சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

இந்தப் பாட்டை ஏன் தூக்க நினைச்சாங்க?

சிவாஜியோட சிறப்பான நடிப்பை பத்தி பேசுறப்போ ரொம்ப பேரோட சாய்ஸ்ல இந்தப் படம் கண்டிப்பா இருக்கும். உலக அளவுலே எல்லா படங்களுக்கும் ஒரு நடிப்பு போட்டி வச்சா இந்த படத்தை அனுப்பி வைக்கலலாம்கறதுலே யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சிவாஜி இந்த படத்தில் நடிச்ச  நடிப்புக்கு இணையா மட்டுமல்ல அதுக்கு அடுத்ததாகவும் வேற எந்த படத்தையும் சொல்ல முடியாது அப்படிங்கிற லெவல்ல அமைஞ்ச  படம் தெய்வமகன். ரொம்ப ரொம்ப அற்புதமான கதை அமைப்பை கொண்ட படம் அப்படின்னு சொல்ல  முடியா  விட்டாலும் நடிப்பை பொறுத்த அளவுக்கு இந்த படம் நடிப்புல ஒரு மைல் நாட்டுன படம் அப்படின்னு இந்த படத்தை சொல்லலாம்.
ஒவ்வொரு காட்சி மட்டுமல்ல ஒவ்வொரு ஷாட்டுலேயும் சிவாஜி நடிப்பில் பின்னி எடுத்து இருப்பார்.
அப்படிப்பட்ட படம் தான் சிவாஜி மூன்று வேஷத்தில  நடிச்ச  தெய்வமகன். இந்த படம் நேரடியான தமிழ் கதையும் கிடையாது. வங்காளத்தில் வெளியான உல்கா படத்தோட தழுவல் தான் இந்த தெய்வமகன்.

 இந்த படத்தோட பாடல்கள் ரொம்ப சிறப்பா அமைஞ்சது.
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, காதல் மலர் கூட்டம் ஒன்று,
தெய்வமே தெய்வமே கண்டு கொண்டேன் தெய்வமே ,
கண்களால் பேசுதம்மா பாடல்களை சொல்லலாம்.
தெய்வமகன் பட சூட்டிங் நடந்த சமயத்துல அண்ணா இறந்துட்டார். அண்ணா இறந்ததால சில வாரங்கள் வழக்கம் போல படப்பிடிப்புகளில்  சிவாஜியாலே  கலந்துக்க முடியல. அண்ணாவோட மரணம் சிவாஜிக்கு ரொம்ப பாதிப்பு ஏற்படுத்தி இருந்துச்சு .
அண்ணா மறைஞ்சு  கொஞ்ச நாள் கழிச்சு தெய்வமகன் படம் சூட்டிங்லே சிவாஜி முதல் முதலா கலந்துகிட்டார்.

தெய்வமே தெய்வமே கண்டு கொண்டேன் தெய்வமே பாட்டுல கூட கண்ணதாசனும் தன் பங்குக்கு அண்ணாவோட மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கற  மாதிரி சில வார்த்தைகளை சேத்திருப்பார். பாட்டோட இடையில சிவாஜி 'அண்ணா அண்ணா '
அப்படின்னு ரெண்டு தடவை உச்ச ஸ்தாயிலிலே கத்தி பாடற மாதிரி வார்த்தைகள் இருக்கும். அது அண்ணாவுக்கான இரங்கலா அமைஞ்சது.

படத்தோட சூட்டிங் பாதி முடிஞ்ச நிலையில இந்தப் பாட்டை இந்த படத்துல சேர்க்கலாமா வேண்டாமான்னு குழப்பம் வந்து இந்த பாட்ட எடுக்கல.
நல்ல ஒரு அருமையான பாட்டு. இந்தப் பாட்டை இந்த படத்துல ஏன் வைக்க வேண்டாம்னு டைரக்டர் ACT ஏன் முடிவெடுத்தாங்கன்னு தெரியல.
இந்த கேரக்டர்ல நடிச்ச கண்ணன் சிவாஜி ஆரம்பத்துல பாடுற பாட்டு ..
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா. கிருஷ்ணா கிருஷ்ணா பாட்டை கண்ணன் கேரக்டருக்கு கொடுத்தாச்சு. அதேபோல கண்ணன் கேரக்டர் அவங்க அம்மா பண்டரி பாயை பார்த்து கோயிலில்  பாடுற மாதிரி ஒரு பாட்டு கண்களால் கலங்குதம்மா பாட்டு. இரண்டு பாட்டு அந்த கேரக்டருக்கு கொடுத்தாச்சு. இது ஒண்ணு.. இரண்டாவது படத்தோட நீளம். நல்லா இன்ட்ரஸ்டிங்கா போயிட்டு இருக்குற காட்சி  அமைப்புகள்னு  பல விஷயங்கள் இருந்ததால மேற்கொண்டு இந்த கேரக்டருக்கு இந்த பாட்டு வைக்கிறதா அப்படின்னு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.
 விஸ்வநாதன் பிரமாதமா இசையமைச்சு  கண்ணதாசன் பிரமாதமா எழுதின இந்தப் பாட்ட அப்படியே விடவும் மனசு இல்ல. ஆறு மாசம் கழிச்சு இந்தப் பாட்டை மறுபடியும் சேர்க்கறதுக்கு திட்டமிட்டு சூட்டிங் பண்ணி படத்துல சேர்த்தாங்க அப்படிங்கிறது ஒரு விசேஷமான தகவல். படத்தோட சூட்டிங் முடிஞ்சதாலே செட்டிங்ஸ்ல்லாம் கலைச்சிட்டாங்க .இந்த பாட்டுக்காக மறுபடியும் செட் போட்டு இந்தப் பாட்டை எடுத்து படத்துல சேர்த்தாங்க.
இந்தப் பாட்ட படத்துல சேர்க்காமல் விட்டு இருந்தா நடிகர் திலகத்தோட அற்புதமான நடிப்பை நாம் பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லாம போயிருக்கும். கடைசி டயத்துல அவங்க எடுத்த ஒரு நல்ல முடிவு இன்னைக்கு வரைக்கும் அந்த பாட்ட நாம ரொம்ப ரசிக்க வைச்சு பார்க்க வைக்குது.

அதே மாதிரி கேட்டதும் கொடுப்பவனே பாடலைப் பற்றி ஒரு விசேஷமான தகவல்.
எம் எஸ் விஸ்வநாதனோட டியூனுக்கு மிக அழகா ரொம்ப அருமையா ஒரு பாட்டு எழுதி இருந்தார் கண்ணதாசன். பாட்டு நல்லா இருந்தாலும் கொஞ்சம் கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கண்ணதாசன் எழுதி இருந்தார். கண்ணதாசனை பொறுத்த அளவுக்கு எந்த ஒரு கஷ்டமான விஷயத்தையும் பாமரனுக்கும் புரியும்படி எழுதுவார். இந்தப் பாட்டுல அந்த ஒரு விஷயம் இல்லன்னு கண்ணதாசனுக்கு தெரிஞ்சது. இந்தப் பாட்டோட கம்போசிங் முடிஞ்சு எல்லாரும் அந்தப் பாட்டை கேட்டுகிட்டு இருந்தாங்க. ஆபீஸ்ல வேலை செய்யற ஒரு பையன் எல்லாருக்கும் காப்பி கொடுத்துட்டு வந்தான் .கண்ணதாசன் அந்த பையனை கூப்பிட்டு இந்த பாட்டு நல்லா இருக்குதா அப்படின்னு கேட்டார். அந்தப் பயலும் பாட்டை கேட்டுட்டு பாட்டு நல்லா இருக்கு ஆனா வார்த்தைகள் தான் கொஞ்சம் புரியும் புரியாம இருக்கு அப்படின்னு சொன்னான்.
உடனே கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன் கூப்பிட்டு வேற ஒரு டியூன் போடச் சொன்னார் .
முதல்ல எம் எஸ் விஸ்வநாதன் ஏன் பாட்டு நல்லா தானே இருக்கு மேற்கொண்டு என்ன அப்படின்னு கேட்டிருக்கிறார். உடனே விஷயத்தைச் சொன்ன கண்ணதாசன் மறுபடியும் வற்புறுத்தி எம் எஸ் விஸ்வநாதன ஒரு டியூன் போட சொன்னார் .அப்போ எம் எஸ் விஸ்வநாதன் போட்ட ட்யூன் தான் கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா பாட்டு.  

தெய்வன் மகன் படத்தோட கதை வங்காள மொழி நாவல்ல இருந்து உருவானது. அந்த நாவலோட தலைப்பு உல்கா .
இந்த கதைய தெய்வமகன் படத்துக்கு முன்னால நாலு தடவை சினிமாவா எடுத்து இருக்காங்க. 

உல்கா அப்படிங்கிற பெயரிலேயே ஒரு பெங்காலி மொழி திரைப்படம் 1957-இல் வெளி ஆச்சு 

அப்புறம் 1962 லே  கன்னடத் திரைப்படமான தாய் கருலு , அப்புறம் ஒரு இந்தித் திரைப்படமான மேரி சூரத் தேரி அன்கென் (1963லே வெளியாச்சு .. அதுக்கு பின்னாலே,தமிழ்த் திரைப்படமான தாயின் 
கருணை 1965 லே  வெளியாச்சு..

மேலே சொன்ன 4 படங்களும் வியாபார ரீதியா தோல்வியடைஞ்ச படங்கள்.தமிழ்லே வெளியான தாயின் கருணை வந்ததே ரொம்ப பேருக்கு தெரியாது.இப்படி ஒரு தோத்த கதையை மறுபடியும் எடுக்க எந்த  தைரியத்துலே திருலோக சந்தர் இறங்குனாருன்னு தெரியாது.அவரோட அற்புதமான கதையாக்கம் பட மேக்கிங் எல்லாம் ரொம்பவே அசத்தலா இருந்துச்சு. நடிகர்திலகத்தோட கேரியர்லே மட்டுமல்ல தமிழ் சினிமாவுலேயே ஒரு அற்புத படைப்பு தான் இந்த தெய்வமகன்.
இந்திய அரசாங்கம் ஆஸ்காருக்கு அனுப்ப இந்த படத்தை அனுப்ப தேர்வு செஞ்சிருந்தாலும் ,அந்த படத்தை அனுப்பறதுக்கு பெரிய முயற்சியை எடுக்கலே. இந்தி படங்களுக்கு குடுக்கற முன்னுரிமையை தமிழ் படங்களுக்கு தராதது தான் காரணம்.


தெய்வ மகன் படத்துக்கு முதல்ல வெச்ச  உயிரோவியம் . இந்த பேரும் நல்ல இலக்கியதரமா அழகா இருந்தாலும் பாமர மக்கள் புரிஞ்சிக்க கஷ்டமா இருந்திருக்கும்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற