சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி டைரக்சன் செஞ்ச ஒரே படம்

சார் நீங்க எவ்வளவு பெரிய நடிகர் ,நடிப்பை பத்தி எவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க ,அப்படி இருக்கும் போது நீங்க ஏன் ஒரு படத்தை டைரக்சன் பண்ணக் கூடாதுன்னு ஒரு சமயம் சிவாஜி கிட்டே கேட்டாங்க.
அதுக்கு சிவாஜி சொன்ன பதில்:
என்னாலே டைரக்சன் பண்ண  முடியாதுன்னு இல்லே.எனக்கு நடிக்கறதுக்கு நேரம் சரியா இருக்கு.நான் டைரக்சன் பண்ணுணா என்னை நம்பி பல படங்க எடுத்துட்டு இருக்கறவங்களுக்கு அதனாலே காலதாமதம் ஏற்பட்டு பட தாமதம் ஆகலாம்.நடிக்கறது என் தொழில்.டைரக்சன் பண்றது வேற ஒருத்தரோட தொழில்.அவங்க தொழில்லே நான் குறுக்கிட விரும்பலேன்னு  சொல்லியிருந்தார்.
ஆனா...
ஒரு சந்தர்ப்பம் சூழ்நிலை சிவாஜியை டைரக்சன் பண்ண வெச்சது.
அதுக்கு காரணம் என்ன ?சிவாஜி டைரக்சன் பண்ணுன படம் எதுங்கறத மேலே பாக்கலாம்.
அதுக்கு முன்னாலே சில விஷயங்களை சொல்லியாகணும்.
K.பாலாஜி எப்பவும் மத்த மொழியிலே ஹிட்டான படங்களை விலைக்கு வாங்கி படம் எடுக்கறதுதான் வழக்கம்.
1977 லே மலையாளத்திலே நல்ல பேர் வாங்குன ஒரு படத்தையும் இதே மாதிரி விலைக்கு வாங்கி சிவாஜியை வெச்சு படம் எடுக்க திட்டமிட்டார்.இதுக்கு முன்னாலே பாலாஜி படங்களை திருலோகசந்தர் CV .ராஜேந்திரன் டைரக்சன் பண்ணிஇருந்தாங்க. அதனாலே புதுசா தயாரிக்கற படத்தை ஒரு சேஞ்சா வேற டைரக்டரை வெச்சு படம் எடுக்கலாம்னு ஐடியா பண்ணினார்.அதுக்காக அவர் செஞ்ச செலக்சன்தான் டைரக்டர் K.விஜயன்.இவர் டைரக்சன் பண்ணுன முதல் படத்துலேயே சிவாஜி நடிச்சிருந்தார்.ஆனா அதுலே சிவாஜி கெஸ்ட் ரோல்தான் செஞ்சிருந்தார். அந்தபடம் காவல்தெய்வம். 1969 லே வெளியாச்சு.
இதுக்கு பின்னாலே ஏழு வருஷம் கழிச்சுதான் சிவாஜியோட அடுத்த படத்தை டைக்சன் பண்ண K.விஜயனுக்கு வாய்ப்பு வந்துச்சு.அந்த படம் ரோஜாவின் ராஜா .
இதுக்கு முன்னாலே K.விஜயன் டைரக்சன் பண்ணுன படங்கள் பெரிசா ஹிட் ஆனதில்லே.அவரும் பெரிய பிரபலம் ஆகலே.
ரோஜாவின் ராஜா நல்ல படமா அமைஞ்சிருந்தும் அந்த நேரத்துலே சிவாஜிக்கு இருந்த அரசியல் பிரச்சினைகளாலே எதிர் பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கலே.
இப்படி ஒரு சிச்சுவேசன் இருந்த நேரத்துலேதான் பாலாஜி தான் தயாரிக்க இருந்த படத்துக்கு K.விஜயனை டைரக்சன் செய்ய வெச்சார்.அந்த படம் தீபம்.
அதுக்கு முன்னாலே சிவாஜி படங்களுக்கு இருந்த ஒரு தேக்க நிலை தீபம் படத்தாலே எல்லாமே மாறிப்போச்சு.
தீபம் பெரிய ஹிட் ஆச்சு. K.விஜயனுக்கும் நல்ல பேர் கிடைச்சது.
இது 1977 ஆம் வருஷம் நடந்த விஷயம்.
இதே வருஷத்துலே சிவாஜி புரொடொக்சன்  1974 லே தயாரிச்ச தங்க பதக்கம் படத்துக்கு அடுத்து மூணு வருஷம் கழிச்சு ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணிணாங்க.
அந்த படம் அண்ணன் ஒருகோயில்.அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட்டோட சஸ்பென்ஸ் த்திரில்லர் படமா இது இருந்துச்சு. இந்த படத்தை டைரக்சன்செய்யற வாய்ப்பை K.விஜயனுக்கு சிவாஜி புரொடொக்சன் குடுத்துச்சு. படம் பெரிய ஹிட் ஆச்சு.
இதுக்கு அடுத்த வருஷம் 1978 லே மறுபடியும் K.பாலாஜி ஒரு படத்தை தயாரிக்க முடிவு பண்ணி டைரக்சன் செய்ய K.விஜயனை புக் பண்ணினார்.அது தியாகம் படம்.இது பெரிய வசூல் சாதனை செஞ்சு வெள்ளிவிழா படமா அமைஞ்சது.K.விஜயன் தொடர்ச்சியா சிவாஜியை வெச்சு டைரக்சன் பண்ணுன மூணு படங்களும் செம ஹிட் ஆகி K.விஜயன் பிரபலம் ஆயிட்டார்.ராசியான டைரக்டராகவும் பேர் வாங்கினார்.
1978 லே மதர் இந்தியா படத்தை  தமிழ்லே புண்ணிய பூமின்னு எடுத்தாங்க.சிவாஜி நடிச்ச படம்.இது அவ்வளவா ரீச் ஆகலே.
1979 லே சிவாஜி புரொடொக்சன் சிவாஜியோட 200 வது படமா திரிசூலம் படத்தை எடுத்தாங்க.டைரக்சன் செஞ்சவர் K.விஜயன். படம் பயங்கரமா ஹிட் ஆச்சு. அது வரைக்கும் இருந்த தமிழ் சினிமா வசூல் சாதனைகளை எல்லாம் திரிசூலம் முறியடிச்சது.
அத்தனை வருஷ தமிழ் சினிமா ரெக்கார்ட்டை மாத்துன படத்தை டைரக்சன் செஞ்சவர் K.விஜயன் அப்படிங்கற சிறப்பு அவருக்கு கிடைச்சது.

1979 ஆம் வருஷமே பாலாஜி சிவாஜியை வெச்சு எடுத்த நல்லதொருகுடும்பம் படத்தையும் K.விஜயன்தான் டைரக்சன் பண்ணுனார். குடும்பக்கதை படமான இதுவும் ஹிட் லிஸ்ட்லே  சேந்துச்சு.

இப்பத்தான் K.விஜயனுக்கு வரக் கூடாத எண்ணம் வந்துச்சு.அது கொஞ்சம் அகம்பாவம்னு கூட சொல்லலாம்.
நாம டைரக்சன் பண்றதாலேதான் படம் பெரிய ஹிட் ஆகுதுன்னு ஒரு எண்ணம்.
1980 லே மறுபடியும் சிவாஜிபுரொடொக்சன் ஒருபடம் தயாரிக்க முடிவு பண்ணி அந்த படத்தையும் டைரக்சன் செய்ய K.விஜயனை போட்டாங்க. இது திரிசூலம் படத்தை விட பெரிய பட்ஜெட்லே  தயாராக போற படம்.பல வெளிநாட்டுலே போய் படத்தை எடுத்தாங்க.
இந்த படத்துக்கு கதை எழுதுனவர் நடிகர்திலகத்தோட  மகன் ராம்குமார்.
இந்த படத்தை டைரக்சன் செய்ய K.விஜயனை புக் பண்ணியாச்சு.படத்தோட ஆரம்பக்கட்ட ஷுட்டிங் எல்லாம் கொஞ்சம் நடந்துச்சு.

இதே நேரத்துலேதான் தன்னோட தனிப்பட்ட டைரக்சன் திறமையை காட்டணும்னு புது நடிகரா இருந்த விஜயகாந்தை வெச்சு தூரத்து இடி முழக்கம்னு ஒரு படத்தையும் டைரக்சன் பண்ண போயிட்டார் K.விஜயன்.
அந்த படத்துக்கு முக்கியத்துவம் குடுத்து ரத்தபாசம் பட படப்பிடிப்புக்கு வர்றதிலே கால தாமதம் செஞ்சுட்டே இருந்தார்.ரத்தபாசம் படம் வேற பெரிய பட்ஜெட் படம் .நிறைய நடிகர்களோட கால்ஷீட்லே தயாராகற படம்.
இது பத்தி சிவாஜி புரொடொக்சன் கிட்டே எந்த தகவலையும் சொல்லலே K.விஜயன்.
ரத்தபாசம் படத்தோட படப்பிடிப்பு நடக்காமே தடை பட்டுட்டு இருந்துச்சு.
இது இல்லாமே தான் டைரக்சன் பண்ணுன சாமார்த்தியத்தாலே தான் பலபடங்கள் ஓடுச்சு அப்படிங்கற அர்த்தத்துலே பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருந்தார் k.விஜயன் .

சிவாஜி புரொடொக்சன்லே ஒருத்தர் வேலை செஞ்சார்னா அவங்களுக்கு சரியான தேதியிலே சம்பளம் ,மத்த விஷயங்கள் எதிலயும் குறை இருக்காது.ரொம்ப பெர்பெக்டா எல்லாம் நடக்கும்.அதனாலே சிவாஜி புரொடொசன்லே நடிக்க ,வொர்க் பண்ண எல்லாரும் விரும்புவாங்க.சிவாஜி புரொடொக்சன்லே நடிக்கறத கௌரவமா நினைப்பாங்க.இப்படி மெயின்டெய்ன் பண்ணிட்டு வந்தவர் சிவாஜி தம்பி சண்முகம்.

K.விஜயன் பண்ணுன மாதிரி இதுக்கு முன்னாலே யாரும் நடந்ததில்லே.சிவாஜிக்கு ஒருசின்ன இடைஞ்சல் வந்தாலும் அதை ஏத்துக்க மாட்டார் சண்முகம்.
சிவாஜியாலே முன்னேறுன விஜயன் தப்பா விஷயத்தை சொன்னத சண்முகத்தாலே ஏத்துக்க முடியலே.அதனாலே டைரக்சன் பண்ற பொறுப்பிலே இருந்து விஜயனை நீக்கிட்டாங்க.
சிவாஜி புரொடொக்சன் மேற்பார்வையிலே ரத்தபாசம் பட சூட்டிங் வேலைகள் நடந்துட்டு வந்துச்சு.யூனிட்லே சிவாஜியை யார் டைரக்சன் செய்ய முடியும்? படம் லேட் ஆகறதாலே சிவாஜியே தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை மேற்கொண்டு டைரக்சன் செஞ்சார்.
இந்த நேரத்துலே  பல அரசியல் பிரச்சினைகள்,சஞ்சய் காந்தி மரணம்,சின்ன அண்ணாமலை மரணம்னு வேற சில மனதை பாதிக்கற விஷயங்கள் நடந்த நேரம் அது.
நடிக்கறதுலேயே முழு கவனத்தையும் வெச்சிருக்கற சிவாஜி கூடுதலா டைரக்சன் செய்யற வேலையும் ,மேலே சொன்ன பிரச்சினைகளும் சேந்த நேரத்துலேதான் ரத்தபாசம் படத்தை முடிக்கற வேலையை செய்ய வேண்டியதா போச்சு.
எந்த பத்திரிக்கையிலயோ செய்தியிலயோ K.விஜயனை நீக்கிட்டதா சிவாஜி புரொடொக்சன் தரப்புலே இருந்து எந்த செய்தியும் வெளியிடலே.
ரத்தபாசம் படம் வந்து டைட்டில் ஓடுனப்போ டைரக்சன்னு வர வேண்டிய  டைட்டில் கார்டுலே K.விஜயன் பேரும் இல்லாமே, சிவாஜி பேரும் இல்லாமே ,சிவாஜியோட போட்டோவை காட்டுவாங்க.

K.விஜயன் டைரக்சன் பண்ணுன தூரத்து இடி முழக்கம் தோல்வி படமா அமைஞ்சது.
1980 லே இருந்து 1985 வரைக்கும் 20 படங்களுக்கு மேல டைரக்சன் பண்ணுனார் விஜயன்.இதுலே விதி படத்தை தவிர எல்லாமே பெரியதோல்வி ,சுமாரா போன படங்கள்.
தன்னோட தப்பை உணர்ந்து 1985 லே சிவாஜியோட சேந்தார் விஜயன்.அப்ப பண்ணுன படம்தான் பந்தம்.
பந்தம் படத்துலே ஒரு காட்சி வரும்.
கார்  டிரைவர் ஒரு தப்பு செஞ்சதாலே சிவாஜி அவரை வேலையை விட்டு நிறுத்திருவார்.அதே டிரைவர் பல நாள் கழிச்சு சிவாஜியை பாக்க,சிவாஜி மனசு மாறி டிரைவரை மன்னிச்சு வேலையிலே சேத்துக்குவார்.இந்த காட்சியை விஜயன் வெச்சதுக்கு காரணம்  ,முன்னாலே நடந்த சம்பவங்களை மனசுலே வெச்சுத்தான் ..

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற