சென்னை அண்ணா நகரில் அமைந்திருக்கும் உலக வர்த்த மைய கட்டிடம் மிகவும் புகழ் வாய்ந்தது.ஏராளமான சினிமா படத்தின் படப்பிடிப்புகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்தின் உச்சியில் நின்று பார்த்தால் சென்னை நகரையே கழுகுப் பார்வையில் பார்த்து விடலாம்.வளையம் வளையமாக சுற்றி மேலே ஏறுவது போன்ற கட்டமைப்புடன் ,வித்தியாசமாக மேலை நாட்டு பாணியில் உருவாக்கப்பட்ட கட்டிடம் இது.
பல சிறப்புகள் கொண்ட
இந்த கட்டிடத்தில் முதன்முதலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது ஒரு சிவாஜி படம்தான்.
என்னபடம் என்ன காட்சியை அங்கு எடுத்தார்கள் என்பதை சொல்லும் முன்பு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.
தமிழக அரசு நிதி திரட்டிக் கொடுப்பதற்காக சினிமா கலைஞர்கள் எல்லாம் இணைந்து ஆறு ஊர்களில் நட்சத்திர இரவு நடத்தினார்கள்.
இது சிவாஜி ஸ்ரீதர் தலைமையில் நடத்தப்பட்டது.இந்த நட்சத்திர இரவில் ஒரு காமெடி நாடகமும் நடத்தினார்கள்.அவசரம் அவசரமாக சித்ராலயா கோபு எழுதிய நாடகம் இது.
சிவாஜியுடன் நிறைய நடிக நடிகையர் நடித்த நாடகம் இது.இந்த நாடகத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
இதை சினிமாவாக எடுத்தால் என்ன என்று ஒரு ஐடியா சிவாஜிக்கு பிறக்க,சினிமாவாகவும்
எடுத்தார்கள்.
படத்தின் திரைக்கதை காட்சிகள் படத்திற்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
முதன்முதலாக ஜெயலலிதா சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.
சிவாஜி ஜெயலலிதாவை திருமணம் செய்ய விருப்பப்பட்டு ஜெயலலிதாவின் அப்பாவான தங்க வேலுவிடம் இது பற்றி பேச ,தங்கவேலுவோ எனக்கு நான்கு பெண்பிள்ளைகள்,அவர்கள் நாலு பேருக்கும் ஒரே மேடையில் திருமணம் நடத்த விரும்புகிறேன் .அப்போதுதான் இது நடக்கும் என்று சொல்லி விடுவார்.
சிவாஜி தன்னுடைய திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் என்பதற்காக ,மற்ற மூன்று பெண்களுக்கும் மாப்பிள்ளை தேடி பிடித்து அலைவதுதான் கதை.
சிவாஜியுடன் ஜெயலலிதா நாகேஷ் மனோரமா சோ தங்கவேலு சச்சு கோபால கிருஷ்ணன் முதலானோரும் நடித்தார்கள்.
எல்லா பெண்களுக்கும் மாப்பிள்ளை பிடித்தவுடன் அவர்களின் ஜாலியை உற்சாகத்தை காட்ட ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்குமே என்று முடிவு செய்யப்பட்டது.
நான்கு ஜோடிகளும் பெரிய ரகளையாக ஆடி பாடுவது போன்ற பாடல்காட்சி பாடல் உருவானது.
இந்த படத்தின் இயக்குனரான C.V.ராஜேந்திரன் இந்த பாடல் காட்சியை அது வரை படம் பிடிக்கப்படாத இடத்தில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.சிவாஜியிடமும் இது பற்றி பேசினார். சிவாஜியும் ஓகே சொல்லிவிட்டார்.
1968 ஜனவரி மாதம் 21 ஆம் நாள் அன்றைய துணை குடியரசு தலைவர் vv.கிரி தமிழகத்தின் முதலைமைச்சரான அண்ணாவின் முன்னிலையில் உலக வர்த்தக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்ட இந்த உலக வர்த்தக மைய கோபுரத்தில் வைத்து இந்த பாடல்காட்சியை எடுத்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சிவாஜி ஜெயலலிதா நாகேஷ் சச்சு மற்றும் குழுவினர் ஆடிப் பாடும் பாடலை படமாக்கினார்கள்.
கட்டிடம் திறக்கப்பட்டது ஐனவரி 21 ம்தேதி 1968ல்.
இங்கு படமாக்கப்பட்ட முதல் படமான இந்த திரைப்படம் வெளியானது 12.4.1968 ல் .
உலக வர்த்தக மைய கட்டிடத்தில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் கலாட்டா கல்யாணம் என்பது சிறப்பு.பாடல் க்ளைமாக்சுக்கு முன்பு வரும் எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் பாடலாகும்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட கலாட்டா கல்யாணம் படம் 100 நாளை தாண்டி ஓடி வெற்றி பெற்ற படமாகும்.
இப்படத்துக்காக ஜெமினி மேம்பாலம் அருகில் பெரிய பேனர் வைக்கப்பட்டது.அந்த பேனரில் சிவாஜியின் தலையை மட்டும் போட்டு ஜெயலலிதா படுத்துக்கொண்டே போனில் பேசுவது போலே படம் வரையப்பட்டு இருந்தது. எல்லோரையும் கவரும் வண்ணம் இந்த பேனர் இருந்தது.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக