புது வருஷம் ஆரம்பமாச்சுன்னா தொலைக்காட்சியிலயும் ரேடியோவிலேயும் பல புதுச வருஷ பாட்டுக ஒலிபரப்புனாலும் குறிப்பா ரெண்டு பாட்டுகதான் ரொம்ப ரொம்ப பேமசா இருக்குது.இதுலே ஆச்சர்யம் என்னான்னா இந்த ரெண்டு பட பாட்டுகளுமே 1982 ஆம் வருஷம் ரிலீஸ் ஆன பாட்டுகள் தான்.இது செல்போன் காலம்.அன்னைக்கு மட்டும் ரிங்டோனா இந்த பாட்டுகளை ரொம்ப பேர் வெச்சிருப்பாங்க.புது வருஷம் அன்னைக்கு நடக்கற பார்ட்டி ,இசைக்கச்சேரி ,
புத்தாண்டு கொண்டாங்கள்லே இந்த ரெண்டு பாட்டுகளும் அதிகமா ஒலி பரப்பாகும்.
இந்த ரெண்டு பாட்டுகள்லே ஒரு பாட்டு நல்லோர்கள் வாழ்வை காக்க நமக்காக நம்மை காக்க பாட்டு.இது சிவாஜி நடிச்ச படம் 1982 ஏப்ரல் 14 லே வெளியான படம். இன்னொன்னு Happy new year ன்னு ஆரம்பிக்கற இளமை இளமை இதோ இதோ ,சகல கலா வல்லவன் பட பாட்டு.இந்த படம் 1982 ஆகஸ்டு 14 லே வெளியான படம்.
நல்லோர்கள் வாழ்வை காக்க பாட்டு MS.விஸ்வநாதன் இசையமைச்சது.சகலகலா வல்லவன் இளையராஜா இசையமைச்சது 4 மாச இடைவெளியிலே வெளியான படங்கள் இது.எந்த ஒரு விஷயத்துலேயும் ஏதோ ஒரு டாப் விஷயம் இருக்குமில்லே.அது மாதிரி இந்த ரெண்டு பாட்டுலே எது டாப் அப்படிங்கறத சொல்லியாகணும்.எதனாலே டாப் அப்படிங்கறத பாக்கறதுக்கு முன்னாலே மத்த பட புத்தாண்டு பாடல்களை கொஞ்சம் பாத்துடலாம்.
ஹாப்பி நியூ இயர் பிறந்தது, பிறந்தது..
இப்படி ஒரு பாட்டு பகைவன் படத்துலே வரும்.
1997 ஆகஸ்டில் அஜித் நடிச்சு வெளிவந்த திரைப்படம் பகைவன். தேவா இசையமைச்ச பாட்டு இது.
ஹாப்பி நியூ இயர் பிறந்தது பிறந்தது பாட்டு அப்போ புதுசா வந்ததாலே கொஞ்ச நாள் ரேடியோவிலயும் டிவிலயும் ஒலி பரப்புனாங்க. ஒரு ரெண்டு வருஷம் இந்த பாட்டும் புத்தாண்டு நாளுக்கு மத்த புத்தாண்டு பாட்டுகளோட போட்டுட்டு இருந்தாங்க.
ஆனா நாளடைவிலே காணாமல் போயிருச்சு.அவ்வளவு பிரபலம் இல்லே.ஏதோ புத்தாண்டு பாட்டு அப்படிங்கறதாலே இதை
ஒலி பரப்பிட்டு இருந்தாங்க.
பாட்டோட ஆரம்ப வரி இதுதான்ஹாப்பி நியூ இயர் பிறந்தது, பிறந்தது
வாழக்கையில் பிறந்தது, வாலிபனை எடு
கனவுக்கும் வாழ்க்கைக்கும் கை கலப்பு தேவையில்லை,
வா வாழ்ந்திடு!
அடுத்ததா ..
ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே ன்னு ஒரு பாட்டு.இந்த பாட்டு
உன்னை நினைத்து படத்துலே.
விக்ரமன் இயக்கத்திலே சூர்யா,ஸ்னேகா நடித்து 2002 ஆம் வருஷம் வெளிவந்த படம் இது. சிற்பி இசையமைச்ச பாட்டு இது.புத்தாண்டு பாட்டுக வரிசையிலே இந்த பாட்டையும் ஒலிபரப்பு செய்வாங்க.
புத்தாண்டு கொண்டாட்டங்களில்லே 2000 கிட்ஸ் இந்த பாட்டை கேப்பாங்க.
பாடல் தொடக்க வரிகள் : -
ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே,
அன்பைச் சொல்லி, ஆசை உள்ளம் துள்ளுதே!
சூரியகாந்தி பூ போல முகம் மாறுதே! சுகம் சேருதே!
ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே,
2015 ஆம் வருஷம் எஸ்.ஜே.சூர்யா டைரக்ஷன் செஞ்சு , நடிச்சு , இசையமைச்சு வெளிவந்த திரைப்படம் இசை. ரொம்ப காலம் கழிச்சு தமிழில் ஒரு கொண்டாட்டமான புத்தாண்டு பாட்டு அப்படிங்கற அடைமொழியோட வந்த பாட்டு இது. மதன் கார்க்கியின் வரிகளில், எஸ்.ஜே.சூர்யா இசையமைப்பில் வெளிவந்த படம் இது
இந்த பாடலை பாடியதும் எஸ்.ஜே.சூர்யா தான்.
பாடல் தொடக்க வரிகள் :-
புத்தாண்டின் முதல் நாள் இது
புதிதான இசை பூத்தது
ஒளி வெள்ளம் வானத்தை தாக்குது
நானென்பது நாம் என்றானது
நாமென்பது நாடு என்றானது
வரும் நாளும், நமதென்றானது
ஹாப்பி ஹாப்பி நியூஇயரு , பிரச்சனையெல்லாம் ஓவரு
இப்படி ஒரு பாட்டு கவண் படத்துலே...
கே.வி. ஆனந்த் இயக்கத்திலே விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் நடிப்பிலே உருவான படம் கவண். ஹிப்ஹாப் தமிழா இந்த பாடலை இசையமைத்திருக்கிறார். டி.ஆர். ராஜேந்தர் மற்றும் ஹிப் ஹாப் தமிழா இணைஞ்சு இந்த பாட்டை பாடியிருப்பாங்க.
பாடல் தொடக்க வரிகள் :-
ஹாப்பி ஹாப்பி நியூ இயரு , பிரச்சனையெல்லாம் ஓவரு
ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும்டா டிராயரு
ஹாப்பி ஹாப்பி நியூயரு, பிரச்சனை வேணாம் போயிரு
ஏதோ புது வருஷ பாட்டுக அப்படிங்கறதுக்காக இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு.
ஆரம்பத்துலே நான் சொன்ன வீஷயத்துக்கு வருவோம்.பழைய சினிமாக்கள்லே புத்தாண்டை வெச்சு அதிக பாட்டுக வரலே.வந்த நினைவும் இல்லே .
அதனாலே சங்கிலி சகலகலா வல்லவன் பாட்டுகளத்தான் குறிப்பிட்டு சொல்ல வேணும்.
இந்த ரெண்டு பாட்டுகளும் புத்தாண்டு கொண்டாட்ட பாட்டுகள்லே ரொம்ப பிரபலமா இருந்தாலும எது பெஸ்ட்னு பாக்கணும்.
புது வருஷம்னா அது வாழ்த்து சொல்லற மாதிரி இருக்கணும்.நல்ல சிந்தனை ,செயல்களை எடுத்து சொல்லணும்.அதுதான் புத்தாண்டுக்கு நல்லதை சொல்லற மாதிரி இருக்கும்.
இப்போ சகலகலா வல்லவன் பாட்டை எடுத்துக்கலாம்.
இந்த பாட்டை எழுதுனவர் பஞ்சு
அருணாச்சலம்.இசை இளையராஜா .பாடுனவர் SPB.
இந்த பாட்டோட முதல் வரி மட்டும் தான் Happy new year ன்னு ஆரம்பிக்கும்.மத்தபடி புத்தாண்டுக்கும் இந்த பாட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லே.
வரிகளை பாருங்க. அதுக்கு மேலே ...
குத்துவதில் சூரன் நான்னு ஒரு வரி..
புத்தாண்டு பாட்டா குத்தறது வெட்டறதுன்னு என்ன வார்த்தைகள்.
ஏக்துஜேகேலியே
ஏன்டி நீ பாத்தியேன்னு இன்னொரு வரி.
இதுலே இந்தி வேற.
கல்யாண ராமன் களத்தூரின் கண்ணம்மான்னு பொருந்தாத வார்த்தைகள் வேற.
புது வருஷம் அதுவுமா யார் காதிலும் பூ சுற்றுவேன்னு வேற ஏமாத்தற விஷயம்.மியூசிக் தடதடன்னு அடிச்சு விட்டா இதையெல்லாம் யார் பாக்கப் போறாங்கன்னு இஷ்டத்துக்கு எழுதியிருப்பார் அந்த நல்ல பாட்டாளர்.
காலேஜ் டீன்ஏஜ் பெண்கள்
எல்லார்க்கும் என்மீது கண்கள்னு தற்பெருமை வேற.
சந்திரன் ,மன்தன்னு வேற ..
இப்படித்தான் பாட்டு பூராவும்...
இதை எப்படி புத்தாண்டு கொண்டாட்ட பாட்டா விரும்பறாங்கன்னு தெரியலே.முதல் வார்த்தை தவிர புத்தாண்டு எதுக்கும் சம்பந்தமே இல்லாத பாட்டுதான் இது.
இதுலே பிரபலம் ஆகாத மத்த புத்தாண்டு பாட்டுகள் கொஞ்சம் சொல்லியிருந்தேனே.அந்த பாட்டுகள்லே கூட புத்தாண்டு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் வரிகள் இருக்கும்.
ஆனா இந்த சகல கலா வல்லவன் பாட்டுலே அப்படி ஏதுமே இருக்காது.தன்னம்பிக்கையை தூண்டற வரிகளோ வார்த்தைகளோ ,செழிப்பான விஷயமோ எதுவுமே இருக்காது இந்த பாட்டுலே.
புத்தாண்டு பாட்டுக்கு வேற நாதியே இல்லாத மாதிரி இந்த பாட்டை போட்டு டிவிகாரங்களும் ,
ரேடியோகாரங்களும் பாண்ணுன வேலை இது.
இப்போ சங்கிலி பட பாட்டை எடுத்துக்கங்க.
இந்த பாட்டோட ஆரம்பந்தான் கோரஸ்லே Happy new yearன்னு பாடுவாங்க.படத்தோட பாட்டோட கதாநாயகன் பாடற முதல்வரியே ,
நல்லோர்கள் வாழ்வை காக்க
நமக்காக நம்மை காக்கன்னுதான் ஆரம்பிக்கும்.அடுத்ததாதான் Happy new yearன்னு பாடுவார்.
அடுத்த வரியை பாருங்க.
சமுதாய சிந்தனை சேர
அநியாய கொள்கைகள் மாற
மனிதாபிமானமும் வாழ
அதற்கான உள்ளமும் கூட
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே...
இதெப்படி இருக்கு.புது வருஷம் அன்னைக்கு கேட்டா ஒரு அர்த்தம் இருக்குது இல்லே.
மியூசிக் எல்லாம் அப்படி உற்சாகமா இருக்கும்.
இதுக்கு அடுத்த சரணத்துலே பாருங்க ,புது வருஷத்துக்கு அர்த்தம் சொல்லற மாதிரி இருக்கும்.
வாழ்க்கை எல்லாம் வசந்தமே..
வாச மலர்கள் நம் உள்ளமே..
நேற்று போனது பழைய கதை..
இன்று வந்தது புதிய கதை..
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே
அந்த வார்த்தைகள் கூட எவ்வளவு நயமா ,நேர்மையா இருக்கும்.
நல்ல நல்ல விஷயங்களை ,களங்கம் இல்லாத இனிமையான வார்த்தைகளை வெச்சு எழுதப்பட்ட இந்த பாட்ட அடிச்சுக்க இது வரைக்கும் வேற பாட்டு இல்லே.இலங்கை ரேடியோலே ரொம்ப வருஷம் டாப் ரேங்க்லே இருந்த பாட்டுஇது.
இந்த பாட்டை பாடினவர் TMS.
இசையமைப்பு MS.விஸ்வநாதன்.
நடிப்பு நடிகர்திலகம்....
செந்தில்வேல் சிவராஜ்-
கருத்துகள்
கருத்துரையிடுக