சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

நடிகை சுஜாதா

விஜயலட்சுமி என்ற இந்த பெண் தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த நடிகை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.தமிழ் தவிர தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்தவர்.
விஜயலட்சுமி என்ற நடிகையா ?இந்த பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாததுதான்.
சினிமாவில் இவர் பெயர் சுஜாதா.
அவள் ஒரு தொடர்கதை சுஜாதாதான்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் சுஜாதா.
சுஜாதாவின் தந்தை கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று பேராசிரியராக பணி புரிந்த போது இலங்கையில் பிறந்தவர் சுஜாதா. 
தந்தையின் பணி முடிந்ததும் கேரளாவில் வளர்ந்தார்.
1971 ல் தபஷ்விணி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் சுஜாதா.
1971 ல் எர்ணாகுளம் ஜங்சன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது k.பாலசந்தரின் கண்ணில் பட்டார்.1974 ல் 
அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார் சுஜாதா.
அதன் பிறகு வரிசையாக படங்களில் நடித்து புகழ் பெற்றார்.70 80 களில் முண்ணனி நடிகையாக இருந்த போது ஜெயகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இரு குழந்தைகளும் பிறந்தன.
திருமணம் முடிந்து சில காலம் ஆனதும் இவருடைய வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.இவரை சத்ததித்து பேசுவதோ பேட்டி எடுப்பதோ நடக்காத காரியமாக இருந்தது.சினிமாவில் நடிக்க தொடர்பு கொள்ள கூட சாதாரணமாக தொடர்பு கொள்ள முடியாத ஒரு நிலையில் இருந்தார்.இவரை எப்படி சந்திப்பது?  சினிமாவில் நடிக்க வைப்பது என்பது கூட பெரிய சவாலாக இருந்துள்ளது.இவர் எங்கிருக்கிறார் என்பதே பெரிய மர்மமாக இருந்துள்ளது.சினிமா துறையில் இருப்பவர்கள் கூட இவர் எங்கிருக்கிறார் என்பது பற்றி தெரியாத ஒரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்.

சுஜாதாவை பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.ஏதோ ஒரு பிரச்சினையில் இருக்கிறார்.அது என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.கஷ்டப்பட்டு தேடி பிடித்து சினிமாவில் நடிக்க வைக்கும் போது கூட ,தான் நடித்து முடித்ததும் சீக்கீரம் விலகி விடுவார்.சினிமா உலகில் இருந்து விலகியே இருந்தார்.

பொது நிகழ்ச்சிகளில் கூட இவரை பார்க்க முடியாது.
 சிவாஜி கணேசன் மறைந்த நேரம் . சென்னை தி.நகர் பாண்டி பஜாரிலிருந்து சினிமா கலைஞர்கள் அஞ்சலி ஊர்வலம் நடத்துகின்றனர். அதில் நடிகை மனோரமாவின் கரம்பிடித்து குனிந்த தலை நிமிராமல் நடந்து செல்கிறார், சுஜாதா. சிவாஜி கணேசனின் நினைவுகளை ஒவ்வொரு சினிமா கலைஞர்களும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர். அப்போது சிவாஜியின் வீட்டில் இருந்த சுஜாதாவிடம் பேட்டி எடுக்கப் பல ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. அம்முயற்சியில் எவருக்கும் வெற்றிகிடைக்கவில்லை. நடிப்பு, வீடு... இதுதான் சுஜாதாவின் வாழ்க்கையாகவே இருந்தது. சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொண்டதும் மிக அரிதுதான்.  

சுஜாதா 2011ஆம் ஆண்டு காலமானார்.அவருடைய மரணத்தில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் சொன்ன வார்த்தை இதுதான்.
இவருடைய வாழ்க்கையும் ஒரு தொடர்கதையாகி விட்டது -ஏனோ ?

அவள் ஒரு தொடர்கதை அன்னக்கிளி போன்ற ஆரம்பகால படங்கள் இவருக்கு பெரிய புகழை பெற்றுத்தந்தன.
1972 ல் சுஜாதா தமிழில் நடிக்க தொடங்கி விட்டாலும் சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க 5 வருடங்கள் ஆகி விட்டது.

நடிகர்திலகம் சுஜாதா நடித்த படங்களின் விபரங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

நடிகர்திலகம் சுஜாதா சேர்ந்து நடித்த திரைப்படங்கள் 16.சிவாஜியுடன் சுஜாதா நடித்த முதல் படம் தீபம்.

1977ல் பாலாஜி தான் தயாரித்த தீபம் படத்தில் சுஜாதாவை நாயகியாக நடிக்க வைத்தார்.
தீபம் திரைப்படம் சுஜாதாவின் திரைப்பட வாழ்வை மேலும் உயர்த்தியது.தீபம் படம் பெரிய அளவில் பெயர் பெற்று நல்ல வசூலும் செய்து 100 நாளும் ஓடிய திரைப்படமாக அமைந்தது.

1977 ல் சிவாஜிபுரொடொக்சன் தயாரித்த திரைப்படம் அண்ணன் ஒருகோயில்.மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாக இது அமைந்தது.சிவாஜியுடன் சுஜாதா நடித்த நாலு பக்கம் வேடருண்டு  பாடல் காட்சி மட்டும் விமர்சனத்துக்கு உண்டானது.மற்றபடி படம் நல்ல  ரிசல்டைக் கொடுத்தது.

முக்தாசீனிவாசன் தயாரித்த அந்தமான்காதலி சுஜாதாவின் கேரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.முழுக்க முழுக்க அந்தமானில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது.சுஜாதாவின் பாந்தமான நடிப்பில்  அது வரை பார்க்காத சுஜாதாவை ரசிகர்கள் பார்த்தார்கள்.100 நாள் ஓடிய வெற்றி திரைப்படமாக இது அமைந்தது.

1980 ல் வெளிவந்த சிவாஜி சுஜாதா ஜோடியின் விஸ்வரூபம் இன்னொரு சூப்பர்ஹிட்டாக அமைந்தது.படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார்.
தீபம் அண்ணன் ஒரு கோயில் அந்தமான் காதலி விஸ்வரூபம் என தொடர்ந்து 4 படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தது.

நீண்டகாலத்துக்கு பின்பு கலைஞர் வசனம் எழுதிய சிவாஜி படம் மாடி வீட்டு ஏழை.மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன் 
1981 ல் வெளியான இந்த படம் 
எதிர் பார்த்த அளவுக்கு அமையவில்லை. இரட்டை வேடத்தில் நடித்த சிவாஜிக்கு சுஜாதா ஸ்ரீப்ரியா ஜோடியாக நடித்திருந்தார்கள்.

சிவாஜி புரொடொக்சன் தயாரித்த வா கண்ணா வா திரைப்படம் சிவாஜி சுஜாதா ஜோடியின் மறக்க முடியாத திரைப்படம் ஆகும். படம் 100 நாள் ஓடிய வெற்றிப்படம் என்பதை விட சிவாஜி சுஜாதாவின் பிரமிக்கத் தகுந்த நடிப்பை கொண்ட படம் இது என்பதுதான் புகழ் வாய்ந்தது.சிவாஜி சுஜாதா ஜோடியின் அன்னியோன்ய நடிப்பு அசர வைத்தது.

சிவாஜியின் வித்தியாசமான ,அது வரை எந்த படத்திலும் செய்யாத நடிப்பு பாணியில் சிவாஜி நடித்த படம் கருடா சௌக்கியமா .1982 ல் வெளியான படம் இது.சுஜாதாவின் நல்ல நடிப்பை கொண்ட படம் இது.

சிவாஜியின் 225 வது படம்.தீபம் படத்துக்கு பின்பு சிவாஜி பாலாஜி சுஜாதா இணைந்த படம்.வெள்ளிவிழா ஓடிய படம்.இந்த படம் சிவாஜி சுஜாதா ஜோடியின் 8 வது திரைப்படம் ஆகும். இந்த படம் தீர்ப்பு.

சிவாஜி சுஜாதா ஜோடியின் 9 வது திரைப்படம் தியாகி.படத்தில் இடம் பெற்ற சித்ரவதை காட்சிகள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.சுஜாதா அருமையாக நடித்திருப்பார்.

முக்தா சீனிவாசன் சிவாஜி சுஜாதாவை வைத்து எடுத்த திரைப்படம் பரீட்சைக்கு நேரமாச்சு.சிவாஜி சுஜாதா ஜோடியின் 10 வது படம்.படத்தின் சிறப்பே சிவாஜி சுஜாதா நடிப்புதான்.உருக உருக நடித்திருப்பார்கள்.ஒரு வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட படம் பரீட்சைக்கு நேரமாச்சு.

சிவாஜி சுஜாதாவின் 11 வது படம் நீதிபதி. கே ஆர் விஜயாவும் நடித்திருப்பார்.வெள்ளிவிழா ஓடிய திரைப்படம் இது.1983 ல் வெளி வந்தது.

1983 ல் சிவாஜியின் இரண்டு படங்கள் வெள்ளிவிழா ஓடி சாதனை  செய்தது.முதல் படம் நீதிபதி .பாலாஜி தயாரிப்பு.
இரண்டாவது சந்திப்பு.சிவாஜி புரொடொக்சன் தயாரிப்பு.விஸ்வரூபம் படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடம்.சந்திப்பு படத்திலும் இரட்டை வேடம்.இந்த இரண்டு படங்களிலும் சுஜாதா ஸ்ரீதேவி சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார்கள்.

சிவாஜி சுஜாதா சேர்ந்து நடித்த 13 வது திரைப்படம் சுமங்கலி.
பெரிய அளவில் போகாத படம் என்றாலும் சுஜாதாவின் நடிப்பு நன்றாக இருக்கும்.

1984 ல் வெளியான சிவாஜி சுஜாதாவின் 14 வது படம் திருப்பம் .100 நாள் ஓடியது.

சிவாஜி சுஜாதாவின் 15 வது படம் நேர்மை.சுஜாதாவுக்கு வழக்கம் போலே குடும்ப பாங்கான வேடம்.
1985 ல் வெளிவந்தது.சுஜாதா சிவாஜிக்கு ஜோடியாக நடித்த கடைசி திரைப்படம் இது தான்.

சிவாஜிக்கு சுஜாதா ஜோடியாக நடிக்காமல் வெளியான 16 வது படம் மண்ணுக்குள் வைரம்.கோவை தம்பி தயாரித்த படம்.

சிவாஜி சுஜாதா ஜோடியாக நடித்த 15 திரைப்படங்களில் 9 படங்கள் 100 நாள் ஓடி சாதனை படைத்த படங்கள்.இதில் மூன்று படங்கள் வெள்ளிவிழா ஓடி சாதனை செய்தவை.நீதிபதி தீர்ப்பு சந்திப்பு அவை.
தமிழில் சிவாஜியுடன் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் சுஜாதா.

செந்தில்வேல் சிவராஜ்








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற