சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

என் தம்பி -என்ன ஸ்பெசல்?

k.பாலாஜி சிவாஜியை வெச்சு எடுத்த முதல் படம் தங்கை. இதுக்கு அடுத்ததா சிவாஜியை வெச்சு எடுத்த படம் என்தம்பி .
1968 லே வந்துச்சு.
கதைக்காக எதை செலக்சன் பண்றதுன்னு பாலாஜி முடிவு செஞ்சப்போ அவருக்கு கை கொடுத்தது ஒரு தெலுங்கு படம்.நாகேஸ்வரராவ் ஜெயலலிதா நடிச்சு தெலுங்குலே ஹிட்டான ஆஸ்திபரலு தான்.
இந்த படத்தை எடுக்கச் சொல்லி ஜடியா கொடுத்தவர் ஜாவர் சீதாராமன்.

இந்த படம் ஒரு குடும்பக்கதையா இருந்தாலும் சில ஆக்ஷன் காட்சிகளும் படத்துலே இருந்துச்சு.
ஆரம்பத்துலே அரச கதையிலே சிவாஜி நடிச்ச்சிட்டு இருந்தப்போ வாள்சண்டை போட்டு நடிச்சிருந்தார்.கொஞ்சம் கேப் ஆயிடுச்சு.இந்த படத்துக்காக மறுபடியும் வாள் சண்டையிலே சிவாஜி நடிச்சார்.பல வருஷம் தூங்கிட்டு இருந்த வாளை சிவாஜி மறுபடியும் இந்த படத்துக்காக எடுத்தப்போ அது வேற ஒரு அட்ராக்சன்லே அட்ரா சக்கைன்னு சொல்ல வெச்சது.
பேன்ட் சட்டை போட்ட கையிலே ஒரு வாள்.சிவாஜி கொடுத்த போஸை பாத்தப்போ ரசிகர்களை குதியாட்டம் போட வெச்சது. நின்ன போசுக்கே இப்படின்னா ரீலா ஓடுனத பாத்தப்போ வேற லெவலா இருந்துச்சு.

வாள் சண்டை மட்டும்தானா அசர வெச்சது? அதை விட சாட்டையை வெச்சே கலக்கியெடுத்தார் சிவாஜி. 
அதுவும் ஒரு பாட்டுலே ஸ்டைல்லே பின்னோ பின்னுன்னு பின்னியிருப்பார்.
தட்டட்டும் கை தழுவட்டும் பாட்டுலே சரோஜாதேவியோட ஒத்துழைப்போட பாட்டு வேற லெவல்லே இருந்துச்சு. கொஞ்சம் ஏமாந்தா சாட்டை சுத்தற சுத்துலே உடம்புலே தோல் உறிஞ்சி போயிரும்.இதுக்கும் சரோஜாதேவி நின்னுகிட்டு இருக்கறப்போ இந்த சாட்டையடி காட்சி இருக்காது .சரோஜாதேவி சுத்தி சுத்தி ஆடணும்.சிவாஜி கரெக்டான பொசிசன் பாத்து சாட்டைய வீசணும்.வீசற சாட்டையிலே சரோஜாதேவி தலையிலே இருக்கற பூக்களை ஒவ்வொண்ணா எடுக்கணும்.
அப்படி ஒரு நேக்கா ,லாவகமா சிவாஜி சாட்டைய சுத்த,சரோஜாதேவி பெர்பெக்டா சுத்தி ஆட 
என்ன ஒரு நேச்சுரலா படம் பண்ணி இருப்பாங்க.
இன்னைக்கும் இந்த பாட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க.

என் தம்பி படத்துலே மேலே சொன்னது மட்டும் தான் ஸ்பெசலா ?இன்னும் இருக்கு.
நான் பொறந்தது தஞ்சாவூரு சூரக்கோட்டையிலே பாட்டை ஒரு சிவாஜி ஸ்பெசல் பாட்டுன்னு சொல்லலாம்.
இது கூத்துப்பாட்டு ப்ளஸ் குத்துப்பாட்டு .பாட்டுக்கு முன்னாலே ஒரு வர்ணனை வரும்.முத்தார நடிப்பு கொண்ட வித்தார நடிப்பு கண்ட தென்னாடு புகழும் நடிக மன்னர்ர்ர்னு.. மேடையிலே ஒரு நாடக நடிகர் பேச நாடக நடிகரா சிவாஜி வருவாரு.பாட்டோட வரிகளை பாருங்க. 

தெக்கத்தி கள்ளனடா
தென்மதுரை பாண்டியன்டா
தென்னாட்டு சிங்கமடா
சிவாஜிகணேசனடா ..
சிவாஜி பாடற சாதாரண பாட்டுக்கே ரசிகர்கள் படு குதியாட்டாம் போடுவாங்க.
இது சிவாஜியப் பத்திய பாட்டா வேற இருக்கறதாலே ரசிகர்களோட ரகளயை எல்லாம் சொல்லவே வேணாம் .காது செவுள் கிழிஞ்சுடும். தரை டிக்கட்டேலே அடிக்கற விசில் சத்ததத்துலே தியேட்டர் பால்கனி வரைக்கும் சத்தம் கிழிக்கும்.
அடுத்தவரி கூட அலப்பறை பண்ண வைக்கும்.ஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் ஆபரேட்டரை  தொந்தரவு பண்ற பாட்டு இது..

நான் பொறந்தது தஞ்சாவூரு சூரக்கோட்டையிலே
வளர்ப்பு மேலக் கோட்டையிலே
இருப்பு கீழக் கோட்டையிலே...
ரசிகர்கள் எல்லாம் எந்திரிச்சு ஆட ஆரம்பிச்சுடுவாங்க.
ரொம்ப பரபரப்பா தியேட்டர் இருக்கும்.ரொம்ப விறுவிறுப்பா  பாட்டு போகும்.
ரொம்ப சுறுசுறுப்பா ரசிகர்கள ஆட வெக்கும்.

என் தம்பி படத்தை சாதாரண பட்ஜெட்லே எடுத்துருப்பார் பாலாஜி.சிவாஜி அந்த நேரத்துலே இருந்த ஸ்லிம் பாடி முக வெட்டுக்கு படத்தை கலர்லே பெரிய பட்ஜெட்லே எடுத்திருக்கலாம். படத்தை பாத்த பின்னாலேதான் தெரிஞ்சது.அப்படி செஞ்சிருந்தா படம் பெரிய லெவல்லே போட்டு தாக்கியிருக்கும்.சின்ன பட்ஜெட் ,நல்ல திருப்தியான லாபம்னு  அன்னைக்கு அவங்களோட மன நிறைவு இருந்துருச்சு.

கே ஆர் விஜயா  நடிக்கறதுக்கு முதல்லே ok.சொல்லி அப்புறம் முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
சரோஜாதேவி அந்த பட கதாநாயகியா தயாரிப்பு குழு லிஸ்ட்டுலேயே இல்லே.
அதுக்கு கூட கே ஆர் விஜயா  குடுத்த யோசனைப்படிதான் சரோஜாதேவி அந்த படத்துக்கு கமிட் ஆனாங்க.ஜாவர் சீதாராமன் யோசனையும் இருந்ததா சொல்வாங்க.

சரோஜாதேவியை இந்த படத்துக்காக கே ஆர் விஜயா கூட்டிட்டு வந்த ஒரு விஷயமும் ஒரு சஸ்பென்ஸ் கதை மாதிரி இருக்கும். வேற ஒருபடத்துலே நடிச்சிட்டு இருந்த சரோஜாதேவியை பாத்து பேசுன கே ஆர் விஜயா ,என் தம்பி படத்துலே நீ நடிக்கணும்னு சொல்லி கூட்டி வந்தாங்க. சாதாரணமா அவங்க கூட்டிட்டு வரலை. சரோஜாதேவியை அந்த ஸ்டுடியோவுலே இருந்த ஒரு பிரமிட் மாதிரியான பொம்மைக்குள்ளே வெச்சு ,ஒரு பார்சல் மாதிரி செட்டப் செஞ்சு ஒரு வண்டிலே வெச்சு பாலாஜி ஆபீசுக்கு கூட்டிட்டு வந்தாங்க. பாலாஜி ஆபீசுக்கு வந்ததும் டம்மி துப்பாக்கியாலே அந்த பிரமிட் பொம்மையை சுட ,அந்த பிரமிட் பொம்மைக்குள்ளே இருந்து சரோஜா தேவி வந்தாங்க. கே ஆர் விஜயாவா இப்படி செஞ்சதுன்னு பலருக்கும் ஆச்சர்யம் வரலாம்.இது 100 சதவீதம் உண்மையான விஷயமான்னு தெரியாது. ஆனா அதே சமயம் இப்படி ஒரு விஷயம் நடக்காமயும் இப்படி கற்பனை பண்ணி பேசி யாரும் சொல்லியிருக்கவும் முடியாது.


முத்துநகையே உன்னை நானறிவேன்
தட்டட்டும் கை தழுவட்டும்
அடியே நேற்று பிறந்தவள் நீயே
அய்யய்யே மெல்ல தட்டு
முந்தி முந்தி விநாயகனேன்னு அஞ்சு பாட்டையும் அஞ்சு ரகமா ,அருமையான ராகமா போட்டிருப்பார் MS .விஸ்வநாதன்.

ஒரு குடும்பக்கதையை அதோட தரத்தில இருந்து கொஞ்சமும் குறைக்காமே ,அதோட சாட்டையடி பாட்டு ,வாள் வீச்சு சண்டை ,கொஞ்சம் ஆள் மாறாட்டம்னு பரபரன்னு போற படம் என் தம்பி...

செந்தில்வேல் சிவராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற