சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

பத்மினிக்கு சிவாஜி கொடுத்த பரிசு

சிவாஜி பத்மினி 
சிவாஜி நடிக்கிறதுலே ராஜா
பத்மினி ஆடறதுலே ராணி.
இவங்க நடிச்ச ஒருபடப்பெயர் கூட ராஜாராணி.
ஜோடிப் பொருத்தத்துலே  மட்டுமில்லே இவங்களோட தனித் திறமைக்கு  கூட இணை யாருமில்லே.
அதனாலேதான்,
ஜோடிப்பொருத்தத்துலே இவங்களுக்கு இணை யாருமில்லேன்னு சொல்வாங்க.

பத்மினி தன்னோட திருமணத்துக்கு முன்னாலே கடைசியா நடிச்ச படமும் சிவாஜியோட நடிச்ச செந்தாமரை  படம்தான்.

கேரள சகோதரி நடிகைகள்ன்னு சொல்ற லலிதா பத்மினி ராகினி மூணு பேரும் ஒரே ஒரு ஹீரோவோட ஜோடியா நடிச்சிருக்காங்க அப்படின்னு சொன்னா அது சிவாஜிதான்.

ராகினிக்கு கல்யாணம் நடந்தப்போ சிவாஜி காலுல அடிபட்டு எழுந்திருச்சி நடக்க முடியாத நிலைமையிலே இருந்தார்.அந்த நிலையிலும் ரெண்டு பேர் சிவாஜியை தூக்கிட்டு வந்த நிலையிலே சிவாஜி ராகினியோட கல்யயாணத்துக்கு வந்து கலந்துகிட்டார்.

கல்யாணத்துக்கு பின்னாலே சில படங்களில் நடிச்சு இனி சினிமா வேண்டாம்னு நடிக்காம இருந்த பத்மினி அதுக்கு பின்னாலே நடிக்க ஆரம்பிச்சதுக்கு காரணம் தில்லானா மோகனாம்பாள்.இந்த பட கதையை பத்மினி கிட்டசொன்ன A.P.நாகராஜன் சிவாஜி சிக்கலார்னா மோகனாம்பாள் பத்மினிதான்.நீங்க நடிக்கலேன்னா இந்த படத்தை எடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு.அதுக்கு பின்னாலேதான் பத்மினி தில்லானா மோகனாம்பாள் படத்துலே நடிக்க ஒத்துகிட்டாங்க.

ஒரு வித்தியாசமான மாறுதல் எல்லாம் தமிழ் சினிமா உலகத்துலே நடந்தது சிவாஜி பத்மினி படங்களில் தான்.
சிவாஜியோட பத்மினி ஜோடி சேர்ந்த முதல் படம் பணம்.இந்த படத்துலே இருந்து 7 படங்களில் ஜோடியா நடிச்ச பின்னாலே சிவாஜிக்கு அண்ணியா பத்மினி நடிச்சிருக்காங்க.அதுக்கு பின்னாலே ரொம்ப படங்களில் மறுபடி நடிச்சிருங்காங்க.
தமிழ்சினிமாலே ரொம்பவும் உயர்ந்த இடங்களில் கதாநாயகன் ,கதாநாயகி  ஸ்தானத்தில் இருந்த சிவாஜிக்கு  பத்மினி அண்ணியா நடிச்சதெல்லாம் தமிழ் சினிமா பாக்காத விஷயம்.பத்மினி மங்கையர்திலகம் படத்துலே இணையா நடிச்சது கூட S.V.சுப்பையாவுக்கு.

"சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக சிவாஜி பத்மினி எல்லாம் 
 ஒகேனக்கல் போயிருந்தாங்க.சிவாஜிக்கு வேட்டையிலே ரொம்ப ஈடுபாடு இருந்தது.எங்கேயாவது ஒரு சின்ன  சான்ஸ் கிடைச்சாலும் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைஞ்ச  மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் எல்லாரும் ஹோட்டல்லே  தங்கி இருந்தாங்க.
இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். அந்த நேரத்துலே ரூம் கதவை தட்டற சத்தம் கேட்டு பத்மினி பயத்தோட கதவை திறந்து பாத்தாங்க.
வெளியே சிவாஜி நின்னுகிட்டு இருந்தார்..
‘என்ன விஷயம்?’ன்னு பத்மினி கேட்டப்போ  ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ அப்பிடின்னு தன்னோட கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சின்ன  முயல் குட்டி!...

சிவாஜிக்கு அண்ணியா மங்கையர்திலகம் படத்துல நடிச்ச பத்மினி சிவாஜிக்கு சித்தியா நடிச்ச படம் எதிர்பாராதது.இப்படி வித்தியாசமான விஷயங்கள் எல்லாம் இந்த ஜோடி நடிச்ச படங்கள்லே தான் நடந்திருக்கு.

1959 ஆம் வருஷம் வந்த தங்க பதுமை பட ஷூட்டிங் நடந்துகிட்டிருந்த சமயத்துலே ஒரு சுவாராஸ்யமான விஷயம் நடந்துச்சு.இந்தபடத்தோட டைரக்டர் ASA.சாமி.படத்துலே ஒரு பாட்டு ஷுட்டிங் நடந்த சமயத்துல டைரக்டருக்கு உடம்பு சரியில்லாமே போயிடுச்சி.சிவாஜியும் பத்மினியும்  ஏகப்பட்ட பிசியா இருந்த நேரம்.ஷீட்டிங்கை கேன்சல் பண்ணாமே, அந்த பாட்டை எடுத்துடனும்னு சிவாஜிக்கு எண்ணம்.பத்மினியை கூப்பிட்டு ,இப்ப இந்த பாட்டுக்கு நீதான் டைரக்டர்.நான் நடிக்கிறேன்னு சொல்லி ,டைரக்டர் மேடம் ,நான் எப்படி நடிக்கணும்னு சொல்லுங்கன்னு பத்மினி கிட்டே கேக்க ,பத்மினியும் சொல்ல அந்த பாடல் காட்சியை சிவாஜியோட உதவியாலே பத்மினி டைரக்ட் செஞ்சாராம்.

ஒரே ஒரு டான்சுக்காகவே பத்மினி நடிக்க வேண்டியிருந்த படம் திருவருட்செல்வர்.மன்னவன் வந்தானடி பாட்டுலே ஒன்பது விதமான முத்திரை காட்ட வேண்டி பரத நாட்டியம் ஆட வேண்டி இருந்ததாலே பத்மினியை நடிக்க வெச்சார் AP.நாகராஜன்.இந்த டான்சுக்கு நடிச்ச பத்மினி,ஒரு படத்துக்கு கொடுக்கற உழைப்பை இந்த ஒரு  பாட்டுக்கு கொடுக்க வேண்டி இருந்ததுன்னு சொல்லியிருந்தார்.

நீங்க சிவாஜியை முதன்முதல் சந்தித்தது ஞாபகத்தில இருக்கிறதா என்ற கேள்விக்கு பத்மினி சொன்ன பதில் :

சிவாஜி இன்னும் சினிமாவுக்கு வரவில்லை. நான் ஏற்கனவே சினிமாவில் நடித்து புகழ் வாங்கியிருந்தேன். அப்போது ரத்தக்கண்ணீர் நாடகம் பார்க்கப் போயிருந்தேன், எம்.ஆர். ராதாவின் நாடகம். அதில் சிவாஜிக்கு  வேஷமே இல்லை. ஆனால் மேடையில பின்னால நின்னுகிட்டு  உதவி செஞ்சுகிட்டிருந்தார். என்னை பாத்ததும் தன்னோட  வாழ்க்கையில் ஒரு தடவையாவது என்னோடு நடிக்கவேணும்  என்ற தன்னோட  ஆசையை ஒப்பனாக சொன்னார். அப்பொழுது எனக்கு தெரியாது, அவருக்கும் தெரியாது, நாங்கள் 60 படங்கள் தொடர்ந்து நடிக்க போகிறோம்னு ..

அவரோட நடிச்ச  நாட்கள் மறக்க முடியாது. எட்டு மணிக்கு சூட்டிங் என்றால் 7.55க்கே வந்து உட்கார்ந்துக்குவார். நாங்க வழக்கம்போல மேக்கப் எல்லாம் போட்டு வரும்போது நேரம் எப்படியும் ஒன்பது ஆகிவிடும். பொறுமையாக ‘என்ன பாப்ஸ், லன்ச் எல்லாம் ஆச்சா?’ என்பார்.
ஏதாவது பேசி சிரிப்பு மூட்டிகிட்டே இருப்பாரு. சேலைத் தலைப்பை தூக்கிப் பிடிச்சுக்கிட்டு  அந்தக் காலத்து கதாநாயகி லட்சணமாக நான் ஒயிலா நடந்து வர்றதப் பாத்து ,  ‘என்னம்மா துணி காயவைக்கிறாயா?’ன்னு கிண்டலடிப்பார். காதல் பாடல் சூட்டிங் நடந்தா  இரண்டு பக்கமும் குரூப் நடனக்காரர்களை திரும்பித் திரும்பி தேடுவார். ‘என்ன பாப்ஸ், ஆரவாரப் பேய்களைக் காணவில்லையே ’ என்பார். இன்னும் போரடிக்கும் நேரங்களில் ‘யாரப்பா ரொம்ப நாழியாச்சு இருமி, ஒரு சிகரட் இருந்தாக் குடு’ என்பார். இப்படி சிரிக்க வைத்தபடியே இருப்பார். 
இதெல்லாம் ஆரம்ப காலத்து நினைவுகள் என்று சிவாஜியுடனான நினைவுகளை சொல்லியிருக்கார்.

செந்தில்வேல் சிவராஜ்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற