சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் பஞ்சாயத்து

பொதுவா நடிகர் திலகம் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பார். வீண் விவாதம் பேச்சுன்னு இருக்க மாட்டார்.அதே சமயம் தன்னை சுத்தி இருக்கறவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது அது அவரோட காதுக்கு வரும்போது அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கிறதுலே சிவாஜி போலே ஒரு மனுசனை பார்க்க முடியாது.சினிமா பீல்டுல சக நடிகர் நடிகைகளுக்கு வந்த பல பிரச்சனைகளை தீர்த்து வச்சுருக்கார் நடிகர் திலகம்.
நடிகை புஷ்பலதாவுக்கும் ஒரு பிரச்சனை வந்துச்சு. அந்தப் பிரச்சனையை சிவாஜி எப்படி தீர்த்து வச்சார் அப்படிங்கறத இந்த பதிவுலே பார்க்கலாம்.

நடிகை புஷ்பலதா 1955 லே வெளிவந்த நல்ல தங்கை படத்துலே அறிமுகம் ஆனார்.
1961 லே வெளிவந்த கொங்கு நாட்டு தங்கம் படத்துலே தான் பிரபலமானார். இதுக்கு பின்னாலே பிரபலமாகி 
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்பட பலமொழியிலே நூத்துக்கணக்கான  படங்களில் நடிச்சார் புஷ்பலதா.

நடிகர் திலகம் சிவாஜியோட இவர் நடிச்ச முதல் படம் ஆலயமணி. ஆலயமணி படத்தில் சரோஜாதேவி ஹீரோயின்.  
புஷ்பலதாவுக்கு நல்லா பாப்புலரா அமைஞ்ச படம் பார் மகளே பார்.இதுலே புஷ்பலதாவுக்கு நல்ல பேர் கிடைச்சது.

இதுக்கு பின்னாலே ஆண்டவன் கட்டளை ரத்தத்திலகம் கை கொடுத்த தெய்வம் உள்பட பல சிவாஜி படங்கள்லே நடிச்சார் புஷ்பலதா.

ஆனா எந்த படத்திலேயும் சிவாஜிக்கு ஜோடியா நடிக்க வாய்ப்பு வரலே.சிவாஜி புரொடொக்சன் தயாரிச்ச ரத்தபாசம் படத்துல மூத்த சிவாஜி கேரக்டருக்கு ஜோடியா ரெண்டு சீனுலே நடிச்சார் புஷ்பலதா.
திரிசூலம் படத்துலே இவருக்கு ஒரு நல்ல கேரக்டர் கிடைச்சது.அந்த கேரக்டரை அவங்க நல்லா பண்ணியிருந்தாங்க.
சிவாஜியை வெச்சு லாரி டிரைவர் ராஜாகண்ணு படத்தை தயாரிச்சார் புஷ்பலதா .தயாரிப்புங்கற டைட்டில்லே புஷ்பாராஜன்னு இருக்கும்.லாரி டிரைவர் ராஜாகண்ணு படம் 100 நாள் ஓடலேன்னாலும் வசூல் நல்லா கலெக்சன் பண்ணுன படம்

பார் மகளே பார் படத்துலே புஷ்பலதா சிவாஜியோட மகளா நடிச்சார்.அது நல்ல பிரேக் கொடுத்துச்சு.
இந்த படத்துக்கு முன்னாலே வந்த நானும் ஒரு பெண் படத்துலே AVM ராஜனுக்கு ஜோடியா நடிச்சார்.இந்த பட ஷூட்டிங் டயத்துலே தான் ரெண்டு பேருக்கும் காதல் உண்டாச்சு.
புஷ்பலதா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.AVM ராஜன் இந்து மதத்தை சேர்ந்தவர்.இதனாலே புஷ்பலதா குடும்பத்துலே பெரிய பிரச்சின வந்துச்சு.ராஜனை கல்யாணம் பண்றதுலே உறுதியா இருந்தார் புஷ்பலதா.
அருணாச்சலம் ஸ்டுடியோவுலே ஒரு பட சூட்டிங்லே நைட் வரைக்கும் நடிச்சுட்டு இருந்தார் ராஜன்.
அந்த நைட் நேரத்துலே வந்து ராஜனை பாத்து பேசினார் புஷ்பலதா.
அருணாசலம் ஸ்டுடியோவுலே ஒரு சின்ன பிள்ளையார் கோயில் இருக்கும்.சூட்டிங் முடிஞ்சதும் ராஜனை அந்த பிள்ளையார் கோயிலுக்கு கூட்டிட்டு போனார் புஷ்பலதா.
ராஜன் அங்க இருந்த குங்குமத்தை  எடுத்து புஷ்பலதா நெத்தியிலே வெச்சாரு.புஷ்பலதா ரொம்ப டென்ஷனா இருந்தாங்க.தாலி கட்டாத குறையை தவிர அது ஒரு கல்யாணம் மாதிரி அவங்க நடத்திட்டாங்க.
இந்த சம்பவத்தை ஒரு பத்திரிக்கையாளர் பாத்துட்டார்.அவர் குமுதம் பத்திரிக்கையிலே அப்போ வேலை செஞ்சுட்டு இருந்தார்.குமுதத்துலே ரொம்ப பரபரப்பான பக்கம் 'கிசுகிசு'பக்கம்.அந்த பக்கத்தை அப்பதான் புதுசா ஆரம்பிச்சு இருந்தாங்க. அந்த பக்கத்துலே இந்த விஷயத்தை போட்டுட்டார் அந்த பத்திரிக்கையாளர்.இதை தொடர்ந்து புஷ்பலதாவோட கேரியர் பாதிக்கறமாதிரி தப்புதப்பா செய்திகள் வந்துட்டு இருந்தது.அதுக்கு அந்த பத்திரிக்கையாளர்தான் காரணம்.
புஷ்பலதா அப்போ வளந்துட்டு வர்ற நடிகை.இந்த மாதிரி விஷயங்களாலே ரொம்ப மன உழைச்சலுக்கு ஆளானார் புஷ்பலதா .இதை இப்படியே விட்டா தன்னோட வளர்ச்சி பாதிக்கும்னு யோசிச்ச புஷ்பலதா இதுக்கு என்ன தீர்வு அப்படின்னு அவர் யோசிப்பத்தான் சிவாஜியை பாத்து சொல்றதுன்னு முடிவு எடுத்தார்.

அந்த நேரத்துலே நடிகர்சங்க கட்டிட வேலைகள் சிவாஜி தலைமையிலே நடந்துட்டு இருந்துச்சு .ஷூட்டிங் இல்லாத நேரத்துலே சிவாஜி நடிகர் சங்க கட்டிட வேலையை பாக்க வந்துருவார்.கூடவே விகே ராசாமியும் ,
மேஜர்சுந்தரராஜனும் இருப்பாங்க.மூணு பேரும் பேசிட்டு இருக்கறப்போ அழுது அழுது முகமெல்லா வீங்கி கண்ணீரோட சிவாஜியை வந்து பாத்தார் புஷ்பலதா.
என்னம்மா என்ன விஷயம்னு சிவாஜி கேக்க ,புஷ்பலதா தன்னோட பிரச்சினையை சொன்னார்.
சிவாஜிக்கு ஒரு பக்கம் அந்த பத்திரிக்யாளர் மேலே கோபம் வந்தாலும் ,அந்த பிரச்சினையை எப்படி முடிக்கணும்னு யோசிச்சு புஷ்பலதா கிட்டே சொன்னார்.
"நீ போம்மா ,இந்த பிரச்சினை இனி வராமே நான் பாத்துக்கிறேன்னு"
சொல்லிட்டார்.
அந்த பத்திரிக்கையாளரை கூப்பிட்டு பேசினார் சிவாஜி.இந்த மாதிரி பிரச்சினைகளை எப்படி முடிக்கணும்னு சிவாஜிக்கு நல்லாவே தெரியும்.மத்த பெரிய நடிகர்களா இருந்தா அதிரடியா சில விஷயங்களை செஞ்சு விஷயத்தை பெரிசாக்கிடுவாங்க. சிவாஜி அந்த பத்திரிக்கையாளர் கிட்டே பக்குவமா பேசினார்.சினிமாலே காதல் விஷயம் நடக்கறது சகஜமான விஷயம்.இது அவங்க பெர்சனல் விஷயம்.அவங்களோட வாழ்க்கை  பிரச்சினையும் கூட .நம்ம கூட பிறந்தவங்களுக்கு  இந்த மாதிரி நடந்தா ,மத்தவங்க இது மாதிரி செஞ்சா நாம ஏத்துக்குவோமா?
அது போக  பத்திரிக்கை தர்மம்னு ஒண்ணு இருக்கு. அதையும் பாக்கணும்னு ,அந்த பத்திரிக்கையாளர்கிட்டே சொல்லி,அதையும் அவரை ஏத்துக்க வெச்சு ,அதுக்கு பின்னாலே அந்த பிரச்சினை பெரிசு ஆகாமே முடிச்சார் சிவாஜி.தன்னோட பவரை வெச்சு அந்த பத்திரிக்யாளரை மிரட்டுனா விஷயம் என்னாகும்.அது இன்னும் பரவும்னு நயமா பிரச்சினையை முடிச்சார் சிவாஜி.
சிவாஜி தன்னோட காதுக்கு வர்ற எந்த பிரச்சினையா இருந்தாலும் அதை எப்படி முடிக்கணுமோ அது படி முடிச்சு வெச்சுடுவார்.இந்த பிரச்சினை மாதிரி பல பிரச்சினைகளையும் சிவாஜி முடிச்சு வெச்சிருக்கார்.
புருஷன் பொண்டாட்டி பிரச்சினை ,குடும்ப பிரச்சினை ,அண்ணன்தம்பி சண்டை இப்படி எத்தனையோ பிரச்சினைகளை பஞ்சாயத்து பண்ணி ரெண்டு பக்கமும் சந்தோசமா போற மாதிரி சுமூகமா தீர்த்து வைப்பார் சிவாஜி.புஷ்பலதோவோட அண்ணன் ஸ்தானத்துலே இருந்து சிவாஜி இந்த விஷயத்தை செஞ்சு முடிச்சார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற