நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எத்தனையோ வேஷம் போட்டு இருக்கார். எல்லோரும் ஏன் இப்படி சொல்றாங்க அப்படின்னா ,சிவாஜி அதிகமான வேஷங்களை யாரும் செய்யாத அளவுக்கு சினிமாவுல செஞ்சிருக்கார் அப்படிங்கறதுக்காக சொல்லப்படுகிற ஒரு சிறப்பு வாய்ந்த விஷயம்.
டாக்டர் வக்கீல் தொழிலாளி பணக்காரன் ஏழை முரடன் மூடன் இப்படி இந்த வேஷங்கள் மட்டும் இல்லாம சரித்திர நாயகர்கள் புராண புருஷர்கள் கடவுள் வேஷம்னு நிறைய பண்ணியிருக்கிறார்.
இந்த மாதிரி பல வேஷங்களை செஞ்ச நடிகர் திலகம் நிஜமா தானிருந்த ஒரு நிலையை சினிமாலே வேஷமா செஞ்சிருக்கார்.ஆனா இதுல என்ன ஸ்பெஷல் என்னான்னா நிஜத்துலேயும் சரி சினிமால போட்ட வேஷத்துலயும் சரி, அவர் நடிக்கல அப்படிங்கிறது தான் உண்மை. என்னது சிவாஜி சினிமால நடிக்கலையா அப்படின்னு எல்லாரும் கேள்வி கேட்கலாம். ஆனா உண்மை அதுதான்.சிவாஜி போட்ட அந்த வேஷம் எதுன்னா அரசியல்வாதி வேஷம்தான்.
சரி இதை எப்படி நடிக்காத வேஷம்னு சொல்லறதுக்கு பல விஷயங்கள் இருக்கு.நிஜத்துலேயும் அது எப்படி அப்படிங்கறதுக்காக பல விஷயங்களை சொல்லலாம்.
பொதுவா அரசியல்வாதின்னாலே என்ன இமேஜ் இருக்கு. அரசியல்வாதின்னாலே அவங்க பேச்சும் செயலும் எப்படி இருக்கு. எல்லாமே எதிர்மாறா இருக்கறதுதான் அரசியல்வாதி குணம்.இதை நடிப்புன்னு சொல்லலாம்.சிவாஜியும் ஒரு அரசியல்வாதியா இருந்திருக்கார்.இதுலே எந்த மாற்றுக்கருத்தும் இல்லே.
தான் ஏத்துக்கிட்டே உத்தம தலைவர் காமராஜருக்காக ஒரு அரசியல்வாதியா செயல்பட்டிருக்கார்.காமராஜர் நல்ல அரசியல்வாதி அப்படிங்கறதுக்காக.இந்த இடத்துலேதான் சிவாஜியோடகொள்கையை யோசிக்கனும்.எல்லா அரசியல்வாதிகளும் தங்களோட லாபத்துக்காக சுய நலத்துக்காக ஒருதலைவர் பின்னாடி போவாங்க.இதுலே இருந்து சிவாஜி மாறுபட்டு நிக்கறார்.
தூய்மையான அரசியல்வாதியா காமராஜர் இருந்ததாலே அவர் பின்னாடி நின்னார்.தூய்மைன்னு சொல்லறப்போ அங்கே சுயநலம் இல்லாமே போகுது.
அரசியல்னா நடிக்கணும் .ஆனா சிவாஜி அப்படியில்லே.சிவாஜி அரசியல்லே எப்படின்னு..
ஊழல் பண்ணி எப்படி எப்படியோ ஏமாத்தி அரசியல் பண்ணுன அரசியல் தலைவர்கள் கூட சிவாஜியை பத்தி சொல்லறப்போ,சிவாஜி சினிமாலே நடிகர்திலகமா இருக்கலாம் .ஆனா அரசியல்லே அவருக்கு நடிக்கதெரியாதுன்னு பல அரசியல் தலைவர்களோட ஸ்டேட்மெண்ட் ஒண்ணு போதும்.இதுவே சொல்லவந்த விஷயதுக்கு ஆதாரமா அமைஞ்சிடுது.
நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜிக்கு அரசியல் இலக்கணம் தெரியலேன்னு சொல்றாங்க. இது ஒரு தப்பான எண்ணம் .தப்பான பேச்சு. அவரோ தேசதியாகிகளையும் தேசபக்தியையும் பெரிசா நினைச்சு வாழ்ந்து நடந்து வந்தவர்.காமராஜரை அரசியல் தலைவரா ஏத்துகிட்டவர்.அவரைப் போயி அரசியல் தெரியலே அரசியல் இலக்கணம் தெரியலேன்னு பேசுனா அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தை அரசியல்லா வெச்சு இருக்காங்கன்னு யோசிக்கணும்.இதுக்கு சிவாஜியோட பதிலா எதை சொல்லாம்னா,
அரசியலை நான் அறியாதவனா ,அரசு வித்தைகள் நான் புரியாதவனா .எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல.
கரையான் புற்றென்ன கருநாகங்களுக்கு சொந்தமா ..
எவன் இந்த மண்ணுக்கு சொந்தக்காரனோன்னு ராமன் எத்தனை ராமனடி பட வீர சிவாஜி வசனத்தை சொல்லலாம்.
சரி அரசியல்வாதியா சிவாஜி நடிக்கலே.சினிமாலே அவர் அரசியல்வாதியா நடிச்ச படம் என்ன ,சினிமாலே வந்து போனாலே நடிப்புன்னு சொல்லறப்போ சினிமாலே நடிக்கலேன்னு சொன்னா எப்படின்னு நீங்க கேக்கலாம்.
சிவாஜி அரசியல்வாதியா நடிச்ச படம் என் தமிழ் என் மக்கள்.அதுலே அவரோட வேஷம் என்ன ?
ஒரு கட்சி தலைவர் ,அரசியல் தலைவர் வேஷம்.
அரசியல்வாதின்னாலே நடிக்க தெரிஞ்சிருக்கணும்.ஆனா இந்த என் தமிழ் என் மக்கள் படத்துலே கூட அவர் அந்த மாதிரி அந்த அரசியல்வாதி வேஷத்தை செய்யலே. அந்த கேரக்டரிலேயும் நேர்மை குணம்
கொண்டவரா ,லஞ்சம் வாங்காதவரா ,உத்தமரா அந்த வேஷத்தை செஞ்சிருப்பார்.படத்துலே கூட அந்த கேரக்டரை மேலே சொன்ன அரசியல்வாதி இலக்கணப்படி செய்யலே.அதனாலே நிஜத்துலயும் சரி சினிமாலேயும் சரி அரசியல்வாதியா சிவாஜி நடிக்கலேன்னு சொன்னது இந்த வகையிலேதான்.
எதை உதாரணமா வெச்சு என் தமிழ் என் மக்கள் படத்தை எடுத்தார் சிவாஜி.
அன்னைக்கு தமிழ்நாட்டு அரசியல்லே உண்மையா நடந்த கதைதானே.இந்த தமிழ் சினிமாலே சிவாஜி அந்த வேஷத்துக்கு தகுந்த மாதிரி நடிக்கலேன்னு சொல்லறதுக்கு முன்னாலே என்தமிழ் என்மக்கள் எதனாலே உருவாச்சு அப்படிங்கறத தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.
சிவாஜிக்கு போட்டி நடிகரா இருந்த நடிகர்தான் இந்த காலகட்டத்துலே முதலமைச்சரா இருந்தார்.அவர் உடல்நிலை சரியில்லாமே நோய்வாய்ப்பட்டு இருந்தார்.தனக்கு ஏதாவது நடக்கலாம்னு அவர் தெரிஞ்சுதான் இருந்தார்.அவரோட கட்சி அவருக்கு பின்னாலே என்ன ஆகும் ,தனக்கு பின்னாலே அந்த கட்சியை யார் கொண்டு போறது எல்லாம் அவர் யோசனை பண்ணியிருக்கலாம்.அவருக்கு நம்பிக்கையா யாரும் தெரியலே.இந்த சமயத்துலே சிவாஜியை தன்னை வந்து சந்திச்சு பேச அழைப்பு கொடுத்திருந்தார்.ஒரு கடிதமும் அனுப்பியிருந்தார்.இந்த கடிதத்தை பத்தி கூட சிவாஜி பல முறை சொல்லியிருக்கார்.அந்தரங்கம் ரகசியமானது .அதனாலே அந்த கடிதத்துலே இருக்கற விஷயத்தை சிவாஜி சொன்னதில்லே.அவர் கொடுத்த கடிதத்தை பத்தி பொதுக்கூட்ட மேடையிலே சிவாஜி பேசுனப்போ அது எனக்கு பொக்கிஷம் மாதிரி.பத்திரமா வெச்சிருக்கேன்னு சொல்லியிருக்கார்.கடிதத்திலே சந்திச்சு பேச மட்டும் வரச் சொல்லி எழுதியிருக்க முடியாது.ஏன்னாஇதைச் சொல்ல ஒரு போன் கால் போதுமே.சிவாஜியும் அந்த கடிதத்தை பொக்கிஷம்னு சொல்ல வேண்டியதில்லையே.
லெட்டர்லே எல்லா விபரத்தையும் சொல்ல முடியாதே.நேர்லே பேசினாத்தா எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்க முடியும்.இந்த இடம்தான் அந்த நேரந்தான்.விதி விளையாடுன நேரம்.
ஆனா அதுக்குள்ளே அவர் மரணம் அடைஞ்சிட்டார்.
இப்போ அந்த கட்சியோட நிலைமை என்ன. சிவாஜி காங்கிரசிலே இருக்கார்.காங்கிரசும் அதிமுகவும் கூட்டணியிலே இருக்குது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கட்சி கூட்டணி இல்லாம நாம தனியா நின்னு ஜெயிக்கலாம்னு காங்கிரசுக்கு எண்ணம் வருது.இப்போ அதிமுக தலைவர் இறந்துட்டார்.அவர் இறந்ததாலே அந்த கட்சிக்குள்ளே கோஷ்டி சண்டை வருது.பல பிரிவா உடைஞ்சு நிக்குது.அதுலே ஒரு பிரிவுக்கு முதலைமச்சர் மனைவி தலைவியா ஆகறாங்க.அந்த கட்சி உடையட்டும்னு காங்கிரஸ் நிக்குது.
இந்த நேரத்துலே சிவாஜி காங்கிரஸ்கிட்டே ஒரு கோரிக்கை வைக்கிறார்.அவர் இருந்தப்போ கூட்டணி வெச்சு ஜெயிச்சீங்க. இப்ப அவர் இல்லே. இந்த நேரத்துலே கூட்டணி தர்மப்படி இருக்ணும் இல்லே .இப்ப கையை விரிச்சா அது நியாயம் ஆகுமான்னு சிவாஜி கேட்டதுக்கு பலன் இல்லே.அந்த கட்சி எப்படியோ ஆகட்டும்.இந்த நேரத்தை நாம் ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கலாம்னு காங்கிரஸ் தலைமை முடிவெடுக்குது.முதலமைச்சர் இறந்த பின்னாலே அதிமுக பல பிரிவா உடைஞ்சு நிக்குது.
இறக்கறதுக்கு முன்னாலே அவர் என்ன சொல்ல வர்றார் ,தன் கிட்டே எதை எதிர்பார்க்கிறார்னு சிவாஜி புரிஞ்கிட்டது ஒரு புறம் ,கூட்டணி தர்மம் ஒரு புறம் , அரசியல் நேர்மை ஒரு பக்கம்னு சிவாஜியை எடுக்க வெச்ச முடிவுதான் காங்கிரசிலே இருந்து வெளிய வந்தது. சிவாஜியை நம்பி ஒரு கூட்டம் இருக்குதில்லே. அதுக்காக தொடங்குனது தான் சொந்த கட்சி.
இது தான் என் தமிழ் என் மக்கள் படத்தோட கதைக்களம்.
அதுலே பேசப்பட்ட வசனங்கள் எல்லாமே நிஜ சம்பவத்தை வெச்சே இருக்கும்.
ஒரே ஒரு வசனம் உதாரணம்.உங்களுக்கு தேவைன்னா கூப்பிட்டு உக்கார வெச்சு இலை போட்டு சாப்பிட சொல்வீங்க.
தேவையில்லேன்னா அந்த இலையையே கிழிச்சு தூக்கி எறிஞ்சிடுவீங்கன்னு சிவாஜி பேசற வசனம் இருக்கும். இதுலே இலைங்கற வார்த்தை எதை குறிக்குதுன்னு நல்லாவே தெரியும்.நேரிடையாவே சாடறது மாதிரி இருக்கும்.
சரி இந்த படத்துலே சிவாஜி நடிக்கலேன்னு ஏன் சொல்றேன்.
அரசியல்வாதிகளோட உண்மையான முகத்தை சிவாஜி இந்த கேரக்டர்லே செஞ்சிருக்க மாட்டார்.அந்த நேரத்துலே நடந்த அரசியல் பிரச்சினைகளிலே சிவாஜி எப்படி நடந்துகிட்டார் அப்படிங்கறதைத்தான் இந்த கேரக்டரை செய்திருப்பார்.படத்துலே வர்ற அந்த அரசியல்வாதி வேஷத்தை கூட சிவாஜி நேர்மையாத்தான் செஞ்சிருப்பார்.அரசியல்லேயும் நடிக்காத சிவாஜி இந்த அரசியல்வாதி வேஷத்துலேயும் நடிக்கலேன்னு தான் சொல்லணும்.
தமிழக முன்னேற்ற முண்ணனி கட்சிக்காக தன்னோட சொந்த பணத்தை செலவழிச்சு கட்சி நடத்துனவர் சிவாஜி.தன் கட்சி சார்பா தேர்தல்லே நின்னவங்களை பாத்து எலெக்ஷன் முடிஞ்சதும் சுவத்துலே வரைஞ்ச தேர்தல் சின்னங்களை அழிச்சு சுத்தம் பண்ணி கொடுத்துடுங்கன்னு சொன்ன ஒரே தலைவரும் சிவாஜிதான்.பொதுக்கூட்ட மேடைக்கு மத்த தலைவர்கள் லேட்டா வர்ற மாதிரி லேட்டா வந்ததில்லே.அதுலயும் நேரத்தை சரியா பாலோ பண்ணுனவர் சிவாஜி.காங்கிரஸ் கட்சியை திட்டி கோஷம் போட்ட தொண்டர்களை பாத்து,அவங்களை ஒழிக திட்டாமே ,நாம வாழ்கன்னு சொல்லி பழகுங்கன்னு சொன்னவர் சிவாஜி.இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்களை சொல்லலாம்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக