வசந்த மாளிகை படத்தை ஒரு ATM ன்னு சொல்லலாம்.எப்போ வந்தாலும் படம் பணமா கொட்டும்.1972 லே படம் வந்தப்பவே இந்த படம் வசூலை சுனாமியா அள்ளி கொட்டுச்சு .
1972 ஆம் வருஷம் படம் வெளியானப்போ 200 நாள் ஓடுச்சு.இதே வருஷத்துலேயே சிவாஜி இன்னொரு வெள்ளிவிழா படத்தையும் கொடுத்திருக்கார்.அது பட்டிக்காடா பட்டணமா.இந்த படத்துக்கும் வசந்தமாளிகை படத்துக்கும் 4 மாசம்தான் இடைவெளி. அதில்லாமே நாலு 100 நாள் படத்தையும் கொடுத்திருக்கார்.வருஷம் முழக்க தமிழ்நாட்டுலே எல்லா ஊருலயுமே சிவாஜி படங்களா ஓடிட்டு இருந்துச்சு .ஒரு படம் 100 நாள் ஓடி முடியறதுக்குள்ளேயே அடுத்த படம் 100 நாள் ஓடறதுக்கு தயாரா இருக்கும்.எந்த படத்தை தூக்கறது எதைய ரிலீஸ் பண்றதுன்னு ஒரு குழப்பமே இருந்த வருஷம் தான் 1972.
இலங்கையிலே ரெண்டு தியேட்டர்லே 200 நாள் ஓடுச்சு வசந்த மாளிகை.அதில்லாமே 13 தியேட்டர்லே 50 நாளை தாண்டி ஓடுச்சு.
பத்து வருஷம் கழிச்சுஇதே இலங்கையிலே மறு வெளியீடு செஞ்சப்போ 70 நாளுக்கு மேலே ஓடுச்சு.
வசந்த மாளிகை படத்துக்கு பின்னாலே இப்ப வரைக்கும் ஏகப்பட்ட காதல் சப்ஜெக்ட் படங்கள் வந்திருக்கு. அதுலே பல படங்கள் பெரிய ஹிட்டும் ஆயிருக்கு.ஆனா செகண்ட் ரிலீசுலே அந்த படங்கள கொண்டாடுனாங்கன்னு சொல்ல எதுவுமே இல்லே.இதனாலே தான் வசந்த மாளிகை படத்த ATM ன்னு சொல்றாங்க. All time money...
டிஜிட்டல் மெத்தட்லே மட்டும் நாலு தடவை ரிலீசாகி இருக்கு.2013 லே முதல் தடவையா டிஜிட்டல்லே வெளியாச்சு.அடுத்து 2019 ,2023ன்னு இப்போ 2025 லே
4 kதொழில் நுட்பத்துலே வெளியாகி இருக்கு.12 வருஷத்துலே நாலு தடவை டிஜிட்டல்லே வெளியான படம் இது ஒண்ணாத்தான் இருக்கும்.ஒவ்வொரு தடவையும் வேற வேற தயாரிப்பாளர்கள் ரிலீஸ் பண்ணி இருக்காங்க. அப்போ எந்த அளவுக்கு இந்த படத்துக்கு
மவுசு இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.
வசந்தமாளிகை படம் போட்டு ஹவுஸ்புல் ஆகாத தியேட்டரே இருக்க முடியாது.
முதல் தடவை டிஜிட்டல்லே வெளியானப்போ இந்தபட பிரிண்ட் நல்லாவே இல்லே.அந்த பிரிண்டை வெச்சே 50 நாள் ஓடிருச்சு. அடுத்த தடவை பிரமாதமான பிரிண்ட்.100 நாள் ஓடி நல்ல வசூல் செஞ்சது.
இந்த படத்துக்கான டிரெயிலர் வெளியீட்டு விழாவே மூணு தடவை நடந்திருக்கு.ஒரே படத்துக்கு அதுவும் 50 வருஷம் முன்னாடி வந்த படத்துக்கு மூணு தடவை டிரெயிலர் வெளியீட்டு விழா நடந்திருக்குன்னா அது தான் வசந்த மாளிகை கெத்து.
தமிழ் சினிமாக்கள்லே வசந்தமாளிகை பட போஸ்டரை காமிச்ச அளவுக்கு வேற படத்தை சொல்ல முடியாது.
படம் வெளியான காலகட்டத்துலே வாணீஸ்ரீயோட சிகை அலங்கார கொண்டை ,சேலை டிசைன் எல்லாம் பெண்கள் கிட்டே பெரிய வரவேற்பு உண்டாக்கி இருந்துச்சு.
இந்த படத்துல வர்ற அந்த கண்ணாடி அலங்கார செட் போட்டது கூட பெரிய விஷயமில்லே. அதுலே ஷூட் பண்ணுனதான் பெரிய விஷயம்.கண்ணாடிங்கறதாலே காமிரா தெரியாமே ஷூட் பண்ணனும்.அது தெரியாமே பண்ணுனது பெரிய சேலஞ்சான விஷயம்..
சிவாஜிக்கு பெரிசு பெரிசான வசனங்கள் இல்லாத படம் இதுவாத்தான் இருக்கும் .அதிகமா ஒரு வரி ரெண்டு வரி வசனங்கள் தான்.ஆனா அந்த வசனங்கள் பெரிய பிரபலம்.
உதாரணமா பேமசான சில வசனங்கள் :
வானத்தில இருந்து பூமிக்கு எப்ப வந்தே ?
ஒண்ணு என்னோட அதிகாரம்
இன்னொன்னு உன்னோட அகம்பாவம்
அவகிட்ட எனக்கு புடிச்சதே அந்த அகம்பாவம் தான்
நீ விஸ்கியைத்தானே குடிக்க வேணாம்னு சொன்னே ?விஷத்தை குடிக்க வேணாம்னு சொல்லலையே..
இதைத்தான் அவங்க பாசம்னு சொல்றாங்க. நீ மோசம்னு சொல்றே’.
இப்படி எல்லா காட்சிலயும் இது மாதிரி வசனங்கள் இருக்கு..
வசனகர்த்தா பாலமுருகன் இந்த படத்துக்கு வசனம் எழுத முடியாதுன்னு ஆரம்பத்துலே சொல்லிட்டாராம்.தயாரிப்பாளர் ராமாநாயுடு இது பத்தி பாலமுருகன்கிட்டே கேட்டப்போ..
இதென்ன ஒரு வரிக் கதையா இருக்கு ..எதை எப்படி எழுதறதுன்னு பதில் சொல்லியிருக்கார்.அதுக்கு ராமா நாயுடு ,இது இரண்டு இதயங்கள்.அதை கோணத்துலே வெச்சு எழுதுங்கன்னு சொன்னாராம்.
ரொம்ப ஹை டெசிபல்லே TMS பாடுன பாட்டு இந்த படத்துக்குகாகத்தான் இருக்கும்.
கண்ணதாசன் தனிப்பட்ட முறையிலேஎழுதி வெச்சிருந்த கவிதை தொகுப்புகளை யார் கேட்டும் கொடுக்கலையாம்.இந்த படத்துலே வந்த பாட்டுகள் அவர் எழுதி மத்தவங்க கேட்டும் கொடுக்காத அந்த கவிதைகள்தான் ..
சிவாஜி ரொம்ப காஸ்ட்லியா டிரஸ் போட்டு நடிச்சிருந்தாலும் எந்த ஒரு பாட்டுலேயும் ஒரு டிரஸ்சுக்கு மேலே போட்டு நடிச்சிருக்க மாட்டார்.
அந்த காலத்ததுலே இலங்கை ரேடியோவுலே இந்த படத்தோட பாட்டுகளை ஒலிபரப்பாத நாளே கிடையாது.
அதில்லாமே "ஒலிச்சித்திரம்" பகுதியிலே இந்த படத்தோட கதை வசனத்தை ஒரு மணிநேரம் ஒலிபரப்பு செய்வாங்க.. அது பத்தி முன்னாலேயே அறிவிப்பு செய்வாங்க.அந்த நேரம் வந்ததும் ஒவ்வொரு குடும்பமும் ரேடியோ பக்கத்துலே உக்காந்து இந்த படத்தோட கதை வசனத்தை கேப்பாங்க.ஏகப்பட்ட தடவை ஒலி பரப்பு செஞ்சிருக்காங்க இலங்கை ரேடியோலே.
"ஒலிச்சித்திரம்"விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் அளிக்கும் "வசந்தமாளிகை"ன்னு இலங்கை ரேடியோ அபிமான நட்சத்திர அறிவிப்பாளர் அமரர் ராஜேஷ்வரி ஷண்முகத்தோட அருமையான குரல்லே ஒலிக்கும்.
கே.எஸ் ராஜா பிரிப்பேர் பண்ணி பேசற
"திரைவிருந்து" நிகழ்ச்சியிலயும் வசந்தமாளிகை பட சிறப்புக்களை பத்தி பேசுவார்.
ரொம்ப ரசிச்சு கேட்ட நிகழ்ச்சிகள் இதெல்லாம்.
இந்த படம் தயாராயிட்டு இருக்கறப்பவே இந்த படம் பெரியலெவல்லே மாறப் போகுதுன்னு தெரிஞ்சது.அடியம்மா ராசாத்தி சங்கதி என்னங்கற பாட்டை இந்த படத்துக்காக ரெக்கார்ட் பண்ணுத கூட படத்திலே இருந்து தூக்கிட்டாங்க.பாட்டுக எல்லாம் கண்ணதாசனோட கவிதைகள்லே இருந்து பாட்டா மாறுனப்போ அது வேற லெவல்லே அமைஞ்சிருச்சு.இந்த ஒரே டிராக்லே போற பாட்டுகள்லே இருந்து சம்பந்தம் இல்லாத வகையிலே அடியம்மா ராசாத்தி பாட்டு அதுவும் குத்துபாட்டு ரகத்துலே இருந்ததாலே படத்துக்கு செட் ஆகாதுன்னு நினைச்சு தூக்கிட்டாங்க.
தமிழ் இந்தி தெலுங்குன்னு மூணு மொழியிலேயும் வெளியான படம் இது.மூணுலயும் ஹிட்டாச்சு.
ஆனா தமிழ் வசந்தமாளிகை அட்ராக்சனே வேற லெவல்.
இன்னைக்கு வரைக்கும் காசு சம்பாதிச்சு கொடுத்துட்டே இருக்கற படம் வசந்தமாளிகை.
அதனாலே வசந்தமாளிகை படத்தை ATM ன்னு சொல்லலாம்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக