நடிச்சமா சம்பாதிச்சமா போனமானு இருந்தா அவன் ஒரு சாதாரண மனுசன்.நாம சம்பாதிச்சத வீணா செலவழிக்காமே ஊருக்கு நம்மாலே ஆனதை செய்யலாம்னு நெனக்கறது உத்தம மனுசன்.இந்த வகையிலே நடிகர்திலகம் ஒரு உத்தம மனுசனாவும் இருந்திருக்கார்.
தமிழ்நாட்டுலே ஏதாவது ஒரு ஊர்லே ஏதாவது ஒரு வகையிலே சிவாஜிகணேசன் ஒரு உதவி ..நன்கொடை ...இருக்கு.
பள்ளிக்குகூடம் ,
மருத்துவமனைக்கு உதவி செஞ்சதோட மட்டுமில்லாமே நிறைய ஊர்களில் அதை திறந்தும் வெச்சிருக்கார்.இது பத்தி நெறைய பேருக்கு தெரியவே இல்லே.
காரணம்என்னான்னா அதைப்பத்தி பெரிசா விளம்பரப்படுத்திக்காதது ஒண்ணு.அந்த விஷயம் தெரிஞ்ச பல பேரும் அவரோட நடிப்பை பத்தி பேசுறதிலேயே இருந்தாங்க. இந்த காலத்துலே பேஸ்புக் ,வாட்ஸ் அப் , Youtube மாதிரி நிறைய வலைதளங்கள் இருக்கறதாலே அது பத்தி தெரிஞ்சவங்க அந்த போட்டோ எடுத்து பப்ளிஷ் பண்றதாலே கொஞ்சம் தெரிஞ்சுக்க முடிஞ்சது.நடிகர்திலகத்தோட ஏதாவது ஒருஉதவி ஒவ்வொரு ஊர்லயும் நடந்திருக்குது.
சென்னையிலே பனகல் மார்க்கெட் எல்லாருக்கும் தெரிஞ்ச இடம்.பெரிய மார்க்கெட்.தினமும் ஆயிரக்கணக்குலே மக்கள் வந்துட்டு போற இடம்.1972 லே இந்த மார்க்கெட்டுக்கு அடிக்கல் நாட்டுனவர் சிவாஜி.இங்க வந்து போற நிறைய ரசிகர்களுக்கே தெரியாத விஷயம் இது.சும்மா அடிக்கல் மட்டும் நாட்டிட்டு போயிடலை சிவாஜி. புது கட்டிடம் கட்ட டொனேசனும் கொடுத்திருக்கார்.
பொன்மலை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த சங்கிலியாண்ட புரத்தில் குடிநீர்தேக்க நிலையத்தை
1961 ல் திறந்து வைத்தவர் சிவாஜி கணேசன்.
1967 ல் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவின் முன்புறம் இருக்கும் நுழைவு வாயிலை சிவாஜிகணேசன் தன்னோட சொந்த செலவுலே அமைச்சுக் கொடுத்தார்.
பொள்ளாச்சி ஆனைமலை பஞ்சாயத்தை சேர்ந்த தாத்தூரில் ஒரு பள்ளிக்கூடத்தை திறந்து வைத்திருக்கிறார் சிவாஜி.இது 1964 ல்..
மதுரையில்இருக்கும் பாத்திமா கல்லூரியில் புதிய கட்டிட விழாவில் கலந்து கொண்டார் சிவாஜி.இந்த புதிய கட்டிடம் கட்ட 25000 ,நிதியுதவியும் செய்திருந்தார்.
கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடத்தை வாங்கி தன்சொந்த செலவில் கட்டபொம்மன்
சிலை நிறுவினார்.இந்த சிலையை காமராஜரை வைத்து திறந்தார் சிவாஜிகணேசன்.
பாண்டிச்சேரியில் இருக்கும் ராஜா தியேட்டர் சிவாஜி தலைமையில் அப்போதைய கவர்னர் திறந்து வைத்தவர் சிவாஜிகணேசன்.ஆண்டு 1968.
கோவை மாநகராட்சியில் R.S.புரம் பகுதியில் உள்ள மாநராட்சி கலையரங்கத்தை திறந்து வைத்தவர் சிவாஜி கணேசன்.இதே பகுதியை சேர்ந்த நிறைய பேருக்கே தெரியாத விஷயம் இது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுக் கொண்டிருந்த ராஜா திரையரங்கை கண்ணதாசன் தலைமையில் சிவாஜிகணேசன் திறந்து வைத்தார்.
சென்னையில் இருக்கும் அம்பேத்கார் சிலைக்கு நிதியுதவி செய்து 1971 ல் திறந்து வைத்தவரும் சிவாஜிகணேசன்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஆப்பனூரில் சொந்த செலவில் சிலை அமைத்து சிவாஜி தலைமையேற்று திறந்து வைத்தார்.
ஜவஹர்லால் நேரு சிலையை நெல்லை மாவட்டத்தில் உள்ள கருங்குளத்தில் திறந்து வைத்தவர் சிவாஜி. 15.12.184.
திருச்சியில் தந்தை பெரியார் சிலை அமைப்பதற்காக நிதி உதவி செய்தவர் சிவாஜி. சிவாஜி கணேசன் பங்கேற்ற இந்த விழாவில் இந்த சிலையை திறந்து வைத்தவர் அறிஞர் அண்ணா.
நாகர்கோயிலில் உள்ள குமரிச்சந்தை நேசமணி அவர்களின் சிலையை திறந்து வைத்தவர் சிவாஜி கணேசன். திறந்து வைத்த தேதி 9.1.1972.
ராஜபாளையத்தில் ரங்கசாமி ராஜா அவர்களின் சிலையை திறந்து வைத்தவர் சிவாஜி தேதி 5.12 .73
சென்னை கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை தன் சொந்த செலவில் அமைத்து தந்தவர் சிவாஜிகணேசன். தேதி 2.1.1968.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை வைக்க நிதி உதவி செய்தவர் சிவாஜி கணேசன்.
தமிழ்நாட்டில் இருக்கும் காமராஜர் சிலைகளில் பெரும்பாலானவற்றை திறந்து வைத்தவர் சிவாஜி அவர்களே .
செங்கல்பட்டில் 15 11 74 ல் காமராஜர் சிலையை சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்
விருத்தாசலத்தில் காமராஜர் சிலையை திறந்து வைத்தவர் சிவாஜி .தேதி 16 3 75.
மன்னார்குடியில் காமராஜர் சிலையை 18 8 1991 ல் திறந்து வைத்தார்.
கும்பகோணத்தில் நடிகர் திலகத்தின் தலைமையில் இந்திரா காந்தி திறந்து வைத்த சிலை.தேதி
13.6.1979.
தூத்துக்குடியில் காமராஜர் சிலையை 15. 7. 1992ல் திறந்து வைத்தார்.
24. 8 .1975-ல் மதுரையில் காமராஜர் சிலையை திறந்து வைத்தவர் சிவாஜி .
திண்டுக்கல்லில் 14. 9. 1976 இல் காமராஜர் சிலையை திறந்து வைத்தார் சிவாஜி .
திருத்தணி காமராஜர் சிலை சிவாஜியால் 17 9 1989 இல் திறந்து வைக்கப்பட்டது .
கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையத்தில் 18/9/1966 இல் சிவாஜி காமராஜர் சிலை திறந்து வைத்தார்
20.11.1972 ல் விருதுநகரில் சிவாஜி கணேசன் காமராஜர் சிலையை திறந்து வைத்தார்.
இதில் சொல்லப்பட்டது சில உதாரணங்கள் மட்டுமே.
ஒவ்வொரு ஊரிலும் நடிகர்திலகத்தால் அமைக்கப்பட்ட ,
திறக்கப்பட்டவை
நினைவுச் சான்றுகளாய் ஏதாவது ஒரு வகையில் இருக்கின்றது.அதில் ஒரு சிறு பதிவே இது.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக