சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி வாங்குன முதல் பரிசு

வெளியில ராஜா வேசங்களா போட்டு நடிச்சிட்டு இருந்தாலும்
அவங்களோட நெஜ வாழ்க்கையிலே  உள்ள போய் பார்த்தா தான் அவங்களோட வறுமையும் சோகமும் தெரியும்.Mr.ராதா கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ,
வருமானத்தையெல்லாம் தான் நடத்திட்டு வந்த சரஸ்வதி கானசபா நாடக கம்பெனியிலே இழந்துட்டார்.MR.ராதாகிட்டே தனக்குன்னு எந்த தனிப்பட்ட சம்பளம் வாங்காம நடிச்சிட்டு வந்தார் சிவாஜி.சிவாஜிக்கு நடிக்கறதுக்கு வாய்ப்பு வேணும் .அதுதான் எல்லா நாடகத்துலேயும் சிவாஜியை இருக்க வெச்சது.

ராதா நாடக கம்பெனி நொடிஞ்சு போயிட்டதாலே ,சிவாஜி கேரளாவிலே நாடகம் நடத்திட்டு வந்த கிருஷ்ணப்பிள்ளை நாடக கம்பெனியில சேந்தார்.

கேரளாவுலே நடிச்ச நாடகத்துலே எல்லாம் பொம்பளை வேஷத்துலே நடிக்கற வாய்ப்புத்தான் சிவாஜிக்கு கிடைச்சது.ஒரே ஒரு இடம் நம்மாரா அப்படிங்கற இடத்துலேதான் ஆண் வேஷத்துலே  நடிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சது.

அந்த நாடகத்துலேயும் ராஜ பார்ட் வேஷம் எல்லாம் இல்லே .அது ஒரு திருடன் வேஷம்.ராஜபார்ட்டா நடிச்ச நடிகர்களே கொடுக்காத நடிப்பை அந்த திருடன் வேஷத்துலே சிவாஜி பிரமாதப்படுத்துனாரு.
தோள்களையெல்லாம் நல்லா முறுக்கி காட்டி ,கண்ணுலே காட்டுன மிரட்டலான பார்வையுமா சிவாஜி செஞ்ச நடிப்பை பாத்த அந்த ஊர் மக்கள் ரொம்பவே வியந்து பாராட்டுனாங்க.

சிவாஜியோட நடிப்பை பாத்துகிட்டு இருந்த நாடகத்தோட முதலாளி கிருஷ்ணப்பிள்ளையே அசந்துட்டாரு.இந்த வயசுலேயே இப்படி ஒரு நடிப்பான்னு அசந்துட்டாரு.
இதுவரைக்கும் பொம்பளை வேஷந்தானே நிறைய செஞ்சிருக்காரு.பொம்பளையா நாணி கோணி குழைஞ்சு நடிச்ச கணேசன் கிட்ட இருந்தா இப்படி ஒரு கம்பீரமான நடிப்புன்னு ரொம்ப ஆச்சர்யப்பட்டு போனாரு கிருஷ்ணப்பிள்ளை.

நம்மாரா இடத்துலே இருந்து கொல்லங்கோட்டுக்கு நாடக முகாம மாத்தினாங்க. முதல் நாடகமா மனோகரா நாடகத்தை அரங்கேற்றம் செய்ய  முடிவு செஞ்சாங்க .இந்த நாடக அரங்கேற்றத்திற்கு கொல்லங்கோடு ராஜாவை கூப்பிடலாம் , அப்படின்னு முடிவு எடுத்தாங்க.

அந்த காலத்துல கேரளா பல சமஸ்தானங்களா பிரிஞ்சு இருந்துச்சு. அதுல ஒரு சமஸ்தானம் தான் கொல்லங்கோடு .

மனோகரா நாடகத்தில் சிவாஜிக்கு பத்மாவதி வேஷம்.
அதுக்கான நாடக ஒத்திகைகள் நடந்துகிட்டு இருந்துச்சு. நாடக அரங்கேற்றத்திற்கு முதல் நாள். அன்னைக்கு கடைசி ஒத்திகை நடந்துகிட்டு இருந்துச்சு.

ஒத்திகைய பார்த்துகிட்டு இருந்த கிருஷ்ணப்பிள்ளை, திடீர்னு சிவாஜிகிட்ட வந்து, கணேசா உனக்கு மனோகரன் பேச வேண்டிய வசனம் எல்லாம்  மனப்பாடமா  தெரியுமில்ல ..
எங்கே 'அதை கொஞ்சம் பேசி காட்டு' என்று சொன்னார் ...

பத்மாவதி வேஷம் போட்டுட்டு, பெண்ணரசியா நின்னுகிட்டு இருந்த சிவாஜி, அப்படியே தன்னோட உடலையும், முக பாவனைகளையும் சட்டுனு மாத்தி, நெஞ்சு ,கண்ணு, புருவம் எல்லாம் அசைச்சு வசனங்களை எல்லாம் அனல் பிளம்பா  கொட்டி தீர்க்கிறார் ..
சிவாஜி பேசி நடிச்சத பார்த்து அங்க இருந்த அத்தனை பேரும் சிலிர்த்து போய்ட்டாங்க.

கிருஷ்ண பிள்ளை ஓடி வந்து சிவாஜியை கட்டி புடிச்சு,நாளைக்கு நடக்கிற நாடகத்தில நீதான் மனோகரனா  வேஷம் கட்டி நடிக்கணும், அப்படின்னு சொல்லிட்டார் ..

சிவாஜிக்கு கொஞ்சம் கூட நம்ப முடியல. நடக்கிறது கனவா உண்மையான்னு ஆச்சர்யத்தில் இருந்தார் .
மனோகரனா  நடிக்கப் போறோம்னு சிவாஜி ரொம்ப உற்சாகத்தோடு இருந்தார்.

நாடகம் நடக்கிற நாள். கொல்லங்கோடு ராஜாவை அவருக்கு உரிய மரியாதையோட கூப்பிட்டு வந்து, முன் வரிசையில சிறப்பு நாற்காலியிலே  உட்கார வச்சாங்க .

நாடகம் நடந்துகிட்டு இருந்துச்சு .ஒவ்வொரு காட்சியா போயிட்டு இருந்துச்சு .
சிவாஜி மனோகரனா  அறிமுகம் ஆக வேண்டிய காட்சி வந்துச்சு .
திரை மேலே போகுது...
மனோகரன் ராஜாவை  விட சக்கரவர்த்தியா வர்ற மாதிரி இருந்துச்சு சிவாஜியோட ஆரம்பம் .
முன்னால வரிசையில சாதாரணமா  உக்காந்துட்டு இருந்த கொல்லங்கோடு ராஜா 
அப்படியே நாற்காலியோட நுனிக்கு வந்துட்டார்.

சிம்மக்குரல்லே  சிவாஜி பேசுன கம்பீரமான வசனங்களை கேட்டு நாடகை கொட்டகையிலே இருந்த அத்தனை பேரும் அரண்டு போயிட்டாங்க.இதுக்கு முன்னாலே மனோகரனா நடிச்சவங்க முகத்தையெல்லாம்  மறைஞ்சு போக வெச்சிட்டாரு கணேசன்.அந்த ஆளுமையிலே எல்லாரும் கிறங்கித்தான் போனாங்க.

நாடகம் முடிஞ்சதும் விழுந்த பெரிய கைத்தட்டல்லே கொட்டகையயே அதிர்ந்து போயிருச்சு.

மேடையிலே பேசறதுக்கு கொல்லங்கோடு ராஜாவை கூப்பிட்டாங்க.அவர் ரொம்ப உற்சாகத்தோட மேடைக்கு வந்தார்.ராஜா வந்ததும்,மனோரனை கூப்பிட்டுங்கன்னு சொன்னாரு .

மேடைக்கு வந்தார் கணேசன்.ரொம்ப அப்பாவியா வந்து நின்ன கணேசன் பார்த்ததும் கொல்லங்கோடு ராஜாவாலே நம்ப முடியல.
இந்த மனுஷனா? இத்தனை நேரம் மனோகரனா சிங்கம் போல கர்ஜனை செஞ்சது இந்த உருவம்  தானான்னு கொல்லங்கோடு ராஜாவ ஆச்சரியப்படுத்துச்சு .

இந்த நாடகத்தில் நடிச்ச மனோகர சக்கரவர்த்திக்கு என்னோட பரிசுன்னு ,பெரிய வெள்ளித் தட்டு ஒண்ணை பரிசா கொடுத்தார் .இது கணேசனோட தனிப்பட்ட நடிப்புக்கு  கிடைச்ச பரிசு.
 
இந்த மனோகரா நடந்த காலம் மழைக்காலம். இதுக்கு பின்னால நாடகம் நடந்த அந்த நாட்கள்ல விடாம மழை பேஞ்சு நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுச்சு. நாடகக் கொட்டகை முழுவதும் தண்ணீர் தேங்கி யாருமே உட்கார முடியாத நிலைமையிலே இருந்தது.

இந்த நிலைமையில் நாடகம் நடத்தறது ரொம்ப கஷ்டமான விஷயம் தான். கையில இருந்த உணவுப் பொருள் எல்லாம் தீர்ந்து கஷ்டப்பட்டாங்க. கையில காசு இல்லாம சாப்பிடறதுக்கு வேற வழி இல்லாம கொல்லங்கோடு ராஜா கொடுத்த அந்த வெள்ளித்தட்ட விற்கும்படி சூழ்நிலை வந்துச்சு. ரெண்டு மூணு நாளைக்கு அவங்களோட பசியா ஆத்துச்சு அது.

மழை வேற விடாம பேஞ்சுகிட்டு இருந்துச்சு. கையில காசு இல்ல. சாப்பிடறதுக்கு வழி இல்ல.

இனியும் இங்கு இருந்தா ஆகாதுன்னு சொல்லி சிவாஜி  தன்னோட நண்பர்கள் மூணு பேரோட பொள்ளாச்சி வரை நடந்தே வந்தாங்க.

பகல் பூரா பட்டினி இருந்தாலும் ராத்திரியான ராஜா வேஷம் போடறதே தனி சந்தோஷம்னு ராஜபார்ட் ரங்கதுரையிலே சிவாஜி பேசுவாரு.கலை மேலே இருந்த ஈடுபாடு அன்னைக்கு இருந்த கலைஞர்களோட நிலைப்பாடும் பெரும்பாலும் இப்படித்தான் இருந்துச்சு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற