என்னங்க? என்னங்க இதெல்லாம்? இப்படி மௌனமா இருந்தே எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டீங்களேன்னு தங்கப்பதக்கத்துலே கே ஆர் விஜயா கதறுன நடிப்பு ,சிவாஜி கே ஆர் விஜயான்னு நெனைக்கறப்போ நெஞ்சுல படமா ஓடும்.அதுக்கு காரணம் விஜயாவோட அந்த உணர்ச்சிகரமான நடிப்புத்தான்.அது நடிப்பா கூட தெரியாது.நிஜமா தெரியும்.
அது தான் கே ஆர் விஜயா.
பத்மினி தேவிகா வாணிஸ்ரீ இன்னும் பல பேர் ரொம்ப சிவாஜிக்கு பொருத்தம்னு சொல்லற மாதிரி படங்கள் அமைஞ்சிருக்கு.ரொம்ப ஆதர்ஷணமான புருஷ தம்பதிகள் ஜோடின்னு சொல்லறப்போ சிவாஜி கே ஆர் விஜயா ஜோடிக்கு இணையா வேற யாரையும் சொல்ல முடியாது.
கை கொடுத்த தெய்வம் ...
கே ஆர் விஜயா சிவாஜியோட சேந்து நடிச்ச முதல் படம்.ஆனா சிவாஜிக்கு ஜோடியில்லே.
பஞ்சாபி பெண்ணா நடிச்சிருப்பாங்க
கேஆர் விஜயா .வட நாட்டு உடையிலே வர்ற கே ஆர் விஜயாவுக்கு சிவாஜி தமிழ் பொண்ணு மாதிரி எப்படி இருக்கணும்னு சொல்லித் தர்ற மாதிரி காட்சி வரும்.இந்த காட்சியிலே நடிச்ச கே ஆர் விஜயா அந்த அனுபவத்தை பத்தி சொல்லியிருக்காங்க.
நான் பெண்ணா இருந்தாலும் புடவை கட்டி நடிக்கற மாதிரி காட்சியிலே எப்படி நடிக்கணும்னு சிவாஜிதான் செஞ்சு காட்டினார்.சிவாஜி சார் நாடக காலத்துலே பெண் வேஷம் போட்டு நடிச்சிருக்கார்.
அவர் செஞ்சு காட்டின அந்த நளினம் வெட்கம் எல்லாம் பெண் நடிகைகளை விட அற்புதமா இருந்துச்சு.நான் சிறப்பா செஞ்சதுக்கும் சிவாஜி சார்தான் காரணம் .
கே ஆர் விஜயாவுக்கு மாடர்னா டான்ஸ் ஆடத் தெரியாதுன்னு சொல்லிட்டு இருந்தவங்களுக்கு
பதில் சொல்ற மாதிரி வந்த படம்தான் ஊட்டி வரை உறவு.
ஊட்டி வரை உறவு படத்துலே தேடினேன் வந்தது பாட்டுக்கு பர்ஸ்ட் டைம் மாடர்னா டான்ஸ் ஆடியிருந்தாலும் ரொம்பா பெர்மான்ஸா பண்ணியிருப்பார்.
கே ஆர் விஜயாவோட கணவர் வேலாயுதம் சிவாஜிக்கு ரொம்ப நெருக்கம்.வேலாயுதம் சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்வார்.கே பாலாஜி சிவாஜிய வெச்சு முதன்முதலா எடுத்த படமான தங்கை படத்துலே கே ஆர் விஜயாவை கதாநாயகியா போட்டாதான் படத்துக்கு பைனான்ஸ் பண்ணுவேன்னு வேலாயுதம் சொன்னதாலேதான் தங்கை படத்துலே கே ஆர் விஜயா நடிச்சாங்க.
சிவாஜி நடிச்ச அதிக வெள்ளிவிழா படங்களில் கதாநாயகியா நடிச்சவர் கே ஆர் விஜயாதான்.தங்கப்பதக்கம் திரிசூலம் நீதிபதின்னு மூணு படம் பெரிய வெற்றிஅடைஞ்ச படங்கள்.இதுலே திரிசூலம் தாறுமாறா ஓடித் தள்ளுன படம்.
நடிகர்திலகம் இறக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலே கே ஆர் விஜயா உடல்நலம் பாதிச்சு இருந்தாங்க. அப்ப நடிகர்திலகம் போன் பண்ணி என்ன விஜயா ? உடம்பு சரியில்லையா ? நான் வந்து பாக்கறேன்னு சொல்லியிருக்கார்.
ஆனா அடுத்த மாசமே அவர் மறைஞ்சுருவார்னு நினைச்சு பாக்கலே.
அவர் தமிழ்நாட்டுலே ஒவ்வொரு குடும்பத்துலேயும் ஒருத்தரா இருந்தார்.
இருந்துகிட்டும் இருக்கார் சிவாஜி ,அப்படின்னு சிவாஜி மறைஞ்சப்போ கே ஆர் விஜயா சொன்னாங்க.
திரிசூலம் பட ஷுட்டிங் காஷ்மீர் ஏர் போர்ட்லே நடந்தது.எல்லா பாஷையும் பேசறவங்க அங்கே இருந்தாங்க.சூட்டிங் நடந்தப்போ சிவாஜி நடிச்ச நடிப்பை ,எக்ஸ்பிரசன்ஸை பாத்து அங்க கூடி இருந்தவங்க எல்லோரும் ஆரவாரமா கை தட்டி ரசிச்சு பாராட்டுனாங்க.அத மறக்க முடியாது.இப்படி பாஷை தெரியலேன்னாலும் சிவாஜியோட நடிப்பு எல்லோரையும் கவர வெச்சிடும்னு திரிசூலம் ஷுட்டிங் அனுபவத்தை சொல்லியிருக்கார் கே ஆர் விஜயா...
சிவாஜியோட கே ஆர் விஜயா கிட்டத்தட்ட 40 படங்களில் நடிச்சிருக்கார்.ஜோடியா கிட்டத்தட்ட 35 படங்களில் நடிச்சிருக்கார்.
கே ஆர் விஜயாவும் சிவாஜியை வெச்சு சொந்தப்படம் எடுத்தார்.நான் வாழ வைப்பேன் படம் தான் அது.இதுலே வர்ற ரஜினி கேரக்டரை சிவாஜி செய்யறேன்னு சொல்ல,இல்லே நீங்கதான் ஹீரோன்னு சொல்லி வியாபாரம் செய்ய முடியும்.
அதனாலே வேண்டாம்னு சொல்லிட்டார்
கே ஆர் விஜயா.
என்னை எல்லோரும் புன்னகை அரசின்னு சொல்வாங்க.இரு மலர்கள் ஷுட்டிங்லே சிவாஜி என்னை பாத்து ,நாங்க எல்லாம் பேர் வாங்கறதுக்கு ரொம்ப சிரமப்பட்டு நடிக்க வேண்டியிருக்கு.ஆனா நீ சும்மா வந்து சிரிச்சுகிட்டே பேர்
வாங்கிக்கறேன்னு சொல்லுவாரு .
திரிசூலம் படத்துலே டெலிபோன்லே சிவாஜியும் நானும் பேசற காட்சியில் உண்மையிலேயே நான் அழுது கொண்டுதான் நடித்தேன் என்று ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருந்தார் கே ஆர் விஜயா.
தமிழ்ப்பட நடிகைகளிலேயே, கே.ஆர்.விஜயாதான் அதிக படங்களில் நடித்துள்ளார். தவிர, கதாநாயகியாகவே அதிக படங்களில் நடித்துள்ள நடிகையும் கே.ஆர். விஜயாதான்.
ஜெனரல் சக்கரவர்த்தி படத்துலே கெட்டுப் போன மகளை கோபத்துலே கை நீட்டி அடிக்கணும்.நான் நடிச்சதை பாத்த சிவாஜி ,இப்படியா செல்லமா தட்டற மாதிரி நடிக்கிறது. இதுலே ஒரு உணர்ச்சியும் இல்லையேன்னு சிவாஜி சொல்லிக் கொடுக்க ,அதன் படி நான் நடிக்க அந்த காட்சி பெர்பெக்டா அமைஞ்சது.
சொர்க்கம் பட சமயத்துலே ...
ஷூட்டிங்க்லே கே ஆர் விஜயா ஒரு மாதிரி இருந்திருக்காங்க. சிவாஜி இதை கவனிச்சுட்டு ,என்ன விஜயா ? ஏதாச்சும் பிரச்சினையான்னு கேட்டிருக்கார்.முதல்ல ஒண்ணுமில்லேன்னு சொன்னவங்க ,சிவாஜி மறுபடி கேட்டதும் உண்மையை சொல்லிட்டாங்க.கே ஆர் விஜயாவோட குழந்தையை கடத்தி விடுவோம்னு ஒரு மிரட்டல் கடுதாசி வந்திருக்கு.கணவர் வேலாயுதம் கூட வெளிநாட்டுலே இருக்கார்.இந்த சமயத்துலே இப்படி ஓர் பிரச்சினை .இத சிவாஜி கேட்டதும் ,விஜயாவுக்கு ஆறுதல் சொல்லி,இது போல பல பிரச்சினைகள உதாரணமா சொல்லி தைரியப்படுத்தி இருக்கார்.அது மட்டுமில்லாமே முன் எச்சரிக்கையா சில செயல்களையும் சொன்னார் சிவாஜி .சினிமாலே நடிச்சதோட மட்டுமில்லாமே நல்ல ஒரு அட்வைசராகவும் சிவாஜி எலோருக்குமே இருந்திருக்கிறார்.இது
கே ஆர் விஜயாவே சொன்ன விஷயம்.
திருமணத்திற்குப் பிறகும், மவுசு குறையாமல், அதிக தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகையும் கே.ஆர்.விஜயாதான்.
சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்த ஒரே தமிழ்நடிகை கே.ஆர்.விஜயாதான். தவிர, மாடி நீச்சல்குளமுள்ள பங்களா, குதிரை வளர்ப்பு என மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த முதல் தமிழ்நடிகையும் இவர்தான்.
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்திலேயே, தன் நூறாவது, இருநூறாவது படங்களையும் நடித்த சிறப்புகொண்ட ஒரே தமிழ்நடிகை கே.ஆர்.விஜயாதான்.
சிவாஜி வீடு எப்பவுமே கூட்டமா இருக்கும்.எப்பவுமே ஆட்கள் வர்றதும் ,போறதுமா இருப்பாங்க.அன்னை இல்லத்துக்கு போனா ஒரு லட்சுமி கடாட்சமா இருக்கும்.
ஒரு கூட்டுக் குடும்பமா ஒண்ணா அவங்க இருக்கறது ரொம்ப பெரிய விஷயம்.அன்னை இல்லம் வீட்டுக்குள்ள போனா ஒரு கோயிலுக்குள்ள இருக்கற மாதிரி இருக்கும்..சிவாஜிக்கு பின்னாலே ராம்குமார்,பிரபு கூட எனக்கு ஆதரவா இருக்காங்க.அன்னை இல்லத்தை பத்தி கே.ஆர் விஜயா சொன்ன விஷயம் இது.
1963ஆம் ஆண்டில், தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கே.ஆர்.விஜயா, இன்றளவும் திரையுலகில் பயணித்துக் கொண்டே உள்ளார். ஏறத்தாழ 60 ஆண்டுகாலம், தமிழ்நடிகை ஒருவர், திரையுலகில் தொடர்ந்து பயணிக்கின்றார் என்றால் அது, கே.ஆர்.விஜயாதான்.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக