சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் 50 Top திரைபடங்கள்

1.1952 
இந்த வருடம் தமிழில் வெளிவந்த  படங்கள் 28.மொழிமாற்றுப் படங்கள் 4.ஒருபடம்கூட பெயர் சொல்லும்படி அமையவில்லை.1952 ஆம் வருடம் இப்படியே போய் விடுமா என்ற நிலையில் அந்த வருட 10 வது மாதத்தில் வெளியானது பராசக்தி .ஒன்றுமே சிறப்பாக அமையாத இந்த வருடத்தில் பராசக்தி தமிழ் சினிமா சரித்திரத்திலேயே அழிக்க முடியாத படமாக அமைநந்து விட்டது.
சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் 21 நடிகர் நடிகையர் நடித்திருந்தார்கள்.38 வாரங்கள் வரை ஓடிய திரைப்படம்.சிவாஜிகணேசன் அந்த காலத்திலேயே அதுவும் முதல் படத்திலேயே  ,Multi split personality 'குணம் காட்டும் காட்சியில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி.தமிழ்சினிமாவின் ஸ்பெசல் திரைப்படம் பராசக்தி.

1953.
2.திரும்பிப் பார்.
மொத்த படத்தில் இருந்து  சில முக்கியமான க்ளிப்புகளை இணைத்து படம் வெளிவருவதற்கு முன்பு வெளியிடப்படும் டிரெயிலர் என்ற சிறப்பு விளம்பர உத்தியை முதன் முதலாக தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட திரைப்படம் திரும்பிப்பார்.மிகவும் மோசமான குணம்கொண்ட கதாநாயக வேடத்தில்நடித்து அதை மிகவும் புகழ் பெற வைத்து காட்டினார் சிவாஜி.

3.
மனோகரா முதலில் தமிழில் வெளிவந்தது.தெலுங்கு இந்தியில் வெளியான பின் அன்றே வந்த 'PAN INDIA '
படமாக இதை சொல்லலாம்.

4.சிவாஜிநடிப்பதற்கு முன்பு பாதி அளவு எடுக்கப்பட்ட அந்த நாள் திரைப்படம் ஏவிஎம் செட்டியாரால் எரிக்கப்பட்டது .பராசக்தியில் எந்த கதாநாயகன் என்று வேண்டாம் என்று சொன்னாரோ அதே கதாநாயகன் தான் இந்தத் திரைப்படத்திற்கு சரிப்பட்டு வருவார் என்று சிவாஜி வைத்து  எடுக்கப்பட்ட திரைப்படம் அந்த நாள். ஆடல் பாடல் இல்லாத கதாநாயகனை தமிழ் சினிமாவுக்கு முதன் முதலில் காட்டிய படம் இது.

5.இந்த கதையில் நீங்கள் மனைவியை கொலை செய்யும் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் ஏமாற்றும் பேர்வழியாக நடிக்க வேண்டும் என்று தமிழ்சினிமாவின் உயர்நிலை கதாநாயகனாக  இருந்த  சிவாஜியிடம் சொல்லப்பட்டு அவர் முழு மனதுடன் நடிக்க சம்மதித்த திரைப்படம் இது .

6. பராசக்தியின் சமூக சிந்தனை வசனங்களை பேசிய சிவாஜி  மனோகராவில் ராஜ வசனங்களை பேசிய சிவாஜி 
மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் கோவை மாவட்ட கொங்குத் தமிழ் வசனங்களை பேசி தன்னால் இப்படியும் பேசி நடிக்க முடியும் என்று நிரூபித்த படம்.

7.ஒரு சண்டைக் காட்சியில் 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சிவாஜி மயிரிழையில் உயிர்தப்பி நடித்த படம் வணங்கா முடி.

8.சிவாஜி நடித்த மாயாஜால படம் தங்கமலை ரகசியம் .

9.சிவாஜி இரட்டைப் பிறவிகளாக நடித்த முதல் திரைப்படம் உத்தமபுத்திரன்

10.எந்த மண்ணைச் சேர்ந்தவர்களால் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டானோ ,அதே அந்நிய மண்ணில்தான் அவர்களுக்கு கட்டபொம்மன் முதலில் திரையிட்டுக்காட்டப்பட்டது.
அதற்குப் பின்பு தான் தமிழகத்தில் திரையிடப்பட்டது. 

11.ஒரு ஊனமான கதாபாத்திரத்தில்  பிரபல கதாநாயகன் நடித்து வெள்ளி விழா ஓடிய முதல் திரைப்படம் பாகப்பிரிவினை. 

12.தொழிலாளர்களின் நலனை ஒடுக்கும் முதலாளிகளின் மறைமுகமான இரும்புத்திரையை கிழித்தெரியும் கதையாக தமிழில் வந்த முதல் சினிமா இரும்புத்திரை.

14.பின்னாட்களில் வெளிவந்த பல கூட்டுக் குடும்ப திரைப்படங்களுக்கு முன்னோடியாக அமைந்த படம் படிக்காத மேதை.

15.ஒரு கதாநாயகன் இந்துவாகப் பிறந்து முஸ்லிமாக மாறி கிறிஸ்துவ பெண்ணை நேசிக்கும் வித்தியாசமான கதை அமைப்பில் வெளிவந்த படம் பாவமன்னிப்பு.

16.காதலுக்கு முன்பு எந்த பாசமும் நிலைக்காது என்ற உண்மையை உடைத்தெறிந்த படம் பாசமலர்.

17.ஒரே வேடத்தில் நடித்து  13 கெட்டப்புகளில் சிவாஜி நடித்த படம் மருதநாட்டு வீரன் .

18.சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் சிகை அலங்காரத்தை 
ஒரு மருத்துவர் வேடத்திற்கு பயன்படுத்தி சிவாஜி நடித்த படம் பாலும் பழமும்.

19.வ உ சிதம்பரனாரின் தியாகத்தை  கடைசி காலத்தில் மக்கள் மறந்தனர்.கப்பலோட்டிய தமிழன் திரைப்படமும் விளையாட போது அதிக சிரத்தை எடுத்து மக்கள் பார்க்கவில்லை. பின்னாளில் சிதம்பரனாரின் தியாகம் போற்றப்பட்டது.அது போலவே பின்னாளில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் மிகச் சிறப்பான வரவேற்பு பெற்றது.
காலம் கடந்த செயல்கள் இவை.

20.பலே பாண்டியா படத்துக்காக மூன்று வேறு வேறு ஒப்பனைகளும் ,ஒரு வேடத்தில் சென்னை வட்டார பாஷையிலும் ,இன்னொரு அறிவியல் நிபுணர் வேடத்திற்கு எந்த படத்திலும் பேசியிராத குரலிலும் ,பேசி நடித்த சிவாஜி இந்தப் படத்தை 11 நாட்களில் நடித்து முடித்தார்.

21.தன்னுடைய இல்ல பெயரிலேயே  படத்தை எடுத்து 
வெளியிட்ட ஒரே கதாநாயகன் சிவாஜிதான்.படம் அன்னை இல்லம்

22.பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை விட பல பிரமாண்டமான படங்கள் எடுக்க முடியும். ஆனால் சிவாஜி சிவாஜி கொடுத்த பிரம்மாண்ட நடிப்பை 
மட்டும் யாராலும் செய்ய முடியாது என்று சொல்ல வைத்த திரைப்படம் கர்ணன்.


23.ஆரம்ப காட்சியே தற்கொலையாக காண்பிக்கப்படும் ஒரு காட்சி ,திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் தான் அது கொலை என்று சொல்லப்படும் வித்தியாசமான த்ரில்லர் கதையை காதல் படமாக காட்டிய புதுமையை சொன்னது புதியபறவை.

24.ஒன்பது வேறு வேறான கதைக்களங்களை கொண்ட ஒரு திரைப்படத்தில் ,அந்த 9 கதைக்களங்களிலும் வேறு வேறான வேடங்கள் ,ஒப்பனைகளில் சிவாஜி நடித்து நம்ப முடியாத சாதனையை சாதாரணமாக செய்திருப்பார்  நவராத்திரி திரைப்படத்தில்.

25.ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் அந்தத் திரைப்படம் முதலிடத்தில் இருக்கும். பின்பு வரும் பிரம்மாண்ட வெற்றி படம் அந்த முதலிடத்திற்கு வந்து விடும்.
ஆனால் இன்று வரை மாற்ற முடியாத முதலிடத்தில் இருந்து வருவது புராண பட வரிசையில் சிவாஜியின் திருவிளையாடல்

26.நீலவானம் என்ற காதல் படத்திலும், மகாகவி காளிதாஸ் என்ற காவியப்படத்திலும் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி, இரண்டு மனைவிகள் 13 குழந்தைகளுக்கு அப்பனாக, மேலே சொன்ன படங்களுக்கு இடையில் நடித்த படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை.

27.இயற்கையாகவே அது நடந்ததா?
உண்மையான பக்தி கொண்டவர்களால் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் கடவுள் அருளால் நடந்ததா?
மிக உன்னதமான கலைஞனின்   அருளால் அது நடந்ததா ?என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாத..
படத்தின் இறுதிக் காட்சியான  யானை புலவனை மிதிக்க வரும் காட்சி இதைத்தான் நினைக்க வைக்கின்றது.இப்படிப்பட்ட ஆச்சரியமான காட்சி இடம் பெற்ற திரைப்படம் சரஸ்வதி சபதம். 

28.பவுடர் பூச்சு ,அலங்காரங்கள் இல்லாமல் சினிமாவை எடுக்க முடியுமா என்று இருந்த காலத்தில் அந்த புதுமையை செய்த திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை.

29.திருவருட்செல்வர் படத்தை பார்த்த போது ஐந்து படங்களைப் பார்த்த திருப்தியை கொடுத்தது. 

30.சத்தியம் தவறாத உத்தமனின் கதையில்  சிவாஜி நடித்த படம் ஹரிச்சந்திரா .

31.உலக அளிவில் புகழ்பெற்ற 20 செஞ்சுரி பாக்ஸ் அமெரிக்க கம்பெனி வியாபார ரீதியாக உரிமை வாங்கிய முதல் தமிழ்ப்படம் என்ற சிறப்பையும் பெற்றது தில்லானா மோகனாம்பாள்.

32.சிவாஜி என்ற உயர்ந்த நடிகனின் நடிப்பாற்றலில் ஓர் சிறப்பான திரைப்படம் உயர்ந்த மனிதன்.

33.ஆஸ்காருக்கு சென்றதா இல்லையா என்ற விவாதத்தை விட, ஆஸ்கார் பரிசு கூட சிவாஜியின் நடிப்புக்கு ஈடாகாது என்ற சொன்னால் அதை ஏற்க கூடிய படம் தெய்வமகன்.

34.அன்றைய காலகட்டத்தில் படங்களை வெளிநாட்டில் எடுப்பது பிரமாண்டம் என்றாலும், அதைவிட உள்நாட்டு காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வெளியான படம் சிவந்தமண்.வெகு காலம் இதுபோல ஒரு பிரமாண்ட திரைப்படம் தமிழில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

35.பிராமண குடும்பத்து இலக்கணத்தை அவர்களே வியந்து பார்க்க வைத்த படம் வியட்நாம் வீடு.

36.சிவாஜி வேடத்தில் சிவாஜி நடித்ததும் ,நடிகன் வேடத்தில் சிவாஜி நடித்ததும் இந்த ராமன் எத்தனை ராமனடி  திரைப்படத்தில் .

37.சிவாஜியின் 150 ஆவது திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது சவாலே சமாளி  .150 திரைப்படங்களில் கதாநாயகனாகவே நடித்த  முதல் நடிகர்  சிவாஜி .

38.பாபு திரைப்படத்தோடு வெளியான படங்கள் எல்லாம் கலர் படங்கள்.அந்த கலரெல்லாம் சாயமிழக்க கறுப்பு வெள்ளை பாபு என்றும் பளீரென  வாழ்கிறான் .

39.இரு வேறு ஒப்பனையில் இரு வேறு நடிப்பில் இரட்டைத்திலகமாக ஆன்டணியும் அருணுமாக சிவாஜி மிரட்டிக் கொண்டே இருக்கும் படம் ஞானஒளி.

40.தமிழ் கறுப்பு வெள்ளை சினிமாக்களில் வசூலில் சாகசம் புரிந்த கிராமிய திரைப்படம் பட்டிக்காடா பட்டணமா .

41.மனித ஜாதி இருக்கும் வரை, தமிழ் சினிமா இருக்கும் வரை, காதல் சினிமாக்கள் வந்து கொண்டே இருக்கும். எத்தனை கட்டடங்கள் புதுமையாக படைக்கப்பட்டாலும் ஒரு தாஜ்மஹாலை போல, எத்தனை காதல் தமிழ் சினிமாக்கள் வந்தாலும் 
ஒரு வசந்த மாளிகை போல அமையுமா !

42.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரும் சாம்ராஜ்ய   பேரரசன் ராஜ ராஜ சோழன்.
நடிப்பு சாம்ராஜ்யத்தின் மாமன்னன் நடிகர்திலகம்.
இருவரையும் காட்டிய படம் ராஜ ராஜசோழன்.

43.நடிப்புக்கு கௌரவம் தந்த படம் .படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியே படத்தின் முதல் நாள் ஷுட்டிங்காக எடுக்கப்பட்டது.
படத்தின் ஒரு பாடல் MS.விஸ்வநாதன் பிண்ணனிக்கு சிவாஜி நடித்து பின் படத்தில் TMS ஸ்ஸின் குரல் ஒலிக்க ,அதை அப்படி  மேட்ச் செய்து நடித்திருப்பார் நடிகர்திலகம்.

44.நடிகர்திலகத்தின் அசல் வரலாற்றை சொல்வது போலே எடுக்கப்பட்ட திரைப்படம் ராஜபார்ட் ரங்கதுரை.

45.இந்தியா முழுவதும் வெளியீடு செய்யப்பட்ட முதல் தமிழ்ப்படம் தங்க பதக்கம்.பத்திரிக்கைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் அதிகம் செய்யப்பட்ட படம் தங்கபதக்கம்.

46.அவன்தான் மனிதன்
நடிகர்திலகத்தின் 175 வது சிறப்பு திரைப்படம் இது.படத்தின் சில காட்சிகள் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டன.மனிதன் நினைப்பதுண்டு பாடல் இசை நாடா இல்லாமலேயே படப்பிடிப்பில் சிவாஜி பாடி நடித்த பாடலாகும்.

47.அண்ணன் ஒரு கோயில்.
அண்ணன் தங்கை பாச கதையை ஒரு த்திரில்லர் பாணி கதையைமைப்பில் திரைக்கதை அமைக்கப்பட்ட உத்தியானது ,வேறு எந்த பாசக் கதை திரைப்படத்திலும் இல்லாதது.

48.தியாகம்.
 இப் படத்தை தவறாக விமர்சனம் செய்தது விகடன்.பாலாஜி இதன் வசூல் சாதனையை பத்திரிக்கையில் விளம்பரம் செய்து பரபரப்பாக்கினார்.
வெள்ளிவிழா ஓடிய K.பாலாஜியின் முதல் படம் .

49.பைலட் பிரேம் நாத்
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இரு நாடுகள் இந்தியா இலங்கை சேர்ந்து தயாரித்த திரைப்படம் என்பது.படம் முழுக்க இலங்கையில் எடுக்கப்பட்டது.இந்த திரைப்படம் இலங்கை தியேட்டர்களில் தொடர்ச்சியாக மாறி மாறி திரையிடப்பட்டு 2 வருடங்களுக்கு மேல் ஓடியது.

50.திரிசூலம்.
நடிகர்திலகத்தின் 200 வது திரைப்படம்.
தமிழ் சினிமாக்களில் 
கோபுர உயரம் தொட்ட வசூல் சாதனை.அதிகமான மக்கள் பார்வை.அதிக வெள்ளிவிழா திரையரங்குகள்.
காஷ்மீர் படப்பிடிப்பு.
தமிழில் உருவாக்கப்பட்ட கதையும் அல்ல.நடிகர்திலகம் 3 வேடம் செய்த படம்

செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற