பலே பாண்டியா தெய்வமகன் திரிசூலம்
இதுலே பலே பாண்டியா படத்துலே மட்டும் கொஞ்ச சீன் ஆள் மாறாட்டத்த வச்சு இருக்கும்.பெரும்பாலும் எல்லா ரெட்டை வேஷ படத்துலேயும் கதாநாயகன் ரோலை மட்டும்தான் ஆள் மாறாட்ட கதையா அமைச்சிருப்பாங்க.பலே பாண்டியா படத்துலே கதாநாயகன் சிவாஜி ,வில்லன் MR.ராதா ரெண்டு பேரையுமே வெச்சு ஆள் மாறாட்டகாட்சிகளை வெச்சிருப்பாங்க.
பலேபாண்டியா படத்துலே ஒரு சிவாஜிக்குத்தான் பாட்டு .தெய்வமகன்லே ரெண்டு சிவாஜிக்கு பாட்டு.திரிசூலத்துலே 3 சிவாஜிக்குமே பாட்டு.
3 படத்துக்கும் விஸ்வநாதன் மியுசிக்.பலே பாண்டியா தெய்வமகன் இந்த ரெண்டு படமும் கருப்பு வெள்ளை.மூணு சிவாஜிலே ஒரு சிவாஜி க்ளைமேக்ஸ்லே இறந்து போற மாதிரி காட்சி இருக்கும் .
ஆனா திரிசூலத்துலே அப்படி இல்லே.பலே பாண்டியாவுலே அண்ணன் தம்பின்னு ரெண்டு சிவாஜி , தனி ரவுடி கேரக்டரா இன்னொரு சிவாஜி.
தெய்வமகன் திரிசூலம் ரெண்டு படத்துலேயும் அப்பா ரெண்டு மகனுகளா சிவாஜி கேரக்டருங்க.இந்த ரெண்டு படத்துலேயும் மகனை பிரிஞ்சு அப்பா இருக்கற மாதிரி கதை.
பலே பாண்டியாவுலே சிவாஜி 11 நாள்லே நடிச்சு முடிச்ச ரெக்கார்டு படம்.தெய்வமகன் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ்படம் அப்படிங்கற ரெக்கார்டு படம்.
திரிசூலம் தமிழ்லே அது வரைக்கும் வெளியான எல்லா தமிழ் பட வசூலையும் முறியடிச்ச சாதனை படம்ங்கற ரெக்கார்டு படம்.
இந்த 3 படத்துலே நம்பியார் சுந்தரராஜன் மட்டும் தெய்வமகன் திரிசூலம் படங்கள்லே நடிச்சிருப்பாங்க..மத்தபடி 3 படத்துலேயும் மத்த நடிகர் நடிகைகள் எல்லோரும் வேற வேற.பலே பாண்டியா தெய்வமகன் படங்களுக்கு சிவாஜியோட உழைப்பு ரொம்ப அதிகம்.ஆனா சிவாஜி அனாயசமா பண்ணுன திரிசூலம்தான் பயங்கர வசூல் செஞ்ச படம்.
சிவாஜி நடிச்ச முதல் 3 வேஷ படம் பலே பாண்டியா.மூணு கேரக்டருமே ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாத மேக்கப்புகள்.அதிலயும் அந்த விஞ்ஞானி கேரக்டர் ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.இந்த கேரக்டருக்கு டப்பிங் பேசுனது சிவாஜியான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு குரல்ல வித்தியாசம் காட்டி பேசியிருப்பார்.ரொம்ப மென்மையா அதிராம ,நாம ரொம்ப யோசிக்கிற அளவுக்கு வித்தியாசமா செஞ்சிருப்பார் சிவாஜி.இந்த படத்தை 11 நாளிலியே நடிச்சு முடிச்சுட்டார் சிவாஜி .அதுவும் 3 வேஷத்தையும்.. சிங்கிள் கேரக்டரா இருந்தா 4 நாளிலியே முடிச்சிருப்பாரோ...
படத்துலே 6 பாட்டு வேற.அதுல 3 டூயட் பாட்டு.இன்னொன்னு சிவாஜி MR.ராதா பாட்டு.இத்தனையும் செஞ்சி முடிச்சிருப்பார் சிவாஜி அந்த 11 நாள் ஷூட்டிங்லே.MR.ராதா வேற டபுள் ரோல்.ரொம்ப சீனுல சிவாஜி MR.ராதா சேந்து வருவாங்க.இத்தனை டெக்னாலஜி இருக்கற இந்த காலத்துலே கூட இது சாத்தியாமாகுமா? இந்த பட ஷூட்டிங் டயத்துலே சிவாஜி தூங்குனது 4 மணி நேரம்தானாம்.சிவாஜி பந்துலுவுக்கு சம்பளம் வாங்காம நடிச்சு தந்த படம் இது.
ஆனா வொர்க் இருக்கே அது 3 பட வொர்க்குக்கு சமம்.
ஒரு கதாநாயகன் 3 வேஷம் செஞ்சு அந்த 3 வேஷமும் ஒரே காட்சியிலே வர்ற மாதிரி தமிழ் சினிமாவுலே அமைச்ச முதல் படம் தெய்வமகன்தான்.அப்பா மகன் ரெண்டு பேருமே விகாரமா இருக்கற மாதிரி வந்த முதலும் கடைசியுமான தமிழ் சினிமாவும் தெய்வமகன் தான்.கதாநாயகனோட உருவத்தை பட ஆரம்பத்துலேயே காமிச்சாலும் ,
முகத்தை காட்டாம டைட்டில் எல்லாம் முடிஞ்சு சில நிமிஷங்கள் கழிச்சு முகத்தை காட்டற மாதிரியான காட்சி அமைக்கப்பட்ட திரைப்படமும் தெய்வமகன்தான்.
ஒரே நேரத்துலே சிவாஜி 3 வேஷத்தை செஞ்சிருந்தாலும் மூணு வேஷ உருவத்துலே ஏகப்பட்ட வித்தியாசம் காட்டி நடிச்சிருப்பார் சிவாஜி.இதுலே அப்பாவா வர்ற சிவாஜி எந்த டெக்னிகல் ஷாட்டும் இல்லாமலேயே கொஞ்சம் ஹைட்டா இருக்கற மாதிரி படத்துலே தெரிவார்.
விகார முக மேக்கப் போடறதுக்கு மட்டுமே 4 மணி நேரம் ஆனதாம்.மேக்கப் போடும் போது விட அதை பிரிக்கிறப்போதான் நிறைய எரிச்சலை கொடுக்குமாம்.தோல் எல்லாம் வழண்டு சில சமயம் ரத்தமெல்லாம் வருமாம்.
திரிசூலம்..
சிவாஜி K.R.விஜயா
சிவாஜி ரீனா
சிவாஜி ஸ்ரீப்ரியா
ஒரே கதாநாயகன் 3 கதாநாயகிகளை பாத்த முதல் தமிழ் சினிமா.
அப்பா சிவாஜிக்கு TMS பாட்டு
மூத்த மகன் சங்கருக்கு ஜேசுதாஸ் பாட்டு
இளையமகன் குருவுக்கு SPB பாட்டு.
1979 லே இந்த படம் ரிலீசானப்போ தமிழ்நாட்டோட மொத்த மக்கள் தொகை 4 அரை கோடி பேர்.அதுல மூணே முக்கால் கோடி பேர் பாத்த தமிழ்சினிமா திரிசூலம் அப்பிடிங்கற பெரிய ரெக்கார்ட் பண்ணுன படம் இது.
தமிழ்சினிமாலே ஒரு வெற்றியடைஞ்ச படத்துக்கு ஒரு பெரியவிழா மதுரையிலே அதுவும் ரெண்டு நாள் மாநாடா நடத்தப்பட்ட பிரமாண்டமான விழான்னு சொன்னா அது திரிசூலம் பட விழா மட்டும்தான். இதுக்கு முன்னாலே 150 வது பட விழாவான சவாலே சமாளிக்கும் சிவாஜி நடத்துன விழா தான் பெரிய திரையுலக திருவிழா.
மேலே சொன்ன 3 படத்துலேயும் துப்பாக்கி பிரதானமா இருக்கும்.பலே பாண்டியாவுலே ரவுடி மருதுவா நடிச்ச சிவாஜி இறக்கிறது துப்பாக்கி குண்டாலேதான்.
தெய்வமகன்லே மூத்தமகன் கண்ணன் சிவாஜி இறக்கிறது துப்பாக்கி குண்டாலேதான்.
திரிசூலம் படத்துலே ராஜசேகர் சிவாஜி துப்பாக்கி குண்டாலே சுட்ட விஷயம்தான் படத்தோட கதைப் போக்குக்கே அடிப்படை.
பலேபாண்டியா படத்துலே விஞ்ஞானியா வர்ற சிவாஜியோட பேரு சங்கர்.
தெய்வமகன்லே அப்பாவா வர்ற
சிவாஜியோட பேரும் சங்கர்.
திரிசூலம் படத்துலே மூத்த மகனா வர்ற சிவாஜியோட பேரும் சங்கர்.
இந்த 3 படமுமே சென்னை சாந்தி தியேட்டர்லே வெளியான படங்கள்.
இந்த 3 படத்திலும் வரும் ஒரு காதல் பாடல் பூங்காவில் படமாக்கப்பட்டிருக்கும் பலேபாண்டியாவில் வாழ நினைத்தால் வாழலாம் பாடல் ,தெய்வமகன் படத்தில் வரும் காதல் மலர்க் கூட்டம் ஒன்று பாடல் சாத்தனூர் அணைக்கட்டு பூங்காவிலும்,திரிசூலம் படத்தில் வரும் என் ராஜாத்தி வாருங்கடி பாடல் காஷ்மீரில் உள்ள ஒரு பூங்காவிலும் படமாக்கப்பட்டிருக்கும்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக