ஆஸ்தி அந்தஸ்து அதிகாரம் பதவி பணம் எல்லாம் போயாச்சு.போயாச்சுன்னு சொல்றதை விட தானமா கொடுத்தாச்சு.இப்ப எதுவும் இல்லை.கொடுத்து கொடுத்து தேஞ்சு போன மனுஷன் கடைசியா எதிர்பார்த்துட்டு இருக்கற ஒரு விஷயம் தன்னோட மரணத்தை .இதுதான் அவன்தான் மனிதன் படத்தோடகடைசி பாட்டுக்கான சிச்சுவேஷன்.
இந்த மாதிரி சிச்சுவேஷன் சொன்னா கவிஞர் லட்டு மாதிரி வார்த்தைகளை கொட்டுவாரு.Ms விஸ்வநாதன் மியுசிக் பத்தி சொல்லவே வேணாம்.அடிச்சு பிரிச்சு மேஞ்சிருப்பாரு
இந்த பாட்டுலே.இவங்க அதகளம் பண்ணியிருந்தா நடிகர்திலகம் விடுவாரா?
மனுஷன் கொன்னுருப்பார்.பாட்டை கேக்கறப்பவே நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போகும் .விசூவலா பாக்கறப்போ ,அவ்வளவுதான் நெஞ்செல்லாம் அடைச்சுப் போற மாதிரி பீலிங்இருக்கும்.நல்லா சினிமாவை ரசிக்கறவங்களா இருந்தா இந்த பாட்டு நம்மளை "மெஸ்மரைஸ்" பண்ணிடும்.
எத்தனை தடவை பாத்தாச்சு.சோகப்பாட்டா இருந்தாலும் சலிக்கவா வெக்குது.இன்னும் கேக்கலாம்னுதான் உணர்வைத் தூண்டுது .
வாழ்க்கையை யோசிக்க வெக்கற உணர்வை தர்ற பாட்டு.
'மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று ..'
இந்த ரெண்டு வரியிலே இதுக்கு மேல யார் என்ன சொல்ல முடியும்.கவிஞர் நம்ம உசுரை எப்படி வாங்கறார் பாருங்க.
இசை மன்னர் முதல்வரி முடிஞ்சதும் ஒரு அடி அடிப்பார் பாருங்க.சும்மா ஜிவ்வுன்னு இறங்கும் நெஞ்சுக்குள்ளே.
பாட்டோட முதல் ரெண்டு வரி ஆரபிக்கறப்போ சிவாஜியோட முக எக்ஸ்பிரசனை பாக்கணுமே.முதல் வரிக்கு நின்னுட்டு இருப்பார்.முகம் அவ்வளவா தெரியாது.அந்த ரெண்டாவது வரிக்குத்தான்
காமிரா மாறும்.குளோசப் ஷாட்டுலே முகம்.
அப்படியே கஷ்டத்துலே ஊறி ஊறி தன்னந்தனியா மொட்ட மரமா நிக்குற மனுஷனோட உணர்ச்சிகளை முகத்துலே அப்படி பிரதிபலிப்பார்.
இறைவன் நினைப்பதுண்டுன்னு பாடறப்போ கண்ணு இமையை மூடித் தொறந்து ,
முகம் ..கன்னத்துலே ...
ஒரு சின்ன சிலிர்ப்பை காட்டி ..
அந்த ஒரு பாவனையிலே
நம்மளை தொலைக்க வெச்சுடுவார்.
இப்ப பாட்டு ஆரம்பிக்கும்.TMS பாட பாட பேக்ரவுண்ட்லே மியுசிக்லே பின்னுவாரு விஸ்வநாதன்.
சோகப்பாட்டாச்சேன்னு மெல்லிசை எல்லாம் கிடையாது .சும்மா அதிர வைக்கும்.கிடுகிடுன்னு உடம்புலே ஏறும்.வெஸ்டர்ன் மியுசிக்தான்.ஏக அதகளம் பண்ணியிருப்பார் விஸ்வநாதன்.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இந்த ரெண்டு வரியும் மூணு தடவை மாறி மாறி ரீபீட் ஆகும்.
சலங் சலங்னு மியூசிக் கலந்தடிக்க ,ட்ரம்ஸ் எல்லாம் கலந்து சோகப்பாட்டை ரொம்ப சுவாராஸ்யமா பாக்க வைக்கும்.
பச்சைப் பசேல்னு புல் தரை கிரவுண்ட்...
பேக் ரவுண்ட்லே...
நீலக் கலர்லே கோட் சூட் போட்டுட்டு நடிகர்திலகம் நடந்து வர்ற அழகு இருக்கே.அவ்வளவு பிரமாதமா கேப்சர் பண்ணியிருப்பார் ஒளிப்பதிவாளர் .இடையிலே குளோசப் ஷாட்டு வேற.எந்த வித ஒட்டும் பூச்சும் இல்லாமே நேச்சுரா எடுத்திருப்பாங்க..
முதல் வரிக்கு
புல் கிரவுன்டுலே லாங்கா சிவாஜியை காமிச்சு ,அடுத்த வரிக்கு டக்குன்னு குளோசப்புலே காட்டறப்போ ,சோக முகத்தை கூட அதிசயமா பாக்க வெக்கற நடிகனைய்யான்னு நினைக்காம இருக்க முடியலே ...
அடுத்த சரணம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே இடையிலே அந்த பேக் ரவுண்ட் மியுசிக்லே புட்பால் கேம் மாதிரி புகுந்து விளையாடியிருப்பார் இசை மன்னர்.துடிக்க துடிக்க மியுசிக் இன்ட்ரூமென்ட்டை அடிச்சு தள்ளியிருப்பாங்க போலே.சும்மா கணீர் கணீர்னு இருக்கும்.
இது சோகப்பாட்டா ,வெஸ்டர்ன் மியூசிக் ஆல்பமான்னு இருக்கும்.பேக்கிரவுண்ட் மியூசிக் இடையிலே ,
கல்லறையிலே நடந்து வர்ற சிவாஜி ,ஒரு குழந்தையோட சிலைக்கு முன்னாலே நின்னு .ஒரு சோக பாவனையை வெளிப்படுத்தற ஷாட்டுலயும் சிவாஜியோட அபரிதமான முக பாவனை அசர வைக்கும் .
அடுத்த சரணம் ஆரம்பிக்கும் இப்போ..
'தந்தை தவறு செய்தால் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம்
வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் .
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது ..'
நாலு வரியிலே மனுஷப்பிறப்போட வாழ்க்கையை தத்துவமா சொல்லிட்டாரு கவிஞர்.
தந்தை தவறு செய்தார்ர்ர்ர்ன்னு ஒரு TMS இழு இழுப்பார் பாருங்க.அந்த விஷயந்தான் ..அது சிவாஜிக்கு மட்டுமே ஸ்பேசலா TMS செய்யறது.தொண்டையிலே ஒரு எக்ஸ்ட்ராவா ஸ்பீக்கர் இருந்து பாடற மாதிரி...தியேட்டர்லே கேக்கணும்.சும்மா அலறும்..
தாயும் இடம் கொடுத்தாள்னு அடுத்த வரியும் அப்படியே போகும்.
வந்து பிறந்து விட்டோம்னு காமிரா சிவாஜியோட குளோசப்புக்கு மாறும்...சிவாஜியோட அந்த முக வசீகரம் இருக்கே ..அந்த முகவெட்டு.கண்ணோட தீட்சண்யம் ..ஒரு பரவசமான சுழல்லே சிக்கி தவிக்கிற மாதிரி வெச்சுடும்.
மனது துடிக்கின்றது
மயக்கம் வருகின்றது
பாட்டு வரியிலே இருக்கற விரக்தி ,அந்த விரக்தியை காமிச்சு பாடுன TMS குரல் ,இதை தன்னோட
நடையிலே ,முகத்துலே சிவாஜி காமிச்சு நடக்கற அந்த சின்ன ஷாட்டு இருக்கே ,ரொம்ப உணர்ச்சி வசப்பட வெச்சுடும்..
அழுது லாபம் என்ன ..
அவன் ஆட்சி நடக்கின்றது..
அவன் ஆட்சின்னு பாடிட்டு ஆகாயத்தை பாக்கற மாதிரி ஒரு பார்வை.கண்ணு மேலே சொருகி அப்படியே கீழ இறக்கி...
இதெல்லாம் சிம்பிள் தான் ..ஆனா அவரோட அந்த வசீகரம் ..பாத்து பாத்து சொக்க வைக்குதில்லே...அதான் சிவாஜி ..
உருக வைக்கிற பாட்டு.
ஆனா ஏதோ இனந்தெரியாத ஒரு உணர்வுலே நம்மை பாக்க வெச்சிட்டேதானே இருக்கு.
சரணம் முடிஞ்சு புல்மேட்டுலே சிவாஜி நடந்து வர்றதை பேக்ரவுண்ட் மியுசிக்லே காட்டுவாங்க.சோகம் இழையோடற மாதிரி மியூசிக் இருக்கும்.பாக்கறதுக்கு அந்த சீன் ரம்மியமா இருக்கும்.
காட்டு மனமிருந்தால் கவலை பறந்து விடும் .அடுத்த வரி இது.
கொஞ்சம் கூனி குறுகி சடைஞ்சு போய் உக்காருவார்.
கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும்.
இந்த வரி முடிஞ்சு அடுத்த வரியா ,காலில் விலங்கு இட்டோம்னு வரிக்கு ,
சிவாஜியோட காலை காமிச்சு நடந்து வர்ற மாதிரி ஒரு ஷாட்.ஒரு தளர்ச்சி ,பட்ட கஷ்டம் எல்லாம் அந்த நடை சொல்லிரும்.கடமை என அழைத்தோம்னு அந்த சரணத்தோடகடைசி வரி...
இவ்வளவு கஷ்டம் நிறைஞ்ச வாழ்க்கையை கடமைன்னு சொல்லி நாம வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கறோம்னு ..
அந்த ஒரு வரியிலே கவிஞர் எவ்வளவு அழகா சொல்லிட்டாரு.
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்.
சோகப்பாட்டை சொகமான பாட்டா ரசிக்க வைக்கற நடிகன் நடிகர்திலகந்தான்..
அழகான புல்தரை ,கல்லறைன்னு காமிச்ச காமிரா இப்ப கடற்கரையை காமிக்கும் .சாயந்தர வெயில்லே தக தகன்னு மின்னும்.நடிகர்திலகம் கடற்கரை பாறையிலே நின்னுட்டு கையை நீட்டுவார்.சர்ர்றுனு புறா வந்து உக்காந்துக்கும்.
பீச்சுல நடந்துகிட்டே பாடற மாதிரி பாட்டு போகும்.அந்த புறா சிவாஜி தோளிலே ஜம்முனுஉக்காந்துகிட்டும் ,
சிவாஜி நடந்துகிட்டே பாடற மாதிரியும் ரொம்ப அழகா இருக்கும் அந்த காட்சி.சிவாஜி நடக்கற அசைவுகளுக்கு அந்த புறா பறக்காம காலை தூக்கி தூக்கி வெச்சுகிட்டே அசைஞ்சு அசைஞ்சு உக்காந்திருக்கும்.
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை
என் குழப்பம் முடிந்ததடா..
இந்த பாட்டு கடைசியா என்ன சொல்லுது பாத்தீங்களா?
பாட்டு பூரா தான் பட்ட கஷ்டத்தை சொல்லலே .
தன்னோட வறுமையை சொல்லலே .
தன்னாலே இனி எதுவும் கொடுக்க முடியலலையேன்னுதான் சொல்லுது.ஆனந்தபவனம் பரம்பரை .கொடுத்துகிட்டே இருக்கற பரம்பரையிலே வந்த ஒரு மனுஷன் ,எல்லாம் போன பின்னாலேயும் இனி தன்னாலே எதும் கொடுக்க முடியாதேன்னு தான் ,அந்த நிலைமையைத்தான் சொல்லற மாதிரி இந்த பாட்டு..
இனி...
இப்படி ஒரு கவிஞர் கிடைப்பாரா?
இப்படி ஒரு பாடகர் கிடைப்பாரா ?
இப்படி ஓர் இசையமைப்பாளர் கிடைப்பாரா?
நடிகனைப் பத்தி?
சொல்லவே வேணாம்..
நாம இப்படி பேசத்தான் எல்லாத்தையும் செஞ்சுட்டு போயிட்டாரே!
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக