எனக்கு புடிச்ச ஓபனிங் சீன் தெய்வமகன் ஓபனிங் சீன்.கதாநாயகனோட ஓபனிங்சீனை பல விதமா பல படத்துலே வித்தியாசமா காமிச்சிருக்காங்க.ஆனா தெய்வமகன்லே வர்ற ,
கதாநாயகனை காமிக்கிற ஓபனிங் சீன் மத்த எல்லா படத்துலேயும் இருந்து ரொம்ப டிபரெண்டான ஒண்ணு.
படம் ஆரம்பிச்சு 25 ஷாட்டுலேயும் கதா நாயகன் இருப்பார்.ஆனா அந்த 25 வது ஷாட்டுலேதான் முகத்தையே காட்டுவாங்க.இப்படி ஒரு காட்சி எந்த தமிழ் படத்துலேயும் இருந்திருக்க வாய்ப்பில்லே..
ஷாட் பை ஷாட்டா அதை பாக்கலாம்.
படம் ஆரம்பிச்சதும் பெரிய பில்டிங்கை காட்டுவாங்க.ரெண்டு ஷாட்டா பிரிச்சு கீழே இருந்து மேலேயும்,
சைட் வைட்டாவும் அதாவது நீள அகலமாகவும் அத காட்டுவாங்க.
இதுக்கு அடுத்த ஷாட்டுலே இருந்து தெய்வமகன் சங்கர் Introduction.
காட்சி 1
ஷாட்1
முதல் காட்சி முதல்ஷாட்.
ஆபீஸ் ரூமை காமிப்பாங்க.
நடிகர்திலகம் இடது கையை தூக்கி டைம் பார்ப்பார்.அதே இடது கை.இப்ப ரைட் சைடிலே கட் ஷாட்டா காமிப்பாங்க.5 செகண்ட்க்குள்ளே இந்த ரெண்டு ஷாட்டையும் காமிச்சுருவாங்க.இந்த ஷாட்டுலே
எந்த டயலாக்கும் இருக்காது.
2 வது ஷாட்:
கதவு தட்டற சத்தம்.ஸ்டெனோ கதவை திறந்து உள்ள வர்ற ஷாட்டு.இப்ப சிவாஜியோட வாய்ஸ் மட்டும் கேட்கும்
yes ,come in அப்பிடிம்பாரு.ரிவால்விங் சேர்லே உக்கார்ந்திருப்பார்.பின்னாலே இருந்து காமிரா படம் பிடிச்ச ஷாட்டு.
ஸ்டெனோ சொல்வாங்க ,மணி ஏழுன்னு சொல்வார்.எல்லோரும் போய்ட்டாங்களா ?கார் ரெடியா இருக்கான்னு ரெண்டு கேள்வி.
இப்பவும் சிவாஜியோட வாய்ஸ் மட்டும்.ஸ்டெனோவ மட்டும் இந்த ஷாட்டுலே காமிப்பாங்க.
3 வது ஷாட்:
சிவாஜி புல் கோட் ஷுட்டுடன் தொப்பி போட்டு எந்திரிச்சு போவார்.சிவாஜி போகும் போதே அந்த தொப்பியை சரி செஞ்சிகிட்டே போவார்.அது ஒரு சின்ன ஸ்டைல் .
4 வது ஷாட் .
ரூம் கதவை திறந்து விடுவார் ஸ்டெனோ.சிவாஜி
Thankyou ன்னு சொல்லிட்டு கடந்து போவார்.
5 வது ஷாட்:
ஆபீஸ் ரூமை விட்டு வெளியே வர்ற சிவாஜி லிப்ட்டுக்குள் போயி புகுந்துக்குவார்.
லிப்ட் கீழே செல்லும் காட்சி:
6வது ஷாட்:
லிப்டை திறந்து வெளியே வருவார்.
கார் வீட்டுக்கு போற ஷாட் காமிப்பாங்க.
2 வது காட்சி:
7 வது ஷாட்:
வீட்டு கதவை திறப்பார்.உருவத்தை எல்லாம் பின் பக்க போஸ்லே தான் காட்டுவாங்க.ஓவர் கோட் ,தொப்பி சகிதம் அவரை காமிக்கறதுலேயே ஒரு த்ரில்லிங் ,அட்டகாசம் இருக்கும்.பிரமாதமான ஒபனிங்கா நாம பீல் பண்ண முடிஞ்சது.அந்த மாளிகையோட வரவேற்பு ரூம் நீளமா பெரிசா இருக்கும்.கதவை திறந்து பத்தடி சிவாஜி நடந்து போறதா காமிப்பாங்க.
8 வது ஷாட்:
இந்த ஷாட்டெல்லாம் என்ன ஐடியா பண்ணி எடுத்திருப்பார் திருலோகசந்தர்.அப்பவே எப்படி எல்லாம் யோசிச்சு இருக்காங்க.இது ஒரு சின்ன ஷாட்டுதான்.சிவாஜி நடந்து போற ஷாட்டு மட்டும்தான்.
மேலே இருந்து டாப் ஆங்கிளில்லே சிவாஜி நடந்து போற மாதிரி அந்த ஷாட் ரொம்பவே பிரமிக்க வைக்குது.
சிவாஜியோட வாக்கிங் ஸ்டைலை காட்டறதுக்காகவே இந்த ஷாட்டை எடுத்து இருப்பாங்க .பிரமாதமா கவரேஜ் பண்ணி இருப்பாங்க.
ஹால்ல இருந்து மாடி படி ஆரம்பிக்கும் .அது வரைக்கும் நடந்து போற மாதிரி டாப் ஆங்கிள் ஷாட் அது.
9 வது ஷாட்:
இப்ப கேமரா பின்னாலே இருந்து எடுத்திருப்பாங்க.சிவாஜி ரெண்டு படி ஏறுவதற்கு உள்ளேயே வேலைக்காரன் ஓடி வந்து பேசறமாதிரி ஷாட்.
அய்யா ஆபீசுக்கு போன் பண்ணுனேன் ,நீங்க புறப்பட்டு விட்டதா சொன்னாங்க ,இதைஅந்த வேலைக்காரன் சொல்லறப்போ சாதாரணமாக கேட்கற சிவாஜி,அடுத்ததா வேலைக்காரன் சொல்லற ',அம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு நர்சிங் ஹோம் கொண்டு போயிருக்காங்க'னு
சொல்வார்.அம்மாவுக்கு பிரசவ வலின்னு வேலைக்காரன் சொல்லறப்போ ,ரெண்டு
கையையும் காலுல தட்டி,மேல் படியில வைச்ச காலை அப்படியே கீழ்ப்படியிலே இறக்கி ,என்ன அழகு !என்ன ஸ்டைல்...
அந்த ஆனந்தத்தை அந்த நடையிலயும் ,சின்ன ஓட்ட ஓட்டத்திலே ,அதுவும் பேக் சைட்லே கேமிரா கோணத்துலே எப்படி அழகா வெளிப்படுத்துவார்.
சரசரன்னு மாடிப்படி மேல ஏறி போவார்.அப்படி போற போதே கோட் பாக்கெட்ல இருந்து பணத்தை அள்ளி வீசிட்டு போவார்.பணத்தை வீசற மாதிரி காட்டியிருக்க வேண்டியதில்லே ! ஆனாலும் சிவாஜி அழகா அதை செஞ்சிருப்பார்.
10 வது ஷாட்:
தன்னோட ரூமுக்குள்ள போற சிவாஜி அங்க இருக்கற பண்டரிபாய் போட்டோவை விரலால தொட்டு ,பெருமையா நினைக்கற மாதிரி இந்த ஷாட்
11 வது ஷாட்:
டிரஸ் மாத்திகிட்டு வந்து பீரோவுக்கு முன்னாலே நிக்கறதும் ,பேன்ட் பாக்கெட்லே இருந்து பீரோ சாவியை எடுத்து பீரோவை திறக்கறதுமான ஷாட்.
12 வது ஷாட்:
பீரோ தவை திறந்து பீரோக்குள்ள இருந்து எதையோ எடுத்து கோட் பாக்கெட்டுக்குள்ளே சிவாஜி போட்டுக்குவார்.அப்படியே வெளியே வருவார்.
காட்சி3:
ஷாட்13:
அது ஒரு கண்ணாடி வெச்ச கதவு.அதுக்கு முன்னாலே நிழல் உருவம் நிக்கறது தெரியும்.அந்த கதவை திறக்கற மாதிரி ஷாட் அது.
14 வது ஷாட்:
கதவை திறந்து வர்றப்போ கண்டிப்பா உருவத்தை காட்டுவாங்கன்னு பாத்தா ,கதவை திறந்து வர்றப்போ காமிரா பின்னாலே போயிடும்.அந்த அறைக்குள்ளே வேகமா வருவார்.அந்த நடையிலே ஒரு உற்சாகம்,சந்தோசம் எல்லாம் தெரியும்.குட்ஈவ்னிங் டாக்டர்னு சொல்லிட்டே ஸ்பீடா போவார்.
15 வது ஷாட்:
மேஜர் சுந்தரராஜனை காமிப்பாங்க.வா சங்கர்னு சொல்வார் மேஜர்.இப்போ மேஜரை காமிச்சு சிவாஜியோட வாய்ஸ் மட்டும் இருக்கும்.ராஜு ,அவ இந்த வலியை பொறுத்துக்க மாட்டா ,சீக்கிரம் டெலிவரிக்கு ஏற்பாடு பண்ணு,Go ahead ,quick அப்படிம்பார்.மேஜர் இத கேட்டு சிரிச்சுகிட்டே சொல்வார்:
உன்னோட அதிகாரமும் அவசரமும் ஆபீசிலதான்.இந்த மாதிரி கேசுக்கெல்லாம் மேலே இருந்து ஆர்டர் வரணும் ,ஆபீசர்கெல்லாம் ஆபீசர்.அவனுக்கு உன் மாதிரி பணக்காரனோட அவசரமெல்லாம் புரியாதுன்னு மேஜர் பேசுவார். இந்த ஷாட்டோட அதே தொடர்ச்சியா அதே கோணத்துலே அடுத்த ஷாட் அப்படியே வரும்..
16 வது ஷாட்..
மேஜர் பொசிஷன் அப்படியே ..
இந்த ஷாட்டுலே சிவாஜி மேஜரோட பேச்சை கேட்டு தோளை தட்டி தருவார்.ஒரு சின்ன சிரிப்பு சிவாஜிகிட்டே.
ராஜு! ராஜு !எனக்கு பொறக்கப் போற குழந்தை எப்படியிருக்கணும்னு தெரியாமான்னு சொல்லிக்கிட்டே கோட் பாக்கெட்லே கையை விடுவாரு.அதோட அந்த ஷாட் ஓகே.
17 வது ஷாட்:
இப்ப சிவாஜி கையை நீட்டுவார்.இப்ப அந்த டயலாக் தொடர்ச்சியா ஆண்டவன் ஆசிர்வாதத்தாலேன்னு சொல்லி கையை விரிப்பாரு.உள்ளங்கையிலே தங்கக்காசுகள் இருக்கும்.ஆண்டவன் ஆசிர்வாதத்தாலேங்கற அந்த டயலலாக்கோட தொடர்ச்சியா இந்த தங்கத்தை போலே தகதகன்னு ஜொலிச்சு ...அப்பிடின்னு பேசிட்டு இருக்கறப்போ ..இந்த டயலாக்கோட தொடர்ச்சியா அடுத்த ஷாட்டுக்கு மாறிடும்.
18வது ஷாட்:
மேஜருக்கு முன்னாலே கையை நீட்டி ,அந்த தங்க காசுகளை காமிச்சு ,மாசு மருவில்லாத ரோஜா இதழ் மாதிரி மென்மையா இருக்கணும்.பூரண சந்திரன் மாதிரி நிறஞ்ச அழகோட பிரகாசிக்கணும் ராஜு !பிரகாசிக்கணும்.சிவாஜியோட அந்த உணர்வுபூர்வமான பேச்சை கேட்கற மேஜரோட முகம் திகைப்பும் கொஞ்சம் பயமுமா காட்டும்.
19 வது ஷாட்:
இதுக்கு முன்னாலே வர்ற ஷாட்டுலே இருந்து Cut ஷாட்டா ,மேஜருக்கு முன்னாலே நின்னு சிவாஜி பேசற டயலாக் ஷாட் இது.இதுக்கு முன்னால ஷாட்டுலே வந்த டயலாக்குக்கு காரணம் சொல்லும்படியான டயலாக் இந்த ஷாட்டுலே ..ராஜு "நான் ஏன் இப்படி நடந்துகறேன்னு உனக்கு புரியுதில்லே ,என்னோட உணர்ச்சிகளை உன்னாலே புரிஞ்சிக்க முடியுது இல்ல ,இப்படி சிவாஜி மேஜர்கிட்டே சொல்ல ,அதை ஆமோதிக்கற மாதிரி மேஜர் தலையசைச்சு சிவாஜியை தட்டி கொடுப்பார்.
இந்த இடத்துலே,நர்ஸ் வந்து மேஜரை கூப்பிட ,சிவாஜியை Wait பண்ண சொல்லற மாதிரி
மேஜர் சைகை செஞ்சுட்டு ஆபரேசன் தியேட்டருக்கு போவார்.
20 வது ஷாட்:
மேஜர் போனதும் கையில தங்க காசுகளை வெச்சுகிட்டே ,
நர்ஷிங்ஹோம்லே மாட்டி வெச்சிருக்கிற குழந்தைகளோட போட்டோக்களை சிவாஜி பாக்கற மாதிரி ஷாட் இது..சிவாஜியோட உணர்ச்சி பாவங்களை அவரோட பின் பக்க அசைவுகள்ல இருந்தே நாம புரிஞ்சிக்க முடியும்.
இப்போ குளோசப்பா குழந்தைகள் போட்டோவை காட்டுவாங்க.நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் அப்படின்னு படத்தோட டைட்டில் கார்டு ஸ்டார்ட் ஆகும்.குழந்தைகளோட போட்டோக்களை காமிச்சு ஃபுல் டைட்டிலும் முடியும்..
டைட்டில் முடிஞ்சு....
21 வது ஷாட்.
மேஜர் ஆபரேசன் தியேட்டர்லே இருந்து வெளியே வருவார்.முகம் கொஞ்சம் இறுகன மாதிரி இருக்கும்.
அந்த ஷாட்டுலே சிவாஜி உள்ள போவார்.ராஜு அப்படிம்பார் சிவாஜி .
ஆண் குழந்தை அப்படிம்பார் மேஜர்.
'கடவுளே'ன்னு சொல்லிட்டு ,என் குழந்தையை நான் பாக்கணும்னு ஸ்பீடா போக முயற்சிப்பார்..அவசரப்படாதே, அப்புறம் பாக்கலாம்னு மேஜர் சிவாஜியை தடுப்பார்..அதை கேட்காம சிவாஜி உள்ளே போவார்.
22 வது ஷாட்:
ஆப்ரேஷன் தியேட்டர் வாசல காமிப்பாங்க. சிவாஜியோட கால்கள் மட்டும் தெரியும்.அதிர்ச்சி ,தளர்ச்சி எல்லாம் அந்த நடையிலேயே காட்டுவாரு சிவாஜி.இந்த ஷாட்டுலே தான் சிவாஜியோட முன் பக்க கால்களை மட்டும் காட்டுவாங்க.கையிலே வெச்சிருந்த காசுகளை கீழே தரையிலே போட்டபடி தளர்ந்த மாதிரி நடந்து வருவார்.
23 வது ஷாட்:
சிவாஜி நடந்து வர,மேஜர் சிவாஜி தோளிலே கையை வெக்க,அந்த கையை ஒதுக்கித் தள்ளறமாதிரி ,சிவாஜி நடந்து போயி ,டேபிளை குத்துவார்.
மெல்லிசா சிவாஜியோட வாய்ஸ் கேக்கும் ,ஏமாந்துட்டேன் ராஜூ !ஏமாந்துட்டேன்னு சொல்வார்.
அதுக்கு மேஜர் ,இதுக்கு யாரும் பொறுப்பாளி இல்ல இது இயற்கையோட விளையாட்டு , உனக்கு என் ஆழ்ந்த அனுதாபம்னு சொல்லுவார்.
இந்த இடத்துலே தான் சிவாஜியோட சத்தம் அதிகமா இருக்கும்..நொறுங்கிப் போன இதயத்தோட வேதனை குரலா அது வெளிப்படும்..
'யாருடைய அனுதாபமும் எனக்கு தேவையில்லை' அப்படிம்பார் ..
சிவாஜி மேஜர் ரெண்டு பேரையும் போகஸ் பண்ற காமிரா ஸ்லோவா சிவாஜி முதுகுக்கு போகும் இப்போ..
மெதுவா சொல்லுவார் சிவாஜி !
ராஜூ !என் குழந்தையை கொன்னுரு ...
24 வது ஷாட்:
இத அடுத்து மேஜருக்கு ஒரு குளோசப் ஷாட்..
அதிர்ந்து போயிருவாரு மேஜர் சிவாஜி சொன்னதை கேட்டு...சங்கர் !என்ன சொல்றே !ன்னு திகைச்சு போயிடுவார் மேஜர்.
கரெக்டா 25 வது ஷாட்:
மேஜர் சிவாஜி ரெண்டு பேரும் இப்போ ஒரே பிரேமுக்குள்ள..
திரும்பி நின்னுகிட்டு இருக்கற சிவாஜி ,சடார்னு திரும்பி முகத்தை அசைச்சு அசைச்சு காட்டுவார் மேஜருக்கு முன்னாலே....இத்தனை நேரம் ஆச்சு சிவாஜி முகம் பாக்க...6 நிமிஷம் 40 செகண்ட் ஆயிருச்சு..பர்ஸ்ட் ஷாட்டுலேயே கதாநாயகனை கவர் பண்ணியாச்சு..
இப்படி 24 ஷாட்டுலேயும் ஒரு கதாநாயகனோட உருவத்தோட பின் பக்கத்தை மட்டும் காட்டி ,முழு உருவத்தையும் இவ்வளவு நேரம் கழிச்சு காட்டுன சினிமா இது ஒண்ணாத்தான் இருக்கும்...
ராஜூ ,என் முகத்தை பாரு ,நல்லா பாருன்னு உத்து உத்து பாக்க வெப்பார்.Come on ,you can tell me ன்னு அதிர பேசுவார்.மேஜர் முகத்திலே ஒரு
கலவரம் தெரியும்.ரொம்ப மெல்லமா கேப்பாரு .
பாக்க முடியலே இல்லை ,என் முகத்தை ,இவ்வளவு காலம் பழகுன உன்னாலேயே என்னை பாக்க முடியலையே ,என்னை போலவே விகாரமா பொறந்த என் குழந்தையை கொன்னுரும்பார்.
மேஜர் முடியாதும்பார்.
சிவாஜி நான் செத்துருவேன்னு சொல்ல ,இப்படி சொன்னதுக்கு அப்புறம் மேஜர் ,உன்னோட மனைவி வீட்டுக்கு வர்றப்போ தனியாத்தான் வருவாங்கன்னு முடிச்சிருவார்.
ஒரு நடிகனாலே இவ்வளவு உணர்ச்சிகளை கொட்டி நடிக்க முடியுமான்னு நம்மையெல்லாம் மிரட்டுன காட்சி இது.கையை சொடுக்கி காலாலே உதைச்சி ஒரு ஆக்ஷன் பண்ணுவாரே .அதையெல்லாம் சிவாஜியத் தவிர யாரையும் நெனச்சிப் பாக்க முடியாது.
தெய்வமகன்லே சிவாஜியோட ஓபனிங் சீனை பத்தி சொல்லத்தான் இந்த பதிவு..
டைரக்டர் திருலோக சந்தரோட இந்த ஜடியாவை வியக்காம இருக்க முடியலே ! இதே கதைதான் இன்னொரு தமிழ் படத்துலே வந்துருக்கு.மூலக்கதை வங்காளதத்தை சேந்தது.அதுல அவங்க செய்யாத விஷயம் இந்த தெய்வமகன் காட்சி...
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக