சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

மனைவியை வர்ணிக்கும்சிவாஜி 10 பாடல்கள்

மனைவியை வர்ணித்து சிவாஜி பாடிய டாப் 10 பாடல்கள்:
காதலியை வர்ணிச்சு பாடற பாட்டுகள் தான் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே அதிகமா இருக்கு.அதோட ஒப்பிட்டா மனைவியை வர்ணிச்சு பாடப்பட்ட பாட்டுகள் குறைவுதான்.காதல் பாட்டுகள்ளே இளைமையும் உணர்ச்சியும் கலந்த ஒரு வேக உணர்ச்சி இருக்கும். மனைவியை வர்ணிச்சா கண்டிப்பா அது ஒரு பரிபூரண மன நிறைவா இருக்கும்.அதைவிட உரிமையும்  அதிகந்தான்.

மனைவியை பற்றி ஒருவர் சொன்னது:
காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும்.  சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும். அந்த தின முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகும் முன்பு நீங்கள் கடைசியாக பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கி விட்டப் பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள்தான் உங்கள் முழு உலகம், நீங்கள்தான் அவளது முழு உலகம்.

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனில் சொல்லப்பட்டது :
'அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் ..

வர்ணிக்க ஆசை இருந்தாலும் சொல்ல வராது.வார்த்தைகளை தேடறதுலே கூட கஷ்டம் வந்துரும்.
எதுக்கு கஷ்டம் .
திருவிளையாடல் படத்துலே சிவாஜி சொல்லற மாதிரி அவரு பாடுனதுலே இருந்து ரெண்டு எடுத்து விட்டேன் . அம்புட்டுத்தேன்னு ,
பாலையா கிட்டே பன்ஞ் அடிப்பாரில்லே .அது மாதிரி சினிமா பாட்டுலே இருந்து எடுக்த்துக்க வேண்டியதுதான்.அந்த சினிமா பாட்டுகள்லயும் மனைவி வர்ணிப்பு பாட்டுக கம்மிதான்.
சிவாஜி பட பாட்டுகளை தாண்டி ஞாபகம் வர்றது...
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...
சம்சாரம் என்பது வீணை ..

மனைவியை வர்ணிச்ச பாட்டுகள்லே சிவாஜி பட பாட்டுகள் தான் அதிகம் இருக்கு.சிவாஜியோட டாப் டென் பாட்டுகள் என்னென்ன என்பதை மேலே பாக்கலாம்.

நிச்சயதாம்பூலம் படத்துலே ஒரு அருமையான பாட்டை சொல்லணும்.
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ..
பூவாடை வீசி வர பூத்த பருவமா ..
மனைவிங்கற அந்தஸ்துக்கு ஒரு பெண் மாறிட்டாள்னு சொல்லற வரிதான் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா வரி.
பாட்டுலே மனைவியை வர்ணிக்கற மாதிரி ஒரு பக்கம் வார்த்தைகள் இருந்தாலும்
இதுலே நம்மையெல்லாம் ரசிக்க வெச்சதுன்னா அதுக்கு சிவாஜி கொடுத்த நடிப்புத்தான்.அப்படி வியந்து பாக்கறது ,மனசு உருகறத முகத்துலே காட்டறது, அந்த முகபாவம் கண்ணசைவு ,அது ரொம்பவே மனசை நிறைய வைக்கும்.தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமான்னு ஒரு சுகமான இழுப்பு வருமே ,அதுலே போற மனசு அப்படியே மிதக்கற மாதிரி இருக்கும்.
இந்த பாட்டுலேயே ஒரு வரி 
வரும். எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்னு...
எத்தனை காலமானாலும் மறக்க வைக்காத பாட்டு இது.
பாட்டு சவுண்ட் இல்லாமே  அந்த வர்ணிப்பு என்னான்னு நடிப்புலேயே தெரிய வெச்சுரும் இந்த பாட்டு.இன்னைக்கும் மதி மயக்கத்துலே ரசிக்க வெக்கற பாட்டு இது.

கிரகப்பிரவேசம் படத்துலே ஒரு பாட்டு இருக்கு.
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது..
 வயது ஏற ஏற பருவம் காதல் அரும்புது..
புதுசா கல்யாணம் ஆன சமயத்துலே ரொம்ப பொங்கும்.அந்த இளமை வேகம் ,குதூகலம் ,உணர்ச்சி துடிப்புன்னு அந்த நேரத்துலே கவிதையெல்லாம் ஓடும் மனசுக்குள்ளே.அப்ப மட்டும் தான் வர்ணிப்பு ஓடும்.நாளாச்சுன்னா எங்க போகும்னே தெரியாது. அப்படியே இருந்தாலும் அது பாசமா மாறிடும்.இந்த பாட்டுலே பாருங்க. கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆகி ஒரு மத்திம வயசுலே புருஷன் மனைவியை வர்ணிக்கிற பாட்டு. இந்த டைப்புலே பாட்டுக கம்மி .இந்த லிஸ்ட்டுலே இது ரொம்ப பிரமாதம்னு சொல்லலாம்.
கல்யாணம் ஆன புதுசுலே இருக்கற மோகம் வேற.ஆனா இந்த பாட்டுலே வர்ற ஜோடிகள் வயசுலே வர்ற துடிப்பு வேற.உண்மையான பாசம், ஒரு புரிதல் இல்லேன்னா இப்படி நடக்காது.
கணவன் மனைவி அந்நியோன்யமான நடிப்புலே ரொம்ப ரசிக்க வெச்ச ஜோடி சிவாஜி கே ஆர் விஜயா ஜோடி .
மாலை போட்ட நாளில் இருந்து
மனசு துடிக்கும் துடிப்பு
மதியமில்லை இரவுமில்லை
தினமும் உங்க நெனப்புன்னு
கே ஆர் விஜயா பாட,
காலம் தாண்டி கிடைக்கும்போது
காதல் இனிக்கும் இனிப்பு
கட்டி வெள்ளம் கசந்து போகும்
கட்டிப் பிடிக்கும் பிடிப்புன்னு 
சிவாஜி பாட ..
கல்யாணம் ஆகி பல வருஷம் கழிச்சு பாக்கறவங்களுக்கு தெரியும் இதோட அருமை.

அடி என்னடி ராக்கம்மா ..
பட்டிக்காடா பட்டணமா.
கதாநாயகன் மூக்கையா கிராமத்து ஆளு.கட்டுன பொண்டாட்டி நாகரீக பொண்ணு.
மேல்நாட்டு நாகரீகத்திலேயே ஊறிப்போன மனைவியை கிராமத்து கலாச்சாரத்துக்கு மாத்துனா எப்படி இருக்கும்.கிராமத்து பாணி புடவை கட்டி மனைவியை வர்ணிச்சு பாடற பாட்டுத்தான் அடி என்னடி ராக்கம்மா பாட்டு..
பாட்டு இடையிலே 
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூறு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடின்னு மூக்கையாவோட வர்ணிப்பு போகும்.
சிறுகண்ணாடி மூக்குத்தி
மாணிக்க செவப்பு 
மச்சானை இழுக்குதடின்னு வேற வர்ணிப்பு ..
கிராமியம் தமிழ் கலாச்சாரம்ன்னு குத்துபாட்டுலே ஒரு வெடிப்பாட்டு இது.

வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில்
முத்து புன்னகை அந்த கண்களில்
வைரச்சிலைதான் எந்தன் பக்கத்தில்..
ரொம்ப ரொம்ப எல்லாரையும் ரசிக்க வெக்கற வார்த்தைகள்.
கல்யாணமானதும் மலர்ச்சியா புத்துணர்ச்சியா அந்த 
சந்தோசத்தை உணர்வை மனசு துடிப்பை இலக்கிய தரமா வர்ணிச்ச பாட்டு வரிகள்.
தொடர்ந்து ..

சித்திர விழிகளென்ன? மீனோ? மானோ?
செவ்விதழ் வடித்ததென்ன? பாலோ? தேனோ? 
முத்திரைக் கன்னங்கள் என்ன? பூவோ? பொன்னோ?ன்னு சொல்லிட்டு இன்னும் சொல்லவோன்னு பாட்டு போகுமே..
போதாது போதாதுன்னு கேக்க வைக்கும்..
பாட்டு சும்மா ஜில்லுன்னு போகும்.அதுக்கேத்த மாதிரி காட்சிகளையும் மலை பிரதேசம்  ஆறுன்னு ரம்மியமா கண்ணுக்கு குளிர்ச்சசியா எடுத்திருப்பாங்க.கவிதை நடையான வர்ணிப்பு ,காதல் உணர்வுலே கலந்து மனசை மயக்கற வர்ணிப்புன்னு ஒரு சுகமான பாட்டு இது.

மலரே குறிஞ்சி மலரே 
தலைவன் சூட நீ பிறந்தாய்
டாக்டர் சிவா பாட்டு. மெலடி பாட்டு.இசை ரசிகர்களோட ஸ்பெசல் பாட்டு.
மஞ்சுளாவை கல்யாணம் செஞ்சதும் வர்ற பாட்டு .அந்த புது தாலிக்கு ஒரு வரி எழுதியிருப்பார் கவிஞர்.ஜேசுதாஸ் குரல்லே கேக்கறப்போ என்னன்னே தெரியாத ஒரு உணர்ச்சிலே மனசு போகும்.
நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம்
வரியெல்லாம் ஆனந்த உணர்ச்சியா இருக்கும்.
இன்னொரு வர்ணிப்பும் சொக்க வைக்கும்.
கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ...
தினம் பூக்கற பூ அல்ல ..
பெண் ஒரு 
குறிஞ்சி மலர்னு அழகா சொன்ன வர்ணிப்பு இந்த பாட்டு.

பொட்டு வைத்த முகமோ
 கட்டி வைத்த குழலோ
சுமதி என் சுந்தரி பாட்டு.
பொண்மணி சரமோ
அந்தி மஞ்சள் நிலவோன்னு ஒரு வர்ணிப்பு.
மலைத் தோட்ட பூவில் மணம் இல்லையென்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்னு இன்னொரு வரி...
இதுவும் ஒரு ஸ்பெசல் பாட்டு.

கணவனும் மனைவியும் பிரிஞ்சு இருபது வருஷம் கழிச்சு சந்திச்சா அந்த மனசுலே என்னவெல்லாம் தோணுமோ அதுதான் இந்த பாட்டு.பிரிஞ்ச அந்த இருபது வருசமும் கணவன் மனைவி ஒருத்தரையொருத்தர் நினைச்சு வாழ்ந்துட்டு இருந்தா மட்டுமே இப்படி பாட முடியும் அந்த பாட்டுதான் நினைவாலே சிலை செய்து உனக்காக வைப்பேன் ...
இதை விட சரியான வார்த்தை இருக்க முடியுமா ?  அந்த நினைவுதான்..அதோட பிரதி பலிப்புதான் இந்த பாட்டு..
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்
கேட்டதும் மறுபடி கேக்க வைக்கற பாட்டுகள்ள இது ஒண்ணு.

மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
திரிசூலம் பட பாட்டு..
கர்ப்பவதியை வர்ணிச்சு பாடற பாட்டு.
தாய்மை ,சேய்மையையும் சேத்து
அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ..
மகாராணி முகம் இங்கு மெருகேறுதோன்னு வர்ணிப்பு.
காலமெல்லாம் ரசிக்க வெக்கற பாட்டு.
வளைகாப்பு ஸ்பெசல் பாட்டாவும் இது இருக்கு 

முத்துமணி சிரிப்பிருக்க
செம்பவள மோகவண்ண இதழிருக்க 
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே
தங்க நகை உனக்கெதற்குன்னு 
ஊருக்கு ஒரு பிள்ளை படத்துலே ஒரு பாட்டு.
நல்ல இலக்கிய வர்ணிப்பா அமைஞ்ச பாட்டு .
இதே பாட்டு வேற ஒரு ஹிட் படத்துலே வந்திருந்தா பாட்டு ரொம்ப பேமசா இருந்திருக்கும்.
கேட்டவங்களுக்கு புடிச்ச பாட்டு இது .கேக்காதவங்க கேட்டா இப்படி ஒரு அருமையான பாட்டை நாம கேட்டதில்லையேன்னு நெனைக்க வைக்கிற பாட்டு .
முத்துமணி சிரிப்புன்னு சொல்லறப்பவே அது கே ஆர் விஜயாவை தவிர யாருக்கு சூட்டாகும்.அதையும் சிவாஜி பாடி நடிச்சா சொல்லவா வேணும். திருப்தியா கேட்டு ரசிச்ச வர்ணனை பாட்டுலே இதுவும் ஒண்ணு.

உடல் நான் அதில் உள்ளம் நீன்னு ஒரு வரி. மனைவியை பத்துன  வர்ணனை பாட்டு.ஒரே வரிலே கணவன் மனைவி உறவை சொன்னதுலே இதை விட வேறென்ன வேணும்.
தமிழ் சினிமாவோட சிறந்த ஜோடி சிவாஜி பத்மினியோட பாட்டு .தெய்வப்பிறவி படத்துலே.
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்னு ஆரம்பிக்கும்.ரொம்ப எதார்த்தமா பாட்டிருக்கும்.ரொம்ப இயல்பா நடிப்பிருக்கும்.
ரொம்ப மெலடியா பாட்டிருக்கும்.
நிறைஞ்ச தங்கம்.அதிக தங்கம்னு அர்த்தமில்லே.மாசு கலக்காத தங்கம்.அந்த தங்கத்தை போலே  நிறைவான குணம் படைச்சவள்னு வர்ணிப்பு அர்த்தம்.
பாட்டுலே இது ,
குணம் நிறை மாற்றறியா பொன்னேன்னு வரியா இருக்கும்.அந்த காலத்துலே 
ரேடியோலே ராத்திரியானா அடிக்கடி ஒலி பரப்பு செய்யப்பட்ட பாட்டு.

மேலே சொன்ன இந்த பாட்டுகளும் எல்லாருக்கும் பிடிச்ச பாட்டுகள்தான்.ஒரே கதாநாயகன் லிஸ்ட்லே இது தான் டாப்டென்னா சொல்லியிருக்கேன். வேற பாட்டுக இருந்தா கமெண்ட்லே சொல்லுங்க ...

செந்தில்வேல் சிவராஜ் 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற