அவங்க மூணு பேரு அண்ணன் தம்பிகள்.அவங்க அம்மா அஞ்சு பெத்தெடுத்தும் ரெண்டு நிக்கலை.அந்த குடும்பம் எப்படி இருக்கப் போகுதுன்னு தெரியாமயே ,காலம் சீக்கீரம் அந்த ரெண்டு பேரை கொண்டு போயிடுச்சு.அந்தம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. மூணு பேரையும் வளக்கறதுக்கு.
மூணு பேரும் பொறந்தப்போ கலையம்சம் தெரியாமத்தான் அந்த குடும்பம் இருந்துச்சு.
மூத்தவருக்கு அடுத்த படியா ஒரு தம்பி .அந்த தம்பிதான் அந்த குடும்பத்தையே உயர்த்தப் போகுதுன்னு அப்ப யாரும் அறிஞ்சிருக்க வாய்ப்பில்லை.வீதிலே நாடகம் டான்ஸ்னு யாராவது காட்டினா ஓடிப்போய் பாக்கறதுதுதான் அந்த தம்பியோட வழக்கமா இருந்துச்சு.
அந்த தம்பிக்கு 24 வயசு ஆகறப்போ அந்த குடும்பத்தோட தலை விதி மாறும்னு ஜாதகம் இருந்துச்சு.ஜாதகம் சொன்னது அது.ஆனா அவங்க அதை ஜோஸ்யம் பாத்து தெரிஞ்சுக்கலே.
அந்த தம்பியோட 24 வயசு வரைக்கும் ஒண்ணும் பெரிசா இல்லே ,அந்த குடும்பத்துக்கு.அதுக்கு பிறகு ரெண்டாவது பையானாலே உலகப் பேரு கிடைக்க்குமுனு யாரு நெனச்சா ?
அவங்க அம்மா வெச்ச பேரே மாறும்படி ஆயிருச்சே.அம்மா வெச்சபேரு ரெண்டாவதா போயிருச்சே.ஆனா அந்த பேரு சொன்னா அசந்து போயிரும் தமிழ்நாடே !
கணேசமூர்த்தி ! முழுப்பேரு இதுதான்.24 வயசுக்கு பின்னாலே மாறிப்போச்சில்லே .
தம்பி கணேசன் 3 வது கூட படிக்க முடியலே.முடியலேன்னு சொல்லறதை விட படிப்புல நாட்டமில்லாப் போச்சு..எப்போதுமே கூத்து கூத்துனு ,மனசு அதுலே போய்கிட்டு இருந்ததுதான் காரணம்.
ஆனா அது வீணா போகலேன்னு காலம் சொல்லுச்சு.
அதுதான் அந்த குடும்பத்தை உலகமே பாக்க வெச்சது.
அம்மா வெச்ச பேரு ரெண்டாவதா போகுன்னு விதி இருந்துச்சா .அதே மாதிரி முதல் பேரு ஒண்ணு வந்துருச்சு.அது சிவாஜி .சிவாஜிகணேசன்.
சிவாஜி படத்துலே நடிச்சிக்கிட்டே இருந்தார்.இருந்தார்.இருந்தார்.இவ்வளவுதான் சம்பளம்னு கட் அண்ட் ரைட்டா யாருகிட்டயும் சொல்லி வாங்கறது இல்லே.வீடு தேடி வந்து அட்வான்ஸ் கொடுத்தா ,அம்மா கிட்ட கொடுங்கன்னு சிவாஜி சொல்லிருவார்.வெளியிலே புதுசா யாராவது படத்துக்கு புக் செய்யறப்போ அம்மா கிட்டே சொல்லிட்டு,எவ்வளவும்மா வாங்கறதுன்னு ஒரு யோசனை கேட்டுகிட்டு அது படி செய்வார்.அவங்கம்மா ,யார் கொடுத்தாலும் கொடுக்கறதை வாங்கிக்கோ அப்பிடின்னு பெரும்பாலும் சொல்லிருவாங்க.
இவர் படத்துக்கு படம் வளந்துகிட்டே போறார்.கதையை மட்டும் கேப்பாரு.வரவு செலவெல்லாம் பாக்க மாட்டாரு.நேரமும் இல்லே.
சிவாஜியோட அண்ணன் தங்கவேலு .சிவாஜி வளந்துகிட்டு இருந்த நேரத்துலே ,வீட்டை பாத்துக்கிற பொறுப்ப அவர் பாத்துகிட்டாரு.அவரும் பெரிசா ஏதும் படிச்சதில்லே.
சிவாஜி ஆரம்பத்துலே வளந்துகிட்டு இருந்த நேரத்துலே சம்பள விஷயங்கள்,நிதி விஷயங்கள யாரும் முறைப்படி கவனிக்க ஆளில்லே.
மூத்தவர் தங்கவேலு ,நடுவுலே சிவாஜி ,இளைய தம்பி சண்முகம்.நாம தான் படிக்க முடியாம போச்சு.தம்பியையாவது நல்ல படியா படிக்க வைக்கலாம்னு சிவாஜிக்கு எண்ணம்.தம்பி சண்முகத்தை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பி வெச்சாரு சிவாஜி.
ஆரம்ப காலத்துலே சிவாஜி தன்னோட உழைப்புக்கும் திறமைக்கும் ஏத்த பணத்தை சம்பளமா வாங்கலே.வர்ற பணத்தையும் முறைப்படி நிர்வகிக்கவும் செய்யலே.
அண்ணன் தங்கவேலு ,சிவாஜி தயாரிப்பாளர்கிட்ட பேசறப்போ கூட உக்காந்து அவரும் கவனிப்பார்.தயாரிப்பாளர்கள் சிவாஜி கிட்ட கால்ஷீட் கேக்கறது ,சம்பள விஷயங்கள் எல்லாம் பேசுவாங்க.அவங்க பேசறதை கூட இருந்து கவனிக்கறதும்,
தயாரிப்பாளர்கள் தர்ற பணத்தை வாங்கறதும்,குடும்பத்துக்கு தேவையானதை செய்யறதுமா இருந்தார்.
இந்த நிலைமையிலேதான் வெளிநாட்டுக்கு படிக்க போனார் சண்முகம்.
சண்முகம் படிச்சுட்டு வந்ததும் சிவாஜியோட பட விஷயங்கள் ,கால்ஷீட் விவகாரங்கள் ,சம்பள விஷயங்கள் உள்பட எல்லாத்தையும் கவனிச்சுகிட்டார்.போகப் போக வர்ற வருமானத்தை முறைப்படி சேமிச்சு சொத்து வாங்கறது ,மேற்கொண்டு டெவலப் பண்றதுன்னு யோசிச்சு பெர்பெக்டா பண்ணினார்.
சண்முகத்தோட ஐடியா படி தான் சிவாஜி பிலிம்ஸ் உருவாச்சு. படங்களை வாங்கி விநியோகம் பண்றது ,படம் தயாரிக்கிறது எல்லாம் சண்முகம் மேற்பார்வையிலே நடந்தது.சிவாஜி ரியல் எஸ்டேட் நிறுவனம் கூட சண்முகத்தாலேதான் உருவாச்சு.
சண்முகத்தோட அனுமதி இல்லாமே எந்த விஷயமும் நடக்காது.சண்முகம் அன்னை இல்லம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் பர்பெக்டா பாத்துகிட்டார்.
சிவாஜியோட அண்ணன் தங்கவேலு சூரக்கோட்டை பண்ணை வீட்டை பராமரிக்கற வேலையை பாத்துக்கிட்டார்.
சிவாஜியோட நடிப்புத் தொழிலுக்கு எந்த வித இடைஞ்சலும் இல்லாமே எல்லா விஷயங்களையும் சண்முகமே பர்பெக்டா பாத்துகிட்டார்.
சிவாஜியும் தம்பி சண்முகமும் ஒரே வீட்டுலே பெண் பார்த்து கல்யாணம் செஞ்சவங்க .
அதாவது சிவாஜி அவர்களோட மனைவியார் கமலாம்மா தங்கச்சியை சண்முகத்துக்கு கல்யாணம் பண்ணி வெச்சார் சிவாஜி.அண்ணன் தங்கவேலு வேற குடும்பத்துலே கல்யாணம் செய்துகிட்டவர்.
அண்ணன் தங்கவேலுவுக்கு முன்னாலேயே தம்பி சண்முகம் மரணம் அடைஞ்சுட்டார்.சண்முகம் காலமானது
1986 லே.தங்கவேலு காலமானது 1989 லே.இந்த ரெண்டு பேரும் போனது சிவாஜிக்கு பெரிய இழப்பா இருந்துச்சு.
அன்னை இல்லம் ஒரு ஆலமரமா இருந்ததுக்கு காரணம் இந்த மூணு அண்ணன் தம்பிகளோட ஒற்றுமை , பாசம்தான் காரணம்.அந்த காரணத்துக்கு காரணம் அவங்களோட அம்மா ராஜாமணி அம்மாள்.
பழனி படத்துல ஒரு பாட்டு இருக்கும். அண்ணன் தம்பி நால்வர் உண்டு , என்ன வேண்டும் கேளம்மா அப்படிங்ற பாட்டு .
ராஜாமணி அம்மா மேலே மூணு அண்ணன் தம்பிகளும் ரொம்ப பாசம் வெச்சிருந்தாங்க.அண்ணன் தம்பி மூவருண்டு என்ன வேண்டும் கேளம்மான்னு சொல்லற அளவுக்கு இருந்துச்சு.
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக