அவன்தான் மனிதன் படத்துலே சிவாஜி ஒரு டயலாக் பேசுவார். என்னை சுத்தி இருக்கறவங்க எல்லாம் நல்லா இருக்கணும்.இதுதான் என்னோட ஆசைன்னு அந்த டயலாக் இருக்கும். இது படத்துக்காக எழுதுன வசனமா இருந்தாலும் ,சிவாஜியோட இயல்பான நிஜ குணத்துக்காக எழுதுன வசனம் தான்னு சொல்லணும். சிவாஜி இப்படி ஒரு எண்ணத்துலே வாழ்ந்துட்டு இருந்தாலும் பல நேரங்கள்லே பல பேரு சிவாஜிக்கு எதிராவே நடந்திருக்காங்க.தன்னை பத்தி சொல்லப்படற எந்த எதிர்மறை விமர்சனம் கருத்துக்களை சிவாஜி சட்டை செய்யாததும் பதில் சொல்லாததும் செய்தி பரவலுக்கு காரணமாகவும் அமைஞ்சடுது.பிரபலமா இருந்தாலே விமர்சனங்கள் வராமே இருக்காது.
விமர்சனம் பண்றது தப்பில்லேன்னாலும் உண்மை என்னன்னு தெரியாமே விமர்சனம் பண்றதுதான் தப்பு.
இந்த டைப் விமர்சனத்தைதான் சௌகார்ஜானகியும் சிவாஜியை பத்தி ஒரு சமயம் பண்ணியிருக்கார்.
1981 ஆம் வருஷம் நடந்த விஷயம் இது.
1981 ஆம் வருஷம் கல்கி இதழ்லே சௌகார்ஜானகியோட பேட்டி ஒண்ணு வந்துச்சு.அந்த பேட்டிலே சிவாஜியோட சகாப்தம் முடிஞ்சு போச்சுன்னு ஒரு கருத்தை சொல்லி இருந்தார் சௌகார்ஜானகி.
இது எல்லாருக்கும் அதிர்ச்சியா இருந்துச்சு.சிவாஜியை பத்தி நல்லா தெரிஞ்ச சௌகாரா இப்படி பேசுனார்னு அதிர்ச்சி.
இப்படி ஒரு செய்தி வந்திருக்குன்னு தெரிஞ்ச சிவாஜிக்கு கூட இது அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. ஆனா வெளிப்படையா இதை பத்தி எந்த கருத்தையும் சிவாஜி சொல்லலே.சௌகார் ஜானகி இப்படி பேச மத்தவங்க தூண்டுதல் இருந்திருக்குன்னு சிவாஜி புரிஞ்சிகிட்டார்.
சௌகார் ஜானகி இப்படி பேச காரணம் என்ன ?
அதுக்கு பின்னாலே இருந்த விஷயம் என்ன ?
இந்த விஷயத்தை பத்தி சொல்றதுக்கு முன்னாலே 1981 ஆம் வருஷம் நடந்த சில தகவல்களை பத்தி சொல்லணும்.
தெலுங்கு நடிகர் கிருஷ்ணா சிவாஜியை வெச்சு தயாரிச்ச படம் விஸ்வரூபம்.இந்திலே வந்த அதாலத் படத்தோட ரீமேக் தான் விஸ்வரூபம்.
அமிதாப்பச்சன் வஹிதா ரஹ்மான் நடிச்சு ஹிட்டான படம்.ஸ்ரீதேவி சிவாஜிக்கு ஜோடியா நடிச்ச படம்.விஸ்வரூபம் படமும் நல்லா ஓடி வசூல் செஞ்ச படம்.சிவாஜி டபுள் ரோல் செஞ்சிருப்பார்.இந்த படம் ஓரே ஒரு விமர்சனத்துக்கு ஆளாச்சு. சிவாஜி ஸ்ரீதேவியோட ஜோடி சேந்து நடிக்கலாமான்னுதான் விமர்சனம் வந்துச்சு.
சிவாஜி ரெண்டு வேசம் பண்ணியிருப்பார்.மகனா வர்ற கேரக்டருக்குத்தான் ஸ்ரீதேவி ஜோடியா நடிச்சிருப்பார்.
இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுன ஒரு பத்திரிக்கை ,சிவாஜி எவ்வளவு பெரிய மாபெரும் கலைஞன் ,இப்போ இருக்கற டைரக்டர்கள் இந்த மாதிரி வேசங்கள்லே சிவாஜியை நடிக்க வெக்கலாமா. ?
இளம் நடிகைகளோட மரத்தை சுத்தி டூயட் பாடற மாதிரி நடிப்பை தவிர்த்து சிவாஜியை தரமான படங்களில் நடிக்க வைத்தால் அது இன்னும் அவருடைய புகழை வளர்க்கும்னு ஒரு கருத்தை வெளியிட்டுச்சு.
விஸ்வரூபம் படத்துக்கு பின்னாலே வந்த மோகனப்புன்னகை படத்துக்கும் சில விமர்சனங்கள் வந்துச்சு.கல்கி சாவி இதயம் பேசுகிறது பத்திரிக்கைகள் கூட சிவாஜிக்கு எதிரான பதிவுகளை வெளியிட்டு சிவாஜி சகாப்தம் முடிஞ்சிடுச்சுன்னு பதிவுகளை வெளியிட்டாங்க.
மத்த நடிகர் இப்படி செஞ்சா இப்படி விமர்சனம் வர்றது இல்லே. சிவாஜியை சுத்தியே விமர்சனங்களை எழுப்பறது இங்க இருக்கற சிலருக்கு வாடிக்கையா இருந்திருக்கு.
இதே காலகட்டத்துலே தான் கல்தூண் வா கண்ணா வா கீழ்வானம் சிவக்கும் படங்களையும் கொடுத்தார்.அதெல்லாம் தெரியலையா? ஒரு நடிகன் அவனோட உண்மையான வயசை காட்டி சினிமாலே நடிக்கறதா நடிப்பு?
ஒரே மாதிரி எல்லா படத்திலேயும் நடிச்சுட்டு இருக்கறவங்களைத்தான் இங்கே எப்பவுமே தலையிலே தூக்கி வெச்சு கொண்டடிட்டு இருக்காங்க.
இப்ப சௌகார் ஜானகி மேட்டருக்கு வரலாம்.
சௌகார் ஜானகி ஒரு தெலுங்கு படத்துலே நடிச்சிருந்தாங்க.
அந்த படம் தெலுங்குலே ஹிட்டாச்சு. தமிழ்லே இந்த படத்தை எடுக்கலாம்னு முடிவாச்சு. படத்தை தயாரிக்க இருந்தவர் சிவாஜி பேமிலி டாக்டர்.தமிழ்லே எடுக்க இருந்த படம் சத்தியசுந்தரம்.இந்த படத்துக்காக சம்பளம் வாங்காமல் சிவாஜி நடிச்சதாகவும் செய்தி இருக்கு.
கதாநாயகியா யாரை போடலாம்னு விவாதம் நடந்தப்போ டாக்டர் பாலகிருஷ்ணன் கே ஆர் விஜயாவை போடலாம்னு சொல்லிட்டார்.
தெலுங்குலே நடிச்சவர் சௌகார் ஜானகி.சௌகாரையே அந்த படத்துலே நடிக்க வெக்கலாம்னு சிவாஜி சொன்னார் .ஆனால் தயாரிப்பாளரோட பிடிவாதத்தாலே
கே ஆர் விஜயாவே கதாநாயகியா நடிச்சாங்க.
எப்படியும் தன்னைத்தான் கதாநாயகியா போடுவாங்க,சிவாஜி தன்னைத்தான் சிபாரிசு செய்வார்னு பெரிய நம்பிக்கை வெச்சிருந்தார் சௌகார் ஜானகி.ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்த சௌகாருக்கு
கே ஆர் விஜயாதான் நடிக்க போறாங்கற செய்தி பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு.
இந்த தகவலை சௌகார்கிட்டே சொன்னவங்க சிவாஜிதான்
கே ஆர் விஜயாவை செலக்சன் பண்ணுனதா ஒரு தவறான தகவலை சொல்லிட்டாங்க.சௌகார் ஜானகிக்கு சிவாஜி மேலே ஒரு வருத்தம் ஆச்சு.
இதையெல்லாம் மனசுலே வெச்சுட்டு,அந்த சமயத்துலே கல்கிக்கு கொடுத்த பேட்டிலே சிவாஜி சகாப்தம் முடிஞ்சிருச்சுன்னு அதிரடியா ஒரு பேட்டியை கொடுத்துட்டாங்க.தன்னை பத்தி நல்லா தெரிஞ்ச சௌகாரே இப்படி ஒருபேட்டி கொடுத்தது சிவாஜிக்கும் அதிர்ச்சியாத்தான் இருந்தது.ஆனாலும் இதை பத்தி சிவாஜி பேசலே.சௌகார் ஜானகியை யாரோ பிரெய்ன் வாஸ் பண்ணியிருக்காங்கன்னு சிவாஜிக்கு புரிஞ்சது.
சௌகாரை நேர்லே பாத்து பேசுனா என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாம்னு சிவாஜி முடிவெடுத்தார்.அதுபடியே சௌகாரை சந்திக்கற வாய்ப்பு வந்துச்சு..
அப்பத்தான் சௌகார் சத்தியசுந்தரம் பட விஷயத்தை சொன்னார்.சிவாஜிதான் சௌகார் வேண்டாம்னு சொன்ன மாதிரி தனக்கு வந்த தகவலை சொன்னார்.
நடந்த விஷயத்தை சிவாஜி அப்படியே சொல்ல ,சிவாஜியோட நல்ல மனசை புரிஞ்சுகிட்டு அவசரமா தான் செஞ்ச தப்புக்காக சிவாஜிகிட்டே மன்னிப்பு கேட்டார்.
சௌகார் ஜானகி அவசரப்பட்டு விமர்சனம் பண்ணுனதா சொல்லிட்டாலும் ,அவங்க பழைய விஷயத்தை நினைச்சு பாத்து இருக்கணும். புதிய பறவை படத்துலே நடிக்க சௌகாரை ரெக்கமண்ட் பண்ணுனதே சிவாஜிதான். எல்லாரும் சௌகாரா , வேண்டாம்னு சொன்னப்போ சிவாஜிதானே சௌகாரை நடிக்க வெச்சார்.
சிவாஜியோட கணிப்பு தப்பா போனதில்லே.இப்படி பல விஷயம் இருக்கறது சௌகாருக்கு தெரியும்.அதெல்லாம் தெரிஞ்சும் சௌகார் போய் இப்படி பேசி இருக்கலாமா?
தெலுங்குலே சௌகார் நடிச்சிருக்கலாம் .ஆனா,
சத்தியசுந்தரம் படத்துலே
கே ஆர் விஜயா செஞ்சதுதான் ரொம்ப பொருத்தமா அமைஞ்சிருக்கும்.கே ஆர் விஜயா அளவுக்கு சௌகாரை ரசிச்சிருக்க முடியுமா?
அதுக்கு பின்னாலே 1987 லே சிவாஜி புரொடக்சன் தயாரிச்ச ஆனந்த் படத்துலே கூட சௌகார் நடிச்சாங்க.சிவாஜி கட்சி ஆரம்பிச்சதும் அதுலே சேந்தாங்க.சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பா சிவாஜி பிறந்த நாள்லே சௌகாரை கௌரவம் செஞ்சாங்க.
இப்படி எத்தனையோ ...
சத்தியசுந்தரம் படம் ரிலீசாகி நல்லா ஓடுச்சு. லேடீஸ் கூட்டம் அதிகமா இருந்துச்சு.சிவாஜி படங்களுக்கு விமர்சனம் எழுத மாட்டோம்னு எந்தெந்த பத்திரிக்கைககள் சொல்லுச்சோ ,அதே பத்திரிக்கைககள் இந்த சிவாஜியைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்னு சொல்லுச்சு.
சிவாஜி ஒரு நிரந்தர நடிகன்,முடிவே இல்லாத மூலவர்னெல்லாம் புகழ்ந்து தள்ளுச்சு.சிவாஜிக்கென்ன இதென்ன புதுசா?பராசக்தி தாலத்துலே இருந்தே இதெல்லாம் பாத்துட்டு வந்தவர்தானே!
காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்னு சொல்வாங்க.சிவாஜியும் கல்லடியும் சொல்லடியும் பட்டிருக்கிறார்.எது இருந்தாலும் அவரோட திறமை அவர் ஒருத்தருக்கு மட்டும்தான் சொந்தமானது.
அதை யாராலும் மீற முடியாது.
இந்த படத்துக்கு பின்னாலேதான் கல்தூண்
வா கண்ணா வா கீழ்வானம் சிவக்கும் தீர்ப்பு நீதிபதி பரீட்சைக்கு நேரமாச்சு மிருதங்க சக்கரவர்த்தி வெள்ளைரோஜா தாவணிகனவுகள் பந்தம் எல்லாம் பண்ணுனார்.இதுல எல்லாம் மத்தவங்களை நெனச்சு பாக்க முடியுமா?
முதல் மரியாதை வந்த பின்னாலே சிவாஜி சிவாஜிதான்னு சொன்னாங்க.தேவர்மகன் பாத்துட்டு உலக விருதெல்லாம் உனக்கு சாதாரணம்னு சொன்னாங்க.
சினிமா இருக்கறவரை சிவாஜி சகாப்தமும் இருக்கும்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக