எந்த ஒரு கதாநாயகியும் சிவாஜியோட நடிச்சுட்டா அவங்களோட கேரியர்லே அவங்களுக்கு ஒரு தனி அந்தஸ்து வந்துடும்.இதுக்கு உதாரணமா மஞ்சுளா ஜெயலலிதா வாணிஸ்ரீ தேவிகான்னு பல பேரைச் சொல்லலாம்.மத்த படங்கள்லே கிடைக்காத பேரும் புகழும் அவங்களுக்கு கிடைச்சிருக்கு.விதி விலக்கா அமைஞ்ச சில நடிகைகளை தவிர அதிகமான நடிகைகள் நடிப்பை கத்துக்கற விஷயம் சிவாஜிபடங்கள் மூலமா அவங்களுக்கு கிடைக்குது.
இதுலே சரோஜாதேவியும் ஒருத்தர்.
இவா் ராதாதேவிங்கற இயற்பெயரை சினிமாவுக்காக சரோஜாதேவின்னு மாத்திக்கிட்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரிச்ச 'மகாகவி காளிதாஸ்' ங்கற கன்னடப்படத்தில (1955) லே கதாநாயகியாக அறிமுகமானார்.
சிவாஜி படத்துலே சரோஜாதேவி முதன்முதலா நடிச்சது தங்கமலை ரகசியம் படத்துலேதான்.
இந்த படம் மந்திர தந்திரம் மாயாஜாலம் அமைஞ்ச படம்.இது 1957 லே வெளியான படம்.இதுலே சில காட்சி ஒரு பாட்டுக்கு மட்டும் சரோஜாதேவி நடிச்சிருப்பாங்க.சிவாஜிக்கு ஜோடி கிடையாது.தமிழ் சினிமாலே சரோஜாதேவி பாப்புலர் ஆகாத காலகட்டம் இது.
இதுக்கு அடுத்த வருஷம் வெளியான சபாஷ்மீனா படத்துலே ஒரு கதா நாயகியா நடிச்சிருந்தாங்க. இதுலே சந்திரபாபுவுக்கு ஜோடியா நடிச்சிருப்பாங்க.
1958 லே வெளியாச்சு இந்த படம்.
1959 லே வெளியான சிவாஜி படம் பாகப்பிரிவினை.
இந்த படத்துக்கு முன்னாலே கல்யாணப்பரிசு வெளியாச்சு.ரொம்ப ஹிட் ஆகி சரோஜாதேவிக்கு நல்ல பேரும் புகழும் கிடைச்சது.பாகப்பிரிவினை படத்துக்கு சரோஜாதேவியை சிவாஜிக்கு ஜோடியா போட்டாங்க.இதுலே சரோஜா தேவி நடிப்பு பத்தி ரொம்ப தெரிஞ்சிட்டாங்க.
இந்த படத்துலே பிரசவ வேதனை ஏற்பட்டு சரோஜாதேவி வலியிலே துடிக்கற மாதிரி ஒரு காட்சி இருக்கும். சரோஜாதேவியாலே அந்த காட்சியிலே நல்லா பெர்பார்ம் பண்ண முடியலே. டைரக்டர் பீம்சிங் எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுத்தார். அப்பவும் அவராலே சரியா பண்ண முடியலே .இதை பாத்துட்டேஇருந்த சிவாஜி ,சரோஜாதேவிக்கு நடிச்சு காமிச்சார்.
வயித்துலே ஒரு துணியை கட்டிகிட்டு பிரசவலியிலே துடி துடிச்சு நடிக்கிற மாதிரி அந்த உணர்வுகளை காட்டி நடிச்சதை பாத்து சரோஜாதேவி ரொம்ப ஆச்சர்யப்பட்டு போனாங்க.நாம ஒரு பெண்ணா இருந்தும் அதை செய்ய முடியலே .ஆனா சிவாஜி எப்படி அதை எப்படி பிரமாதமா நடிச்சுக் காமிச்சார்னு சரோஜாதேவிக்கு ரொம்ப வியப்பு. இது போல விஷயங்கள் தான் நடிகைகளுக்கு நல்ல நடிப்பை கத்துக்கற அனுபவத்தை சிவாஜி படங்கள் கொடுக்குது.
சிவாஜி சரோஜாதேவி ஜோடியா நடிச்ச இந்த முதல் படமே 216 நாள் ஓடி பெரிய சாதனை செஞ்ச படமா அமைஞ்சது.மாநில மொழிப்படமா சிறந்தபடம்னு தேசிய விருது வாங்குன படமாவும் அமைஞ்சது.
கல்யாணப்பரிசுன்னு ஒரு பெரிய ஹிட்படத்தை கொடுத்த ஸ்ரீதர் அடுத்ததா மீண்ட சொர்க்கம்னு எடுத்தார் .பெரிசா போகலே.ஒரு ஹிட் படத்தை கொடுத்தாகணும்னு சிவாஜியோட கால்ஷீட் வாங்கி தயாரிச்ச படம்தான் விடிவெள்ளி .சிவாஜி மகன்களான பிரபு ராம்குமார் பேருலே பிரபுராம் பிக்சர்ஸ் பேருலே தயாரிச்ச படம் விடிவெள்ளி.
1960 ஆம் வருஷம் வெளிவந்த படம் இது. படத்தோட வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புத்தூர் என்ற கிராமத்தில் படப்பிடிக்கப்பட்டவையாகும்.
இந்த படமும் நல்லா ஓடி பேர் வாங்குன படமா அமைஞ்சது.
1957 58 59 ஆம் வருஷங்கள்லே சிவாஜியோட ஒரு படத்துலே நடிச்ச சரோஜாதேவி இந்த 1960 வருஷம் ரெண்டு படத்துலே நடிச்சார்.ஒண்ணு விடிவெள்ளி.இன்னொன்னு இரும்புத்திரை.
இரும்புத்திரைலே வைஜெயந்திமாலா தான் சிவாஜிக்கு ஜோடி.சரோஜா தேவி சிவாஜியை விரும்பற பொண்ணா நடிச்சிருப்பார்.
வாசன் இந்திலே தயாரிச்ச பைகாம் இந்திப்படத்தைதான் தமிழ்லே இரும்புத்திரைன்னு எடுத்தார். பைகாம் இந்திப் படத்துலே வைஜெயந்திமாலா சரோஜாதேவி ரெண்டு பேரும் நடிச்சிருந்தாங்க.இந்திலே ஹீரோ திலீப்குமார்.அந்த ரோலைத்தான் சிவாஜி தமிழ்லே பண்ணியிருந்தார்.
இரும்புத்திரையிலே சரோஜாதேவிக்கு சாதாரண வேஷம் அமைஞ்சிருந்தாலும் வெள்ளிவிழாவுக்கு பக்கத்துலே ஓடுன திரைப்படத்துலே அவரும் நடிச்சிருந்ததுதான் அவருக்கு கிடைச்ச சிறப்பு.
1961 ஆம் வருஷம் வெளிவந்த படம் பாலும் பழமும். சரோஜாதேவிக்கு இந்த படம் பெரிய பேரை வாங்கி கொடுத்துடுச்சு. டபுள்ரோல் பண்ணி இருந்தாங்க. டிபி பேஷன்டா நடிச்ச சரோஜாதேவி அந்த வேஷத்துக்காக ரொம்ப மெலிஞ்சு உடல் வாடுனது மாதிரி தெரியறதுக்காக பல நாள் சரியா சாப்பிடாமே டயட்லே இருந்து நடிச்சாங்க. இது சரோஜாதேவி ரொம்ப மெனக்கெட்ட ஒரு வேஷம்.சரோஜாதேவியோட அந்த தோற்றத்தை பாத்த சிவாஜி என்னை விட நல்லா நடிச்சிருக்கேன்னு பாராட்டியிருக்கிறார்.
சரோஜாதேவிக்கு கிடைச்ச நல்ல பாராட்டு இது.
வரிசையா எல்லா வருஷமும் சிவாஜி படத்துலே சரோஜாதேவி அடுத்ததா1962 வருஷத்திலேயும் சிவாஜி படத்துலே நடிச்சார்.இந்த வருஷம் வந்த படம் வளர் பிறை.
இது ஒரு அரிய படமாகும்.சிவாஜிகணேசன் ஊமையாக நடித்த படம் இது.
அடுத்து இதே வருடத்தில் வெளியான படம் பார்த்தால் பசி தீரும்.சிவாஜியின் 75 வது படமாகும்.ஜெமினிசாவித்திரி சௌகார்ஜானகி உள்பட பல பேர் நடித்திருப்பார்கள்.இந்த படத்தின் டைட்டிலில் தன்னுடைய பெயரைத்தான் முதலில் போட வேண்டும் என்று சரோஜாதேவி நிர்ப்பந்தம் செய்தார் .அதனால் பட டைட்டிலில் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் என்று டைட்டில் போடப்பட்டது.சாவித்திரி புகழ் பெற்ற நடிகை.அவர் இருக்கும் போது சரோஜாதேவி இப்படி செய்தார் என்றால் ,சரோஜா தேவி அந்தளவு பிரபலம் புகழ் அடைந்து விட்டார்.அது தவிரவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உயர்ந்து விட்டார்.சாவித்திரிக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் பிணக்கும் ஏற்பட்டது. ஒரு புகழ் கொடுக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
இதே 1962 ஆம் வருடமே சிவாஜியின் ஆலயமணி படத்திலும் நடித்தார் சரோஜாதேவி.இந்த படத்தின் இறுதியில் சிவாஜியும் சரோஜாதேவியும் இறந்து விடுவதாக முதலில் அமைக்கப்பட்டிருந்தது.பின் அதை மாற்றி படமாக்கினார்கள் .நன்றாக ஓடி வசூல் செய்து வெற்றி பெற்ற படம் ஆலயமணி.
1963 லே சிவாஜியுடன் இருவர்உள்ளம் படத்தில் நடித்தார் .செம ஹிட்டான படம் இது.சரோஜாதேவிக்கு எப்படிப்பட்ட படங்களா அமைஞ்சது.இந்த படத்துலே ஒரு காட்சியில சிவாஜியை அதிக நடிப்பை காட்ட வேண்டாம் ,இது சரோஜாதேவி பெர்பார்மென்ஸ் பண்ண வேண்டிய காட்சின்னு LV பிரசாத் சொல்லி காட்சி எடுக்கப்பட்டது.பல நடிகர்களோட படங்கள்லே மாடர்ன் பொம்மையா வந்த சரோஜாதேவிக்கு சிவாஜி படங்கள்லே நல்ல ரோல்கள் கிடைச்சது. அந்த வகையிலே இருவர்உள்ளமும் சரோஜாதேவி கேரியர்லே மறக்க முடியாத படம்.
1963 லேயே சிவாஜி சரோஜாதேவி நடிப்புலே வெளியான இன்னொரு படம் குலமகள் ராதை.இந்த படம் வருகிறதுன்னு வெளியான புரோமேசன் விளம்பரத்துலே சரோஜாதேவி போட்டோ மட்டும் போட்டு விளம்பரம் பண்ணுனாங்க.இது
சரோஜாதேவியோட பேமசை சொல்லுது.படத்துலே இன்னொரு நாயகி தேவிகா நடிச்சிருப்பார்.
இந்த வருஷம் வந்த சிவாஜி சரோஜாதேவியின் இன்னொரு படம் கல்யாணியின் கணவன்.
இந்த ஜோடியிலே வந்த படங்கள்லே பெரிசா ரீச் ஆகாத படம் இது.
புதியபறவை 1964 .தமிழ் சினிமாவோட வேற லெவல் படம்.ஹைகிளாஸ்ஸா அமைஞ்ச படம் .சரோஜாதேவிக்கு பெரிய லெவல்லே அமைஞ்ச படம்.ஒரு காதலி மாதிரி வந்து ஹீரோவை வேவு பார்க்கற சிஜடி வேஷம் சரோஜாதேவிக்கு கிடைச்ச கேரக்டர் இந்த படத்துலே.மத்த கதாநாயகிகளுக்கு கிடைக்காத ஒரு பெரிய வாய்ப்புன்னுதான் சொல்லனும்.எப்படி எப்படி வித்தியாசமான பாத்திரங்களா சரோஜாதேவிக்கு கிடைச்சிருக்கு.
இதுக்கு பின்னாலே 4 வருஷம் கழிச்சு சரோஜாதேவி சிவாஜி ஜோடியா நடிச்ச படம் என் தம்பி.கல்யாணம் ஆன பின்னாலே நடிச்ச படம்.தட்டட்டும் கைதழுவட்டும் பாட்டுலே சிவாஜி சாட்டையாலே சரோஜாதேவி தலையிலே வெச்சிருக்கற பூக்களை பறிக்கற மாதிரி காட்சி இருக்கும்.சிவாஜி சாட்டையை சொடுக்கறதும் அதுக்கு சரோஜாதேவி கொடுத்த ரியாக்ஷனும் பெரிய வரவேற்பை வாங்கிச்சு.இது ஒரு சக்ஸஸ்புல் மூவி.ரொம்ப இன்ட்ரஸ்ட்டான படமும் கூட.
1969 லே அன்பளிப்பு அஞ்சல்பெட்டி 520 ன்னு ரெண்டு படம் வெளியாச்சு.ஒண்ணு கிராமியப்படம்.இன்னொன்ணு காமெடி படம்.எந்த படமும் ஒரே டைப்புலே வந்த படங்க கிடையாது.
1971 லே தேனும் பாலும் அருணோதயம்னு ரெண்டு படம் வந்துச்சு.தேனும் பாலும் சுமாரான படம்.அருணோதயம் படத்துலே சரோஜாதேவி செஞ்சது ஒரு சாதாரண வேஷம்தான்.ஆனாலும் இன்ட்ரஸ்டிங்கான படம்.
ரொம்ப கேப் விட்டு 1993 லே பாரம்பர்யம் படத்துலே சிவாஜி சரோஜாதேவி சேந்து நடிச்சாங்க.படம் ரொம்ப சுமார்.சிவாஜி சரோஜாதேவி நடிப்பு மட்டும் நல்லா இருக்கும்.
அதுக்கு பின்னாலே 4 வருஷம்கழிச்சு 1997 லே ஒன்ஸ்மோர் வந்துச்சு.இருவர்உள்ளம் பட காட்சிகளை பிளாஸ்பேக்கா வெச்சு ஒன்ஸ்மோரை பண்ணியிருந்தாங்க.இந்த டைப்புலே படத்தை தயாரிச்சதும் ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு.இந்த ஜோடியோட கடைசி படம் இது. நல்லா வெற்றியும் அடைஞ்சது.
சிவாஜி சரோஜாதேவி பட வரிசையை பாத்தா ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாமே எல்லாமே மாறுபட்ட கதையமைப்புலே வெளியான படங்கள். சரோஜாதேவியோட சினிமா கேரியரை சொல்லறப்போ இதுல சொன்ன பல சிவாஜி படங்களை சொல்லாமே இருக்க முடியாது. நடிப்பு பாத்திரம் அது போக பெர்பார்மென்ஸ்
பண்ண வாய்ப்பு கிடைச்ச படங்கள்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக