சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி படங்களில் நாகேஷின் அலப்பறை காட்சிகள்

சிவாஜி படங்களில் நாகேஷ் செய்த அலப்பறை காட்சிகள்.
சவாலே சமாளி படத்துலே நாகேஷ் செஞ்ச அலப்பறை கொஞ்ச நஞ்சமா என்ன? ஒரு வகையிலே காமெடி  மாதிரி நடிச்சிருந்தாலும் கூடவே பாக்கறவங்க யோசிக்க முடியாதபடி வில்லத்தனத்தனத்தையும் சேத்தே செஞ்சிருப்பாரு நாகேஷ்.தடுக்கி விழுந்தா பஞ்சா அடிச்சு தள்ளியிருப்பாரு.
பண்ணையாரா வர்ற பகவதிக்கும் சிவாஜிக்கும் இடையிலே புகுந்து கேம் ஆடுவாரே.அதைச் சொல்லணும்.பஞ்சாயத்துலே தேர்தல் ஒப்பந்தம் எழுதுன பின்னாலே ,சிவாஜி கேப்பாரு.நான் தோத்தா இந்த ஊரை விட்டே போயிடனும்னு சொன்னீங்க ,பண்ணையாரு தோத்தா என்ன செய்யறதுன்னு.இடையிலே புகுந்து நாகேஷ் அப்படி இப்படின்னு பேச்சை வளர்த்தி,கடைசியா ஒரு திரியை கொளுத்தி போடுவாரு.பண்ணையாரு தோத்தாருன்னா அவரு பொண்ண கட்டி குடுங்கன்னு கேப்ப போலிருக்கேன்னு ,அடிச்சு தூக்கிடுவார்.அந்த ஒரு வரி வசனத்தை வச்சுத்தான் சவாலே சமாளி படமே.அந்த டைமிங், ரைமிங்னு நாகேஷ் வசனங்களை வகுத்துல புகுத்தி தன்னோட பாணியிலே விளையாடியிருப்பாரு.
பண்ணையாரு தோத்த செய்திய கேட்டதும் மனுஷன் அந்தரத்துலே துள்ளி குதிச்சு 
அட்டகாசம் பண்ணிடுவார்.மாணிக்கத்தை ( சிவாஜியை)ஜெயிக்க வச்சதே நாந்தாண்டான்னு பஞ்ச் அடிச்சு அதகளம் பண்ணிடுவாரு.
சகுனியாட்டம்னா இந்த கேரக்டரைத்தான் சொல்லணும்.
சின்னப்பண்ணை சிங்காரமா நாகேஷ் பகட்டா டிரெஸ் பண்ணிகிட்டு ,அடிச்சு துவைச்சு போட்ட கேரக்டர் இது.யாராச்சும் மறுக்க முடியுமா ?

எட்டணா எலுமிச்சம் பழத்தை வெச்சுகிட்டே எல்லோரையும் எதும் பேச முடியாதபடி செஞ்ச வைத்தியை காமெடியன்னு  சொல்லறதா ?வில்லன்னு சொல்லறதா ?
நாகேஷ் காமெடி டயலாக்  பேசறப்போ நாகேஷ் அடிச்சு தள்ளற அந்த டைமிங்கான  காமெடிக்கு சட்டுன்னு ரியாக்ஷன் கொடுக்கறது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.அந்தளவுக்கு ஸ்பீடா இருக்கும்.ஒரு சீனுலே சிவாஜி மரியாதையா போயிடும்பார் நாகேஷை பாத்து.
மரியாதையா !அதைப்பத்தி எனக்கென்ன ?
 கவலைப் படறதே இல்லைம்பார் நாகேஷ்.இந்த ஒரு வரி  ஒரு வசனமே படத்துலே அவரோட கேரக்டர் என்னான்னு சொல்லிடும்.
படத்துலே நாகேஷ் C.K.சரஸ்வதி வர்ற காட்சிகள்லே சரஸ்வதியை கலாய்க்கிறதுலே பட்பட்டுன்னு அடிச்சு தள்ளுவாரு.கடைசி சீனுலே போலீஸ் அரெஸ்ட் பண்றப்போ கூட ,முன்னாலேயே ,
எதிர்பாத்தேன்,நீங்க லேட்டுன்னு ஒரு வெடி கமெண்ட்டை அடிச்சு விடுவார்.மனுஷன் அலட்டிக்காம அலப்பறையை படம் பூராவும் செஞ்சிருப்பார்.
ஜெகஜெகான்னு டிரெஸ் பண்ணிகிட்டு பேசற டயலாக்கெல்லாம் தரை டிக்கட் மாதிரி இருந்தாலும் ஹைகிளாஸ் ஆடியன்சும் ரசிச்ச காமெடி சீனுக .

நாகேஷோட திரைப்பட வாழ்க்கையிலும் சரி ,தமிழ் சினிமா காமெடி வரிசையிலும் சரி இந்த சினிமாவோட காமெடி சொல்லாம இருக்க முடியாது. திருவிளையாடல் சினிமா தான். அந்த தருமி கேரக்டர அநயாசமா செஞ்சு இருப்பார் நாகேஷ் .சிவபெருமான வர சிவாஜி செந்தமிழ்ல பேச, தருமியா வர்ற நாகேஷ் லோக்கல் பாஷையில் அடிச்சு தூக்கி இருப்பார். இந்த காட்சியிலே பேசற ஒவ்வொரு வரியையும் சிக்ஸர் போரா அடிச்சு தூக்கியிருப்பர்.
இந்த சீனுலே ஒரு வசனமா ,என்னிடம் வா நான் பார்த்துக் கொள்கிறேன் ,
அப்பிடின்னு சிவபெருமானா வர்ற சிவாஜி நாகேசுகிட்ட சொல்வாரு.
அதுக்கு நாகேசு ஒரு பஞ்ச் அடிப்பாரு ,எங்கெங்கே வீங்கி இருக்குன்னா ,அப்பிடின்னு.மொத்த தியேட்டரும்  விழுந்து விழுந்து சிரிச்ச சீனுக எல்லாம்.
இந்த படத்தை ஷூட்டிங் எடுத்து முடிச்சதும் சிவாஜிக்கு A.P.நாகராஜன் போட்டு காண்பிச்சாரு. நாகேசோட சீனுகளை பாத்த சிவாஜி இந்த சீனுகளை கட் பண்ணாம அப்படியே படத்துலே வச்சுக்கங்கன்னு சொல்லிட்டாரு.சிவாஜி எங்கே இந்த சீனுகளை வெட்டிறச் சொல்லிடுவாரோன்னு பயந்துகிட்டு இருந்தாராம் நாகேஷ்.சிவாஜி O.K.சொன்னதப் பாத்து நாகேசுக்கு ரொம்ப சந்தோசமா போச்சு.இதத்தான் நாகேசு ரொம்ப தடவை சொல்லி சொல்லி சிவாஜியோட பெருந்தன்மையை பாராட்டியிருக்கார்.
அரச சபையிலே நக்கீரனை நக்கலா கேக்கறதாகட்டும், சிவ பெருமான் கிட்டே இடக்கு மடக்கா பேசறதாகட்டும்னு ஏக ரகளை பண்ணியிருப்பாரு நாகேசு.நாகேசு இந்த சீனுலே பேசுன பல வசனங்களைதான் இன்னைக்கும் ரொம்ப பேரு மீம்ஸா யூஸ் பண்றாங்க.எல்லா காலத்துக்கும் பொருந்துற மாதிரி அந்த வசனங்கள் இருக்கும். 

நவராத்திரி படத்துலே நாகேஷ் செஞ்ச பூசாரி வேஷமும் நாகேஷ் பண்ணுன  அலப்பறையான ஒரு வேஷம்தான்.சாவித்திரிக்கு பேய் பிடிச்சிருக்குன்னு சொல்லி நாகேஷ் பண்றதெல்லாம் அட்டகாசம் தான்.விவசாயியா வர்ற சிவாஜி வெகுளித்தனமா இருப்பார்.ஆத்தா வந்து அருளாட்டம் ஆடி முடிச்சதும் சிவாஜிகிட்டே தனக்கு தேவையானதை மட்டும் கேட்டு கேட்டு நாகேஷ் பண்ற சேட்டைகள்ல காமெடி கலக்கலா  இருக்கும்.
நாடி பாக்குறதுக்கு சாவித்திரியோட கையிலே துண்டை போட்டு இழுப்பாரு.சாவித்திரியோ வெடுக்குனு கையை இழுத்துக்குவாங்க.
சாவித்திரியோட கை துண்டுலே இல்லேன்னு தெரியாமே நாகேஷ் ,என்னா ஒண்ணையுமே காணோமேம்பார்.பக்கத்துல இருக்கற சிவாஜி ,யோவ் ,கை அங்க இருக்குய்யா அப்படிம்பார்.
அதே காட்சியிலே ,ஆத்தா அஞ்சோ பத்தோ தரச் சொல்லிச்சே ,தரலையான்னு நாகேஷ் கேக்க ,அப்பப்பதானேன்னு சிவாஜி வெகுளியா பதில் சொல்லறதும் காமெடி பட்டாசா இருக்கும்.

அன்னை இல்லம் படத்துலே நம்பியாருக்கு மகனா வருவார் நாகேஷ்.படத்துலே லூசுத்தனமான கேரக்டர் அவருக்கு.ஒரு சீனுலே கையிலே வச்சிருக்கிற கண்ணாடி டம்ளரை நடுங்கிக்கிட்டே கீழே விட்டுருவார்.கண்ணாடி டம்ளர் உடைஞ்சி சிதறும்னு நெனக்கறப்போ மேலே இருந்து வலது கை நழுவுன டம்ளரை அப்படியே கீழே இருக்கற இடது கையாலே லாவகமா புடிச்சு உடையாம பாத்துக்குவார்.திக்குன்னு வந்து போற ஷாட்டு அது.மனுஷன் அநாயசமா செஞ்சிருப்பார்.
அதே மாதிரி வீட்டு வாசல்லே நாய் துரத்த பயந்துகிட்டே பைப் லைன்னை புடிச்சுகிட்டே சட்டுன்னு மாடிக்கு போயிருவார்.வீட்டுக்குள்ள போனதும் நிழலை பாத்து பயந்துகிட்டே நின்னுட்டு இருப்பார்.சட்டுன்னு பீரோ மேலே தாவி உக்காந்துக்குவார்.இதெல்லாம் சட்டுசட்டுன்னு பண்ணி முடிச்சிடுவார்.அந்த ஸ்பீடு, அதச் சொல்லணும்.
இப்படி இந்த படத்துலே நாகேஷ் பண்ற லூட்டிகள் எல்லாம் காமெடி ரவுசா இருக்கும் .

கலாட்டா கல்யாணத்துலே சிவாஜியும் நாகேசும் அடிக்கிற கூத்து படம் முழுவதும் இருக்கும்.சிவாஜியோட அன்னை இல்லத்துலே முரடனா வர்ற செந்தாமரை கிட்டே ,உன்னை புரட்டி எடுக்க வந்துருக்கோம்னு மிரட்டற நாகேஷ் , இவன் தான் சொன்னான்னு கையை சிவாஜி பக்கம் காட்டிருவாரு.இப்படி சின்ன சின்னதா பட்பட்டுன்னு  கேப்பு கிடைச்ச இடத்துலே எல்லாம் ரைமிங்கா டயலாக் அடிச்சி கிளப்புவாரு.

விகடன்லே வந்த பேமசான காமெடி கேரக்டர் கதை துப்பறியும் சாம்பு.இந்த கேரக்டரை மோட்டார் சுந்தரம் பிள்ளையிலே செஞ்சிருப்பார் நாகேஷ்.இந்த படத்துலே நாகேசுக்கு மட்டும் அஞ்சாறு காமெடி டிராக் இருக்கும்.எதையோ கிறுக்குத் தனமா பண்ண போயி கடைசியில் எதையோ கண்டுபிடிக்கிற மாதிரி காமெடி  டிராக்குகள் இருக்கும்.சிவாஜியோட முக்கியமான இந்த படத்துலே நாகேசுக்கு தனி காமெடி டிராக் அமைஞ்சது நாகேசுக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு இது.
 
ஊட்டி வரை உறவு படத்துலேயும் நாகேஷோட காமெடி சீனுக நல்ல அமைஞ்சிருக்கும்.நாகேசோட குடைச்சல் தாங்காம சிவாஜி அவரை அப்படியே தூக்கி அலமாரி ஆணியிலே மாட்டி விட்டுவார்.மிரட்டலா வர்ற சீனுலே காமெடியா முடிச்சிருப்பார் நாகேஷ்.

மூன்று தெய்வங்கள் படமே புல் காமெடி.சிவாஜி முத்துராமன் நாகேஷ் மூணு பேரோட காமெடியில படம் பெரிய அலப்பறையா இருக்கும்.

சிவந்தமண் படத்துலே சிவாஜி சுடற மாதிரி ரிகர்சல் சீனு வரும்.சிவாஜி நாகேசை பாத்து டம்மி  துப்பாக்கியாலே சுடுவார்.துப்பாக்கி சத்தம் வரும்.அப்படியே நாகேஷ் அதிர துடிச்சு கீழே துள்ளி விழுவார்.சிவாஜி எந்திரிடான்னு சொன்னதுமே சட்டுன்னு எந்திரிச்சு ஸ்பீடா ஓடி குளத்துலே ஜம்ப் அடிச்சு பாய்வார்.இது நாகேஷ் பண்ணுன காமெடி சீனா இருந்தாலும் இதை ஒரு ஆக்ஷன் சீனுன்னே சொல்லலாம்.கடைசி காட்சியிலே திவானோட அரண்மனையிலே அவரு நடுங்கற மாதிரி சீனுக சீரியசான காட்சிகள்லேயும் நம்மை சிரிக்க வைக்க காட்சிகள்.

சிவாஜியோட 65 படத்துலே நாகேஷ் நடிச்சிருப்பாரு.இதுலே எங்க ஊர் ராஜா ,வியட் நாம் வீடு ,கல்தூண் படங்கள்லே சிவாஜியோட மகனாக நடிச்சிருப்பார் நாகேஷ்.
நாகேஷ்  தன் திறமையாலே சிறந்த காமெடி நடிகர்னு பேரு வாங்கியிருந்தாலும் ,அதை விட நல்ல பேரும் புகழும் நாகேசுக்கு வாங்கிக் கொடுத்த படங்களை சொல்லறப்போ சிவாஜியோட அவரு நடிச்ச படங்களைத்தான் முதல்லே சொல்ல முடியும்.

சிவாஜி நாகேஷ் நடித்த படங்கள்:
1. நான் வணங்கும் தெய்வம்
2. குங்குமம்
3. ரத்த திலகம்
4. அன்னை இல்லம்
5. பச்சை விளக்கு
6. புதிய பறவை
7. முரடன் முத்து
8. நவராத்திரி
9. பழநி
10.அன்புக்கரங்கள்
11.சாந்தி
12.திருவிளையாடல்
13.நீலவானம்
14.மோட்டார் சுந்தரம் பிள்ளை
15.சரஸ்வதி சபதம்
16.செல்வம்
17.கந்தன் கருணை
18.பேசும் தெய்வம்
19.தங்கை
20.பாலாடை
21.திருவருட்செல்வர்
22.இரு மலர்கள்
23.ஊட்டி வரை உறவு
24.திருமால் பெருமை
25.கலாட்டா கல்யாணம்
26.என் தம்பி
27.தில்லானா மோகனாம்பாள்
28.எங்க ஊர் ராஜா
29.தங்க சுரங்கம்
30.காவல் தெய்வம்
31.அஞ்சல் பெட்டி 520
32.தெய்வ மகன்
33.திருடன்
34.சிவந்த மண்
35.வியட்நாம் வீடு
36.எங்கிருந்தோ வந்தாள்
37.சொர்க்கம்
38.இரு துருவம்
39.தங்கைக்காக
40.குலமா குணமா
41.பிராப்தம்
42.சுமதி என் சுந்தரி
43.சவாலே சமாளி
44.தேனும் பாலும்
45.மூன்று தெய்வங்கள்
46.பாபு
47.தர்மம் எங்கே
48.வசந்த மாளிகை
49.கௌரவம்
50.எங்கள் தங்க ராஜா
51.மன்னவன் வந்தானடி
52.டாக்டர் சிவா.
53.உனக்காக நான்
54.சத்யம்
55.உத்தமன்
56.சித்ரா பௌர்ணமி
57.இளைய தலைமுறை
58.நாம் பிறந்த மண்
59.தியாகம்
60.அமர காவியம்
61.கல்தூண்
62.மாடி வீட்டு ஏழை
64.மோகனப் புன்னகை
64.படிக்காதவன்
65.நட்சத்திரம்.
இதெல்லாம் சிவாஜி நாகேஷ் நடிச்ச படங்கள்.

எல்லா படத்துலேயும் காமெடியிலே அலப்பறை பண்ணியிருந்தாலும் தியாகம் தீபம் உனக்காக நான் படங்கள்லே நாகேஷ் பண்ணுன குணச்சித்திர வேஷங்களும் நாகேசுக்கு கிடைச்ச நல்ல வேஷங்க.
நாகேசா இதுன்னு சொல்ற மாதிரி தியாகம் படத்துலே முஸ்லீம் வேஷத்துலே கண்கலங்க நடிச்சிருப்பார் நாகேஷ்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற