நடிகர் திலகம் சிவாஜி தன்னோட ரோல் மாடலா ரெண்டு நடிகர்களை சொல்வார். ஒருத்தர் எம்ஆர் ராதா இன்னொருத்தர் டி எஸ் பாலையா.
இவங்க ரெண்டு பேருமே வித்தியாசமான நடிப்புக்கு சொந்தக்காரங்க.பாலய்யா கோட்சூட் போட்டாருன்னா ஹாலிவுட் ஆக்டர் மாதிரி மாறுவார்.வேட்டி சட்டை போட்டா அது வேற மாதிரியா பட்டைய கிளப்புவார்..கூடவே
பாலய்யாவோட குரல் அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் அப்படின்னு சொல்லலாம் .
இவரோட மேனரிசம் வேற எந்த ஒரு நடிகர்கிட்டயும் பாக்க முடியாது.
சிவாஜிக்கு முன்னாலே இருந்தே சினிமாவில் ஆதிக்கம் செலுத்திட்டு வந்தவர் பாலையா .அவரோட தனித்துவமே அவரோட வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி.
திருவிளையாடல் படத்த எடுத்துக்கலாம்.
கதைப்படி சோமநாத பாகவதர் சங்கீத மேதை.
சாஸ்திரிய சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடலை பாலையா பாடற மாதிரி காட்சி. சிவாஜிக்கு சம்பந்தமே இல்லை அப்படின்னாலும் சில நேரம் சூட்டிங் ஸ்பாட்லே இருப்பார்னு எல்லாருக்கும் தெரியும். இந்த பாட்டு சூட்டிங் நேரத்திலயும் சிவாஜி இருந்தார். பாடல் காட்சி யை ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க. இடைவெளியில பாலையாவுடன் பேசிக்கொண்டிருந்தார் சிவாஜி.
" அண்ணே..ஒரு சந்தேகம்."
" என்னப்பா , எவ்வளவு சிறந்த நடிகன் நீ. உனக்கே சந்தேகமா ? என்ன சொல்லு.."
" இல்லே உங்களுக்கு நிஜமாகவே சங்கீதம் தெரியுமா ?"
" நீ வேற ..என்னோட குரலுக்கு அது ஒத்துவருமா சொல்லு.."
" எனக்கு ஒண்ணு தோணுச்சு. நீங்க தப்பா நெனச்சுக்கமாட்டீங்கன்னா சொல்றேன்."
" சொல்லுப்பா , ஏதாவது தப்பா பண்ணிட்டேனா ?"
" உங்களை திரையிலே பாக்கறவங்க எல்லாருமே உங்க உடல் மொழி, குரல் நடிப்பை இதை ரொம்ப ரசிக்கறாங்க. கதைப்படி நீங்க சங்கீத மேதை. நடிக்கும் போது நீங்க தாளம் போடற மாதிரி நடிக்க வேண்டாம்ண்ணே. கண்டிப்பா எங்கேயாவது தப்பா போட்டுடுவீங்க. கையை காலை அசைச்சுட்டு போயிடுங்க. ஏன் சொல்றேன்னா, உங்க பாட்டை மிஞ்சும்படியா நான் வேற பாடி நடிக்கணும். நாம ஏன் தாளம் போடல்லேன்னு யாரும் கேக்க மாட்டாங்க. ஆனா தப்பா தாளம் போட்டா அது வெளிச்சத்துக்கு வந்துடும். உங்களுக்கு தெரியாததில்லே.."
" யப்பா, நல்ல வேளை சொன்னே..இரு அந்த ஷாட்டை திருப்பி நடிச்சுட்டு வர்றேன்னு "
மறுபடியும் செஞ்சார் பாலய்யா.
இந்த படத்துலே ஒரே பிரேமில் ஐந்து சிவாஜிகள் இசைக்கற மாதிரி சீனு.கொஞ்சம் உன்னிப்பாக பாருங்க.கைகளின் பிடியிலே சரியாக வீணை வந்து உட்காரும்., மறையும். அடுத்த சிவாஜி இசைக்கறப்போ இன்னொரு சிவாஜி ரசிக்கறது ,தன்னுடைய முறைக்காக தயாராவதுன்னு சிவாஜி அமர்க்களமா பண்ணியிருப்பார்.
நடிப்போட இலக்கணத்தை அதுல பாக்கலாம்.
சிவாஜிக்கும் பாலையா அவர்களுக்கும் இருந்த புரிதல் உன்னதமானது. அதனாலதான் சிவாஜி சொன்னத பாலையா ஏத்துக்கிட்டார்
திருவிளையாடல் படத்துல வர்ற ஒரு நாள் போதுமா அப்படிங்கிற அந்த ஒரு பாட்டு போதுமே பாலையாவோட நடிப்ப சொல்றதுக்கு. அடி பின்னி பெடல் எடுத்துட்டாருன்னு சொல்லுவாங்களே, அப்படி சொல்லலாம் பாலையாவோட நடிப்ப .சோமநாத பாகவதரோட ஆணவத்த ஒரு பக்கம் காட்டி அற்புதமா நடிச்சிருந்த அதே பாலையா, பாட்டும் நானே பாவமும் நானே பாட்டுக்கு பின்னால அந்த ஆணவம் எல்லாம் அழிஞ்சு சாந்தமா சாத்வீகமா மாறி நடிச்சதையும் சொல்லணும்.அந்த பாடி லாங்குவேஜ் எப்படி மாத்தி இருப்பார்.
தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக நாதஸ்வர பயிற்சி எடுத்துக்கிட்ட சிவாஜி மாதிரியே பாலய்யாவும் தவில் வித்வான பார்த்து பயிற்சி எடுத்துக்கிட்டாராம்.
இந்தப் படத்துல பாலய்யாவோவோட வாசிப்பே
பாக்கறப்ப அசல் தமிழ் வித்வான் மாதிரியில்லே இருந்தாரு.
இந்த படத்துல ஒரு காட்சியில பத்மினிய பாக்குறதுக்கு திருவாரூர் போகணும்னு சிவாஜி சொல்வார் . கூடவே வர்ற பாலையா ஒரு சின்ன பையனாட்டம் சிவாஜியோட ஒட்டி ஒட்டி வருவார் .திருவாரூரில் உனக்கு என்ன வேலை அப்படின்னு சிவாஜிய கேப்பார் பாலையா .அங்க ஒரு பீடா கடைக்காரன தெரியும் அவன பாக்கணும் அப்படிம்பாரு சிவாஜி. பதிலுக்கு பாலையா ஒரு அடி அடிப்பாரு.எனக்கு ஒரு சோடா கடைகாரனை தெரியும் அவன நான் பாக்கணும் ,
அதனால நானும் வரேன் அப்படிம்பாரு .இப்படி சின்ன சின்னதா படத்துல காமெடியில் பின்னி இருப்பார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி நடிப்பு மாதிரியே பாலாய்யாவோட நடிப்பையும் மறக்க முடியாது .
காமெடிக்கு பல நடிகர்கள் இருந்தாலும் பாலய்யாவோட காமெடி நடிப்பே வேற விதமா இருக்கும். அவர் நடிச்ச எந்த படத்திலும் காமெடி சோடை போயிருக்காது .ஊட்டி வரை உறவு படத்துல சிரிக்காமயே நம்மையெல்லாம் சிரிக்க வைப்பார்.குணச்சித்திர நடிப்போட சேந்து காமெடி செய்யறது ,தனியா காமெடி மட்டும் செய்யறத விட ஒரு திறமையான விஷயம்.அதைத்தான் இந்த படத்துலே செஞ்சிருப்பார் பாலய்யா.
பாகப்பிரிவினை பாலய்யாவோட இன்னொரு டைப்பான நடிப்பை காமிச்ச படம்.முற்பாதியிலே வழக்கமான பாலய்யாவா பண்ணியிருந்தாலும் பிற்பாதியில் அந்த முகத்தையே மாத்தியிருப்பாரு.சிவாஜி கல்யாணத்துக்கு போக முடியாமே தவிக்கிற தவிப்பை பாலய்யா கோயில் திட்டுலே உக்காந்து அவர் பேசற அந்த பேச்சுலேயே அவரோட குணச்சித்திர நடிப்பை நல்லா வெளிப்படுத்தி இருப்பார்.
பாலய்யா மாதிரி உடம்ப வச்சுகிட்டு எல்லா வேஷத்துக்கும் செட்டாகற மாதிரி நடிக்கற நடிகர்கள் சினிமாவுலே அபூர்வம்.காத்தவராயன் படத்துலே மலையாள மாந்தீரிக வேஷம் பண்ணுனத மறக்க முடியுமா ? சிவாஜிகிட்டே மாந்தீரீகத்தை வெச்சு விளையாட்டு காட்டி ,பாக்கற எல்லோரையும் திகிலடைய வெச்சிருப்பாரே.மலையாளத் தமிழ்லே பேசறதும் வித்தியாசமா இருக்கும்.
மேலே சொன்ன இந்த மாதிரி வேஷங்களை பண்ணுன பாலய்யாவை வில்லன் ரோல்லே பாத்தா எப்படியிருக்கும் .மனுஷன் அந்த வேஷத்துலேயும் கலக்கியிருப்பார்.புதையல் படத்துலே கிடா மீசையும் ,கம்பீரமான தோரணையுமா பாலய்யா வில்லன் வேஷத்துலேயும் மிரட்டியிருப்பாரே !
எல்லா படத்துலேயும் வர்ற பாலையாவோட தோற்றத்தை சுத்தமா மாத்திக் காட்டியிருப்பார் பாவன்னிப்பு படத்துலே.அந்த படத்துலே வந்த சாந்தமான பாலய்யாவை வேற படத்துலே நாம பாத்திருக்க முடியாது.
இப்படி சிவாஜி கூட நடிச்ச பாலய்யாவைப் பத்தி நிறைய சொல்லலாம்.
நானே ராஜா பாலும்பழமும் வீளையாட்டுப் பிள்ளை இன்னும் பல சிவாஜி படத்துலே பாலய்யா நடிச்சிருப்பார்.எந்த நடிகரோட , நடிகையோட சிறந்த படம் , சிறந்த நடிப்பை சொல்லும் போது கண்டிப்பா அந்த வரிசையிலே அவங்க சிவாஜியோட நடிச்ச பல படங்களை சொல்லாமே இருக்க முடியாது.அந்த வகையிலே பாலய்யாவோட இந்த படங்களையும் சொல்லாம இருக்க முடியாது.
..செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக