சிவாஜி கதை கேக்குற விதமே மத்த நடிகர்கள் கதை கேக்கற விதத்துல இருந்து வேறுபட்டது.அவர் கிட்ட கதாசிரியர்கள் கதை சொல்லறப்போ ,எதிர்லே இருக்கறவங்களை நல்லா கவனிச்சுகிட்டு கதையை சொல்லுங்கன்னு கேக்க ஆரம்பிப்பார்.கொஞ்ச நேரத்துலே கண்ணை மூடிட்டு அமைதியா உக்காந்துக்குவார்.கதை ரொம்ப நேரமா சொல்லிட்டு வர்றவங்க சிவாஜி எங்க தூங்கிட்டாரோன்னு சட்டுன்னு கதை சொல்றதை நிப்பாட்டுவாங்க.என்னடா சத்தத்தை காணோம்னு சிவாஜி கண்ணு முழிச்சு ,ஏப்பா நிப்பாட்டிட்டேன்னு கேக்கறப்போ கதை சொல்றவங்களுக்கு திக்குன்னு ஆயிடும். நீங்க ஒண்ணும் ரியாக்சன் காட்டலே ,
தூங்கிட்டிங்களோன்னு நெனச்சுட்டோம்னு அவங்க நினச்சத சிவாஜிகிட்ட சொல்லாமே மழுப்பலா ஏதோ ஒரு பதிலைச் சொல்லி ,மறுபடியும் தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பிப்பாங்க.இருந்தாலும் அவங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கும்.முழு கதையையும் கேட்ட பின்னாலே சிவாஜி கண்ணு முழிச்சு , அந்த கதையிலே அந்த கேரக்டரை பத்தியும் ,கதையை பத்தியும் கரெக்ஷன் சொல்லுவாரு .அத அப்படிச் செய்யாலாமா ,இதை இப்படி பண்ணலாமான்னு யோசனை சொல்லுவார்.அதை கேட்டதும் கதையாசிரியர்கள் ஆடிப் போவாங்க.இப்படி பல தடவை இது மாதிரி நடந்துருக்கு.சிவாஜி எல்லார் கிட்டயும் இப்படி இல்லே.புதுசா கதை சொல்ல வர்றவங்க கிட்ட மட்டும் தான்.இதுக்கு ஒரு காரணமும் இருக்கு.சிவாஜியோட கண்ணை ,முகத்தை ரியாக்சனை புதுசா பாக்கறவங்க அதிலே தடுமாற்றம் ஆகி கதை சொல்லறப்போ தடுமாற்றம் ஆகிடுவாங்க.சிவாஜியோட கண்ணை நேருக்கு நேரா பாத்து பேசறவங்களுக்கு அந்த மாதிரி சிரமம் இருக்கக் கூடாதுன்னு சிவாஜி அப்படி இருப்பார்.கதாசிரியர்கள் கதை சொல்லறதை சிவாஜி அளவுக்கு கிரகிச்சுக்கற சக்தி ,அவரளவுக்கு யாரையும் சொல்ல முடியாது.
இந்த மாதிரி நடந்த ஒரு சம்பவத்தை சொல்லணும்.
பாகப்பிரிவினை கதை கேக்கறப்போ இப்படித்தான் நடந்தது.கதை கேட்டுட்டு சிவாஜி ஒண்ணும் சொல்லாம ரூமுக்குள்ளே போயிட்டாராம்.என்னடா நாம சொன்ன கதை பிடிக்கலே போலிருக்கு அப்பிடின்னு நெனச்சுகிட்டு இருக்கறப்போ ,கொஞ்ச நேரத்துலே சிவாஜி வெளிய வந்தாரு.வந்தவரை பாத்தவங்க திகைச்சு போயிட்டாங்க.வெளிய வந்த சிவாஜி போன மாதிரி திரும்பி வரலே.ஒரு கையை ஊனம் மாதிரி மடக்கிக்கிட்டு ,உடம்பை ஒரு மாதிரி வெச்சுகிட்டு ,நடையிலேயும் வித்தியாசம் காட்டிட்டு நடந்து வந்தாராம்.அப்போ கதை சொன்னவரை பாத்து ,நீங்க சொன்ன கேரக்டருக்கு இந்த மாதிரி பண்ணுனா நல்லா இருக்குமா? இல்லை வேற மாதிரி செஞ்சு காட்டட்டுமான்னு கேட்டாராம்.இதை பாத்து அவங்க ஆடிப் போயிட்டாங்களாம்.சிவாஜி எந்த அளவுக்கு அந்த கதையை உள் வாங்கியிருந்தா இந்தளவுக்கு மாறி வர்றாருன்னு ஆச்சர்யப்பட்டிருக்காங்க. அதான் சிவாஜி.
இயக்குனர் சேரன் தேசியகீதம் படத்துலே சிவாஜியை தான் நடிக்க வைக்கணும்னு முடிவு பண்ணியிருந்தார்.அந்த டயத்துலே சிவாஜியை நடிக்க வைக்கிறதுலே சிவாஜி குடும்பத்தாருக்கு விருப்பமில்லே.அவரோட உடல் நிலை பாதிக்கக் கூடாதுன்னுதான்.ஆனாலும் வீடு தேடி வந்த இயக்குனர் கிட்ட கதையை கேட்டாரு சிவாஜி.ஆரம்பத்துலே சாதாரணமாக கதையை கேட்டுட்டு வந்த சிவாஜி அப்படியே கதையிலே ஐக்கியமாகி இந்த ரோலை இப்படி பண்ணலாம் ,அந்த மேக்கப்பை இப்படி வைச்சுக்கலாம்னு இன்ட்ரஸ்ட்டா பேச ஆரம்பிச்சுட்டாரு.பட ஷுட்டிங் தொடங்குனப்போ சிவாஜி நடிக்கலே. அவுட்டோர் ஷூட்டிங் வெயில் ,இப்படியெல்லாம் இருந்ததாலே சிவாஜி குடும்பத்துலே அனுமதி தரலே.
இயக்குனர் பாலாவும் நந்தா படத்துக்கு கதை சொல்லப் போனாரு.சிவாஜியோட கண்ணையும் முகத்தையும் நேருக்கு நேரா பாத்த பாலாவாலே சிவாஜிகிட்ட தொடர்ச்சியா குழப்பம் இல்லாமே கதை சொல்ல முடியலே.பாலா
ரொம்பவே தடுமாறிட்டாரம்.இதை பத்தி பாலாவே சொன்ன விஷயம்தான் இது.சிவாஜியோட உடல் நலம் காரணமா இந்த படத்துலே நடிக்க முடியாம போச்சு.
சிவாஜியைப் பத்தி இன்னொரு ஆச்சர்யமான விஷயம் இது .சிவாஜிகிட்டே ஷுட்டிங் டயத்துலே வசனங்களை படிச்சுக் காட்டணும்.பெரிய டயலாக்கா இருந்தா ரெண்டு தடவை மூணுதடவை படிச்சுக்காட்டணும் .அப்படி கேட்டதை வெச்சே தடையில்லாமே ஒரே ஷாட்டுலே பேசி முடிச்சிடுவார் சிவாஜி .இது ரொம்ப ஆச்சர்யமான விஷயம் மட்டுமில்லே .அதிசயமான விஷயம் கூட.சிவாஜியோட இந்த ஸ்பெசாலிட்டியை சினிமா பீல்டிலே ரொம்ப அதிசயமவே பேசுவாங்க.முதல்நாள் ஷீட்டிங் முடிஞ்சப்பறம் அடுத்த நாள் காட்சி ,டயலாக் பேப்பரை சிவாஜிகிட்டே சில சமயம் கொடுத்து விடுவாங்க.இதைப் பத்தி ஒரு சம்பவம் .சிவாஜி வீட்டுலே போயி நல்லா மனப்பாடம் செஞ்சுகிட்டு வந்து பேசறாரோன்னு அப்படின்னு ஒரு கதாசரியருக்கும் ,உதவி டைரக்டருக்கும் ஒரு சந்தேகம் இருந்துச்சு .
சிவாஜியை டெஸ்ட் பண்ண அவங்க முடிவு பண்ணுனாங்க.அடுத்த நாள் சீன்,டயலாக் பேப்பரை கொடுக்கறதுக்கு பதிலா வேற நாள் டயலாக் பேப்பரை கொடுத்து அனுப்பிச்சாங்க.மறுநாளும் ஷுட்டிங் ஆரம்பமாச்சு.அந்த ரெண்டு பேரும் என்ன நடக்குமோன்னு பரபரப்பா இருந்தாங்க.வழக்கம்போலே அன்னைக்கு எடுக்க வேண்டிய சீனுக்கு டயலாக் படிச்சாரு அஸிட்டெண்ட்.சிவாஜி அதை கேட்டு வேற மாதிரி பாக்கறாரு.இது வேற மாதிரி இருக்கேன்னு பாக்க,உதவிடைரக்டர் ,
இதுதான் சார் டைரக்டர் இன்னைக்கு எடுக்கப் போறாராம்னு சொல்லிட்டாரு.
சரி ,டயலாக்கை படின்னு சிவாஜி சொல்ல அவரும் அந்த பெரிய டயலாக்கை படிச்சுக் காட்டினார்.ஷுட்டிங்லே ஒரே ஷாட்லே சிவாஜி பேசி முடிச்சதை பாத்த அந்த ரெண்டு பேரும் அசந்து போயிட்டாங்க.ச்சே! சிவாஜியைப் போய் சந்தேகப்பட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டாங்க.
குங்குமம் படத்துலே ஒரு பாட்டு.மயக்கம் எனது தாயகம்.இந்த பாட்டுக்கான ஷுட்டிங்கை டைரக்டர்கள் கிருஷ்ணன் பஞ்சு மகாபலிபுரத்திலே அதிகாலை 5 மணி 6 மணிக்குள்ளே ஆரம்பிச்சணும்னு திட்டமிட்டாங்க.சிவாஜிகிட்டயும் சொல்லிட்டாங்க. சிவாஜியை கூட்டிட்டு வர்ற பொறுப்பை பாசமலர் மோகன் கிட்ட கொடுத்தாங்க.மோகன் காலையிலே 3 மணிக்கு எந்திரிச்சு சிவாஜி வீட்டுக்கு போனா கரெக்டா இருக்கும்னு 3மணிக்கு எந்திரிச்சு சிவாஜியை கூப்பிட வீட்டுக்கு போனப்போ காலை 3.30.,மணி.சிவாஜி அதுக்குள்ளேயே நெப்டிட்யூன் ஸ்டுடியோ போயிட்டாரு.அப்புறம் ஸ்டுடியோவிலே மேக்கப் போட்டு காஸ்ட்யூம் போட்டு மகாபலிபுரம் பீச்சுக்கு வந்தாங்க.காலையிலே 6 மணிக்கு ஷுட் பண்ண ஆரம்பிச்சாங்க. 7 கால் மணிக்கு பாட்டு புல்லா எடுத்து முடிச்சிட்டாங்க.ஒண்ணேகால் மணி நேரத்துலே இந்த பாட்டை எடுத்து முடிச்சிட்டாங்க.ஒரே ஷாட்டுலே முடிக்கிற சாமார்த்தியம் சிவாஜிகிட்டே இருந்ததாலே இது சாத்தியமாச்சு.ட்ராலி,
கேமரான்னு ஒவ்வொரு ஷாட்டுக்கும் மாத்தி வெக்கிறதுக்கே டைம் ஆயிடும்.சிவாஜிங்கறதாலே இது சீக்கிரம் முடிஞ்சிருச்சு.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக