சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

தெய்வமே தெய்வமே பாட்டு...

இப்ப வர்ற படங்கள்லே கதையை சொல்லி கதையிலே வர்ற ஒரு முக்கியமான காட்சியை சொல்லி பாட்டெழுதுங்கன்னு சொன்னா,அந்த பாட்டை கேட்டா கதைக்கும் சம்பந்தம் இருக்காது .அந்த காட்சிக்கும் சம்பந்தம் இருக்காது. ஏதோ ஒண்ணோ ரெண்டோ தப்பிச்சது.
பாட்டு கேக்கறீங்களா ,இந்த பாட்டை கேளுங்க ,இனி இந்த பாட்டையே கேக்க கூடாதுன்னுதான் எண்ணம்  வரும்.அப்படி இருக்கு பெரும்பாலான பாட்டுக.
என்ன பண்றது. பழைய பாட்டுகள கேட்டு வளந்தவங்களோட எண்ணம் இப்படித்தான் இருக்கும்.அப்படி ரசிச்சு வளந்த  மனசு.
இந்த தலைமுறையிலே பழைய பாட்டுகள கேட்டு பழக்கப்பாடாதவங்கதான் ,
பாட்டுன்ன்னா இப்படித்தான் இருக்கும்னு அவங்க கேக்கறாங்க.அவங்க என்ன பண்ணுவாங்க. 
இது தலைமுறை இடைவெளின்னு சொன்னாலும் நாகரீகத்தோட தலைவலின்னுதான் சொல்லணும்.

கண்ணதாசன்  பாட்டெல்லாம் என்னத்தை சொல்லறது.சில பாட்டுகள்லே படத்தோட கதையையேஅந்த பத்து வரிபாட்டுல சொல்லிருவார்.தெளிவா புரியும் படி இருக்கும். சில பாட்டுகள்லே கதையோடஅந்த காட்சியை தெளிவா சொல்லியிருப்பார் .வசனம் காட்சின்னு காட்ட வேண்டிய படத்தை அந்த பாட்டுலே முடிச்சிரலாம்.

தெய்வமகன் படத்துலே வர்ற தெய்வமே தெய்வமே பாட்டுலே கூட அப்படிதான் விஷயம் இருக்குது.பல காட்சிகள் சொல்ல வேண்டிய விஷயத்தை அந்த ஒரு பாட்டுலே சொல்லியிரருப்பார் கண்ணதசன்.
அப்படியென்ன பல காட்சிகள்லே சொல்ல வேண்டிய  விஷயம் ,அதையே கண்ணதாசன் எப்படி பாட்டுலே சொல்லியிருக்கார்னு பாக்கலாம்.

தெய்வமகன்...
ஒரு முக விகாரம் இருக்கற அப்பா தனக்கு பிறந்த தன்னைப் போலவே முக விகாரமா பிறந்த மகனை டாக்டர்கிட்ட கொன்னுட சொல்றார்.டாக்டர் அதை செய்யாமே அந்த குழந்தையை ஒரு ஆசிரமத்துலே விட்டுடுவார்.ஆசிரம பாபா சாகப்போற நிலையிலே அனாதைன்னு நினச்சுட்டு இருக்கறவனை கூப்பிட்டு நீ அனாதையில்லே,டாக்டரை போயி பாருன்னு சொல்லிட்டு செத்து போவார்.டாக்டரை பார்த்து தன்னுடைய அம்மா அப்பா யாருன்னு தெரிச்சுக்குவார்.டாக்டருக்கு தெரியாமே தன்னோட அம்மா அப்பாவை பாத்து விடுவார்.
இப்ப ரொம்ப சந்தோசம் அந்த மகனுக்கு. இந்த சிச்சுவேசனுக்கு கண்ணதாசன் எழுதுன பாட்டுதான் தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே.
தன்னோட சந்தோசத்தை வெளிப்படுத்தற மாதிரி இருக்கணும். அம்மா அப்பாவை  பார்த்ததை சொல்லணும்.தன்னோட உணர்வை சொல்லணும் .இப்படி பல விஷயத்தையும் கலந்து பாட்டா வடிச்சிருப்பார் கண்ணதாசன்.
டைரக்டர் திருலோகசந்தர்
இந்த பாட்டை எப்படி அற்புதமா எடுத்திருப்பார்.
பல காட்சிகள்லே சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு பாட்டுலே காட்டியிருப்பாங்க.
அம்மா அப்பாவை பாத்த சந்தோசத்தை முதல்லயும்,
அடுத்ததா அம்மா எப்படி இருந்தாங்க அப்படிங்கறதையும்,
அடுத்ததா தம்பியை பத்தியும்,அவங்க ரெண்டு பேரோட வேறு பாட்டையும்,
தன்னோட நிலை என்ன அப்படிங்கறத அடுத்தாவும் ,அப்பாவை பத்தி சொல்லி அதுக்கு மேலே என்னன்னு சொல்றதாவும் வரிசையா கதை போலே விவரிச்சு பாட்டா சொல்லியிருப்பாங்க.

பாட்டுலே முதலா தெய்வத்துக்கு நன்றி சொல்லற மாதிரி வரிகள் இருக்கும்.அம்மாவை காட்டுன தெய்வமா மேஜரை சொல்லற மாதிரியும் ,படைச்ச ஆண்டவனை சொல்ற மாதிரியும் எடுத்துக்கலாம்.
பயம்னா என்னான்னு தெரியாத ஒரு வேங்கை மாதிரி அமைஞ்ச கேரக்டர் சிவாஜி செஞ்ச கண்ணன் கேரக்டர்.
அந்த வேங்கையும் சத்தோசப்பட்டா ஆனந்தப்பட்டா அது எப்படி இருக்கும்னு நடிப்புலே துடிப்புலே அணு அணுவா வடிச்சிருப்பார் நடிகர்திலகம்.

 மேஜர் பைப் பிடிச்சுகிட்டே நடந்துகிட்டு இருப்பார்.கடகடன்னு அதிர அதிர சிரிச்சுக்கிட்டே வருவார் சிவாஜி.அந்த சிரிப்புக்கு என்ன காரணம்னு தெரியாமே மேஜர் பாக்க,சிரிப்பை நிறுத்தாத சிவாஜி சுத்தி சுத்தி போறதும் பொத்துன்னு விழறதுமா பரபரன்னு பறக்க ,
கண்ணா என்ன இதுன்னு மேஜர் கேட்க ,சிவாஜி ஓடி வந்து மேஜரோட கையை புடிச்சுட்டு தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமேன்னு பாடுவார்.படபடன்னு வந்த மியூசிக் டக்குன்னு மெல்லிசான  இசைக்கு மாறிறும்.
தேடினேன் தேடினேன் கண்டுகொண்டேன் அன்னையைன்னு அடுத்தவரிக்கு சிவாஜி கை ரெண்டையும் பின்னாலே கொண்டு போக ...
கேமிரா குளோசப்புலே போறப்போதான் தெரியும். சிவாஜியோட கண்ணு கலங்கி கண்ணுலே கண்ணீர் அப்படியே தேங்கி நிக்கறத பாக்கலாம்.
உணர்ச்சி மயமான நடிப்புன்னு
சொல்லலாம்.

கரகரன்னு சுத்தி சுத்தி ஒரு ரவுண்ட் அடிச்சு மாடிப்படிலே மேலேயும்  கீழேயும் ஏர்றதும் இறங்கறதுமா கலங்கடிப்பார் சிவாஜி.இதுதான் சிவாஜியோட ஸ்பெசல்.ரொம்ப பீல் பண்ணி பாக்க வெச்சிருவார்.நம்மளோட உணர்ச்சிகளை அவரோட மூவ்மெண்ட்டுக்கு மாத்த வெச்சிருவார் சிவாஜி. நாம நாமாக இல்லாமே சிவாஜி பாடிக்குளே நுழைய வெக்கற  மேஜிக்கை செஞ்சிருவார் சிவாஜி.அதுக்கு இந்த காட்சியும் ஒரு உதாரணம்.
மாடிப்படிலே ஏற இறங்கறப்போ தடதடன்னு  மியூசிக் வேகமா போகும்.
அந்த மியூசிக்கோட ஸ்பீடுக்கு பொருந்தற  மாதிரி சிவாஜி தன்னோட வேகத்தை காட்டியிருப்பார்.

தெய்வமே தெய்வமேன்னு மறுபடியும் அந்த சரணத்தை பாடுவார் சிவாஜி.ஓடி வந்து மேஜரை புடிச்சு ,அம்மாவை சந்திச்ச விஷயத்தை சொல்வார்.
அதுலே மேஜர் தெரிஞ்சுக்கற மாதிரி முக பாவம் போகும்..

மஞ்சள் குங்குமம் பொங்கும்
அழகு  மஹாலக்ஷ்மி என் தாய்
சந்தித்தேன் நேரிலே
சந்தித்தேன் நேரிலே
இதை விவரிப்பார் பாருங்க..
அந்த ஆச்சர்யம் சந்தோசம் ..
அதீதமான உணர்ச்சி..
எல்லாத்தையும் அதுலே காட்டுவார்.கண்ணுலே ஒரு உணர்ச்சி,தோள் உடம்புலே ஒரு வெளிப்பாடு,கை கொண்டு போற ஸ்டைல்னு அதிசயமா பாக்க வெச்சிருப்பார்.
ஆஸ்கார் அவார்டு வாங்குன நடிகர்கள் எல்லாம் இதுலே கால்வாசியாச்சும் செஞ்சிருப்பாங்களா ?

பாசத்தின் தேரிலே
தெய்வமே... தெய்வமே....
இந்த படத்துலயே ஒரு காட்சியிலே ,  கடற்கரைக்கு போயி 'ஓ' ன்னு கத்தணும்னு சிவாஜி ஒரு வசனம் பேசுவார்.அது மாதிரி நம்மை கத்த வெச்சுடும் சிவாஜி நடிப்பு. இப்பல்லாம் பல நடிகர்களை பல பத்திரிக்கைகள் மீடியாக்கள் எல்லாம் நடிப்பு அரக்கன் நடிப்பு ராட்சசன்னு எழுதறாங்க.சொல்றாங்க...
சிவாஜியோட இந்த  நடிப்பை எல்லாம் என்னன்னு சொல்லறது. ஆனா சிவாஜி நடிப்புலே  ஆரம்பிச்சது தான் அந்த விஷயங்கள் அப்படிங்கற உண்மையை தெரிஞ்சிருக்காங்களான்னு தெரியலே !

வசனம்:
அந்த அழகு தெய்வத்தின்
மகனா இவன்...ஆ.........
ஒரு வித அறுவெறுப்பை முகத்துலே ,
அழகு தெய்வத்தின் மகனா வரிக்கு  ஆரம்பத்துலே காட்டி ,அப்படியே அந்த முகத்தை அழுகைக்கு மாத்துவார் பாருங்க ...
சடசன்னு முக பாவனைகளை கொட்டுவார்.
ஒரு நடிகன் நடிக்க ஆரம்பிச்சா அந்த நடிப்பு எட்டி எட்டி போய்ட்டே இருக்கும். நடிக்க நடிக்க அது இன்னும் கத்துக்கணும்னு சொல்லற மாதிரி இருக்கும். ஆனா சிவாஜி நடிப்புலே இதுக்கு மேலே என்னன்னுதான் சொல்ல வைக்கும்.

அந்த சரணம் முடிஞ்சு பேக்ரண்ட் மியூசிக் போகும்.அதுலே சிவாஜியோட அழுகையை மட்டும் சீன் பண்ணி இருப்பாங்க. மூஞ்சியை மறச்செல்லாம் அழுக மாட்டார். நடிப்புனா அப்படி ஒரு நடிப்பு.உயிர் துடிப்பான நடிப்பு.
ரொம்ப மெஸ்மரைஸ் பண்ற நடிப்பு.ரொம்ப எமோசனலான ஷாட் இது.தன்னோட அறுவெறுப்பான முகத் தோற்றத்தை நெனச்சு  வேதனையிலே துடிக்கற மாதிரி  அந்த அழுகையிலே காட்டியிருப்பார்.ரெண்டு பக்க வசனம்  பேசி சொல்லறத அந்த அழுகையிலே காட்டிருவார்.

பல்லவி ஆரம்பிச்சதும் டக்குன்னு துள்ளி வருவார்.
அழறத மாத்தி தம்பியை வர்ணிக்கற வரிகள் .

முத்து போல என்  தம்பி வந்தவுடன்
முத்தம் சிந்த ஓடினேன்..ஓடினேன்...
ஓடினேன்...
இந்த மூணு ஓடினேன் வார்த்தைக்கும் மூணு ஓட்டம்.
அந்த மூணு ஓட்டத்தையும் மூணு விதமா செஞ்சிருப்பார்.

அட ராஜா என் தம்பி வாடா
அண்ணா...அண்ணா ...
அண்ணா அண்ணான்னு ரெண்டு தடவை சொன்ன பின்னாலே ..
அந்த பிரேம் ஒரு அமைதிக்கு போயிடும்.மியூசிக் சைலன்ஸ்.
பாட்டு சைலன்ஸ்.சிவாஜி உக்காந்த நிலையிலே அந்த போஸை மட்டும் டாப் ஆங்கிள்லே காட்டுவாங்க.நிசப்தமா இருக்கும்.

அண்ணா என சொல்வானென
பக்கம் பக்கம் சென்றேன்
ரெண்டு தடவை ரிபீட் ஆகும் இந்த வரிகள் ..
இப்படி அப்படி அசைஞ்சா..
 ஒரு செகண்ட் கண்ணை முடினா ..
அவ்வளவுதான்..
மனசுலே ஆழப் பதிய வைக்கிற அந்த நடிப்பை பாக்க முடியாமே போயிடும்.

வசனம்:
குழந்தை என் கையை கடித்து விட்டது..
போடா போ...
அலட்சியமா காட்ட வேண்டிய நடிப்பு இந்த இடத்துலே..அதை அழகா செஞ்சிருப்பார் .நடிப்பை லட்சியமா நினைச்சு நடிச்ச சிவாஜி.

அன்னையை பார்த்தபின்
என்ன வேண்டும் நெஞ்சமே
மாடிப்படிலே சுத்தி சுத்தி ஏறி பாடற ஷாட்.
இதே வரி ரெண்டு தடவை.
முதல் தடவை ஒரு நடிப்பு.
ரெண்டாவது தடவை அது ஒரு நடிப்பு.வரி ஒண்ணா இருந்தாலும் ரெண்டு நடிப்பு.
இன்று நான் பிள்ளை போலே
மாற வேண்டும் கொஞ்சமே..
இந்த வரிக்கெல்லாம்...
மனசு துடிச்சிட்டு இருக்கான்னு  நினைப்பு  கூட இருக்காது.அந்தளவுக்கு கலந்து போயிடும் ..அந்த நடிப்புலே...

வசனம்:
வேரில்லாமல் மரமா
மரமில்லாமல் கிளையா
கிளையில்லாமல் கனியா
எல்லாம் ஒன்று
இந்த வசனம் முடிஞ்சு இந்த இடத்துலே ஒரு ஆக்சன் சீன் மாதிரி வரும்.சான்ட்லியர் விளக்கை புடிச்சு தொங்கிட்டு ஊஞ்சலாடற மாதிரி ஷாட் இருக்கும்.பரபரப்பா போகும்.
குளோசப் ஷாட்டுலே சிவாஜியே ஒரிஜினலா பண்ணியிருப்பார்.

நின்று பார்த்த இடம்
இன்று பார்த்த முகம்
என்றும் வேண்டும் தெய்வமே
கண்ணீரினில் உண்டாவதே
பாசம் எனும் தோட்டம்
இந்த இடத்துலே கண்ணோட போக்கை பாக்கணுமே.மேலே தூக்கி உத்து வெறிக்கற மாதிரி.கொலை வெறியா செஞ்சிருப்பார்.

கடைசியிலேதான் அப்பாவை பத்தி சொல்லறதா வரி வரும்
தந்தையை பார்த்தபின்
என்ன வேண்டும் நெஞ்சமே
இந்த இடத்துலே வர்ற அந்த நடிப்பை என்னன்னு சொல்லறது.சிவாஜிங்கற மனுசன் சினிமாலே இல்லாமே போயிருந்தா நாம யார் கிட்ட பாத்திருக்க முடியும்.ஒரு செகண்டாவது சாதாரணமா பாக்க வெக்குதா? 

தர்மமே தந்தை தாயை
காக்க வேண்டும் தெய்வமே
இப்போ செஞ்சிருப்பாரே  நடிப்பை.வெச்சு வெறித்தனத்தை ஏத்திருவார்.
நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து போயிடும். காக்க வேண்டும் தெய்வமேன்னு பாடறப்போ ரெண்டு கையையும் தூக்கி , கால் பாதங்களை தூக்கி அந்த நடிப்பை சிவாஜி காட்டுறப்போ 
ரசிச்சு பாக்கறவனை மிதக்க வெச்சுருவார்.

அதோட விட்டாரா மனுசன் ..பாட்டோட கடைசி வார்த்தை வரைக்கும் நடிப்பை விட மாட்டார்.தூள் தூளா பறக்க விடுவார்.

சிவாஜியோட நடிப்புக்கு உறு துணையா இருந்தவங்க..
எழுதுன கண்ணதாசன்
பாடுன TMS
இசையமைச்ச MS.விஸ்வநாதன்
டைரக்ஷன் திருலோகசந்தர்...

மகாபாரதத்துலே அர்ஜுனன் கிருஷ்ணன்கிட்டே ,
கர்ணனையே கொடை வள்ளல்னு எல்லாரும் சொல்றாங்க.என்னாலயும் தர்மம் பண்ண முடியுனும் சவால் விட்டானாம்.
கிருஷ்ணர் ரெண்டு தங்க மலைகளை உருவாக்கி ,நீ இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ளே இதை தானம் செஞ்சு காட்டுன்னு சொன்னார் அர்ஜூனன் கிட்டே.
அர்ஜுனனும் தன்னோட பலத்தாலே பெரிசு பெரிசா வெட்டி வர்றவங்களுக்கெல்லாம்  கொடுத்தான்.கை நிறைய நிறைய கொடுத்தும் குறைஞ்ச பாடில்லே.சாயந்தரம் ஆயிருச்சு.மலை அளவு குறைஞ்ச பாடில்லே.சரி கர்ணன் இந்தளவுக்கு பண்ணிட முடியுமான்னு அர்ஜூனனுக்கு நெனப்பு.இப்போ கர்ணனை கூப்பிட்டு தானம் பண்ண சொல்வார் கிருஷ்ணர்.
கர்ணன் அந்த வழியா போன ரெண்டு பேரைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு மலையை தானமா கொடுத்துருவார்.
இதை பாத்த அர்ஜூனன் மலைச்சு போயிடுவான்.
கிருஷ்ணர் சொல்வார்.செய்யற  தானம் செய்கையிலே இல்லே.மனசுல இருக்கு..இதை புரிஞ்சுக்கோன்னு சொன்னார்.
கர்ணன் போலத்தான் சிவாஜியும் நடிப்பை கொடுப்பார் .மலையளவுலே.

செந்தில்வேல் சிவராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற