கௌரவம் படத்துலே வக்கீலா நீங்க நடிச்சிருக்கீங்க,இது ஒருசட்டத்துறை சம்பந்தப்பட்ட படம்னு சாதாரணமாத்தான் நெனச்சு நாங்க பாத்தோம்.ஆனா வக்கீல் வேஷத்துலே அந்த நடிப்புலே இவ்வளவு நுணுக்கம் இருக்கான்னு படம் பாத்த பின்னாலே ஆடிப்போயிட்டோம் ஐயா.எந்த ஒரு படத்துக்கும் க்ளைமேக்ஸ்தான் படம் டிராவல் பண்ற விஷயத்தை சொல்ல வேண்டிய கட்டம்.அதனாலே அதுலே நடிக்கற ஹுரோ படம் பூரா நடிச்சதை அந்த க்ளைமேக்ஸ்லே நிறுத்தியாகணும்.படத்தோட ஒவ்வொரு காட்சியா நடிச்சிட்டு வர்றப்போ அந்த க்ளைமேக்ஸ் காட்சிலே நிக்கறதுக்கு ஒரு பலம் கிடைச்சுடும்.நீங்க என்னடான்னா முதல் நாள் ஷுட்டிங்க்லேயே க்ளைமேக்ஸ் காட்சியிலே நடிச்சீங்களாம்.படத்தை பாத்தா அப்படி தெரியலையே எங்களுக்கு.
கௌரவம்னு எந்த அர்த்தத்துலே படம் எடுத்தவங்க டைட்டில் வெச்சாங்களோ.ஆனா நடிப்புக்கு கௌரவம் கொடுத்துட்டீங்க.
தங்கபதக்கத்துலே மனைவி கேஆர் விஜயா இறந்ததும் போலீஸ் ஸ்டேசன்லே இருந்து வீட்டுக்கு வருவீங்க.என்னதான் பெரிய போலீஸ் ஆபீசரா இருந்தாலும் மனைவி உடலை பாத்ததும் கதறி துடிப்பீங்கன்னுதான் நாங்க பாத்துட்டு இருந்தோம்.அமைதியா லக்ஸ்மி , நான் வந்து ரொம்ப நேரமாச்சுன்னு சொல்லி அமைதியா பேசிட்டு நிப்பீங்க.என்னதான் கம்பீரமான போலீஸ் ஆபீசரா இருந்தாலும்னு எப்படி இப்படின்னு நாங்க நினைச்சு பாத்துட்டு இருக்கையிலே அப்ப கதறுவீங்களே .அதை பாத்து மிரண்டல்ல போயிட்டோம்.இதையெல்லாம் யாருகிட்ட நாங்க பாத்திருக்கோம்.
உத்தமபுத்திரன் படத்துலே ரெண்டு வேஷத்துலே ஒரு வேஷமா விக்ரமனா நடிச்ச நீங்க ,ஒரு காட்சியிலே பார்த்திபனா மாறி பத்மினி கிட்டே நடிச்சீங்க.இதுலே நீங்க பார்த்திபனோட நடிப்பை காட்டுவீங்கன்னு நாங்க எதிர்பார்த்தோம்.ஆனா பார்த்திபனா நடிச்சாலும் கொஞ்சமா அந்த விக்ரமன் நடிப்பையும் சேத்து பிரமிக்க வெச்சிட்டீங்க.வெறும் பார்த்திபனா மட்டும் நடிச்சிருந்தா அது பார்த்திபன் வேஷத்தையே செஞ்சது மாதிரி ஆயிடும்.ஆனா அங்க நடிக்கறது விக்ரமன்.அதைய செஞ்சாத்தான் அது நேச்சுரலா இருக்கும்னு எங்க புத்திக்கு புரிய வெச்சீங்க.ஒரு நடிப்பு தப்பா போகாமே அதை எப்படி யோசிச்சு செஞ்சிருந்தீங்க.
கத்திக்குத்து பட்டு நிலத்துலே விழுந்து துடிச்சதை நாங்களும் ரசிச்சுதான் பாத்தோம்.சொர்க்கம் படத்துலே.இந்த நடிப்பை பத்தி பேசயிலே ,கத்திலே குத்துனா வலியாலே அலறிதுடிக்கணும்.இதென்ன கையையும் காலையும் இழுத்து இழுத்து உதறி நடிக்கறது. இது சரியான நடிப்பான்னு கேலி பேசுனாங்க.நமக்கும் கஷ்டமா போயிடுச்சி. சிவாஜி நடிப்பை இப்படி பேசறாங்ளேன்னு.
பேசறவங்களுக்கு சரியான பதிலை சொல்லத் தெரியலே.கொஞ்ச நாள் கழிச்சுத்தான் ஒரு புத்தகத்துலே இதை படிச்சேன்.ஆச்சர்யம் தாங்க முடியலே.எவன்டா சிவாஜி நடிப்பை பத்தி தப்பா பேசுனது.இதை பாருங்கடான்னு சத்தம் போட்டு சொல்ல தோண வெச்சது.ஷூட்டிங் டயத்துலே டைரக்டர் ராமண்ணா கூட இப்படித்தான் நெனச்சாராம்.அதுக்கு அந்த பெரிய நடிகன் சொன்னாரு.ஜூலியஸ்சீசருக்கு காக்கா வலிப்பு நோய் இருந்திருக்கு. அந்த பரபரப்பான டென்ஷனான நேரத்துலே அந்த நோயோட தாக்கம் வரும்.நான் இது பத்தி தெரிஞ்சிருந்துதான் பிட்ஸ் வர்ற மாதிரி கலந்து செஞ்சேன்னு சொல்லி ராமண்ணாவை திகைக்க வெச்சாராம்.இது பத்தி தெரிஞ்ச பின்னாடி நாங்களும் அப்படித்தானே திகைச்சு போயிட்டோம்.
கௌரவம் படத்துலே கண்ணன் ரஜினிகாந்த் வக்கீல் கோட்டை எடுத்துட்டு போக வீட்டுக்கு வர்ற மாதிரி ஒரு காட்சி.பண்டரிபாய் கிட்டே பேசிட்டு கோட்டை எடுக்கலாம்னு இருக்கறப்போ மேலே மாடியிலே நின்னு ரஜினிகாந்த் இதை பாத்துட்டு இருப்பார்.கண்ணன் கோட் எடுக்க வந்த விஷயத்தை சொல்ல ,ரஜினிகாந்த் மேலே நின்னுட்டே பதில் சொல்வாரு.அவர் கீழ இறங்கி வந்து கண்ணன் கிட்டே பேசறது மாதிரி ஷாட் வரும்னு நாங்க நினைச்சப்போ அது மாதிரி ஷாட்டே இல்லே. இந்த கண்ணனுக்காக தான் இறங்கி போறதாங்கறதா மாதிரி அந்த காட்சி சொல்லுதுன்னு பல தடவை பாத்த பின்னாலே புரிஞ்சது.
நடிப்பு சக்கரவர்த்தியான நீங்க மிருதங்கம் வாசிக்கற நடிப்புலே தப்பு இருக்கறதா விகடன் விமர்சனம் எழுதுனப்போ எங்களுக்கும் ஏக கடுப்புதான்.
எங்களுக்கு சங்கீதம் வாசிப்பு பத்தி எல்லாம் தெரியாது.எல்லா ரசிகர்களும் இதை தெரிஞ்சு தான் ரசிக்க முடியுமா? காலம் காலமா ரசிச்சுட்டு வந்த எங்களுக்கு சங்கடம் தான் .சிவாஜியை ,
நடிகர்திலகத்தை தப்பா எழுதிட்டங்களேன்னு வருத்தம்.எங்களுக்கு வாசிப்பு பத்தி என்ன தெரியும் .எப்படி பதில் சொல்லறதுன்னு ஒரு குடைச்சல்.
நான் வாசிச்சது தப்புன்னா ,அதை நிரூபிச்சா என்னோட ரெண்டு விரலை வெட்டிக்கறேன்னு சவால் விட்டீங்களே.எந்த நடிகனாலே இப்படி சவால் விட முடியும்? என்னோட நடிப்பை பத்தியா தப்பு சொல்றீங்கன்னு நின்னீங்களே! சிவாஜி வாசிச்சதுலே தப்பு இல்லே,நல்லா கரெக்டா பண்ணியிருந்தார் அந்த நிஜக் கலைஞன்னு மிருதங்க மேதைகள் சொன்னதை கேட்டு ,விகடன் தலை குனிஞ்சு போச்சே.ஒரு வருஷத்துக்கு விகடன் சினிமா விமர்சனம் எழுதாதுன்னு தப்புக்கு தண்டனையா தனக்குத்தானே தீர்ப்பு எழுத வெச்சிட்டீங்கள்ளே.
எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையா இருந்துச்சு.இந்த காலத்து பசங்க எல்லாம் இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்.
கர்ணன்னு உருவத்தை நெனச்சுப் பாத்தா சிவாஜியோட உருவம்தானே தெரியுதுன்னு நாங்க பேசினா ,அந்த மாதிரி உடைலங்காரம் பண்ணி கர்ணன் படத்துலே வேற யாரும் நடிச்சிருந்தாலும் அப்படித்தான் சொல்லுவாங்கன்னு ஒரு ஆள் ஏளனமா பேசுனாரு. அதுக்கு நம்மாளு ஒருத்தர் ,நாங்க சிவாஜி ரசிகர்கள் என்னடா அப்படி சொல்லறது? மைசூர் மகாராஜாவே அப்படித்தான் நெனச்சிருக்காரு.அப்போ கர்ணன் படம் கூட வெளியாகலே.சூட்டிங்தான் நடந்துட்டு இருந்துச்சு. சிவாஜியை பாக்கணும்னு மைசூர் மகாராஜா பாக்கணும்னு சொல்ல,சிவாஜி அப்படியே போயிருக்கார் .அதை பாத்த மகாராஜா நான் சிவாஜியை பாக்க கூப்பிடலே. கர்ண மகாராஜாவை பாக்க கூப்பிட்டேன்னு சொல்லியிருக்காரு.கர்ணன் சினிமா வர்றதுக்கு முன்னாலேயே மைசூர் மகாராஜாவை கர்ண மகாராஜாவா பாக்க வெச்சவர் சிவாஜி.சிவாஜியை ரசிக்கிறதுக்கும் ஒரு ரசிப்புத்திறன் வேணும் .அது இல்லேன்னா அதை வளர்த்திக்க பாருங்கன்னு அடிச்சாரே பாருங்க நம்மாளு .
முதல் தடவையா சம்பூர்ண ராமாணம் படத்தை பத்தி பேசுனப்போ,ராமாயணக் கதைதானே ..
சிவாஜி ராமனா நடிச்சிருக்காரான்னு பாத்தவங்களை கேட்டேன்.
இல்லேன்னாங்க.சரி சிவாஜிதான் வில்லன் ரோல் கூட பண்ணுவாரே .அப்போ ராவணனா நடிச்சிருக்காரான்னு கேட்டேன்.அந்த கேரக்டரும் கிடையாதுன்னு சொன்னாங்க.ஹீரோ வேசமோ ,வில்லன் வேஷமோ ,குணசித்திர வேஷமோ எதா இருந்தாலும் பண்ணுவாரே சிவாஜி.ஆனா நடிப்புக்கு ஸ்கோப் இருக்கணும்.அதான் முக்கியம்னு நடிச்சவர் சிவாஜியாச்சே.இந்த ராமாயணக் கதையிலே என்னதான் செஞ்சிருக்கார்னு கேட்டேன்.பரதன் வேஷம்னு சொன்னாங்க. அத கேட்டதும் கொஞ்சம் சங்கடமா தான் இருந்துச்சு.
அட பரதன் நல்ல குணமான பாத்திர படைப்புதான். ஆனா நடிக்கறதுலே என்ன ஸ்கோப் இருக்கப் போகுதுன்னு எண்ணம் வராமே இல்லே.படம்
மூணு மணி நேரம் ஓடுச்சு.அட!
படம் பூரா வந்தா என்ன ?பத்து நிமிஷம் வந்தா என்ன ?நடிகனோட நடிப்புலதாண்டா இருக்குன்னு பொடனியிலே அடிச்ச மாதிரி இருந்துச்சு நீங்க செஞ்ச பரதன் வேஷம்.ராமனும் தெரியலே ! ராவணனும் தெரியலே !
பாபு படத்தை பாத்துட்டு ரொம்ப வியப்பா அருமையான நாங்க பேசிட்டு இருந்ததை கேட்ட வேற ஒரு ரசிகர் ,ஒரு வேளை சாப்பாடு போட்டுட்டாங்களாம்
.மழையிலே நனைஞ்சதுக்கு
துணியும் கொடுத்துட்டாங்களாம்.
பின்னாலே ஏழையாபோன அந்த குடும்பத்துக்கு இவரு உழைச்சு உழைச்சு கொட்டுவாராம்.எல்லாம் நம்பற மாதிரி சொல்லணும் .இப்படி யாராச்சும் இருப்பாங்களான்னு கிண்டலடிச்சாரு.அதக் கேட்ட ஒருத்தர் ,பராசக்தின்னு ஒரு படத்துலே சான்ஸ் கொடுத்தாரே பெருமாள் முதலியார்.அவரோட குடும்பத்துக்கு வருஷா வருஷம் சிவாஜி போய் புதுத்துணி கொடுத்து மரியாதை செஞ்சு ஆசிர்வாதம் வாங்கிட்டு வர்றாரே .இது நெஜத்துலே நடக்குதில்லே.எந்த ஹீரோ இப்படி இருக்காரு அதச் சொல்லு பார்ப்போம் .
பாபு படத்துலே மத்தவங்களுக்கு செய்யற உதவி செய்நன்றியைத்தான் சொல்லி இருக்காங்க.சமூகத்துலே இருங்க மனுஷங்களுக்கு நல்ல எண்ணத்தை விதைக்கறதுக்காகத்தான் இந்த மாதிரி படங்கள், கதையை எடுக்கறாங்கன்னு பதில் சொன்னதை கேட்டு கேள்வி கேட்டவர் வாயடைச்சு போனாரே.
சிவாஜியோட உடல் அமைப்பு முக தோற்றம் அந்த அங்க அசைவுகள் கண்ணோட பவர் எல்லாமே மத்தவங்க செய்ய முடியாத ஒரு பிரமிக்கற விஷயமாத்தான் இருக்கு.எத்தனை படங்கள் எப்படி எப்படி வித்தியாசமா அமைஞ்சது.ரசிகனுக்கு நல்ல விஷயம் பொழுதுபோக்கு ரெண்டும் சேந்து தயாரிப்பாளர்களுக்கும் கமர்ஷியலாகவும் ஒண்ணா சேந்து படங்களா அமைஞ்சிருக்கு.அவ்வளவு அற்புதமான படங்களா சிவாஜி செஞ்சிருந்தும் கமர்ஷியலா பண்ணுன திரிசூலம் படந்தான் பெரிய வசூல் ரெக்கார்ட் படமா இருக்கு.சிவாஜி நெனச்சிருந்தா இந்த மாதிரி படங்களை செஞ்சு பணம் சம்பாதிச்சுட்டு இருந்திருக்கலாம்.ஏன்னா இதை சொல்றோம்னா , சிவாஜி பணம் வாங்கிட்டுத்தானே நடிக்கறாருன்னு கேள்வி கேக்கறவங்க இருக்காங்க.
தெய்வமகன் ,தில்லானா மோகனாம்பாள் ,நவராத்திரி,
சரஸ்வதிசபதம் ,இப்படி பல படங்கள் 100 நாள் ஓடுன பட வரிசையிலே தான் இருக்கு.திரிசூலம் மாதிரி படங்களை அவர் செஞ்சுட்டு போயிட்டே இருக்கலாம்.அதை அவர் செய்யலே.நடிகனா தன்னாலே இந்த சமுதாயத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சார்.
அதனாலேதான் அவர் நடிகர்களுக்கே திலகம்.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக