ஸ்ரீதர் நடத்திய பத்திரிக்கை சித்ரலாயா.அதில் ஒரு வாசகர் இப்படி கேள்வி கேட்டிருந்தார்.சிவாஜியை வெச்சே படங்க எடுத்துட்டு வந்திருக்கீங்க.எப்போ 'இவரை' வெச்சு படமெடுக்க போறீங்க ?இவரைன்னா சிவாஜிக்கு போட்டியா இருந்த நடிகர்.
கூட இருந்த கோபு இப்போதைக்கு இல்லைன்னு பதில் போட்டறவான்னு ஸ்ரீதர் கிட்டே கேட்டார்.
ஸ்ரீதருக்கு அப்பத்தான் அந்த எண்ணமே வந்துச்சு.
'விரைவில் எதிர்பாருங்கள்னு' பத்திரிக்கையிலே பதில் போட்டுட்டார்.கூட இருந்த கோபுவுக்கே இது அதிர்ச்சியா இருந்துச்சு.
அந்த நேரத்துலே நடந்த விஷயம் இது..
1968 ஆம் வருசம் வந்த படம் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்துக்குத்தான் கண்டிப்பா தமிழக அரசு விருது கொடுக்கும்னு சிவாஜி உள்பட எல்லாரும் நெனச்சுட்டு இருந்தாங்க. ஆனா அப்போ இருந்த திமுக அரசு மாற்று முகாமோட'கோயில் ' படத்துக்கு விருது கொடுத்துருச்சு. அந்தப்படம் எப்படி? இந்த படம் எப்படி .. தமிழ் கலாச்சாரம்னு வாய் கிழிய பேசறாங்களே..பரதத்தையும் நாதஸ்வரத்தையும் பத்துன அந்த படத்தை விடவா ...
என்ன பண்றது ..
எல்லாமே அரசியல்தான்..
தமிழ் சினிமாலே சிவாஜி குரூப் ,எதிர் முகாம் குரூப்னு இருக்கு.
கலாட்டாகல்யாணம் சூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. கோபு பக்கத்துலே இருக்கார்.
என்ன கோபு ,உங்க ஆளு குண்டு போட்டிருக்கார். விரைவில் எதிர்பாருங்கள்னு ..
என்ன நடக்குதுன்னு சிவாஜி கேட்டிருக்கார்.
அதெல்லாம் ஒண்ணுமில்லேண்ணா ,
நடக்கற காலத்துலே பாத்துக்கலாம்னு மழுப்பலா பதில் சொல்லிட்டு நழுவிட்டார்.
அதே நேரத்துலேதான் ,
ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தார் ஸ்ரீதர்.அன்று சிந்திய ரத்தம்ங்கற தலைப்புலே மாற்று முகாம் நடிகருக்கு கதை சொல்ல போயிருந்தார் ஸ்ரீதர்.
கலாட்டா கல்யாணம் சூட்டிங் ஸ்பாட்டுலே C.V.ராஜேந்திரனுக்கு கொஞ்சம் கவலையாத்தான் இருந்துச்சு.இப்பத்தான் சிவாஜி படம் கிடைச்சிருக்கு. தொடர்ந்து வேலை செய்ய முடியுமான்னு ஒரு சங்கட உணர்வு.
அன்று சிந்திய ரத்தம் படத்தோட கதைன்னு ஸ்ரீதர் சொன்னது இதுதான்:
ஒரு சதிகார கூட்டம்,நாட்டை சுரண்டி ,மக்களை ,
மாணவர்களை ஏமாத்தி கொள்ளை அடிக்குது.ஒரு இளைஞன் அவங்களை எதுத்து மாணவர்களை ஒண்ணு சேத்து அந்த வில்லன் கூட்டத்தை முறியடிக்கிறான்.கூடவே ஸ்ரீதரோட ஸ்பெசாலிட்டியான முக்கோண காதல் கதையையும் மிக்ஸ் பண்ணி அந்த கதை அமைஞ்சிருந்தது.
எதிர் முகாம் நடிகருக்கு அது ஓ.கே. ஆயிடுச்சாம்.
ஒரு குறிப்பிட்ட நாளில் அன்று சிந்திய ரத்தம் பூஜை நடந்தது.
கலாட்டா கல்யாணம் சூட்டிங்க்லே ,நீ பூஜைக்கு போகலியான்னு கோபுகிட்டே சிவாஜி கேட்டார்.
காலையிலே உங்க படம் ,சாயந்தரம் வேற பட வேலை இருக்கு. அது முடிஞ்சுதான் ஸ்ரீதரை போய் பாக்கணும்னு சொல்லிட்டார்.
தன் நண்பனான ஸ்ரீதரையும் ,தன்னையும் விட்டு கொடுக்காமே கோபு பேசுனது சிவாஜிக்கு ஒரு திருப்தி.
அப்ப சிவாஜி சொன்னாரு .ரத்தபாசம் பட காலத்துலே இருந்தே ஸ்ரீதரை பாத்துட்டுதான் வரேன். விடிவெள்ளி படத்துலே நான் எப்படி ஆதரவு கொடுத்தேன் .என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லாமே அந்த பக்கம் போயிட்டாரேன்னு சிவாஜி சொல்ல,கோபு சமாதானம் சொன்னார்.
அந்த பக்கம் இந்த பக்கம்னு சித்ராலயாவுக்கு ஏதும் கிடையாதுன்னே. உங்களை வெச்சும் படம் எடுக்கப்போறதா ஸ்ரீதர் சொல்லிட்டு தானே இருக்கார்னு கோபு சொன்னார்.
பாக்கலாம்னு சொன்னார் சிவாஜி.
அன்று சிந்திய ரத்தம் பட முதல்நாள் ஷுட்டிங் நடந்து முடிஞ்சது.சாயந்தரம் கோபு ஸ்ரீதர்கிட்டே ,சிவாஜி வருத்தப்பட்டதை சொன்னார்.
ஒரு இயக்குனர் சுதந்திரமா வேலை செய்யணும். அந்த நடிகர் இந்த நடிகர்னு எந்த பக்கமும் சாயாமே இருந்தாத்தான் படைப்பாளியா நல்லா வேலை செய்ய முடியும்னு சொன்ன ஸ்ரீதர்..
சிவாஜிக்கும் ஒரு படம் செய்ய போறேன்..ஒரே சமயத்துலே ரெண்டு பேர் படத்தையும் செய்யப்போறேன்னு ஸ்ரீதர் சொன்னதை கேட்ட கோபு..
நல்ல முடிவுதான்..ஆனால் கத்தி மேலே நடக்கற மாதிரின்னு சொன்னார்.
அந்த வார வெள்ளிக்கிழமை பத்திரிக்கைகளில்...
முதல் பக்கத்தில் சிவந்தமண் பட அறிவிப்பு வெளியாச்சு.
நடிகர்திலகம் சிவாஜி நடிக்கும் சிவந்த மண்...
இந்த படத்தின் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் எடுக்க போவதாகவும் ,படம் கலரில் தயாரிக்க போவதாகவும் ,
பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டது.
பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் அன்று சிந்திய ரத்தம் பட விளம்பரம் இடம் பெற்றது.
முதல் பக்கத்தில் சிவாஜி பட விளம்பரம் ,கடைசி பக்கத்தில் அன்று சிந்திய ரத்தம் பட விளம்பரத்தையும் பார்த்த கோடம்பாக்கம் வியந்து போச்சு..ஒரே நேரத்தில ரெண்டு பேரையும் வெச்சு எடுக்கப் போற விஷயம் திரையுலகம் காணாத புதுமையா பேசப்பட்டது.
அன்று மதியமே வந்த அந்த போன்கால் ஸ்ரீதரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.
எதிர்முகாம் நடிகர் செய்த போன்தான் அது.
அன்று சிந்திய ரத்தம் படத்தில இருந்து நான் விலகிக்கிறேன்.இது சரிப்பட்டு வரணும்னு தோணலை என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்.
மூணு நாள் சூட்டிங் வேற நடந்துச்சே.அதுக்குள்ள என்ன ஆச்சுன்னு ஸ்ரீதருக்கு குழப்பம் .கோபுவை பாத்து பேசினார்.
ஒரு உறையிலே ஒரு கத்திதான் இருக்கணும் .நீ ரெண்டு வெச்சுக்க ஆசைப்பட்டே.அவ்வளவுதான்.
வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது.நீ வர்றதுக்கு முன்னாலேயே எனக்கு தகவல் வந்துருச்சு என்றார் கோபு.
இந்த படம் சரியா வராதுன்னு ஒரு இயக்குனர் அவர் கிட்டே ஏதேதோ பேசியிருக்கார்னு தகவல் வந்துச்சு.நீ இனிமே ஆக வேண்டியதை பாரு,நாம சிவந்தமண்லே போகஸ் பண்ணலாம்னு கோபு ஸ்ரீதரை சமாதானம் செய்தார் ...
கோபுவோட பேச்சாலே ஸ்ரீதருக்கு மகிழ்ச்சி. “கோபு!
சிவந்த மண் படத்துல ஒரு புதுமையை புகுத்தப்
போறேன்.ஆக்ஷன், மியூசிக் அப்புறம் வேர்ல்ட் டூர் அடிச்சு படத்தை எடுக்க போறேன் .
விஸ்வநாதன்ங்கற அந்த
மியூசிக் ஜீனியஸ்சோட
முழு திறமைகளையும்
வெளிக்காட்டற மாதிரி படம் அமையணும். இதை ஆக்ஷன் படமா நான் எடுக்க
போறேன். படத்தோட
பாட்டுகளை ,
முக்கியகாட்சிகளையும்
வெளிநாட்டுல எடுக்கப்போறேன்
என்றார்.
அன்று சிந்திய ரத்தத்தால் ஏற்பட்ட ஏமாற்றங்களை மறக்க,சிவந்த மண் படத்துக்கு விசேஷ சிறப்புகளை ஏற்படுத்த நினைச்சார் ஸ்ரீதர்.
இந்த நேரத்துலேதான் சிவந்தமண் பட கதை என்னான்னு கேட்டார் கோபு.
நாளைக்கு கலாட்டாகல்யாணம் சூட்டிங்க்லே சிவாஜி கிட்டே சொல்லிடலாம் அல்லவா என்றார்.
ஸ்ரீதர் சொன்ன சிவந்தமண் கதை :
வசந்தபுரிங்கிற பகுதில
ராணுவ தளம் அமைக்க
விரும்புறாங்க
போர்ச்சுகீயர்கள். திவான்னு (நம்பியார்) ஒரு லோக்கல் ஆட்சியாளர் அந்த இடத்துல கொடுங்கோல் ஆட்சி
நடத்திட்டு வர்றான். அவனை மன்னன் ஆக்குறோம் .
எங்களுக்கு தளம் அமைக்க உதவி செய்னு போர்ச்சுகல் நாட்டு ஆளுங்க
கேட்க, அவனும்
சம்மதிக்கிறான். அதை மக்கள் எதிர்த்து போராட, திவான் அவர்களை கொலை
செய்ய ஆரம்பிக்கிறான். ஆனந்த் (முத்துராமன்) என்கிற ஒரு பையனோட அப்பா
திவானால் கொலை
செய்யப்படறதால அவன்
திவானை பழி வாங்க
நினைக்கிறான். பரத்(சிவாஜி )
பெர்ன்) பல்கலைகழத்துல படிக்க, அங்கேயே வசந்தபுரி இளவரசி சித்ரலேகா (காஞ்சனா ) படிக்க தன்னை இளவரசின்னு சொல்லாமே, வசந்தினு ஒரு சாதாரண
பெண்ணா அறிமுகம்
செஞ்சுகிட்டு, பரத்தை காதலிக்கிறா .ஐரோப்பாவுல ரெண்டு பேரும் சுத்தி
திரியுறாங்க. ஆனந்த்
கொல்லப்பட, தனது நண்பனை கொன்ற திவானை சித்ரலேகா மற்றும் நண்பர்கள்
உதவியோட பழிவாங்குகிறான் பரத். வசந்தபுரியிலே
அமைதியை நிலை
நாட்டறாங்க. இதுதான் கதை .” - என்றார் ஸ்ரீதர்.
கலாட்டா கல்யாணம் சூட்டிங் ஸ்பாட்.ஸ்ரீதர் பக்கத்துலே. அன்று சிந்திய ரத்தம் விவகாரத்தை எல்லாம் சிவாஜி ஸ்ரீதர் ரெண்டு பேருமே கண்டு கொள்ளவில்லை.
கதை எனக்கு புடிச்சிருக்கு .வெளி நாட்டுலே எடுக்க போறதா சொல்லறே.எனக்கு முன்னாலேயே சொல்லிடு .நான் தேதி கொடுக்கறேன்னு சிவாஜி சொல்லிட்டாரு.சிவாஜி ஓகேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாருன்னா போதும். எந்த பிரச்சினையும் இடையிலே வராது. 100 சதவீத நம்பகத்தன்மைக்கு சிவாஜி தான் உதாரணம்.இதான் சிவாஜி.
அடுத்ததா MS.விஸ்வநாதன் கிட்டே ,உன்னோட திறமையெல்லாம் வெளி வரணும் ,புகுந்து விளையாடுன்னு சொல்லிட்டாரு.
ஒரு பாட்டுலே கண்ணதாசன் , 'நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணம் இன்றி போய்விடுமோன்னு ' எழுதி இருப்பார்.இது இந்திராகாந்தியை நெனச்சு கண்ணதாசன் எழுதுன வரின்னு சொன்னா ஆச்சர்ய படாமே இருக்க முடியாது.
1969 ஆம் வருஷம் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த இந்திராகாந்தி ,1970 ஆம் வருஷத்தை உலக அமைதி ஆண்டா அறிவிக்கணும்னு ஐநா. சபையிலே பேசுனார்.உலக தலைவர்கள் எல்லாம் இந்திராவை சூழ்ந்து கொள்ள இந்திரா அவர்கள் வெட்கத்துடன் அவர்களை விட்டு விலகும் ஒரு புகைப்படம் வெளிவந்திருந்தது. அதை மனசுலே வைச்சு கண்ணதாசன் எழுதுன வரிகள் தான் இது.
இந்த படத்தின் பாடல்களில் எல்லாம் மகாராணி யுவராணி பட்டத்து ராணின்னு பல ராணி வார்த்தைகளை எழழுதியிருப்பார் கண்ணதாசன்.அந்த காலகட்டத்துலே இந்திராகாந்தியோட சோஷலிச பார்வையை மனசுலே வெச்சுட்டு இப்படி எழுதினார்.பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்ங்கற வரி இந்திராவை மனசுல வெச்சு எழுதுனது.
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாட்ட பத்தி ஒரு செய்தி.தமிழ்லே L.R.ஈஸ்வரி பாடியிருப்பாங்க.
இந்திலே லதா மங்கேஷ்கர் பாடுனத கேட்ட இசையமைப்பாளருக்கு திருப்தி இல்லே.
லதா மங்கேஷ்கருக்கு தமிழ் பாட்டை போட்டு காட்டுனாங்க.
அந்த விசும்பல் , மூச்சிழுப்பு,எல்லாம் செய்ய ரொம்ப கஷ்டப்பட்டாங்க
லதா மங்கேஷ்கர் .
தமிழ் பாட்டை கேட்ட லதாமங்கேஷ்கர் மிரண்டு போயிட்டாங்க.
ஹரே பகவான் !இந்த மாதிரி எல்லாம் என்னாலே பாட முடியாது.இந்த மாதிரி சுவாசத்தோட பாடறதுன்னா அபாரமான திறமை இருக்கணும் .ஈஸ்வரிக்கு என்னோட பாராட்டுகளை சொல்லுங்க ,என்றார்.தர்த்தி இந்திபடத்துலே லதா பாடுனத கேட்டுப் பாத்தா அவங்க பட்ட சிரமங்களை உணர முடியும்.
சிவந்தமண் படத்தை வெளிநாட்டுலே அதிக அளவு எடுக்கத்தான் ஸ்ரீதர் பிளான் பண்ணியிருந்தார்.
பார்வை யுவராணி கண்ணோவியம் பாட்டை ஈபிள் டவர்லே சூட்டிங் பண்ணிட்டு இருந்தப்போ தான் அந்த அதிர்ச்சியான செய்தி ஸ்ரீதருக்கு வந்துச்சு. அவரோட தாயார் மரணம் அடைஞ்சதா செய்தி.அதனால்தான் மேற்கொண்டு சூட்டிங் பண்ண முடியாமே இந்தியா திரும்பிட்டாங்க.ஸ்ரீதர் தானும் மனைவியும் மட்டும் போறதாவும் மத்தவங்க படத்தை எடுத்துட்டு
வாங்கன்னு சொன்னதை யாரும் கேக்கலை.அம்மாவோட மரண நிகழ்வுலே கலந்துக்கணும்னு எல்லாரும் சொல்லிட்டதாலே வெளிநாட்டு சூட்டிங் அதோட முடிஞ்சிருச்சு.
சென்னைலே பெரிய குழி வெட்டி ஒரு குளம் மாதிரியே பிரம்மாண்டமா செட் போட்டதும்,அது உடைஞ்சு போயி ஸ்டுடியோ எல்லாம் பாதிப்புக்கு ஆச்சு.
ஸ்ரீதரோட அம்மா மரணம்,சிவாஜி ஹெலிகாப்டர் துரத்தறப்போ மயிரிழையிலே உயிர் தப்பிச்சதுன்னு பல பெரிய சம்பவங்கள் நடந்தும் சிவந்த மண் படத்தை தரம் குறையாமே மகா மெகா ஆக்ஷன் படமா எடுத்து முடிச்சார் ஸ்ரீதர்.
கருத்துகள்
கருத்துரையிடுக