ஒரு பிரபலமான காமெடி நடிகர் யாராச்சும் ரொம்ப பிரபலமான கதாநாயகன் யாருக்காவது மகனா நடிச்சிருக்காரா .
அந்த காலத்துலே டணால் தங்கவேலு சந்திரபாபு சுருளிராஜன் நாகேஷ்லே இருந்து இந்த கால கவுண்டமணி வடிவேலு வரைக்கும் இப்படி இந்த காம்பிநேசன்லே ஏதாவது படம் வந்திருக்கா. நம்ம புத்திக்கு தெரியலே.
காமெடி நடிகர் கதாநாயகனுக்கு பிரெண்டா ரொம்ப படங்கள்லே நடிச்சிருப்பார்.சில படங்கள்லே அண்ணனா தம்பியா கூட நடிச்சிருக்கலாம்.ஒரு பெரிய மாஸ் ஹீரோவுக்கு மகனா நடிச்ச படங்களை சொல்லணும்னா ரொம்ப யோசிக்க வைக்குது.
இந்த வகையிலே நாகேஷ்ங்கற பேமஸ் காமெடி ஏக்டர் சிவாஜிங்கற இமயத்துக்கு மகனா கூட நடிச்சிருக்கார்.
பெரும்பாலான படங்கள்லே காமெடியே ஒரு தனி டிராக்குலே தான் இருக்கும்.
சீரியசா போற படம் ...
சோகமான படமா இருந்தா ஒரு காமெடி டிராக்கை வெச்சு படத்தை போரடிக்காமே பாக்க வெச்சுருவாங்க.
அதனாலே ரிலேசன்ஷிப் உறவுலே காமெடி நடிகர்களோட பங்கு பெரும்பாலும் இருக்காது.
நாகேஷை எடுத்துக்கலாம். நாகேஷ் சிவாஜிக்கு பிரெண்டா ரொம்ப படத்துலே நடிச்சிருக்கார்.
தனி கேரக்டரா ரொம்ப படங்கள்லே நடிச்சிருக்கார்.
சவடால் வைத்தின்னு தில்லானா மோகனாம்பாள் படத்துலே கதையோடவே கலந்து கலக்கியிருப்பார்.
சின்னப்பண்ணை சிங்காரமா சவாலே சமாளி படத்துலே
பிச்சு உதறியிருப்பார்.
அவ்வளவு ஏன்? புராண படமான திருவிளையாடல் படத்துலே ஒரு சின்ன போர்ஷன் தான் அதையும் கூட.. வெச்சு வெளையாண்டிருப்பார்.
படம் கொஞ்சம் ஸ்லோவோ போகுது...சோகம் ரொம்ப இருக்குன்னு தயாரிப்பாளர்கள் நெனச்சா நாகேசை போட்டு அதை ப்ளஸ் மைனஸ் பண்ணிரலாம்னு ,கதைக்கு தேவையில்லேன்னா கூட நாகேஷை போட்டு படமெடுத்துருவாங்க.
அந்த வகையிலே நாகேஷ் காமெடிக்கு தனி மவுசு இருந்துச்சு.
இந்த பதிவை தொடர்ந்து பாக்கறதுக்கு முன்னாலே இது பத்தின ஒரு விஷயத்தை சொல்றேன் .இந்த பதிவு போட எனக்கு எது தூண்டுதலா இருந்துச்சு.
போனவாரம் ஏதேச்சையா எங்க ஊர் ராஜா போட்டோ ஒண்ண பாத்தேன்.ரொம்ப தடவை பாத்த போட்டோதான் அது. அது சிவாஜியோட நாகேஷ் இருக்கற போட்டோ.கொடுவாள் மீசை நரைச்ச முடியோட விஜயரகுதாத சேதுபதியும் நாகேசும் இருக்கற அந்த போட்டோவை பாத்ததுமே ,அடடா விஜயரகுநாத சேதுபதியோட மகனாவா நாகேஷ் நடிச்சிருக்கார்னு ஒரு தெரிஞ்ச விஷயத்தை புதுசா யோசிக்க வெச்சது.பெரிய ஹீரோக்களுக்கு இந்த மாதிரி பெரிய காமெடி நடிகர்கள் மகனா நடிச்சு இருக்காங்களான்னு யோசிக்க வெச்சது. அதனாலே இது பத்தி ஒரு பதிவு போடலாமேன்னு யோசிக்க வெச்சு பதிவு பண்ண ஆரம்பிச்சேன்.அப்பத்தான் மூளையிலே ஒரு பொறி தட்டுச்சு.மடையா ,விஜயரகுநாத சேதுபதி மட்டும் இல்லேடா பிரெஸ்டீஜ் பத்மநாப ஐயருக்கு கூட மகனா நடிச்சிருக்காரேன்னு தெரிய வெச்சது.
சினிமா பீல்டுலே மாஸ் ஹீரோவா காட்டிகிட்ட எந்த ஹீரோவா இருந்தாலும் அவங்க தங்களை பெரிய மாஸ் ஹீரோவா மட்டுமா மட்டும்தான் காட்டிட்டு வந்திருக்காங்க.அவங்க யாரும் இந்த மாதிரி நடிக்க ரிஸ்க் எடுத்ததில்லே.சிவாஜி ஒருத்தர்தான் மாஸ் நடிகராவும் கிளாஸ் நடிகராவும் டிராவல் பண்ணி இருக்கார்.
சிவாஜி மாஸ் கலக்கலா பட்டாக்கத்தி பைரவனா எங்கள் தங்க ராஜாவுல அதகளம் பண்ணி படம் நடிச்சார்னா ,அடுத்த படமான கௌரவத்திலே ரொம்ப ஹை கிளாஸா பாரிஸ்டர் ரஜினிகாந்தா கிளப்பியிருப்பார்.
பைரவனோடவும் நாகேஷ் நடிச்சிருப்பார்.பாரிஸ்டரோடவும் நாகேஷ் பண்ணியிருப்பார்.
இன்னும் நிறைய படங்களை சொல்லிட்டு போகலாம்.
இப்ப சொல்ல வந்த விஷயத்துக்கு வரலாம்.
சிவாஜிக்கு மகனா நாகேஷா ?யோசிக்க வெச்ச விஷயம் தான் இது .எங்க ஊர் ராஜா வியட்நாம் வீடு ரெண்டுமே ஹெவி சப்ஜெக்ட் வேற. இதுலே நாகேஷ் எப்படின்னு யோசிப்பு வந்தாலும் படம் பாக்கறப்போ ஒரு சின்ன உறுத்தல் இருக்காது. அதுலே தான் இருக்குது சிவாஜி நாகேஷ் நடிப்பு.
இதுலே என்னான்னா ரெண்டு படத்திலெயும் வழக்கமான நாகேஷ் கேரக்டர்தான்.எங்க ஊர் ராஜா படத்துலே சிவாஜிக்கு ,மகனா நாகேஷ் நடிச்சிருப்பார்.படத்துலே இன்னொரு சிவாஜியும் இன்னொரு சுவாராஸ்யமான விஷயம்.
ஒரே படத்துல சிவாஜிக்கு மகன் சிவாஜிக்கு தம்பியா நடிச்ச ஒரே காமெடி நடிகர்னா அது நாகேஷ் மட்டும் தான்.
நாகேஷ் ஒரு காமெடியனா மட்டுமில்லே வித்தியாசமான பல வேஷத்துலே நடிச்சதும் அதிகமா சிவாஜி படங்கள்லே தான்.இருதுருவம் படத்துலே கூட சிவாஜியை விட வயசான வேஷத்துல நாகேஷ் நடிச்சிருப்பார்.இதெல்லாம் நாகேஷ் உச்சமா இருந்த காலத்துலேயே நடந்த விஷயம்.
எங்க ஊர் ராஜா படத்துக்கு முன்னாலே வந்த படம் தில்லானா மோகனாம்பாள்.அந்த சிக்கல் சண்முகசுந்தரம் வைத்தி கேரக்டர்களுக்கும் எங்க ஊர் ராஜா விஜயகுநாத சேதுபதி -மகனா நடிச்ச சச்கரவர்த்தி நாகேஷ் கேரக்டருக்கும் தான் எத்தனை வித்தியாசம் இருக்கு பாருங்க.
எங்க ஊர் ராஜா படத்துலே க்ளைமேக்ஸ் காட்சிலே நாகேஷ் சிவாஜியை பாத்து ஒரு பன்ஞ் டயலாக் அடிப்பார் பாருங்க.
"அந்த பேரை நான் தட்டிக்கலாம்னு பாத்தேன்.ஆனா நீங்க முந்தி தட்டிட்டு போயிட்டடீங்க.என்ன இருந்தாலும் உங்க பேரை எவனாலேயும் தட்டிட்டு போக முடியாது. நீங்க எல்லாத்திலேயும் அப்பன் தான்னு "ஒரு அடி அடிப்பார் பாருங்க.சிவாஜியோட சிரிப்போட ரசிகர்களோட கை தட்டலும் சேந்து அதிர வைக்கற காட்சியா அது இருக்கும்.
விஜயரகுநாத சேதுபதி நாகேஷ் வர்ற காட்சில எல்லாம் சிவாஜி சைட் பிரேம் கதையோட போக்கு கேரக்டருக்கு தகுந்த படியும் ,நாகேஷ் இருக்கற பிரேம் அது அவரோட வழக்கமான காட்சி அமைப்பிலேயும் இருக்கும்.நாகேஷ் செய்யற காமெடிக்கு சிவாஜி பதில் காமெடியோ ,சிவாஜியோட உணர்ச்சிபூர்வ நடிப்புக்கு ஏத்த மாதிரி நாகேசோட பதில் உணர்ச்சி பூர்வ நடிப்போ மிக்சிங் ஆகாமே ரெண்டும் தனியா டிராவலாகும்.
அதுலே டைமிங் கரெக்டா இருக்கணும். அதுதான் இந்த ஜோடியோட ஸ்பெசல்.இதுதான் திருவிளையாடல் படத்துலேயும்.
தமிழ் சினிமாலே ஒருகாவியப் படமா அமைஞ்சது வியட்நாம் வீடு.அந்த பிரெஸ்டீஜ் பத்மநாப அய்யர் கேரக்டருக்கு இப்படியொரு மகனா ?அய்யர் கண்டிப்பு நேர்மைன்னா பையன் அது கிலோ என்ன விலைன்னு கேக்கற கேரக்டர்.அந்த கேரக்டர்லே நாகேசை நடிக்க வெச்சாரே சிவாஜி. நாகேஷ் பேர்லே இருந்த நம்பிக்கைதான் காரணம்.
நாகேஷ் மாதிரியான பிரபலமான காமெடி நடிகரை பெரிய பிரபல ஹீரோக்கள் தங்களோட மகனா நடிக்க வைக்க ஒத்துக் கொள்வாங்களா ...இந்த மாதிரி செய்யணும்னா மாஸ் அண்ட் கிளாஸ் ஆக்டரான சிவாஜியாலே மட்டுமே முடியும். அதைத்தான் சினிமா வரலாறும் சொல்லுது.
எங்க ஊர் ராஜா படத்துலே நாகேசே சொன்ன வசனம் தான் கரெக்டா இருக்கும். எல்லாத்துக்கும் அப்பன் நீங்க தான்.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக