சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி- சோ

பெற்றால் தான் பிள்ளையான்னு ஒரு நாடகம்.1962 லே நடந்துச்சு. நாடகத்துக்கு நல்ல வரவேற்பு .அந்த நாடகத்தை சினிமாவா எடுத்தார் பீம்சிங்.வழக்கப்படி பீம்சிங் பா வரிசை டைட்டிலா பார் மகளே பார்னு வெச்சார்.அந்த நாடகத்துலே நடிச்சார் சோ.மெட்ராஸ் பாஷையை இயல்பா பேசி நடிச்சிருப்பார்.சினிமாவா எடுத்தப்போ சோவையே நடிக்க வெச்சுடுங்கன்னு சொல்லிட்டார் சிவாஜி. அப்படி சினிமாவுக்குள்ளே வந்தவர் தான் சோ.
பார் மகளே பார் படம்  சோவுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துச்சு.
மகாகவி காளிதாஸ் பச்சைவிளக்கு படங்கள்லே சோவை நடிக்க வெக்க சிவாஜி சிபாரிசு பண்ணுனார்.ஆனா சோ அந்த படங்கள்லே நடிக்கலே. பார் மகளே பார்னு ஒரு படம் போதும்னு முடிவெடுத்துட்டார்.
ரசிகர்களுக்கு இந்த படத்தோட தான் நடிக்கறதுக்கு விடுதலை கொடுத்துடலாம்னு முடிவு எடுத்திருந்தார் அப்போ.வீணை பாலசந்தர் தான் மறுபடியும் சோவை சினிமாலே நடிக்க வெச்சார் .
அதுக்கு பின்னாலே சிவாஜியோட நிறைய படங்கள்லே நடிச்சார் சோ.

இதுக்கு பின்னாலே நடிச்ச ஒரு சிவாஜி படத்துலே சோவுக்கு ஒரு குறிப்பிட்ட காட்சிலே சீரியஸா நடிக்கற மாதிரி காட்சி .சோவுக்கு சீரியஸா நடிப்பு வரலே. சிவாஜியும் சோவுக்கு பல தடவை சொல்லிக் கொடுத்தார்.பல தடவை முயற்சி பண்ணுன சோ ஒரு கட்டத்துலே ,சிவாஜிகிட்டே சார் என்னோட மூஞ்சி சீரியஸ் நடிப்புக்கெல்லாம் ஒத்து வராது சார்.என்னை விட்டுருங்க. நான் கேமராவுக்கு என்னோட முதுகை காமிச்சு டயலாக் பேசி நடிச்சு முடிச்சிடறேன்னு சொல்லிட்டார்.சிவாஜியும் ரெண்டு தடவை டிரை பண்ணிட்டு அலுத்து போயிட்டார்.
சிவாஜி சோகிட்டே,டேய் நீ காமிராவுக்கு முதுகையே காமிச்சிரு.உன்னோட மூஞ்சியை விட  அது பெட்டர்னு சொல்லிட்டாரு.

 அவன் ஒரு சரித்திரம் படத்துலே சிவாஜி ஸ்ரீகாந்த்தோட சோவும் நடிச்சார்.ஷுட்டிங் டயத்துலே சிவாஜிக்கு ஷாட் இல்லேன்னாலும் மத்தவங்க நடிச்சுட்டு இருக்கறதை பாத்துட்டு இருப்பார்.இதுக்கு ஏத்த மாதிரி தான் நடிக்கற ஷாட்டுலே அதுக்கேத்த மாதிரி முக பாவத்தை வெளிப்படுத்தத்தான் .
இந்த பட ஷுட்டிங் டயத்துலே சோ தான் நடிச்ச ஷாட் முடிஞ்சதும் வெளியே போயிடுவார்.இதை பாத்த ஸ்ரீகாந்தும் போக ஆரம்பிச்சார் .சிவாஜி ஸ்ரீகாந்த்தை கூப்பிட்டு ,அவன் போனா போகட்டும் ,அவன் என்ன ஏதோ காமெடி அப்படி இப்படி பண்ணி அந்த காட்சிய அவன் பக்கம் இழுத்துருவான் .ஆனா உன்னாலே முடியுமா? நீ உணர்ச்சி பூர்வமா பண்ணனும்.மத்தவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பாத்தாத்தானே நாம சரியா ரியாக்ட் கொடுக்க முடியும் .உன்னோட சீனுக்கு மட்டும் வந்து நடிச்சா அதுலே என்ன உணர்ச்சி இருக்க முடியும்? நீ அந்த குரங்கோட சேந்து கெட்டுப் போகாதேன்னு ஸ்ரீகாந்துக்கு அட்வைஸ் பண்ணுனார்.சிவாஜி தன்னோட நடிக்கறவங்களும் நல்ல பேர் வாங்கணும்னு நினைக்கறவர்.அதனாலே யாரா இருந்தாலும் அவங்களுக்கு இது மாதிரி ரொம்ப விஷயம் நடிப்பை பத்தி சொல்லுவார் சிவாஜி.இந்த மாதிரி குணத்தை வேற நடிகர்கள்கிட்டே பாக்க முடியாது.

ஒரு சமயம் ,வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துலே சிவாஜி பேசுன வசனத்தை பத்தி  சோ கேட்டார் .
அப்போ கிஸ்தி திரை வட்டி  வசனத்தை அதிக சத்தமில்லாமே மென்மையா பல்லை கடிச்சுட்டே சிவாஜி பேசிக் காட்டுனார்.சிவாஜி இப்படியும் பண்ணலாம்னு செஞ்சு காட்டினார்.அந்த குரல்லே கூட அப்படி ஓர் நடிப்பை சிவாஜி செஞ்சு காட்டுனத பாத்து சோ அசந்துட்டார்.ஆனா படத்துலே அப்படி செய்ய முடியாது.அங்க அப்படித்தான் செய்யணும்னு ஒரு விளக்கமும் கொடுத்தை பாத்து சோவுக்கு ஆச்சர்யம்.

யார் ஷுட்டிங்க்கு வந்தாலும் வரலேன்னாலும் சரி சிவாஜி சூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலேயே வந்துருவார்.இது எல்லாருக்கும்  தெரிஞ்ச விஷயந்தான்.சிவாஜியோட சோ நடிச்சுட்டு இருந்த ஒரு படத்துலே அந்த பட கதாநாயகி லேட்டாவே வந்துட்டு இருந்தார்.இதை இப்படியே விட்டா சரிப்படாதுடான்னு சோகிட்டே சொன்னார்.நான் வேணா அந்த நடிகை கிட்டே போய் இது பத்தி பேசட்டுமான்னு சோ கேட்டார்.சிவாஜி வேண்டாம்னுட்டார்.
எல்லார் கிட்டயும் போய் நாளைக்கு காலையிலே 7 மணிக்குள்ளே எல்லாரையும்  ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு கண்டிப்பா வரணும்னு சொல்லிடுன்னு சோவை சொல்ல சொன்னார்.
மாறுநாள் எல்லாரும் கரெக்டா வந்துட்டாங்க. அந்த நடிகை மட்டும் வழக்கம்  போலே அரை மணி நேரம் லேட்டா வந்தார்.இதை பாத்த சிவாஜி டைரக்டரை கூப்பிட்டு இன்னைக்கு பேக்கப் பண்ணிக்கோன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்.சோ ஓடிப்போய் காரணம் கேட்டார்.அதுக்கு சிவாஜி ,அப்பத்தாண்டா புத்தி வரும்னு சொல்லிட்டார்.நடிகையும் சிவாஜியை பாத்து பேசுனார்.நீ என்ன நெனச்சுட்டு இருக்கே .எத்தனை பேர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.உனக்காக ஷுட்டிங் லேட்டாகணுமா ?தயாரிப்பாளர் எவ்வளவு பணம் போட்டு படம் எடுக்கறாரு.உனக்கு  மட்டும் தான் வேற வேலை இருக்குதா ?மத்தவங்களுக்கு இல்லையா.நாளையிலே இருந்து நேரத்துக்கு வா ! அதனாலே தான் இன்னைக்கு பேக்கப் பண்ண சொல்லிட்டேன்னு சொன்னாரு.இது சோவே சொன்ன விஷயம் தான் .என்னவோ நடந்துட்டு போகுதுன்னு சிவாஜி இருந்துட மாட்டார்.நம்மாலே யாருக்கும் பாதிப்பு வரக் கூடாதுன்னு நெனக்கறவர் சிவாஜி .அந்தளவுக்கு தான் நடிக்கற படத்துலே அக்கறை எடுத்துக்குவார் சிவாஜி.

ஒரு படத்துலே சிவாஜி நடிச்சதை பாத்த சோ ,கொஞ்சம் அதிகமா தெரியுதுன்னு சொல்லிட்டார்.சோவை கூப்பிட்டு சிவாஜி,அந்த காட்சியை வேற  மாதிரி சோ என்ன நெனைக்கறார்னு தெரிஞ்சுகிட்டு அவர் நெனக்கற மாதிரி ரொம்ப இயல்பா செஞ்சு 
காட்டுனதை பாத்ததும் சோ,இது ரொம்ப அருமையா இருக்கே ,இப்படி ஏன் நீங்க பண்ணலேன்னு கேட்டார்.இப்படி பண்ணுனா நீ மட்டும் தான் ரசிப்பே. ஆடியன்ச இழுக்கணும்னா உணர்ச்சி பூர்வமா இருக்கணும்னு பதில் சொன்னார்.சிவாஜி ஒண்ணும் சும்மா நடிக்கலே.எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சிருக்கார்.எது எது எங்க எப்படி தேவையோ அதுக்கேத்த மாதிரி நடிப்பை கொடுப்பார் சிவாஜி.

இப்படி பல திறமைகளை தெரிஞ்சு வெச்சிருக்கறவர் சிவாஜி.ஷுட்டிங்லே எங்க லைட்டை வெக்கறாங்க,அப்போ நிழல் எங்க விழும் ,அதுக்கேத்த மாதிரி எந்த கோணத்துலே நின்னு  நடிக்கணும்னு பல நுணுக்கமான விபரங்களை சிவாஜி தெரிஞ்சு வெச்சிருக்கார்.சிவாஜி வர்ற காட்சிகள் எல்லாம் சிறப்பா இருக்க இதுவும் காரணம்.

சோவை சிவாஜி கிண்டலடிச்சு பேசறதே தனி தான். துக்ளக் பத்திரிக்கை ஆரம்பிக்கப் போறதா சிவாஜிகிட்டே சோ சொன்னப்போ ,அதுக்கு சிவாஜி , நீயே ஒரு குரங்கு,அந்த குரங்கும் இஞ்சியை தின்னு கள்ளும் குடிச்சா எப்படி இருக்குமோ ,அது மாதிரி இருக்கும்னு சொன்னார் சிவாஜி.இது பத்தி சோ ,எப்படிப்பட்ட வாழ்த்து பாருங்கன்னு சொல்லியிருக்கார்.

சோ படங்கள்ல்லே சாதாரணமா நடிச்சாலும் ஹாலிவுட் நடிகர்களோட நடிப்பை நல்லா தெரிஞ்சிப்பார் .ஒவ்வொரு ஹாலிவுட் கதாநாயகர்களோட ஸ்பெசாலிட்டியும் என்னென்னு சொல்லி அவங்களோட ஸ்பெசாலிட்டிலே சிவாஜி செஞ்சதை  பல தடவை பெருமையா சொல்லி பேசியிருக்கார்.எல்லா ஹாலிவுட் நடிகர்களோட நடிப்பையும் சிவாஜியோட நடிப்புலே பாக்கலாம்.
சர்ஜான்கில்ட்டோட நடிப்புலே இருக்கற தோரணை,டேணி கே காமெடி நடிகர்கிட்டே இருக்கற குழந்தைத்தனமான நடிப்பு,கிளார்க்கேபிளோட மிடுக்கு,ஹம்ப்ரி போகார்ட்டோட நடிப்புத் திறன் ,நார்மன் விஸ்டத்தோட நகைச்சுவை நடிப்பு,சார்லஸ் ஹெஸ்டனோட கனமான நடிப்பு ..இப்படி இவங்களோட நடிப்பை எல்லாம் ஒருத்தர் கிட்டேயே பாக்க முடியும்னா ,அது தான் சிவாஜி.இது சோவோட கருத்து.

செந்தில்வேல் சிவராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற