சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

1980 -.R.K.நகர் தேர்தல் வெற்றி


சென்னையின் ஆர் கே நகர் தொகுதி திராவிட கட்சிகளின் கோட்டை ஆகும். திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்த ஆர் கே நகரை தனது ரசிகர் மன்ற தலைவரை நிறுத்தி வெற்றி பெறச் செய்து வரலாற்று வெற்றியை பதியச் செய்தவர் சிவாஜி.எப்படி வந்தது இந்த வெற்றி? 
இந்தப் பதிவில் இது பற்றிய செய்திகளை நாம் விரிவாக பார்க்கலாம் 

1980  தமிழக தேர்தலில் திமுக- காங்கிரஸ்  கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை விரும்பவில்லை.
காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதையே பலர் விரும்பினார்கள்.
அப்படி தனித்து போட்டியிட்டால் இனி வரும் அடுத்த தேர்களிலாவது கட்சியை பலப்படுத்த முடியும் என்ற எண்ணமே காங்கிரஸ் தொண்டர்களிடம் இருந்தது.
அந்த எண்ணம்தான் சிவாஜியிடமும் சிவாஜி ஆதரவு தலைவர்களின் மனதிலும் இருந்தது.

காமராஜர்  மறைவுக்கு பின்பு,
அந்த ஒரு நேரமே காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.அதை காங்கிரஸ் தலைமை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் காங்கிரஸ் தனித்த பலத்துடன் வளர்ச்சிஅடைய வாய்ப்பு கிடைத்திருக்கும். கழக கட்சிகளின் தோளில் உட்கார்ந்து சவாரி செய்த கேவல நிலைமை உண்டாகி இருக்காது.காங்கிரஸ் செய்த பிழை அது.

இந்த நிலையில் தான் தமிழக காங்கிரஸ் தலைமை பதவிக்கு புதிய தலைவரை நியமிக்க இந்திராகாந்தி விரும்பினார்.யாரை தலைவரராக நியமிக்கலாம் என்பதில் பல போட்டிகள் இருந்தன.குழப்பமும் இருந்தது.
தலைவர் பதவி என்ற தன்னுயை சொந்த பிரச்சினையை கூட திமுகவிடம் ஆலோசனை கேட்கும் நிலையில் இருந்தது காங்கிரஸ் .கூட்டணித்தலைவர் என்ற முறையில் கருணாநிதியிடம் ,யாரை தலைவராக நியமிக்கலாம் என்று ஆலோசனை கேட்டார் இந்திரா காந்தி.

வழக்கம்போலே தனக்குசாதகமான தலைவர்கள் பெயரை சொன்னார் கருணாநிதி.
சிவாஜி மன்றத்தை சேர்ந்த யாரும் தலைமை பதவியை பிடித்து விடக் கூடாது என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார்.
இது போன்ற சித்து வேலைகளை காங்கிரஸ் தலைமை என்றுமே புரிந்து கொண்டதில்லை.

தலைவர் பதவிக்கு சிவாஜியின் பெயரும் சொல்லப்பட்டது.கருணாநிதி தனக்கு சாதகமான ஒருவர் தலைவர் பதவிக்கு வந்தால் தொகுதி பங்கீட்டில் தனக்கு சாதகமாக உடன்பாடு செய்து கொள்ள முடியும் என்ற அடிப்படையில் கருத்துக்களை தெரிவித்தார்.காங்கிரஸ் வளர்ச்சிக்காக அல்ல.
சிவாஜியை தலைவர் பதவி ஏற்றுக் கொள்ளும்படியும் காங்கிரஸ் தலைமை கேட்டது.சிவாஜிக்கு அதில் விருப்பமில்லை.
சிவாஜி மூப்பனாரை தலைவராக நியமிக்க சொல்லி கருத்து தெரிவித்தார்.
மூப்பனார் தலைவராக வருவதில் பல காங்கிரஸ் தலைவர்களுக்கு விருப்பமில்லை.அதில் முக்கியமானவர்கள் MP.சுப்ரமணியம் ,
RV.சுவாமிநாதன் ஆகியோர்.

MP.சுப்ரமணியம் திமுகவில் ஈ.விகே.சம்பத் அணியில் இருந்தவர்.கருணாநிதியை எதிர்த்து சம்பத் திமுகவை விட்டு வெளியேறி காங்கிரசில் இணைந்த போது சம்பத்துடன் சுப்ரமணியமும் காங்கிரசில் சேர்ந்தவர்.

திமுகவை கடுமையாக எதிர்த்தவர் MP.சுப்ரமணியம்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்த காங்கிரஸ் சட்ட மன்ற தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் ஜெயிக்க விரும்பியது. அதனால் திமுகவை எதிர்க்கும் மனநிலை கொண்டவராக இருந்தால் தான் 
தொகுதிப் பங்கீடு சரியாக அமைந்து இதை சாதிக்க முடியும்  என்ற எண்ணத்தில் MP.சுப்ரமணியத்தை மாநில தலைவராக அறிவித்தார் இந்திராகாந்தி.

தொகுதி பங்கீட்டில் திமுகவுக்கு சமமாக இ. காங்கிரஸ் தொகுதிகளை கேட்டு திமுகவை அதிர வைத்தது.இப்போதுதான் கருணாநிதி அந்த முடிவுக்கு வந்தார்.சிவாஜியை வைத்துத்தான் தொகுதிப் பங்கீட்டு சிக்கலை தீர்க்க முடியும் என்ற நிலைக்கு வந்தார் கருணாநிதி.
சிவாஜியிடம் இந்த தகவலை கொண்டு போனார்.
சிவாஜியின் ஆதரவால் டெல்லி அரசியலை செய்து கொண்டிருந்த மூப்பனார் மூலம் இந்திராவிடம் இந்த கருத்தை தெரிவித்தார் சிவாஜி.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ்  ஆட்சி அமைக்க திட்டமிடுவது நடைமுறைக்கு சரிப்பட்டு வராது.திமுக கூட்டணியை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லை.தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் உருவானால் ,இன்னும் காலதாமதம் ஆவதுடன் களத்தில் வேலை செய்யும் தொண்டர்களை துவளச் செய்து விடும்.அது எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடும் என விளக்கமாக,சிவாஜி மூலம் சொல்லப்பட்டது.

சிவாஜி மூப்பனார் கூட்டணி மூலம் தொகுதி பங்கீடு சுமூகமான முடிவுக்கு வந்தது.
கருணாநிதிக்கும் நிம்மதி கிடைத்தது. தேர்தல் களத்தில் சிவாஜி மன்றம் தீவிரமாக களம் இறங்கி வேலை செய்தது.
சிவாஜி மன்றத்தில் மாநில செயலாளராக இருந்த ராஜசேகரனுக்கு காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உண்டானது.தன்னுடைய விருப்பத்தை சிவாஜியின் கவனத்திற்கு கொண்டு போனார் .

சிவாஜி மன்றத்திலிருந்து
தேர்தல் வாய்ப்பு பெற்று பல பேர் MP, MLA வாக அரசியலில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
தன்னுடைய மன்றம் மூலம் நேரடியாக போட்டியிட விரும்பிய ராஜசேகரனுக்கு சிவாஜி காங்கிரசில் அவர் போட்டியிடும் தொகுதியை கேட்டார்.
சிவாஜி எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் பாரபட்சமாக நடப்பது தான் காங்கிரஸின் வழக்கம் .
1977 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக வென்றது. ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைத் தவிர .நகைச்சுவை நடிகராக திரையில் வலம் வந்த ஐசரி வேலன் அதிமுக சார்பில் போட்டியிட்டு இந்த தொகுதியில் வெற்றிவாகை சூடினார்.
திராவிடக் கட்சிகளின் கோட்டையான ஆர் கே நகர் தொகுதியில் காங்கிரஸ் வெல்வது என்பது குதிரை கொம்பு.
வெல்ல முடியாத இந்த தொகுதியை சிவாஜி மன்றத்துக்கு கொடுத்தது காங்கிரஸ்.
சிவாஜி மன்றத்தைச் சேர்ந்தவர் தோல்வியை தழுவ வேண்டும் என்பதே காங்கிரசின் திட்டம்.

ராஜசேகரன் தனக்கு ஒதுக்கப்பட்ட ஆர் கே நகர் தொகுதியில் சிவாஜியின் ஆதரவுடன் போட்டியிட்டார் .
தேர்தல் களம் சூடு பிடித்தது சிவாஜி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் .

எந்தவித காரணமும் இல்லாமல் கருணாநிதியின் வற்புறுத்தலுக்காக எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்து விட்டார் இந்திரா காந்தி என்ற கோபம் அதிமுக தொண்டர்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

சிவாஜி மன்றத்தின் மீது அந்த கோபத்தை அதிமுக தொண்டர்கள் காட்டினார்கள்.
சிவாஜி மன்ற தோழர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள் உச்சகட்டமாக அந்த சம்பவம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவாஜி அதிமுக தொண்டர்களால் தாக்கப்பட்டார் .
சிவாஜியின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. சிவாஜி தாக்கப்பட்டார் என்ற செய்தி பரவியதும் சிவாஜி மன்ற தோழர்கள் தங்கள் கோபத்தை அதிமுக தொண்டர்கள் மீது காட்டினார்கள் .பல இடங்களில் அதிமுக கொடிக்கம்பங்கள் சாய்க்கப்பட்டன .

சிவாஜி மன்றத்தின் கோபத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் தடுமாறினார்கள் .
தலையில் அடிபட்ட சிவாஜி மருத்துவமனையில் மருத்துவம் எடுத்துக் கொண்டு மீண்டும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

காங்கிரஸ் இயக்கத்தின் வரலாற்றில் அந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக அதிக தாக்குதலை சந்தித்தவர் சிவாஜி மட்டுமாகத்தான் இருக்கும். 
ஆர் கே நகர் தொகுதியில் ராஜசேகரன் கடுமையாக போராடினார். சிவாஜி மன்ற தோழர்கள் தமிழகத்தில் இருந்து ஆர்.கே.நகர் நோக்கி படை எடுத்தார்கள் .

சிவாஜி வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆர்கே நகரில் சிவாஜியை காண மக்கள் வெள்ளம் அலை மோதியது .திராவிடக் கட்சிகளின் கோட்டையாக திகழ்ந்த ஆர்கேநகர் சிவாஜியின் ஓயாத பிரச்சாரத்தின் காரணமாக இந்திய தேசியத்தின் பக்கம் தனது பார்வையை திருப்பியது என்பதை தேர்தல் முடிவு தெரிவித்தது .

தேர்தல் 1980 மே மாதம் 28ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி முடிவடைந்தது. கருத்துக்கணிப்புகள் இரு வேறு  தகவல்களைச் சொன்னது .
எம்ஜிஆர் எழுப்பியிருந்த அனுதாப அலை மக்கள் மனதில் அதிமுகவுக்கு வாய்ப்பான நிலையை உருவாக்கி உள்ளது .
எம்ஜிஆரின் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றது .

எம்ஜிஆர் ஆட்சியை கலைத்ததால் அது மக்களிடம் அனுதாப அலையாக மாறி 
அதிமுக பெரும்பான்மையான இடங்களை பெற்றது.
காங்கிரஸ் தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை கணக்கில் வைத்துக்கொண்டு அதிக நம்பிக்கையில் சோம்பல்தனமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள் .
கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் களத்தில் வீறுகொண்டு சிங்கமென நின்று போராடிய சிவாஜிக்கும் சிவாஜி மன்றத்துக்கும் பழகத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்படுகிறது என்றார் .

வாக்கு விழுக்காட்டில் வெற்றி பெற்ற அதிமுகவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் திமுகவும் வெற்றி பெற்றிருந்தது .இ காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதத்திற்கு சிவாஜி மன்றம் தான் முதன்மைக் காரணம் என்று குறிப்பிட்டார்.

ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்ட ராஜசேகரன்  நிலை என்ன என்பதே  பலரின் கேள்வியாக இருந்தது. திராவிட இயக்கத்தின் அலையை வீழ்த்தி சிவாஜி மன்றம் அந்த தொகுதியில் வென்றது .

சென்னை பகுதியில் தேசியத்துக்கு நீண்ட காலத்துக்குப் பின்பு ஆர் கே நகர் தொகுதி வாசலை திறந்துவிட்டது. ராஜசேகரனை எதிர்த்துப் போட்டியிட்ட ஐஸரி  வேலன் தனது பண பலம் , ஆள்பலம் என தனது அனைத்து ஆற்றல்களை இறக்கி விட்டும் வெற்றியின் பக்கம் தலை காட்ட முடியாமல் போனது .

தன்னுடைய தேர்தல் தோல்வி பற்றி ஐசரி வேலன் குறிப்பிட்ட போது,இது ராஜசேகரனுக்கு கிடைத்த வெற்றி அல்ல, "சிவாஜிக்கு கிடைத்த வெற்றி", 27 இடங்களில் கூட்டம் போட்டு எனக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்தார் .எங்கள் கோட்டையாக இருந்த இந்த தொகுதியை சிவாஜி உழைப்பு தட்டிப் பறித்தது என்றும் குறிப்பிட்டார் ...

திராவிட இயக்கங்களின் கோட்டையாக இருந்த ஆர்.கே .நகர் தொகுதியை தனது பிரச்சாரத்தால் வெற்றிக் கோட்டையாக மாற்றினார் சிவாஜி .

தன்னுடைய ரசிகர் மன்றத் தலைவரையே ஜெயிக்க வைத்து சிறப்பு செய்தவர்  சிவாஜி.

சிவாஜி மட்டும் தீவிர அரசியலில் முன்பே இறங்கி இருந்தால் கழக ஆட்சிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி அமைந்திருக்கும் என்பது பெரும்பாலோர் அறியாத உண்மையாகும்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற