இயக்குனர் திருலோகசந்தர் நடிகர் திலகம் சிவாஜியை வச்சு 20 படங்களை டைரக்ஷன் பண்ணி இருக்கார். தெய்வமகன் உள்பட பல பெரிய மாஸ்டர்பீஸ் படங்களை டைரக்சன் செஞ்சவர் இவர்.தமிழ் சினிமாலே லெஜஜெண்ட் ரைடக்டரா இருந்தவர் திருலோகசந்தர் .இந்த திருலோக சந்தர் யார் ?அவர் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்தது எப்படி? நடிகர் திலகத்துடன் இணைந்தது எப்படி ?என்பதை பற்றி இந்த பதிவுலே நாம் பார்க்கலாம்.
1950 ஆவது வருஷம் ஜனவரி மாசம் ஆறடி உயரத்துக்கு மேலான இருபது வயது உடைய இளைஞர் ஒருத்தர் 'குமாரி' என்ற படத்தை யாரிச்சு டைரக்ஷன் பண்ணிட்டு இருந்த
பத்மநாப ஐயர்கிட்டே மூன்றாவது உதவியாளராக வந்து சேர்ந்தார் .
ரொம்ப துறு துறுப்பும் நேர்மையும் கொண்ட அந்த இளைஞரோட கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சது.
1960 வது வருஷம் டிசம்பர் மாசம் ஏவிஎம் நிறுவனத்தினோட சார்பு நிறுவனமான முருகன் பிரதர்ஸ் பட நிறுவனத்துகிட்டே ரெண்டு கதையை சொன்னார் .
முதல் கதை வரலாற்று கதை ..
இரண்டாவது கதை சமூக பின்னணி கொண்ட கதையாகவும் இருந்துச்சு.
அந்த ரெண்டு கதைகளும் முருகன் பிரதர்சுக்கு ரொம்ப பிடிச்சது.சமூகப் பின்னணி கொண்ட கதையை விலைக்கு வாங்கி பீம்ஸிங் டைரக்ஷன்ல சிவாஜி ஜெமினி சாவித்திரி சரோஜாதேவி சௌகார் ஜானகி மாஸ்டர் கமலஹாசன் நடிக்க 'அவள் தந்த வாழ்வு' அப்படின்னு படமா தயாரிச்சது.
தன்னோட பட தலைப்பு எல்லாம் 'பா'வரிசையில் இருக்கணும் அப்படிங்கிற பீம்ஸிங்கோட கொள்கையோட அடிப்படையில
'அவள் தந்த வாழ்வு' அப்படிங்கிற தலைப்பை பார்த்தால் பசி தீரும்ன்னு மாத்திட்டார் பீம்சிங்.
பார்த்தால் பசி தீரும் கதைய சொன்ன அந்த வாலிபர் ,ஆனந்தன் எல் விஜயலட்சுமி நடிச்ச
'வாளும் விழியும்' அப்படிங்கற படத்தை டைரக்டர் பண்ணினார் .அது பாதியிலேயே நின்னு போச்சு.
ஆனா ஏவிஎம் கிட்ட அவர் சொன்ன அந்த ரெண்டு கதைகளும் சினிமாவா மாறுனப்போ அவருக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.
அந்த இளைஞர்தான் 'திருலோக் 'அப்படின்னு செல்லமாக எல்லாராலயும் அழைக்கப்பட்ட ஏசி திருலோகச்சந்தர் .
ரெண்டு ராணுவ வீரர்களோட வாழ்க்கையிலே நடக்கற சம்பவங்களை வெச்சு பார்த்தால் பசி தீரும் படத்தோட கதையை எழுதி இருந்தார் திருலோக்.
14.1.62 ஆம் வருஷம் பொங்கலன்னைக்கு சென்னை சாந்தி உமா ஸ்ரீ கிருஷ்ணா உள்பட தமிழ்நாடு முழுக்க ரிலீசாச்சு பார்த்தால் பசி தீரும்.
சிவாஜியோட 75வது படமா இது அமைஞ்சு இருந்ததும் அது அவரோட நடிப்புல ஒரு மைல்கல்லா அமைஞ்சதும் சிறப்பு.
பார்த்தால் பசி தீரும் படத்துக்கு ஏசி திருலோகசந்தர் கதை எழுதி இருந்தாலும் அவருக்கு சிவாஜியை சந்தித்து பேசுற வாய்ப்பே கிடைக்கல .
திருலோகசந்தர் பிறந்தது வளந்தது எல்லாம் ரொம்ப சுவாராஸ்யமான விஷயம்.எலிசபெத் ராணிக்கு பிரசவம் பார்த்த லட்சுமண சாமி முதலியாரால பிரசவம் பார்க்கப்பட்டு பொறந்தவர்தான் திருலோக சந்தர் .
இவர் பச்சையப்பன் காலேஜ்ல பேராசிரியர்களாக வேலை செஞ்சுகிட்டு இருந்த
மு வரதராசனார்..
திமுக இயக்கத்துல ரொம்ப காலம் பொதுச்செயலளாரா இருந்த அன்பழகன் கிட்ட மாணவரா பழகுன பெருமை திருலோகசந்தருக்கு இருக்கு .
ரொம்ப வசதியான குடும்பத்தில் பிறந்தவர் திருலோகசந்தர் .சின்ன வயசுலேஇருந்தே கலைத்துறையிலே ரொம்ப ஈடுபாடு கொண்டவர்.ரொம்ப வசதியான குடும்பத்தில் பிறந்ததால அவரோட அப்பாவோட கண்டிசன்களாலே கலைத்துறை பக்கம் அவராலே திரும்பி கூட பார்க்க முடியல.
தன்னோட ஆசையை நெஞ்சுக்குள்ளேயே வெச்சு வளத்துகிட்டு இருந்தார்.
ஒரு தடவை தன்னோட அப்பாவுக்கு தெரியாம அகில இந்திய வானொலி நாடகத்துல நடிச்சு 10 ரூபாய் சம்பளத்தையும் வாங்குனார்.
திருலோகசந்தருக்கு இந்த பெயர் வர காரணமாக இருந்தவர் ஒரு சாமியார் .பிறந்து பத்து நாள் ஆன சமயம் அவருக்கு பெயர் சூட்ட ஒரு சாமியாரை கூட்டிட்டு வந்தார் திருலோகசந்தரோட அப்பா .
குழந்தையை பார்த்த சாமியாருக்கு ஒரு அதிர்ச்சி. அழகா உயரமா எடை அதிகமா இருந்த அந்த குழந்தையை பார்த்ததும் தன்னோட பேரு இந்த குழந்தைக்கு இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் அப்படின்னு நினைச்சு தன்னோட பேரான திரிலோக சந்தர்ங்கற பேரை அந்த குழந்தைக்கு வெச்சார் .
குத்துச்சண்டை கபடின்னு எல்லா விளையாட்டுகளிலும் தன்னோட திறமையை காட்டி பள்ளி மாணவர்களுக்கு முன்னால வித்தியாசமா இருந்தார் ஏசி திருலோக சந்தர்.
அலெக்சாண்டர் டூமாஸ், விக்டர் ஹியூகோ, ஷேக்ஸ்பியர் அப்படிங்கற பெரிய ஆங்கில நாவலாசிரியர்களோட படைப்புகளை சின்ன வயசுல இருந்து பலமுறை படிச்சும் அதலே வர்ற மாதிரி நடிச்சு பாத்தும் தன்னோட கற்பனைத் திறனை வளர்த்துகிட்டார் .
பள்ளிக்கூடத்துல படிக்கிறப்பவே கையெழுத்து பிரதி புத்தககங்களையும் சிக்னேச்சர் அப்படிங்கற லைப்ரரியையும் நடத்தினார் ஏசி திருலோக சந்தர் .
நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் மெட்ராஸ் சிட்டிய டிராம் வண்டியிலே சுத்துறத வாடிக்கையா வச்சுட்டு இருந்தார் திருலலோகசந்தர் .மவுண்ட் ரோடு தாதான்னு திருலோக சந்தரை கூப்பிடற அளவுக்கு அவர் இருந்தார்.
தன்னோட நண்பர்களை யாராச்சும் அடிச்சா அடிச்சவங்களை திருப்பி அடிக்காம போகமாட்டார்.
1950 லே பத்மநாப அய்யர்கிட்ட உதவியாளரா சேந்தார்.
அப்போ அய்யர் குமாரிங்கற படத்தை தயாரிச்சுட்டு இருந்தார்.
சினிமா பீல்டுக்குள்ளே வந்த பின்னாலே எல்லார் கிட்டயும் நல்ல பேர் வாங்கினார் திருலோகசந்தர்.
திருலோகசந்தரும் நடிகர் பாலாஜியும் ஸ்கூல்லே படிச்ச காலத்துல இருந்தே நண்பர்கள்.பாலாஜி சின்ன வயசுலே வெள்ளை நிற ஜிப்பா வெள்ளை பைஜாமா போட்டுட்டுதான் ஸ்கூலுக்கு வருவார்.
அவரை அடிக்கடி சீண்டி வம்புக்கு இழுத்துட்டே இருப்பார் திருலோகசந்தர்.
சினிமா பீல்டுக்கு ரெண்டு பேரும் வந்த பின்னாலே ஒருநாள் திருலோக்கை பாக்க பாலாஜி வந்திருந்தார்.
புரசைவாக்கத்துலே ரெண்டு பேரோட வீடும் பக்கம் பக்கமா இருந்தாலும் ரெண்டு பேரும் அதிகமா சந்திச்சு பேசுனது இல்லே.பாலாஜி அமைதியான டைப்.திருலோக்கோ அதுக்கு நேரெதிர்.எல்லாரும் வாலுப்பையன்னே சொல்வாங்க.
திருலோகசந்தர் பக்கமே வராத பாலாஜி ,அவரை பாக்க வந்தப்போ திருலோகசந்தருக்கு ஒரு எதிர்பார்ப்பா இருந்துச்சு.
மனசுலே குழப்பத்தோடு பாலாஜிய வரவேற்று பேசினார்.சினிமா பீல்டுக்கு வந்த பின்னாலே
திருலோகசந்தரும் பாலாஜியும் தனியா சந்திச்சு பேசுனதில்லே.
பாலாஜி எதுக்கு வந்திருக்கார்னுஅவருக்குள்ளே யோசனை ஓடிட்டு இருந்துச்சு.
இப்போ பாலாஜி சினிமா பீல்டுக்கு எப்படி வந்தார்னு சொல்லணும்.ஜெமினி ஸ்டுடியோவுலே நடிக்கறதுக்கு வாய்ப்பு கேட்டு போனவர் பாலாஜி.ஔவையார் படத்துலே ஒரு சின்ன வேஷம் கிடைச்சது பாலாஜிக்கு.
அப்போ ஜெமினி ஸ்டிடுயோவுலே நிர்வாகியா இருந்தவர் ஜெமினிணேசன்.அவர் மூலமா ஔவையார் படத்துலே நடிக்க சான்ஸ் கிடைச்சது பாலாஜிக்கு.ஔவையார் படத்துலே நடிச்ச பின்னாலே பாலாஜிக்கு பெரிசா வாய்ப்பு ஏதும் வரலே.எப்படியாச்சும் வாழ்க்கையை ஓட்டணுமேன்னு நரசு ஸ்டுடியோவுலே வேலைக்கு சேந்தார் பாலாஜி.பாலாஜி கிட்ட இருந்த சுறுசுறுப்பும் தொழில் பக்தியும் நரசு ஸ்டிடுயோ ஓனருக்கு பிடிச்சது. அதனாலே அவரை தயாரிப்பு நிர்வாகியா மாத்துனார்.
நரசு ஸ்டுடியோவுலே வேலை செஞ்சுட்டு இருந்தப்போ இந்தி நடிகர் அசோக்குமாரோட நட்பு பாலாஜிக்கு கிடைச்சது.
அவர் சொன்ன ஒரு யோசனைபடி சொந்தமா ஒரு
பட கம்பெனியை ஆரம்பிச்சார் பாலாஜி.
1966 ஆம் வருஷம் தன்னோட சுஜாதா சினிஆர்ட்ஸ் மூலமா பாலாஜி தயாரிச்ச முதல் படம் அண்ணாவின் ஆசை.ஜெமினி ஹீரோ.தாதாமிராசி டைரக்சன் பண்ணுன படம் அது.படம் பெரிய அடி வாங்கிருச்சு.90 ஆயிரம் கடனாளியா பாலாஜியை மாத்திருச்சு.
இந்த கடன் தொல்லையிலே இருந்து மாறணும்னா பெரிய கதாநாயகனை வெச்சு கமர்ஷியலா ஹிட் ஆக்குனாத்தான் முடியும்னு நிலைமை.
அந்த நேரத்துலே அவர் நெனச்சது..
கேட்டது ..
சிவாஜியை.பல பேரை தயாரிப்பாளரா மாத்துன சிவாஜிதான் தன்னோட பிரச்சினையை தீர்க்க முடியும்னு முடிவு எடுத்தார் பாலாஜி.
இந்திலே 'கேம்ப்ளர்'ங்கற படம் சக்கை போடு போட்டுட்டு இருந்துச்சு .தேவானந்த் நடிச்ச படம்.இந்தி நடிகர் அசோக்குமார் மூலமா டிரை பண்ணி அதோட உரிமையை வாங்குனார் பாலாஜி .அந்த படத்துலே சிவாஜியை நடிக்க வெச்சு
படம் எடுக்க திட்டம் போட்டார் பாலாஜி.படத்தை டைரக்ஷன் பண்ண யாரை போடுறதுன்னு நெனச்சப்போ நினைவுக்கு வந்தவர் திருலோகசந்தர்
தன்னோட நிலைமையை திருலோக்குக்கு எடுத்து சொல்லி படத்தை டைரக்ஷன் பண்ணி தர கேகக்கறதுக்காகத்தான் பாலாஜி திருலோகசந்தரோட வீட்டுக்கு வந்தார்.
அப்போ திருலோகசந்தர்
AVM ல்லே வேலை செஞ்சுட்டு இருந்தார்.அதுலே இருந்து வெளியிலே வரணும்.வந்த பின்னாலேதான் இதை செய்ய முடியும்.பாலாஜிக்காக AVMல்லே இருந்து வெளியிலே வந்தார்.
கேம்ப்ளர் படத்தை பாத்தார் திருலோகசந்தர்.படத்தோட கதையிலே எந்த புதுமையும் இல்லேன்னு அவர் நெனச்சார்.முதன்முதலா சிவாஜியை வெச்சு டைரக்ஷன் பண்றோம்.இந்த மாதிரி கதையிலே போயி சிவாஜியை நடிக்க வெக்கறதான்னு அவருக்கு யோசனை.
ஆனா பாலாஜி அந்த கதைய விடறதா இல்லே.
சரி..திரைக்கதையிலே சில இன்ட்ரஸ்டிங்கா சில விஷயங்களை சேத்து திரைக்கதையை பக்காவா மாத்துனார்.அது பாலாஜிக்கும் பிடிச்சது.
இனி என்ன ?
சிவாஜியை பாக்கணும். கதை சொல்லணும்.அன்னை இல்லத்துக்கு முதன்முதலா பாலாஜியோட போறார் திருலோகசந்தர்.ரெண்டு பேரையும் வரவேற்றார் சிவாஜி.சினிமாலே சிங்கமா கர்ஜிக்கற சிவாஜியா இதுன்னு ரொம்பஆச்சர்யப்பட்டு போனார் .அவ்வளவு சிம்பிளா இருந்தார் சிவாஜி. ஒரு சராசரி மனுஷன் மாதிரி சிவாஜி இருந்ததை பாத்தார் திருலோகசந்தர்.
சிவாஜிக்கு கதை சொல்ல ஆரம்பிச்சார் திருலோக சந்தர்.
கதை சொல்லறப்போ நாம இடைஞ்சலா இருக்க வேண்டாம்னு பாலாஜி ரூமை விட்டு வெளியிலே வந்துட்டார்.இந்தி படமான கேம்ப்ளர் கதையை தன்னோட பாணிக்கு மாத்தி சிவாஜிக்கு கதை சொல்ல ஆரம்பிச்சார் திருலோகசந்தர்.சிவாஜி சிகரெட் பிடிச்சுகிட்டே கதை கேட்டார்.சிவாஜி சிகரெட் பிடிக்கறத பாத்த திருலோக சந்தருக்கும் அந்த எண்ணம் வந்துச்சு.அவரும் ஒரு செயின்ஸ் மோக்கர்.சிவாஜிகிட்டே பெர்மிஷன் வாங்கிட்டு ரூமை விட்டு வெளியிலே வந்து புகை பிடிச்சுட்டு வந்தார்.இப்படி பல தடவை போயிட்டு வந்தார்.அடிக்கடி அவர் வெளிய போனத பாத்த சிவாஜி ஏன்னு தெரிஞ்சுக்கிட்டார்.நீங்க இங்கயே சிகரெட் பிடிக்காலாம்னு சொல்லிட்டார்.
பெரிய நடிகர்னு பந்தா இல்லாமே சிவாஜி சொன்னது திருலோகசந்தருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.முழு கதையையயும் சொல்லி முடிச்சார்.
சிவாஜிக்கு முதன்முதலா திருலோகசந்தர் கதை சொன்னது இப்படித்தான்.
இந்தி 'கேம்ப்ளர்' தமிழ்லே 'தங்கை'ன்னு வந்துச்சு.சிவாஜியை ஆக்ஷன் ஹீரோவா காட்டி அதிரடி அட்டகாசம் பண்ணி இருப்பார் திருலோக சந்தர்.படத்தை தொய்வே இல்லாமே சுவாராஸ்யமா கொண்டு போயிருப்பார் திருலோகசந்தர்.
வசூல் ரீதியா பெரிய கலெக்சன் பண்ணுச்சு.சிவாஜியோட ஆக்சனை பாத்து சினிமா பீல்டு அசந்து போச்சு.
படம் நல்லா கல்லா கட்டுச்சு .பாலாஜிக்கு கை நிறைய பணம் கொடுத்துச்சு.
பாலாஜி லைப்பே மாற அது தொடக்கமா இருந்துச்சு.
ஒரு புது வரலாறு ஆரம்பிச்சது..
அதுலே ஆரம்பிச்சு சிவாஜியை வெச்சு அதிக படங்கள் 20 படங்களை டைரக்சன்
செஞ்சவர்னு பெருமை கிடைச்சது திருலோகசந்தருக்கு.
தெய்வமகன் மாஸ்டர் பீஸா அமைஞ்ச படம்..
கருத்துகள்
கருத்துரையிடுக