சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

ஒரே வருஷத்துல பல வேஷங்களை செஞ்ச சிவாஜி

பொதுவா நடிகர்கள் ஒரு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துட்டாங்கன்னா அதே மாதிரி டைப்புலே படங்களை செய்யறதுதான் வாடிக்கையா இருக்கு தமிழ் சினிமாவிலே.ஆனா இந்த மாதிரி டைப்புலே சிவாஜிசார் தன்னோட படங்களை செஞ்சதில்லே.ஒரு படம் ஹிட்டானாலும் சரி சுமாரா போனாலும் சரி ,ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தம் இல்லாத கதையமைப்புலே தான் படங்களை செஞ்சுகிட்டு வந்திருக்கார்.
ஒரு பட வேஷத்துக்கும் இன்னொரு பட வேஷத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் தான் தன்னோட கேரக்டர்களை செஞ்சிட்டு வந்தார்.
1978 ஆம் வருஷம் நடிகர் திலகம் பைலட் பிரேம்நாத் படத்துல நடிச்சார்.இந்த நாத் அப்படிங்கற தலைப்புலே மட்டும் பல படங்களை சிவாஜியை வெச்சு படமெடுக்க வந்தாங்க. ஆனா சிவாஜி அதை செய்யலே.அப்படியும் ஜஸ்டிஸ் கோபிநாத் ஹிட்லர் உமாநாத்னு ரெண்டு படம் வந்துடுச்சு.பைலட் பிரேம்நாத் ஜஸ்டிஸ் கோபிநாத் ஹிட்லர் உமாநாத் ..இந்த மூன்று படத்தில் 'நாத் 'அப்படிங்கற வார்த்தை ஒண்ணா இருந்தாலும் ஒவ்வொரு படத்துக்கும் சம்பந்தம் இல்லாத கதை அமைப்புகள் கேரக்டர்கள செஞ்சிருப்பார் சிவாஜி.
ஒரே மாதிரி படங்களை சிவாஜி என்னைக்கும் தொடர்ந்து செஞ்சது இல்லை.உதாரணமா அப்படி செஞ்ச ஒரு வருஷத்தை பாக்கலாம்
சிவாஜி ஒரே வருஷத்துலே  ஒரு படத்துல தொழிலாளி அடுத்த  படத்துல புரட்சி வீரன்,
அடுத்த படத்துல கட்டட மேஸ்திரி, அடுத்த படத்துல போர் வீரன், அடுத்த படத்துலே வெகுளி,
அடுத்த படத்துல எழுத்தாளர், 
அடுத்த படத்துல சராசரி இளைஞன்னு வரிசையா வேற வேற மாதிரி நடிச்சிருக்கார்.
இந்த வேஷங்களை பண்ணுனது 1960 ஆம் வருஷத்துலே.
இதுல தொழிலாளிக்கும் புரட்சி வீரனுக்கு ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா. கட்டட மேஸ்திரிக்கும் போர் வீரனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா. வெகுளிக்கும் எழுத்தாளருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ..

இந்த 1960 வருஷம் சிவாஜி நடிச்ச என்னென்ன படங்கள் வெளிவந்தது. அவர் செஞ்ச வேஷங்கள் என்னென்ன அப்படிங்கறத இதுல நாம பாக்கலாம்.

1960 ஆம் வருசம் சிவாஜி நடிச்சு  வெளியான முதல் படம் இரும்புத்திரை. இந்தப் படம் வெளிவந்த தேதி 14 .1 .1960. 
தமிழ் சினிமாவுல இது ஒரு முக்கியமான படமா வச்சுக்கலாம்.  தொழிலாளர் பிரச்சினையை அதுக்கு முன்னால வந்த எந்த படங்களும் பெருசா சொல்லல.
தொழிலாளர் பிரச்சனையை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் இது. இது கூட சேந்து காதல், குடும்ப பரச்சினைன்னு படம் போகும்.எஸ் எஸ் வாசன் தயாரித்த பிரம்மாண்டமான சமூகப் படம் இது. இந்த படம் கோயம்புத்தூரில் தான் அதிக நாள் ஓடுச்சு. படம் 165 நாள் ஓடி பத்து நாள் வித்தியாசத்தில் வெள்ளி விழாவை தவறவிட்ட படம் இரும்புத்திரை.
தொழிற்சாலையில வேலை செய்ற தொழிலாளியா சிவாஜி நடிச்சிருப்பார் .தொழிலாளிகளுக்கு மத்தியிலே சிவாஜி பேசுற வசனங்களும், காட்சி அமைப்புகளும் இதுக்கு பின்னாலே வந்த பல படங்களுக்கு இந்த படம் முன்னோடியா அமைஞ்சிருக்கு.தொழிலாளர் புரட்சியும் ,அதை தொடர்ந்து நடக்கற விஷயங்களும் தான் இந்த படத்தோட முக்கியமான கான்செப்ட்.

மேலே சொன்ன சமூககதையை பண்ணுன சிவாஜி அடுத்ததா பண்ணுன படம் ஒரு அரச காலத்து கதை.நாட்டுலே நடக்கற அநியாயங்களை தட்டிக்கேக்கற ஒரு புரட்சி வீரன் வேஷத்துலே சிவாஜி நடிச்சிருப்பார்.
இரும்புத்திரையிலே பேன்ட் சர்ட் மாட்டிட்டு தொழிற்சாலையிலே வேலை செய்யற தொழிலாளியா நடிச்ச சிவாஜி அடுத்த இந்த படத்துலே அரசகதையிலே புரட்சி வீரனா நடிச்சிருந்தார்.ஒரே கால கட்டத்துலே வந்த படங்களா இருந்தாலும் அந்த முகத்தோற்றம், உடல் தோற்றத்துலே எல்லாம் வித்தியாசமா தெரிவார் சிவாஜி.

இதுலே இருந்து கட்டிட மேஸ்திரியா மாறியிருப்பார் தன்னோடஅடுத்த படத்துலே.முந்துன படத்துக்கும் இந்த தெய்ப்பிறவி படத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா.தெய்வப்பிறவி படத்துலே சிவாஜி கட்டியிருக்கிற அந்த வேட்டி உடுப்புலே பாக்கறப்போ அசல் கட்டிட மேஸ்திரியா தெரிவார் .
மேலே சொன்ன ரெண்டு படங்களுக்கும் சம்பந்தம் இல்லாத கதையைமைப்பை கொண்ட படம் இது.

முதல் படம் தொழிலாளியா நடிச்சாரு.அடுத்த படத்துலே புரட்சிவீரனா நடிச்சாரு. அதுக்கடுத்து கொத்தனார் கட்டிட மேஸ்திரியா நடிச்ச சிவாஜி ,இதுக்கடுத்து ஒரு அரச  கதையிலே போர் வீரனா நடிச்சார்.அந்த படம் ராஜபக்தி.
மன்னரோட பதவியை கைப்பற்ற ஒரு சதி நடக்கும்.அந்த சதியை முறியடிச்சு அந்த அரசாட்சியை காப்பாத்தற கேரக்டர்லே சிவாஜி நடிச்சிருப்பார்.இது தான் ராஜபக்தி.
ரொம்ப நட்சத்திர பட்டாளம் நடிச்ச படம்.பெரிய எதிர்பார்ப்போட இந்த படத்தை எதிர் பார்த்தாங்க.பெரிய அளவுலே ரீச் ஆகலே.
இருந்தாலும் சிவாஜி இதுக்கு முன்னாலே செஞ்ச படங்கள்லே இருந்து ஒரு வேற வேஷம் இந்த படம்.

இந்த படத்துக்கு பின்னாலே ரொம்ப அருமையா ஒரு கேரக்டர் பண்ணினார் சிவாஜி.சிவாஜின்னாலே கம்பீரந்தான் .அதை முழுவதுமே மாத்தி செஞ்ச படம் படிக்காத மேதை.விவரம் இருக்கறதா காட்டிக்கற ஒரு வெகுளி கேரக்டரை இதுலே சிவாஜி செஞ்சிருப்பார்.கதை கேக்கறதுக்கு முன்னாலே சிவாஜிக்கு இது செட் ஆகுமான்னு யோசிக்க வெக்கலாம்.ஆனா சிவாஜி அந்த கேரக்டரை எங்கேயோ கொண்டு போக வெச்சிருப்பார்.இதுக்கு முன்னாலே வந்த படங்களுக்கும் கதைக்கும் வேஷத்துக்கும் கொஞ்சம் கூட எந்த சாயலும் இல்லாத மாதிரி இருக்கும்.

படிக்காத மேதை வெகுளி ரங்கனை ஒரு எழுத்தாளரா மாத்தி காட்டியிருப்பார் சிவாஜி பாவை விளக்கு படத்துலே.ஒரு நளினம் ,அந்த பாந்தமான நடிப்பெல்லாம் வெகுளி ரங்கன்லே இருந்து மாறி  பாவை விளக்குலே வந்து சேத்திருப்பார் சிவாஜி.

குழந்தைகள் கண்ட குடியரசு படத்துலே விஞ்ஞானி வேஷம் செஞ்சிருப்பார் சிவாஜி.முற்றிலும் வேறுமாதிரியானதுன்னு சொல்வாங்களே ,அதை இந்த படத்து சிவாஜியை பாத்து சொல்லலாம்.மிரள வைக்கிற மேக்கப்புலே சிவாஜி இருப்பார்.இது சிவாஜியான்னு சந்தேகம் வர்ற வைக்கிற வேஷம் இது.

அடுத்த படம் பெற்றமனம்.
மு.வரதராசனோரோட நாவலைதான் சினிமாவா எடுத்தாங்க.இந்த படம் தெலுங்குலே1953 லே வெளிவந்துச்சு .தமிழ்லே இதை 
1960 லே வெளியிட்டாங்க.
இந்த படத்துலே சிவாஜி வழக்கமான ஒரு வேசத்தை செஞ்சிருந்தாலும் படத்தோட ஒரு காட்சியிலே பெரியார் தோற்றத்துலே நடிச்சிருப்பார்.முன்னே செஞ்ச கதைகளுக்கும் இந்த படத்துக்கும் வித்தியாசம் இருக்கு.

1960 லே வந்த கடைசி படம் விடிவெள்ளி.இந்த பட வேஷத்துலே பெரிய வித்தியாசம் இல்லேன்னாலும் இந்த 1960 லே வந்த மத்த படத்தோட கதையும், வேஷமும் 
இதுலே  மாறுபட்டதுன்னு சொல்லலாம்.ஒருபடத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தம் இல்லாத வகையிலே படங்களை கொடுக்கறதுதான் சிவாஜியோட  கொள்கை. அதுலே அவர் படங்கள் மாறினது இல்லே.அவரும் மாறினது இல்லே.

இப்படி ஒரு வருஷத்துலே ,தொழிலாளி ,
புரட்சி வீரன்,கட்டிட மேஸ்திரி,போர்வீரன்,வெகுளி,
எழுத்தாளர்,காதலன்னு ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாமே வெரைட்டியா சிவாஜி நடிச்ச வருஷம் இந்த 1960.

செந்தில்வேல் சிவராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற