சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

தர்மம் எங்கே

தர்மம் எங்கே
இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில '1972ன் திருஷ்டிப்பொட்டு'ன்னு செல்லப்பெயர் உண்டு. காரணம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரைக்கும்  நடிகர்திலகத்தின் வெற்றி தொடர்ந்தது (அதுலே பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நாலும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). இந்த 7 படங்கள்லே 72 ஆம் வருசம் நடுவுலே வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதுக்கு முதல் காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் செகண்ட் ஆப்லே ஓட்டை விழுந்த திரைக்கதை இதுதான் காரணம்.

கதாநாயகன் படம் முழுவதும் வில்லனோட  போராடி, கடைசியிலே அவன்கிட்டே இருந்து ஆட்சியை மீட்பது மாதிரி இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். 

ஆனால் இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் 'மாப்பிள்ளை - மைத்துனன்' சண்டையில் தான் படம் போகும்
. இவ்வளவு பிரமாண்டமான படத்தை இழுத்துச்செல்ல முத்துராமன் எல்லாம் ஒரு வில்லனா?. நல்ல வேளையாக கிளைமாக்ஸில் மீண்டும் நம்பியார் வர , கொஞ்சம் விறுவிறுப்பு சேரும்.

1972 ஆம் வருஷம் தர்மம் எங்கே  படத்துக்குத்தான் ரசிகர்கள்கிட்டே அதிக எதிர்பார்ப்பு இருந்துச்சு அப்படிங்கறதுதான் உண்மை.

யாருமே பட்டிக்காடா பட்டணமாவோ  வசந்த மாளிகையோ இந்த அளவு பிரமாண்ட வெற்றி அடையும்னு எதிர்பார்க்கலை .

எல்லோரும் எதிர்பார்த்தது 'தர்மம் எங்கே' படத்தைத்தான். ஆனால் இதற்கு முன் வெளியான பட்டிக்காடா பட்டணமாவோட பெரிய வெற்றியைப்பார்த்து, தர்மம் எங்கே படம் அதையெல்லாம் முறியடிக்கும் சாதனைப்படமாக இருக்கப்போகுன்னு தான் எதிர் பாத்துட்டு இருந்தாங்க.

அப்ப வந்த  'மதிஒளி' பத்திரிகையிலும் தொடர்ந்து அந்தப்படத்தின் செய்திகளும், ஸ்டில்களும் வெளியாகி ரசிககளோட உற்சாகத்துக்கு தீனி போட்டது.

தமிழ்நாடு முழுக்க இருந்த சிவாஜி மன்றங்களில் 1972 ஆம் வருசம் வெளியான படங்கள் தான் சிவாஜி ரசிகர்கள் மத்தியிலே அதிகம் பேசற விஷயமா இருந்துச்சு.

அப்போ 'பட்டிக்காடா பட்டணமா', 'ராஜா', அதையடுத்த 'ஞான ஒளி' படங்க எல்லாம் Housefullஆ  ஓடிட்டு இருக்கு.

இதுக்கு அடுத்து வெளியாகப் போற , 'தர்மம் எங்கே' படம் பத்திதான் ரசிகர்கள் கிட்டே ஒரே பேச்சா இருந்துச்சு.
தர்மம் எங்கே  படம் ரிலிசான தியேட்டர்கள்லே  படத்தோட ஸ்டில்கள் எல்லாம் வெச்சிருக்காங்கன்னு நியூஸ் வந்ததுச்சு. அதை கேள்விப்பட்டு  அதை பாக்கறதுக்காகவே ரசிகர் கூட்டம் தியேட்டருக்கு படையெடுத்தாங்க.
இப்போ தர்மம் எங்கே படத்துக்காக தான் மொத்த ரசிகர் படையும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.

இடையிலே  மார்ச் மாசம் தினத்தந்திலே Full page விளம்பரம் ஒண்ணு வந்துச்சு. படம் ஏப்ரல் வெளியீடுன்னு போட்டு இருந்துச்சு.அந்த விளம்பரத்துலே சிவாஜி நிக்கற போட்டோவை ரொம்ப பெருசா 'ஜெயண்ட்' சைஸ்லே போட்டு ,ஜெயலலிதாவை சின்னதா போட்டு ,ஜெயலலிதா  மலை போல இருக்கற சிவாஜியை 'ஆ'ன்னு   பாக்கற மாதிரி அந்த விளம்பரம் வெளியாச்சு.இந்த விளம்பரத்தை பாத்ததும் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பிச்சது.

ஆனா படம் ஏப்ரல் மாசம் வெளியாகலே.ஜூன் 1 ந்தேதி படம் ரிலிஸ்னு மறுபடியும் ஒரு விளம்பரம் .கால் பக்க விளம்பரம்.ஜூன் 1ஆம் தேதியும் படம் வரலே. 
ஜூலை 15 ந்தேதி கன்பார்ம் ஆகி படம் தமிழ்நாடு பூரா ரீலீஸ் ஆச்சு.
ஏற்கெனவே அந்த வருசம் சிவாஜியோட 3 படம் செம ஹிட்டுலே ரன்னிங்கா இருந்துச்சு. பட்டிக்காடா பட்டணமாவோ வெள்ளிவிழா டார்க்கெட்லே போய்ட்டு இருந்துச்சு.
தர்மம் எங்கே 35 ஊர்கள்லே மொத்தம் 38 தியேட்டர்லே ரிலீஸ் பண்ணுணாங்க.100 நாள் ஓடறதுக்கே மூணே கால் மாசம் ஆகும். அந்த கேப் கூட இல்லாமே சிவாஜி படங்கள் வந்துட்டு இருந்தா என்ன பண்றது. அப்படியும் சாதிச்சதுதான் சிவாஜி படங்கள்.வெள்ளிவிழா ஓட வேண்டிய படங்கள் எல்லாம் 100 நாள் லிஸ்ட்டுலே இருக்கறதுக்கு காரணம் இதுதான்.

ரிசர்வேஷன் தொடங்குனப்பவே படம் ரிலீசான மாதிரி கூட்டம்.பரபரன்னுகூட்டம் அலை மோதுச்சு.பல நாள் ரிசர்வுலே டிக்கெட் எல்லாம் வித்து தீந்துருச்சு.
அப்போ எலல்லாம் முதல் வகுப்புக்கு மட்டுமே ரிசர்வ் செய்யமுடியும் . மற்ற கிளாஸ் டிக்கட்டுகளை காட்சி நேரத்திலே கியூவில் நின்னு வாங்கிக்கணும்.

சனிக்கிழமை  படம் வெளியாச்சு  (நடிகர்திலகத்தின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகாது, சனிக்கிழமைகளில்தான் ரிலீஸ் ஆகும்). முதல்நாள் 
தியேட்டர் அலங்காரங்கள் கொடிகள் தோரணங்கள் ரசிகர் பேனர்கள் தட்டிகள் நோட்டீஸ்கள்னு ரசிகர்கள் பெரிய அலப்பறை பண்ணியிருந்தாங்க.
வழக்கமா செய்யறைக் காட்டிலும் கூடுதலா செலிப்ரேசன் பண்ணியிருந்தாங்க.

படம் ஆரம்பமானதுலே இருந்து ஆரவாரம், கைதட்டல், விசில் பறந்தது.. குறிப்பா முதல் ஒரு மணிநேரம் படம் அசுரத்தனமா போச்சு.ரசிகர்கள் ஏக ரகளை பண்ணுனாங்க.

நடிகர்திலகத்தின் படங்கள்லேயே மிகவும் வித்தியாசமான படமா இருந்தது. அதுக்கேத்த மாதிரி சூப்பர் வில்லன் நம்பியார், மற்றும் ஜெயலலிதா. இடைவேளையின்போதே எல்லோர் மனசிலும் ஒரு எண்ணம்... படம் பெரிய வெற்றிதான் என்று. ரசிகர்கள் மத்தியில் உற்சாக கொண்டாட்டம். இடைவேளையின்போது, 'கேட்'டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் படம் எப்படி என்று சைகையால் கேட்க, உள்ளே நின்ற ரசிகர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக்காட்ட... தியேட்டருக்கு வெளியே அப்போதே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

ஆனால் இடைவேளைக்குப் பின்னாலே படத்தின் போக்கு அப்படியே மாறிப்போச்சு .
நடிகர்திலகத்தின் கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாத்துன மாதிரி திரைக்கதை. ஒரு நல்ல மக்கள் தலைவனாக காட்டாம, ஒரு அகம்பாவம் பிடிச்சவரா காண்பிக்கப்போக ரசிகர்களின் உற்சாகம் குறைஞ்சு போச்சு . பொது மக்களும் இப்படி ஒரு 
கதையோட போக்கை எதிர்பார்க்கலை. போதாக்குறைக்கு, வில்லன் நம்பியாரும்  தலை மறைவாகி விடுவார்.. படம் தொய்ந்து போனது. படம் முடிஞ்சு வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் குறைவா இருந்தது.
செகண்ட் ஆப் போர்சன் காட்சிகள் ரசிகர்கிட்டே ஒரு சோர்வை கொடுத்துருச்சு.

படத்தோட முக்கியமான ரசிப்பு காட்சிகள் :
படத்தோட  முன்பாதியில நள்ளிரவிலே சர்வாதிகாரி நம்பியாரின் ஆட்களால் துரத்தப்பட்டு ஓடி வரும் சிவாஜி, பூட்டியிருக்கும் ஒவ்வொரு வீட்டு கதவாக தட்டி, அடைக்கலம் கேட்டுக் கதற, யாருமே கதவைத் திறக்க மறுக்க, தாகத்தால் ஒருவீட்டின் வாசலில் இருக்கும் மண்பானையை எடுத்து வாயில் கவிழ்ப்பார். அதில் சொட்டு நீரும் இல்லாமல் காலியாக இருக்க, சோர்வுடன் தன் வீட்டுக் கதவு கூட பூட்டியிருப்பது கண்டு, கதவைப்போட்டு அடிப்பார், உள்ளே கதவைத் திறக்கவிடாமல் அவருடைய அம்மாவையும், தங்கையையும் (குமாரி பத்மினி) வீட்டிலுள்ளோர் கையைக் கட்டி வாயைப்பொத்தி அமுக்கிப் பிடித்திருப்பார்கள். அதற்குள் துரத்தி வரும் வீரர்கள் நெருங்கி விட, வேறு வழியின்றி காட்டுக்குள் ஓடிப்போவார். இந்த இடத்தில் திரைக்கதையும், சிவாஜியின் நடிப்பும் நம்மை பதை பதைக்க வைக்கும். (நைட் எஃபெக்டில் சூப்பரான வண்ண ஒளிப்பதிவு கண்களை கொள்ளைகொள்ளும்).

சர்வாதிகாரி நம்பியார், தன்னை எதிர்ப்பவர்களின் பெயர்களைக் கேட்டு ஒரு ஏட்டில் குறித்து வைத்து, அவர்களைப் பழிவாங்குவார். சிவாஜி பதவிக்கு வந்ததும், தன்னை எதிர்க்கும் ஒருவனின் பெயர்கேட்டு முதன்முதலாக ஏட்டில் குறிக்கப்போகும் சமயம், பின்னணியில் இடியோசை போல நம்பியாரின் சிரிப்பொலி கேட்டு திகைத்து பின்வாங்குவது, திருலோகசந்தரின் டைரக்ஷனைக் காட்டும் நல்ல இடம்.

படத்தின் கிளைமாக்ஸ், செஞ்சிக்கோட்டையில் படமாக்கியிருப்பார்கள். நம்பியாரும் அவரது ஆட்களும் சுற்றி நின்று துப்பாக்கியால் சுட சிவாஜி தன் தங்கையை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு தூணாக மறைந்து மறைந்து முன்னேறுவதும், இறுதிக்காட்சியில் பாம்புகள் இருக்கும் பள்ளத்தில் விழுந்து விடும் நம்பியார் அந்த பாம்புகள் கடித்து இறப்பது மாதிரியான க்ளைமாக்ஸ் காட்சி பெரிய வரவேற்புடன் அமைந்தது.

நம்பியாரிடமிருந்து அதிகாரத்தை நடிகர்திலகம் கைப்பற்றுவதோடு நிறுத்தி 'இடைவேளை' கார்டு போடுவார்கள். இடைவேளை முடிந்து, முதல் பாடல் 'நான்கு காலமும் உனதாக' என்ற பாடல்தான். தலைமைப் பொறுப்பில் அமர்ந்த நாயகனைப் பாராட்டி, ஜெயலலிதாவும் குழுவினரும் பாடி ஆட, அதை சிம்மாசனத்தில் அமர்ந்து நாயகன் ரசிப்பதாக படமாக்கப் பட்டிருக்கும். அதில் நான்கு வித பருவங்களைப்பற்றி ஜெயலலிதா பாடும்போது, அதற்கேற்ப பின்னணி காட்சிகளும் மாறும். ஆனால் பாடல் சுமார் ரகம்தான்.

'சுதந்திர பூமியில்', 'பள்ளியறைக்குள் வந்த', 'வீரம் என்னும் பாவைதன்னை' பாடல்கள் மனதைக் கவர்ந்த அளவுக்கு இது கவரவில்லை. இவை மூன்றும் மூன்று முத்ததான பாடல்கள்.

'பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே' பாடல் இரவு நேர சூழ்நிலையில் ('நைட் எஃபெக்ட்'), படகில் நடிகர் திலகமும் ஜெவும்  பயணிக்கும்போது, சுற்றிலும் வாண வேடிக்கைகள் கண்ணைக்கவரும் (அதற்கு ஏற்றாற்போல அற்புதமான ஒளிப்பதிவும், கலரும்).

அதுபோல 'சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்' பாடல் அவுட்டோரில் அழகான லொக்கேஷன்களில், மலர்நிறைந்த கூடையை நடிகர்திலகம் முதுகில் சுமந்துகொண்டு, புன்னகை மாறாத முகத்துடன் பாடிவரும் அழகு. (இப்பாடல் முழுக்க அவர் முகத்தில் ஒரு கம்பீரமான புன்னகை தவழும்).

இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...

'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'

நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).

'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்'   திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.

1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். தொய்வு நிலைக்குக் காரணம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.

'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......

'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...

நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற