல்லை. அவர் வாய்திறந்து பேசும் இடங்களை கூட விரல்விட்டு எண்ணிடலாம்.
சேதுராமன் பொன்னுச்சாமியை படத்துக்கு ஒப்பந்தம் செஞ்ச பின்னாலே ,சினிமாவுக்கு அவங்களோட இசை ரிக்கார்டிங் நடக்கறப்போ நான் இல்லாமே நடக்கக் கூடாதுன்னு வேற சிவாஜி சொல்லிட்டார்.இந்த படத்துக்கான இசை ரிக்கார்டிங்கும் உடனடியா நடந்துடலை.நாலு மாசத்துக்கு மேலே ரிகர்சல் நடந்துச்சுன்னா பாத்துக்கோங்க.சேதுராமன் பொன்னுச்சாமி ரெண்டு பேரும் மெட்ராஸிலேயே அந்த சமயம் தங்கிட்டாங்க.சிவாஜி அடிக்கடி வந்து அவங்க ரிகர்சல் பண்றத உன்னிப்பா கவனிச்சிக்கிட்டே இருப்பார்.நாதஸ்வரத்துலே அவங்க எங்க எங்க எப்படி கையை வெக்கறாங்க,ஊதுகுழல்ல வாயை எப்படி வெக்கிறாங்க அப்படின்னு ஒவ்வொரு அசைவையும் மனசுல நல்லா பதிய வெச்சுட்டார் சிவாஜி.சிவாஜியோட இந்த அதிகமான சிரத்தையை நேரிலே பாத்ததை விட படத்துல பாத்தப்போத்தான் அவங்க அசந்து போனாங்க. சிவாஜி பாத்ததுக்கான அர்த்தமும் புரிஞ்சது. அதனால தான் நாதஸ்வர சகோதரர்கள் சொன்னாங்க.சிவாஜிதான் ஒரிஜினல் நாங்க நகல் அப்பிடின்னாங்க.
நாதஸ்வரத்தை கையில எடுத்தோம் வாயில வெச்சுச்சுட்டு சும்மா ஊதிட்டு போயிடலை சிவாஜி.அது பல மாச தவம்.அர்ப்பணிப்பு.
இவங்க ரிகர்சல் பண்ணிட்டு இருந்த நேரத்துலேதான் சிவாஜியோட பிறந்தநாள் வந்துச்சு.சிவாஜியோட பிறந்தநாள் விழாவிலும் அவங்க வாசிச்சாங்க. அதுல சில இங்கிலீஸ் நோட்ஸ் எல்லாம் சேதுராமன் பொன்னுச்சாமி வாசிச்சிருங்காங்க.அது சிவாஜிக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.உடனே ஏபிஎன்னைக் கூப்பிட்டு படத்ததுல இதை யூஸ் பண்ணிக்கங்க அப்படின்னெல்லாம் ஜடியா கொடுத்தார் சிவாஜி.ஏதோ நடிச்சமா இல்லையான்னு இல்லாம இதையெல்லாம் கூட கவனிச்சு சிவாஜி செஞ்சதை எப்படிப்பட்ட அர்ப்பணிப்புண்ணு ..
இதை சொல்றதுன்னு தெரியலே .
படத்துலே வர்ற நகுமோவுக்கு அப்படி அற்புதமா அபிநயம் செஞ்சார் சிவாஜி.சேதுராமன் பொன்னுச்சாமியை பாத்து, எப்படியிருக்குன்னு கேட்டார்.நீங்க வாசிக்கறதப் பாத்தா நீங்க தான் ஒரிஜினல்னு சொன்னோம்.வாய் வார்த்தைக்காக சொல்லலே.சிவாஜியோட நடிப்பு அபிநயம் அப்படி இருந்துச்சு.
சிவாஜியோட மகள் சாந்தியோட கல்யாணத்திலும் இவங்க வாசிச்சு இருக்காங்க .
இவ்வளவு விஷயம் இதில இருந்தாலும் ஆரம்பத்துல சிவாஜி கிட்ட அவங்க வாசிச்ச அந்த அஞ்சரை மணி நேரம் இசைக்கச்சேரியும் ,அது சிவாஜிக்கு பிடிச்சு போய் பாராட்டி, படத்துல அவங்க ஒப்பந்தம் ஆனதும், அதுக்கு பின்னால அவங்க உலகப் புகழ் அடைந்ததும் ஒரு பெரிய இசை வரலாறு அப்படின்னு தான் சொல்லணும்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக