என் தம்பி படத்தின் உருவாக்கம் ...
கே. பாலாஜி தயாரித்த முதல் திரைப்படம் அண்ணாவின் ஆசை .தாதா மிராசிஇயக்கிய அந்த திரைப்படம் சுமாராகவே வெற்றி கண்டது.
அந்த படத்துக்கு கே. ஆர். விஜயா கணவர் திரு வேலாயுதம் நாயர் பைனான்ஸ் செய்தார்.
அந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்ட செய்தியை பாலாஜி செல்வம் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது நடிகர் திலகம் ,கே.ஆர் .விஜயாவிடம் கூற ,
நான் கால்ஷீட் தருகிறேன் ,என்னை வைத்து படம் எடு, அந்த கஷ்டமும் முதல் படத்தில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளும் சரியாகும் என்று நடிகர்திலகம் கூற அப்போது பாலாஜி சந்தோசம் அடைந்தார்.
சிவாஜிகணேசன்-
கே.ஆர்.விஜயா நடித்து கொண்டிருந்த செல்வம் படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து சுஜாதாவின் தங்கை படத்திற்கான விளம்பரத்தை வெளியிட்டார்.
சிவாஜி கணேசனின் ஆஸ்தான திரைப்பட வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் கதை வசனம் எழுத, பாடல்கள் கவியரசர் கண்ணதாசன், இசை எம். எஸ். விஸ்வநாதன், ஒளிப்பதிவு முத்துசாமி, என அறிவிப்பு ஆகியது.
படத்தின் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் ஆக இருந்தால் மட்டுமே நான் இந்த படத்திற்கு முதலீடு செய்வேன் என்று கே. ஆர். விஜயாவின் கணவர் திரு வேலாயுதம் நாயர் ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் கே. பாலாஜி அவர்கள் தற்போது திருலோக் ஏவிஎம்மில் நிரந்தர இயக்குனராக இருக்கிறாரே அவர் எப்படி வெளி பட தயாரிப்பு நிறுவனத்தில் படம் இயக்க சம்மதிப்பார் என கேட்க உடனே வேலாயுதம் நாயர் உங்கள் நண்பர் தானே ஏவிஎம் சரவணன்...
அவர் உங்கள் பேச்சை தட்ட மாட்டார் என கூற, பாலாஜி அவர்கள் ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு சென்று
ஏ. சி. திருலோகச்சந்தரை சந்தித்து எனக்கொரு படம் தாங்கள் இயக்கி தர வேண்டும் என்று கூற அந்த அன்பு கட்டளையை ஏற்று கொண்டு திருலோகச்சந்தர் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் மற்றும் சரவணன் அனுமதியோடு பாலாஜியின் தங்கை படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்.
வேலாயுதம் நாயரும், கே. பாலாஜியும் சுஜாதா பிக்சர்ஸ் சார்பாக சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ் ஆகிய நால்வரையும் தொடர்ந்து தயாரிக்கும் மூன்று திரைப்படங்களுக்கு தொடர் ஒப்பந்தம் செய்தார்.
அதன் பிறகு வெளிவந்த தங்கை திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.
அதனை தொடர்ந்து பாலாஜி ...
கதை எழுதி படம் இயக்குவதால் கொஞ்சம் வசனகர்த்தாவுக்கே பணம் செலவாவதை கருதி இந்தி மற்றும் பிற மொழி திரைப்படங்களை ரீமேக் செய்ய முடிவெடுத்தார்.
1967ல் கே. பாலாஜி, வேலாயுதம் நாயர், கே. ஆர். விஜயா, ஜாவர் சீதாராமன் ஆகியோர் தெலுங்கு திரைப்படமான ஆஸ்திரபரலு படத்தை கேசினோ தியேட்டரில் பார்த்து விட்டு வந்த பிறகு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் அப்படத்தை மீண்டும் காண செய்தனர்.
அதில் சிவாஜி கணேசன் கதாபாத்திரம் ஹெவி ரிஸ்க் மூவி சப்ஜெக்ட் ஆகவும் கொஞ்சம் ஆக்சன் கலந்த வேடத்தில் நடிக்க சிவாஜி கணேசன் பாத்திரம் நன்றாக அமைந்திருந்தது. மற்ற கதாபாத்திரங்களான எதிர்மறை கதாபாத்திரத்தில் தம்பியாக பாலாஜி தந்தையாக மேஜர் சுந்தரராஜன், மற்ற கதாபாத்திரத்தில் பண்டரி பாய், சுந்தரி பாய், ஜாவர் சீதாராமன், நகைச்சுவை கதாபாத்திரத்தில் வி. கே. ராமசாமி, நாகேஷ் ஆகியோர் முடிவு செய்யப்பட்டாலும்.
கதாநாயகி வேடத்தில் இறுதி வரை யாரும் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை
படத்தின் ஆஸ்தான கதாநாயகியாக கே. ஆர். விஜயா கொஞ்சம் கூட அந்த வேடத்தில் பொருந்தி போகவில்லை.
அதைவிட அப்போது கே. ஆர். விஜயா பிரசவமுற்று இருந்த நிலையில் அப்படத்தில் சாட்டையடி பாடல் காட்சியான தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் காட்சியில் ஏறி இறங்கி ஆட கூடாது என்றும் அதைவிட சாட்டையடி காட்சியில் ஒரு சில சாட்டையடி பட்டு விடும் என்ற பயத்தால் வேலாயுதம் நாயர் விஜயாவை அதில் நடிக்க வைக்க மறுத்தார்.
அதன் பிறகு என் தம்பி படத்தின் டிஸ்கசனில் கதாநாயகி யார் என முடிவு செய்ய பாலாஜியின் ஆபீசில் சிவாஜி கணேசன், தயாரிப்பாளர் பாலாஜி, கே. ஆர். விஜயா, வேலாயுதம் நாயர் கூடினார்கள்.
அப்போது வேலாயுதம் நாயர் அவர்கள் தெலுங்கு படமான ஆஸ்திரபரலு படத்தில் நாகேஸ்வர ராவுக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதாவையே போட்டு விடலாமா தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை இப்படத்தில் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்று கூற உடனே சிவாஜி கணேசன்
அவர் இப்போது கலாட்டா கல்யாணம் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அதனால் இதில் வேறு யாரையாவது போடலாம் என்று சொன்னார் .
அதன் பிறகு பாலாஜி தெலுங்கு படத்தில் நடித்த ஜக்கையாவிற்கு ஜோடியாக நடித்த வாணிஸ்ரீ அவர்களையே என் தம்பி படத்தில் சிவாஜி கணேசனுக்கு முடிவு செய்து விடலாம் என முடிவு செய்தார்.
அதற்குள் குறுக்கிட்ட சிவாஜி கணேசன் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் உனக்கு கதாநாயகி இல்லையா என பாலாஜி இடம் கேட்ட போது இந்த படத்தை பொறுத்தவரை நீங்கள் தான் ஹீரோ செகன்ட் ஹீரோ என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூற உடனே கதாநாயகியாக வாணிஸ்ரீ ஒரு வழியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த திரைப்படமானது தெலுங்கில் நீங்கள் இதற்கு முன் நடித்த ஆஸ்திரபரலு படத்தின் தழுவல் தான் என ஏ. எல். நாராயணன் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி வாணிஸ்ரீயிடம் கூற சிவாஜி கணேசன் உடன் வாணிஸ்ரீ இணையும் முதல் படமாக அமையபோகிறது என வாணிஸ்ரீ மகிழ்ச்சி அடைந்தார்.
வாணிஸ்ரீயின் வக்கீல் அவர்கள் இப்படத்தில் கதையில் சாட்டையடி காட்சியில் நடிக்கும் போது கதாநாயகிக்கு ஏற்படும் உடற் காயங்கள், சேதாரங்கள் தாங்களே ஏற்று கொள்ள வேண்டும் என கையொப்பம் இட்டால் வாணிஸ்ரீ இந்த படத்தில் நடிப்பார் என ஒரு நிபந்தனை நோட்டீஸ் வந்தவுடன் அதனை கண்ட தயாரிப்பாளர் பாலாஜி மற்றும் வேலாயுதம் நாயர் மிகவும் கொதித்து கோபமடைந்து அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை வாணிஸ்ரீ இப்படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று பதில் நோட்டடீஸ் அனுப்பினர்.
அந்த கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் உடன் நடிக்க வைக்க அப்போது தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகியும் பொருந்தவில்லை..
படத்தையே கை விடலாமா என்ற நிலைக்கு வந்த நிலையில்...
மன சோகத்துடன் சுஜாதா பிக்சர்ஸ்சில் பாலாஜி, வேலாயுதம் நாயர், கே. ஆர். விஜயா உட்கார்ந்திருக்க அதை வழக்கம் போல் கண்டு கொண்டு அவ்விடத்திற்கு வந்த சிவாஜி கணேசன் என்ன மாப்பிள்ளைக்கு பெண் கிடைக்கவில்லையா என்று கேட்டு கொண்டு அவர்கள் கவலைகளை தீர்ப்பதை போல் கிண்டலாக பேசினர்.
அப்போது கே. ஆர். விஜயாவுடன் பட்டணத்தில் பூதம் படத்தில் அவருடன் நடித்து கொண்டிருந்த ஜாவர் சீதாராமன் அவர்கள் கே. ஆர். விஜயாவிடம் உங்கள் குருநாதர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் பணமா பாசமா படத்திற்கு பிறகு சரோஜாதேவி படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட போகிறாராம் என்று கூற உடனே உணர்ச்சி வசப்பட்ட விஜயா ,அவள் நடிப்பை நிப்பாட்ட போகிறாளா என்ற விஜயா...
பாலாஜி தயாரிக்கும் படத்திற்கு கதாநாயகி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை வெளிபடுத்தாமல் மனதில் அடக்கி கொண்டு உடனே வேலாயுதம் நாயரையும், ஜாவர் சீதாராமனையும் தனது காரில் புறப்பட சொல்லிவிட்டு கிளம்பினார்.
உடனே அருகில் இருந்த பாலாஜி, சிவாஜி கணேசன் அவர்கள் எங்கே கிளம்பிவிட்டிர்கள் என கேட்க உங்களுக்கு சந்தோசமான விஷயம் வந்து சொல்கிறேன் என கூறிய விஜயா உடனே தனது அம்பாசிட்டர் காரில் ஏறி பறந்தார்.
கே. ஆர் விஜயாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் சில பேரிடம் தான் நல்ல நட்பில் இருந்தார் அவர்கள் சிவாஜி கணேசன், கே. பாலாஜி, சரோஜாதேவி ஆவார்.
அப்போது கற்பகம் ஸ்டூடியோவில் பணமா பாசமா படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்த சரோஜாதேவியை பார்த்தார் கே.ஆர். விஜயா ..
விஜயா எப்போதும் சரோஜாதேவி வயிற்றில் விளையாட்டாக குத்துவார்.
ஆனால் அன்று வழக்கம் போல் இல்லாதவாறு சரோஜாதேவி மீது கோபத்துடனும், மன அதிருப்தியிலும் இருப்பதை போல் விஜயா முகத்தை வைத்து கொண்டு இயக்குனர் கே. எஸ். ஜி இடம் வாயளவே சிரித்து பேசி கொண்டு இருந்தார்.
அதை அறிந்து கொண்டு அருகில் வந்த சரோஜாதேவி அவர்கள் என்ன தான் பிரச்சனை என விஜயாவிடம் கேட்டார் .
ஆனால் அதை நேரடியாக பேசாமல் ஜாடை மாடையாக ஜாவர் சீதாராமன் மூலம் பாலாஜி தயாரிக்க இருக்கும் படத்தில் அவள் (சரோஜாதேவி) கதாநாயகியாக நடிப்பதாக இருந்தால் தான் நான் பேசுவேன் என கூற ...
சரோஜாதேவி அவர்கள் ஜாவர் சீதாராமனிடம்,
இப்போது எனது கணவர் தான் எனது கால்சீட் விவகாரத்தை கவனித்துக் கொள்கிறார் என்று கூறினார்.
உடனே ஜாவர் சீதாராமன் அவர்கள் கே. ஆர். விஜயா கோபத்திற்கு காரணம், நீ இந்த படத்தோடு எந்த படத்திலும் நடிக்க மாட்டேனு நியூஸ் வெளியாகியதே அது தான் விஜயாவின் கோபத்திற்கு காரணம் என கூற...
அதற்கு பதிலளித்த சரோஜாதேவி நான் நடிக்க போவதில்லை என்று கூறவில்லை. எல்லாம் தமிழ் சினிமாவில் எதிரணி நடிகர் மூலம் தவறான தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. நான் என்ன செய்ய முடியும் வக்கில் சார் என்று சரோஜாதேவி ஜாவர் சீதாராமனிடம் கூறினார்.
தற்போது ஆஸ்திரபரலு படத்தை விஜயா கணவர் வேலாயுதம் நாயர் மற்றும் பாலாஜி எடுக்க உள்ளனர். என் தம்பி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்துள்ளார் என கூற அது மட்டுமல்ல ,அந்த படத்தின் கதை கொஞ்சம் ஹெவி ரிஸ்க் சப்ஜெக்ட்..
என படவிபரங்களை அவர் சொல்ல சரோஜாதேவி சம்மதிதார்.
அதன் பிறகு மிகவும் சந்தோஷத்தில் திளைத்திருந்த கே. ஆர். விஜயா நான் தற்போது பாலாஜி மற்றும் சிவாஜி அண்ணனுக்கு சுஜாதா ஸ்டூடியோவில் இன்ப அதிர்ச்சி தருவதாக நான் திட்டமிட்டுள்ளேன்..
கே. எஸ். ஜியின் கற்பகம் ஸ்டூடியோ விஜயாவுக்கு பழக்கப்பட்ட இடமாகும் .
அதனால் கொஞ்சம் புதுமையையும் அதிர்ச்சியையும் செய்ய முடிவெடுத்தார்.
அங்கிருந்த சில டெக்ரேசன் பாய்களை அழைத்து சரோஜாதேவியை பிரமிட் பொம்மைக்குள் உள்ளே வைத்து கிப்ட் பாக்ஸ் போல் பார்சல் செய்ய வேண்டும் என கூறினார்.
அதற்கு பயந்த சரோஜாதேவியை விஜயா, எதோ உன்னை பெங்களூருக்கே பார்சல் செய்ய போவதாக நினைத்து பயப்படாதே.. 5 கிலோ மீட்டர் தான் அதில் நீ நின்று கொண்டால் போதும். சுவாசிக்க இடமுள்ளது. பயப்பட வேண்டிய அவசியமில்லை என விஜயா கூறினார்.
பிரமிட் பொம்மைக்குள் சரோஜாதேவியை கிப்ட் பாக்ஸ் போல் பார்சல் செய்து ஒரு வேனில் வைக்கப்பட்டு கே. பாலாஜியின் சுஜாதா பிக்சர்ஸ் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தது.
அப்போது அங்கிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாலாஜி, ஏ. எல். நாராயணன் அனைவரும் அதிசயத்துடன் பார்த்தனர் ,எம்ப்பா அந்த பார்சல் வண்டி அட்ரஸ் மாறி வந்துருச்சானு பாலாஜி கேட்க போக...
உடனே விஜயாவின் கார் சுஜாதா பிக்சர்ஸ்குள் வேகமாக நுழைந்தது.
உடனே அந்த வேனில் இருந்து பார்சல் நான்கு பேர்களால் இறக்கி வைக்கப்பட்டது.
சிவாஜி கணேசன் பாலாஜி, ஏ. எல். நாராயணன் இயக்குனர் ஸ்ரீதரும் அப்போது அங்கிருந்தார்.
விஜயா, வேலாயுதம் நாயர், ஜாவர் சீதாராமன் அவர்கள் மன மகிழ்ச்சியுடன் ஒரு புது கதாநாயகியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என கூறியவுடன் ...
அந்த பார்சல் பாக்ஸ்சின் மேல் பரப்பில் ஒட்டபட்டிருந்த அட்டை பாக்சையும், கலர் பேப்பரையும் கட் செய்ய விஜயா பாய் என அழைக்க , தட்டில் ஒரு நீண்ட நெடிய பெரிய கத்தியை எடுத்தார் விஜயா.. அதனை கண்டு அருகில் இருந்தவர்கள் மீரண்டு போயினர்.
ஒரு வழியாக அட்டை பாக்சை கிழித்தவுடன் ஒரு பிரமிட் ..பேரழகி பொம்மையாக காட்சி அளித்தது.
கே. ஆர். விஜயா துப்பாக்கி சுடுவதில் கை தேர்ந்தவர் என அனைவரும் திரையுலகில் அறிந்ததே. உடனே மீண்டும் விஜயா பாய் என அழைக்க வெறும் ரவா (அதாவது ரப்பராலான போலி குண்டுகளால்) நிரப்பப்பட்ட துப்பாக்கியை ஒரு தட்டில் ஏந்தி தர விஜயா அந்த பிரமிட் பொம்மையின் நடுப்பகுதியில் அதாவது வயிற்று பகுதியில் குறி வைத்து டூமில் என சத்துடன் முதல் முறையாக சுட்டார்.
அதன் பிறகு தயாரிப்பாளர் பாலாஜியையும் சுட சொன்னார் அய்யோ நான் வேண்டாம் என்று அவர் கூற இதுவெல்லாம் சும்மா பாஸ் என கூற அவரும் இரண்டாவது முறை சுட்டார்.
அதன் பிறகு கதாநாயகன் சிவாஜி கணேசன் கையில் துப்பாக்கி தர அவர் மூன்றாவது முறையாக சுட்டவுடன் அந்த பிரமிட் பேரழகி சிலை உடைந்து சரோஜாதேவி சிரித்து கொண்டே தோன்றினார்.
உடனே அங்கிருந்த அனைவரும் சரோஜாதேவியை ஹை நம்ம சரோ என மகிழ்ச்சியுடன் அழைக்க அந்த மகிழ்ச்சியில் அவரும் பங்கு கொண்டார்.
கே. ஆர். விஜயா கால்ஷீட் ஒப்பந்தம் என் தம்பி படத்தில் இருந்து திருத்தப்பட்டு இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் தான் இயக்க இருந்த இரு மலர்கள் படத்திற்கு அதை வேலாயுதம் நாயர் அனுமதியுடன் ஷிப்ட் செய்து கொண்டு என் தம்பி படத்தில் சரோஜாதேவி கால்ஷீட் கொடுத்து நடித்து கொடுத்தார்.
என் தம்பியில் சிவாஜி கணேசன்-சரோஜாதேவி இணைந்து பாடும் இரண்டு பாடல்களும் வெளிபுறங்களில் படமாக்க திட்டமிடப்பட்டது.
அடியேய் நேற்று பிறந்தவள் பாடல் ராஜஸ்தான் சகாரா பார்க்கில் மிக அழகாக படமாக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அய்யய்யோ மெல்லதட்டு பாடல் மைசூர் பிருந்தாவனத்திலும் படமாக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் மற்றும் பட முழுவதும் சரோஜாதேவி வயிற்றில் ஷாட்பெல்ட் அணிந்து நடிக்க வேண்டிய நிலையில் இருந்ததால் உடனே ஜாவர் சீதாராமன் பிரிட்டனில் இருந்து ஷாட்பெல்ட்டை வரவழைத்தார்.
இந்த பெல்ட் ஆனது பொதுவாக ஆங்கில நடிகர்களே அணிந்து நடித்து கொண்டிருந்தனர்.
அதை தென்னிந்திய திரையுலகில் முதல் முறையாக அணிந்து நடித்த பெருமைக்குரிய முதல் நடிகை சரோஜாதேவியை சாரும்
மேலும் ஷாட்பெல்ட்டை பெற இந்தியா இம்போர்ட்டில் அனுமதி பெற வேண்டி இருந்தது.
அதற்கு ஒரே காரணம் இந்த ஷாட்பெல்ட்டானது சாதாரணமானதல்ல .அதனுள் டைனமெட் பேக்கேஜிங் செய்து கொண்டு மற்றவர்களை கொல்வதற்கு பயன்படுத்தி கொள்ளப்படலாம் என்பதால்..
இதை சரிவர பராமரிக்க ஒரு வடநாட்டு ராணுவ வீரரான குணா சிங் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
மேலும் அந்த ஷாட்பெல்ட்டை சரோஜாதேவி அணிந்து நடிக்கும் போதான சிரமம் கொஞ்சம் நஞ்சமல்ல..
ஓவர் வைட்டேஜ் ஸ்டமக் இருப்பதை சோதனை செய்த பிறகு சரோஜாதேவி வயிற்றில் அவ்வப்போது பரிசோதித்து அணிய செய்வார்கள்.
குணா சிங் சரோஜாதேவி வயிற்றை அழுத்தி பரிசோதிக்கும் போது சரோஜாதேவியின் அலறல் பட குழுவையே சிரிக்க செய்து விடுமாம்.
என் தம்பி படத்தில் சிவாஜி கணேசன் கத்தி வீச்சு சண்டை போடும் போது அதற்கு பயிற்சி அளித்தவர் சங்கர் என்பவர் .
சிவாஜி கணேசன் கத்தி வீச்சு பயிலும் போது இரண்டொரு முறை அவர் கையை கிழித்து விட்டதாம்.
இப்படம் வெளியாகும் போது தம்பி என்றே பெயரிடப்பட்டதாம் .ஆனால் அது கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அப்போது பிரபலமாக நடத்தி வந்த நாடகத்தின் பெயர் என்றதால், என் தம்பி என பெயர் மாற்றப்பட்டு படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.. சற்று மாறுபட்ட குடும்ப சித்தரம், கதையில் ட்விஸ்ட், கத்தி சண்டை, சாட்டையடியால் தன்னை நிரூபிக்கும் மாறுபட்ட பாடல் காட்சி கொண்ட படம் என் தம்பி.
இந்த நிகழ்வுகளை கொண்டே சிவாஜி கணேசன் நடித்த சிவந்த மண் படத்தில் ஸ்ரீதர் பிரமிட் பேரழகி பொம்மையில் இருந்து காஞ்சனா வெளிவருவது போன்றும் சாட்டையடி பாடல் காட்சியும் வைத்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக