M.S.விஸ்வநாதன் கண்ணதாசன் கிட்ட சொல்றாரு.இந்த படத்துலே வர்ற கதாநாயகன் சில பிரச்சினைகளாலே சிக்கித் தவிக்கிறான்.அவன் வாழ்க்கையே வெறுத்து போயி புலம்பற மாதிரி சீனு.இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு பாட்டை போடணும்.சாதாரணமா சிச்சுவேஷன கேட்டதுமே வரிகளை கொட்டித் தள்ளற கண்ணதாசன் டிரை பண்றாரு.டிரை பண்றாரு.முதல் வரியா எதை எழுதலாம்னு .எத்தனை தடவை யோசிச்சாலும் முதல் வரியே வசமா சிக்க மாட்டேங்குது.அந்த நாளும் ஓடிடிச்சு.மறு நாளும் இப்படியே.இப்படியே ஓடிருச்சு 21 நாளு.எந்த படத்துக்காக இந்த பாடுன்னா
சிவாஜியோட சொந்த படம் புதிய பறவைக்காக.பாட்டு என்னாச்சுன்னு கேக்க வர்றாரு சிவாஜி.விஸ்வநாதன் நடந்ததை சொல்றாரு.
இப்ப மூணு பேரும் உக்காந்து டிஸ்கஸ் பண்றாங்க.
சிவாஜி மறுபடியும் அந்த சீனை சொல்றாரு.கதாநாயகன் நிம்மதி இல்லாமே தவிக்கிறான்.அப்ப அவனுக்கு நிம்மதிதான் தேவை.அதனாலே எங்கே நிம்மதி கிடைக்கும்னு புலம்பறான்னு சொன்னதுமே கண்ணதாசனுக்கு பொறி தட்டிருச்சு.வார்த்தைகள் டக்குன்னு வந்து விழுது.எங்கேநிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்னு சொல்றாரு.சிவாஜிக்கும் விஸ்வநாதனுக்கும் அது ரொம்ப பிடிச்சுருச்சு.
கண்ணதாசா இதத்தானே இத்தனை நாளும் கேட்டேன்னு விஸ்நாதன் சொல்றாரு.இப்படித்தான்,
சில சினிமா பாட்டுக இசைமைக்க ட்யூன் போட சில நிமித்துலே முடிஞ்சிடும்.சில பாட்டுக இசையமைக்க வாரக்கணக்கும் ஆகியிருக்கு.இந்த வகையிலே புதிய பறவையிலே வர்ற எங்கே நிம்மதி பாட்டை இசையமைக்க 21 நாள் ஆகியிருக்கு.
பாட்டு கம்போசிங் முடிஞ்சு பட சம்பந்தபட்டவங்க அந்த பாட்டை கேட்டதும் ஆடி போயிட்டாங்க.என்னய்யா பாட்டு இது ?
இத எப்படி படமாக்கறதுன்னு ரொம்ப மெனக்கெட்டாங்க.இந்த பாட்டை பாக்கறவங்க இதுக்கு முன்னாடி அப்படி ஒரு பாட்டை பாத்திருக்க கூடாது.இந்த பாட்டு மாதிரி இதுக்கு போட்டியா ஒரு பாட்டை சொல்லவே கூடாதுங்கற மாதிரி பாட்டை எடுக்கணும்னு முடிவெடுத்து வேலை செஞ்சாங்க.கண்ணதாசன் வரிகளை கேட்டு விஸ்வநாதனும் வழக்கமா மயூசிக் போடற மாதிரி போட்டு முடிக்கலே.ஏகப்பட்ட வயலின் ,மியூசிக் இன்ஸ்ருமென்ட்ஸ் வச்சு பாட்டை பட்டையை கிளப்பியிருப்பாரு.இவ்வளவு அதிகமான மியுசிக் உபகரணங்களை வச்சு விஸ்வநாதன் இதுக்கு முன்னாலே எந்த படத்துக்கும் ,எந்த பாட்டுக்கும் மியூசிக் பண்ணுனது இல்லே.
சிவாஜியோட தம்பிசண்முகம் கூட சிரத்தையெடுத்து இந்த பட கதை விவாதத்துலே ஆர்வமா கலந்துகிட்டார்.ஒரு புதுவிதமான காட்சியமைப்பா இந்த பாட்டு அமையணும்னு வேலை செஞ்சாங்க.
T.MS. இந்த பாட்டை பாடறதுக்கு ரொம்ப சிரத்தையெடுத்து பண்ணியிருப்பாரு.
எங்கே நிம்மதின்னு ஸ்கிரீன்லே சிவாஜி தொடங்கறப்போ அந்த வாய்சுக்கு அடுத்து ஒரு பெரிய சூறைக்காத்து தொடங்கறப்போ ஒரு சத்தம் வருமே அது மாதிரி மியூசிக் வரும்.
ரெண்டு கையை விரிச்சும் எங்கே நிம்மதின்னு ஒரு போஸ் கொடுப்பாரே சிவாஜி ...
வெள்ளை சட்டை புளூ பேன்ட் போட்டு சிவாஜி ,சுத்தி பிளாக்
பேக் ரவுண்ட்லே,லைட்டான லைட் எபெக்ட்லேன்னு அந்த ஷாட்டை ஒளிப்பதிவுலே அட்டகாசப் படுத்தி இருப்பாங்க.
தியேட்டர்லே சத்தமே இருக்காது.
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்னு அடுத்த வரியும் மெலடியா மெதுவா இருக்கும்.எங்கே மனிதர்கள் யாருமில்லையோ அங்கே எனக்கொரு இடம் வேண்டும்னு வரி வர்றப்போ குரல்ல கொஞ்சம் டெஸிபல் கூடியிருக்கும்.
மறுபடியும் ரெண்டு தடவை வர்ற எங்கே நிம்மதி வார்த்தைகளுக்கு,இடது பக்கத்துல இருந்து மோஷன் ,வலது பக்கத்துலே இருந்து மோஷன்னு சிவாஜியை காமிப்பாங்க.
ரொம்ப மாடர்ன் லுக்குல இதுக்கு லைட்டிங் எபெக்ட் பண்ணியிருப்பாங்க.இந்த படம் வர்றவரைக்கும் தமிழ்லே அதிகமான கலர் படங்கள் வந்ததில்லே.இந்த படத்தோட கலர் எபெக்ட்டை பாத்தப்போ அச்சு அச்சுலா ஒரிஜினல் கலரை பாக்க முடிஞ்சது.இருட்டிலே இருந்து சிவாஜி மெல்ல வர்றமாதிரி பல ஷாட்டுக இந்த பாட்டுலே காமிச்சிருப்பாங்க.சிவாஜியை தூர இருந்து பக்கம் வறப்போ காமிக்கற ஷாட்டுகள்லே லைட் எபெக்ட் கொஞ்ச கொஞ்சமா சிவாஜி உருவத்து மேலே போகஸ் ஆகற மாதிரி காமிச்ச விதத்தை பாக்கறப்போ இன்னைக்கும் பிரமிப்பாத்தான் இருக்கு.
ஸ்மோக் எபெக்ட் ஒளிப்பதிவு அது வேற கலக்கலா இருக்கும்.அந்த ஸ்மோக் எபக்டுக்கு மட்டும் லைட்டிங் பண்ணி சிவாஜியை காமிச்ச விதமெல்லாம் இப்ப பழசா பாத்தாலும் புதுசாத்தான் தெரியுது.
சௌகார் ஜானகியை இருட்டு பேக் ரவுண்ட்லே அவருக்கு மட்டும் லைட்டிங் பண்ணி ஜயண்ட் சைஸ்லே காமிச்சு ஒளிப்பதிவுலே மிரட்டி இருப்பாங்க.
தரையில் இருட்டுல படுத்திருக்கற சிவாஜி தூரத்துலே ஒரு மாளிகையோட கதவு திறக்கற மாதிரி ஒரு ஷாட்டு வரும்.அந்த மாளிகைவாசலுக்கு லைட்எபெக்ட், சிவாஜிக்கு ஒரு லைட் எபெக்ட் செஞ்சிருப்பாங்க.ஏதோ வாசல் தெரியுதேன்னு சிவாஜி எந்திரிச்சு போக எழுந்திருக்க ,டக்குன்னு அந்த மாளிகையோட வாசலோட லைட் அணையறமாதிரி காட்டுவாங்க.எங்க நிம்மதின்னு சிவாஜி தேடற மாதிரியும் ,கொஞ்சம் நம்பிக்கையா ஒரு வழி தெரியற மாதிரியும் ,அங்க போகலாம்னு நினைக்கறப்போ அதுவும் அணைஞ்சி போற மாதிரியும் சிம்பாலிக்கா ஷாட்டுகளை அமைச்சிருப்பாங்க.பாட்டை புதுசா செய்யணும்னு செஞ்சதோட மட்டுமில்லாமே கதாநாயகனோட அந்த பரிதவிப்பை ,போராட்டத்தை சின்ன சின்ன ஷாட்டுகளா அர்த்தத்தோட தான் இந்த பாட்டை எடுத்திருப்பாங்க.
இன்னைக்கும் இந்த பாட்டை ஆச்சர்யமாகத்தான் சினிமா உலகம் பாத்துகிட்டு இருக்கு..
..செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக