சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

தம்பி -என் தம்பி

தம்பி என் தம்பி ஆன கதை :
முதலில் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த என் தம்பி படத்தின் பெயரை தம்பி என்ற பெயரிலே எடுக்க தயாரிப்பாளர் கே. பாலாஜி மற்றும் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் அவர்கள் முடிவு செய்திருந்தனர். 

அதற்கு ஒரே காரணம் அதற்கு முந்தைய கே. பாலாஜி அவர்கள் தயாரித்த திரைப்படம் பெயரான தங்கை தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதே.
படத்தை பார்த்த ரசிகர்கள் சிவாஜி கணேசன் வழக்கமான சென்டிமென்ட் திரைப்பட பாணியில் பாசம், பரிவு, அன்பு என்பதை தாண்டி அசாத்தியமான ஸ்டைல் மேனரிசத்தில் மனுசன் அந்த படத்தில் நடிச்சு பட்டையை கிளப்பியதை பார்த்து மீண்டும் மீண்டும் ரசிகர்கள் சிவாஜி கணேசன் ஸ்டைல் நடிப்பையும், சண்டை காட்சியையும், காஞ்சனாவிடம் பேசி கொண்டு ஆக்ரோசமாக எறியும் மெழுகுவர்த்தியில் கையை விடுவது,  ஒரு சட்டத்திற்கு புறம்பான தடை செய்யப்பட்ட சீட்டு கட்டு விளையாடும் விளையாட்டிலும் நேர்மையை கடைபிடிக்கும் ஸ்டைலும், தொங்கு விளக்கில் சிவாஜி கணேசன் தொங்கி கொண்டு எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் போன்ற தத்ரூபமான காட்சிகளை  எதிரணி ரசிகர்கள்  கூட தங்கை படத்தை பார்க்க சிவாஜி கணேசன் தனது புதுவிதமான நடிப்பு கலையால் ஈர்த்தார் .

 தொங்கு விளக்கில் சிவாஜி கணேசன் நடிக்கும் போது முதலில் டூப் ஆர்டிஸ்ட் பரமசிவம் மூலம் தான் கே. பாலாஜி படமாக்க ஏற்பாடு செய்திருந்தார். 
ஆனால் படபிடிப்பு நடக்கும் நாளில் சிவாஜி கணேசன் எதாவது சர்ப்ரைஸ் கொடுப்பார் .அன்றும் அதுபோலே ,ஏய் நம்போதிரி அதாவது பாலாஜியை வேலை சுமையில் இருக்கும் போது சிவாஜி கணேசன் அப்படி தான் அன்பும், உற்சாகமும் காட்டும்  வகையில் அவ்வாறு அழைப்பார். 
நானே இந்த தொங்கு விளக்கில் சண்டை போடும் காட்சியில் நேரடியாக நடிக்கிறேன் 
அய்யோயோ நீங்களா என பாலாஜி வியந்து கேட்க உடனே சிவாஜி கணேசன் அவர்கள் ,
எவன் எவனோ உயிரை அடமானம் வைத்து இந்த உலகத்தில் நடிப்பில் ஏதேதோ சாதனை செய்கிறான் ,
நான் இதை செய்ய கூடாதா ...என சொல்லி விட்டு எதற்கும் பயப்படாத நான் இப்ப என் சாகசத்தை செய்து வருகிறேன் .அதை மட்டும் பார் என்று கூறிவிட்டு சிவாஜி கணேசன் தொங்கு விளக்கில் ஏறி சண்டை போட ஆரம்பித்தார். 

அந்த சண்டை காட்சி முடியும் வரை சிவாஜி கணேசனுக்கு எதுவும் ஆக கூடாது என்று பாலாஜி மனதார தனது விருப்ப கடவுளான குருவாயூர் கிருஷ்ணரை மனமார பிராத்தனை செய்தார். 

ஆனால் அந்த சண்டை காட்சி முடிந்த பிறகு விளக்கில் இருந்து தரையில் இறங்கும் போது சிவாஜி கணேசனுக்கு கொஞ்சம் காலில் பலமான அடிபட்டுவிட்டது

அதை சரி செய்ய நான்கு மாதங்கள் எந்த படபிடிப்பிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள கூடாது என்று அவரது பெர்சனல் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறிவிட்டார். 

அவரது பேச்சுக்கு மறு பேச்சே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் பராமரித்த இருவர் தம்பி வி சி சண்முகம் மற்றும் பெர்சனல் டாக்டர் பாலகிருஷ்ணன் .
இவர்கள் கட்டளையை சிவாஜி கணேசன் எப்போதும் மறுக்கப்பட்டார். 

அதனாலே சிவாஜி கணேசன்  நடிப்புலகிற்கே பெரிய யானையாக இருந்தாலும் இந்த யானையின் உயிரை பாதுகாப்பது பாகனின் வேலை ..
அதனாலே டாக்டர் பாலகிருஷ்ணனை கிண்டலாக 'பாகா' என்று அழைப்பார். 
அந்த காலகட்டத்தில் நடந்த முக்கிய திரைப்படங்களில் கூட சிரமம் இல்லாத நடிப்பு காட்சியில் நடித்துவிட்டும் ,
அரசியல் மேடைகளில் பேசுவதையும் தவிர்த்து வந்தார். 

அந்த காலகட்டத்தில் சரோஜாதேவி திருமணத்தில் கூட சிவாஜி கணேசன் கால் வலியால் தான் கலந்து கொள்ளவில்லை. 

அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் கால் வலி குணமாகிய பிறகே தங்கை திரைப்படம் வெளிவந்து ரசிக மக்களிடையே அலாதியான வெற்றி பெற்றது

 சிவாஜி கணேசன் நடித்த முதல் படமே பராசக்தி. ஆனால் அது அனைவரும் ஆன்மீகம் சார்ந்த பக்தி படம் என்று நினைத்தே சினிமா கொட்டகைக்கு சென்று பார்த்து வந்த பிறகு தான் அது சமூக சித்திரமாகவும் அதில் புதிய நடிப்பு பரிமாணத்தை வெளிபடுத்திய சிவாஜி கணேசனை கண்டு அனைவரும் தன்னை அறியாமல் அந்த மாமனிதனுக்கு அப்போதே ரசிகரானதை போல் இந்த தங்கை படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பு பரிமாணம் வேறொன்றாக  இருந்தது. 

 சிவாஜி கணேசன் நடித்த ஆக்சன் படத்திற்கு தங்கை என்று பெயர் வைத்திருக்க வேண்டாம் என்று பாலாஜி ஒரு நாள் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் இடம் கூற உடனே ஏ. சி. டி அவர்கள் ரசிகர்களை பொறுத்தவரை சிவாஜி கணேசன் என்றும் சென்டிமென்ட் ஹீரோ என்ற நினைப்பது அதிகம் தான் ,
அதை சார்ந்தே அவரது திரைப்பட பெயர்களும் அமைய வேண்டும். 
அதனால் என்ன படத்தின் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். படத்தை பார்த்த பிறகு சிவாஜி கணேசன் இப்படியும் நடிப்பாரா என்ற பரிமாணத்தை நினைத்து ரசிகர்கள் வாயை பிளக்கட்டும் என்ற டைரக்டிங் டிவிஸ்ட் கொடுக்க பாலாஜி அவர்கள் உங்கள் டைரக்டிங் 
பீல்டுக்குள்ளேயே  நான் வரவில்லை. நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன் என்று பாலாஜி கூறினார்.

அதனை தொடர்ந்து அடுத்த படத்தின் பெயரை தம்பி சென்டிமென்ட்டை வைத்து எடுப்பதால் படத்திற்கு தம்பி என்று பெயர் வைத்தார்  தயாரிப்பாளர் கே. பாலாஜி அவர்கள்.

சிவாஜி கணேசன் ஸ்டைல் மூவ்மென்டில் தங்கை படத்தில் நடித்து பட்டையை கிளப்பியதை போல் இதில் ஏ. சி. டி அவர்கள் சிவாஜி கணேசன் நல்ல அண்ணன் மற்றும் கதாநாயகனாகவும் ,
பாலாஜி தங்கை படத்தில் நடித்த செகண்ட் ஹீரோ போல் இல்லாமல் ஒரு கொடூர மனம் படைத்த வில்லன் தம்பியாகவும் நடித்தனர்.ஜமீன் சொத்தையும், ஊர் மரியாதையையும், பரம்பரை பொக்கிஷத்தையும் காப்பாற்றும்  கதையாக பெரும் திரில்லர் படமாக்க பாலாஜி மற்றும் ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கி வந்த நிலையில் ,

இந்த செய்தி தம்பி என்ற பெயரில் நாடகமாக நடத்தி வந்த கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு தெரிய வந்தது.
KSG திரையுலகில் இணைந்த காலகட்டத்தில் சிவாஜி கணேசனை வைத்து தம்பி என்ற பெயரில் நாடகமாக நடத்தி வந்ததை படமாக்க எண்ணிய போது ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய அமரதீபம் திரைப்படத்தில் சிவாஜியவர்கள் கவனம் செலுத்தியதால் அதை பின்னாளில் பார்த்து கொள்ளலாம் என்று சிவாஜி கணேசன் கே. எஸ். ஜி இடம் கூறினார். 

அதன் பிறகு சிவாஜி கணேசனை வைத்து கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் செல்வம் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அந்த தம்பி நாடக கதையை பற்றி கே. எஸ். ஜி இடம் கேட்ட போது அது பாசம் சிவக்கும் நாடகத்தின் அடிப்படையில் எழுதியது. 

அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து எழுதிய கதையில் ஒரு ஊரில் பணக்கார ஜமீன்தார் பிள்ளைகளான சின்னையா, விஸ்வம் அண்ணன் தம்பியாக வாழ்ந்து வருகின்றனர். 

இதில் தம்பி கதாபாத்திரம் விஸ்வம் அவர்கள் ஒரு நாள் தனது ஜமீன் திவான் மூலம் தனது பூர்வீக சொத்து சம்பந்தமான பொக்கிஷத்தை அடையும் வழியை கண்டு பிடித்து விடுகிறான்.
இதை ,தான் அண்ணன் சின்னையா உயிரோடு இருக்கும் வரை அந்த பூர்வீக சொத்துகளை அடைய முடியாது என்ற சொத்து நிபந்தனையால் அந்த ஆணவத்தின் வன்மத்தால் தனது அண்ணன் என்று கூட பாராமல் சின்னையாவை படகில் ஏற்றி கொண்டு சென்று கொன்று விட இறந்து விடுகிறான். 

மேலும் விஸ்வத்திற்கு ஆத்திரம் படைத்தவனுக்கு புத்தி மட்டு என்பதை போல் ஜமீன் சொத்தை பாதுகாக்கும் திவான் அந்த பொக்கிஷம் இருக்கும் இடம் உன் அண்ணன் சின்னையாவுக்கு மட்டுமே தெறியும் என கூற ஆத்திரத்தில் திவானை அடித்துவிடுகிறான்.

அதன் பிறகு அண்ணன் சின்னையா ஒரு நாடக கோஷ்டியில் இருந்து கண்ணன் என்ற பெயரில் வந்து விட ..மேலும் அந்த பொக்கிஷம் இருந்த இடம் அவன் அண்ணன் சின்னையா தற்போது கண்ணனுக்கு தெரியாமல் இருக்காது.

இதை நீங்கள் தேடி தர வேண்டும் என்று விஸ்வம் கண்ணனிடம் கூற அப்போது கண்ணன் ஒரு பாலும் கிணறு அருகே சென்று என் முதுகில் ஐந்து சாட்டையடி தந்தால் மட்டுமே அந்த கிணற்றுக்குள் பொக்கிஷம் இருக்கும் இடம் உனக்கு புலப்படும் என்று கூற விஸ்வம் ஐந்து சாட்டையடிகள் கண்ணன் முதுகில் தர அந்த கிணற்றில் தங்கமும், வைரமும் மின்னொளியாக மின்ன தனது அண்ணன் சிந்திய ரத்தத்தை மறந்து  விஸ்வம் கிணற்றில் இறங்கி அந்த ஆபரணங்களை கைப்பற்றி கொண்டு தனது அண்ணன் சிந்திய ரத்தம் என்று கூட பாராமல் விஸ்வம் செல்லும் போது ,தம்பி நீ என் முதுகில் அடித்து ரத்தத்தை எடுத்திருந்தால் கூட எனக்கு சந்தோஷம் .என்னை ஏன் தேவையில்லாமல் கொல்ல முயற்சி செய்தாய் என கேட்க விஸ்வம் மனம் திருந்தி நல்லவன் ஆவான். 
இயக்குனர் திலகம் கோபாலகிருஷ்ணன் எழுதிய கதை இதுவே .அண்ணன் தன்னை சாட்டையால் அடித்து அந்த பூர்வீக பொக்கிஷத்தை அடையும் வழியானது பாசம் சிவக்கும் என்ற நாடகமே ஆகும். 
இதை படமாக்க ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசன் அவர்கள் கே. எஸ். ஜி இடம் செல்வம், பேசும் தெய்வம், தம்பி என மூன்று படங்களுக்கு சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்து இருந்தார். 

ஆனால் ஏசி திருலோகச்சந்தர் ஆஸ்திரபரலு என்று தெலுங்கு படத்தின் தழுவல் என்ற பெயரில் தம்பி படத்தை இயக்கி வந்தார்.

இந்த செய்தி நாளடைவில் கோபாலகிருஷ்ணன் காதுகளுக்கு சென்றடைய கோபகாரரான கோபாலகிருஷ்ணன் வேறு யாராக இருந்தாலும் கோர்ட் கேஸ் என்று போயிருப்பார். 

இதை பற்றி ஒரு நாள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இடம் நான் இயக்கும் தம்பி படத்தின் கதையை தற்போது உங்கள் நண்பர் தயாரிப்பாளர் கே. பாலாஜி தயாரித்து கொண்டுள்ளராமே அது தவறில்லையா என கேட்க,  நீ இயக்கும் கதையும் பாலாஜி திருலோக் இயக்கும் படத்தின் கதையும் கொஞ்சம் மாறுபட்டது. 
அது தெலுங்கு படத்தின் டப்பிங் படம் என்றார் சிவாஜி. உடனே அதுவே நான் ஜகபதி பிக்சர்ஸ்க்கு முறைப்படி நான் 10.000 ரூபாய்க்கு தெலுங்கில் அந்த கதையை நான் கொடுத்தேன். 
இதை நான் உங்களை வைத்து இயக்க தான் திட்டமிட்டிருந்தேன் என்று கோபாலகிருஷ்ணன் சிவாஜி கணேசன் இடம் கூறினார். 

கொஞ்சம் மேலும் கீழுமாக யோசித்த சிவாஜி கணேசன் அவர்கள் கே. எஸ். ஜியை அழைத்து கொண்டு ஏ. சி. டி மற்றும் கே. பாலாஜி இடம் மனமிட்டு பேச சொன்னார். 

அதன் பிறகு திருலோகச்சந்தர், பாலாஜி கோபாலகிருஷ்ணனுக்கு எடுத்து கூறிய பிறகு சிவாஜி கணேசன் இடம் கே. எஸ். ஜி அவர்கள் , அவர்களே அந்த கதையை படம் எடுக்கட்டும் என மன பூர்வமாக சம்மதித்தார். 

இதற்கு எதாவது பணம் வேண்டுமா என சிவாஜி கணேசன் கோபாலகிருஷ்ணன் இடம் கேட்க அதுவெல்லாம் வேண்டாம் எனக்கு இந்த படத்தில் அந்த இறுதியில் தம்பி அண்ணனுக்கு தரும் சாட்டையடி காட்சி மற்றும் படத்தின் தலைப்பை மட்டும் மாற்றி கொள்ளுமாறு கேட்டு கொண்டார். 

உடனே படத்தின் பெயர் 'என் தம்பி' என்று பிலிம் சேம்பர் மூலம் மாற்றப்பட்டது. 

அதன் பிறகு இந்த படத்தின் சாட்டையடி காட்சியை தன் விருப்பம் போல் படமாக்க வேண்டும் என்று கோபாலகிருஷ்ணன் கேட்டு கொண்டதின் விளைவாக இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி இடம் கேட்க தற்போது தெலுங்கு படத்திலும் சரி தமிழிலும் சரி கதாநாயகன் தான் கதாநாயகிக்கு சாட்டையடி கொடுத்து தன்னை கண்ணன் சின்னையாவாக நிருபித்துவிட்டு வேறொரு நிலையில் தான் அண்ணன் பொக்கிஷத்தை கிணறில் இருந்து எடுப்பதை போன்று காட்சி செய்ய உள்ளோம் என்று கோபாலகிருஷ்ணன் இடம் கூறினார்கள். 
அதை ஏற்று கொண்டு சிவாஜி கணேசன் இடம் யார் கதாநாயகியாக அப்பாடலில் நடிக்க போகிறார்கள் என கேட்க அது சஸ்பென்ஸ் நேரம் வரும் போது நீயே பார்ப்பாய் என கூறினார்.

அதன் பிறகு அது தட்டட்டும் கை தழுவட்டும் பாடலாக உருவானதை படமாக்க வாசு ஸ்டூடியோவில் ஒரு பிரம்மாண்டமான செட் ஏ. சி. திருலோகச்சந்தர் மற்றும் பாலாஜி ஏற்பாட்டில் அருமையாக உருவானது. 
கோபாலகிருஷ்ணன் அந்த பிரம்மாண்டமான செட்டை பார்த்து வியந்து விட்டார். 

அப்போது அந்த செட்டில் பாடல் படமாக்கும் முயற்சிகள் நடந்தன.சரோஜாதேவி அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்து கொண்டு இருப்பதால் கொஞ்சம் லேட்டாக வருவார் என்று வழக்கம் போல் சிவாஜி கணேசன், திருலோகச்சந்தர் பாலாஜி படத்தின் பைனன்சியர் கே. ஆர். விஜயா வேலாயுதம், ஜாவர் சீதாராமன் அனைவரும் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர். 

இந்த பாடல் காட்சி படமானால் மட்டும் போதும் ,ரீலிஸ் டேட்டை குறித்து விடலாம் என பாலாஜி சொல்ல உடனே சிவாஜி கணேசன் டேய் கோன-கினா என்று (கோபாலகிருஷ்ணனை சுருக்கமாக கிண்டலாக அழைப்பார். )
அவ்வாறு அழைத்து நீ இந்த படத்தை என்னை வைத்து இயக்கி இருந்தால் யாரை ஹீரோயினாக போட்டு இருப்பாய் என கேட்க பாம்பு நடிகை என செல்லமாக அருகில் இருந்த விஜயாவை கிண்டலாக கூறினார். 

அதனால் இப்ப சரோஜாதேவி பெயரை கூறாமல் (நம்பர் 4 என ரகசியமாக) நடிக்க கூடாது என்று சொல்கிறாய்  என சிவாஜி கணேசன்  விளையாட்டாக கேட்க அதை பற்றி நான் ஏன் முடிவெடுக்க வேண்டு.அது  ஏ. சி. திருலோகச்சந்தர் பாடு என்று சகஜமாக கூறினார். 

இதை பக்கத்து செட்டில் படமாக்கி கொண்டிருந்த இயக்குனர் ராமண்ணா, ஸ்ரீதர் இரண்டு போட்டி இயக்குனர்களும் எப்படியோ செய்தியை கண்டுபிடித்து கொண்டு என்ன ஒரு பாடலை இரண்டு டைரக்டர்கள் படமாக்க போகிறீர்களா என கேட்டு கொண்டு வந்தபடி ஜாலியாக பேசி கொண்டு அமர்ந்தனர். 

உடனே அந்த சாட்டையடி பாடலில் கதாநாயகன் & கதாநாயகி அடித்து ஆட வைப்பதை அதற்கு முன்பு வரை நாங்கள் காணதது இதனாலே அதை காண வந்திருக்கோம் என தாங்கள் வந்ததை கூறிய போது உடனே சிவாஜி கணேசன் அவர்கள் கதாநாயகி வந்தால் தான் அந்த காட்சி எல்லாம் இங்கு நடக்கும் என கூறினார். 

உடனே சரோஜாதேவி கார் அந்த செட்டுகுள் வந்ததை அறிந்த சிவாஜி கணேசன் பட குழுவினர்கள் மற்றும் அனைவரையும் உடனே   கலைந்து போங்கள் .
ராமண்ணா, ஸ்ரீதர் நீங்கள் இரண்டு பேரும் பாடலை காண மேலே கண்ணாடி வழியாக பாருங்கள் என்று மேலே அனுப்பிவிட்டார்

அதன் பிறகு ஏ. சி திருலோகச்சந்தர் மற்றும் பாலாஜியை பாடல் படமாக்கும் போது நானே உங்களை அழைகிறேன் என்று கூறிவிட்டு 
ஏய் கோ-கினா (இயக்குனர் திலகம் கோபாலகிருஷ்ணன்) நீ தான் இப்ப படமாக்க போற .
கதாநாயகி சரோஜாவுக்கு நீ தான் படமாக்க போவது இதுவரை தெரியாது. 
இப்ப அவர்  வருகிறார். நீ எதையாவது பேசி கொண்டு இரு நான் இந்த ஸ்கிரீன் உள்ளே என்னை விஜயா சாட்டையால் அடித்து அலறுவதை போல் விளையாட்டாக கத்துகிறேன் என கூறி கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு ஸ்கீரினில் சென்று சிவாஜி கணேசன் அவர்கள் விளையாட்டாக கத்தி கொண்டு இருக்க கே. எஸ். ஜி இடம் சரோஜாதேவி அவர்கள் சர்வ அலங்காரத்துடன் புடவை கட்டி கொண்டு வந்தார். 

அப்போது என்ன யாரையும் காணம் என கேட்க சம்பந்தமில்லாமல் நீங்கள் இங்கே என கேட்டவுடன் கோபாலகிருஷ்ணன் இடம் கேட்க என்ன செய்வது காலம் கடந்து வந்தாலும் நீ சரியான நேரத்தில் தான் வந்துருக்க ..நான் தான் இந்த படத்தில் இந்த பாடலை மட்டும் படமாக்க போகிறேன் என கூற நீங்களா என சரோஜாதேவி கேட்டபடியே என்ன சத்தம் என கோபாலகிருஷ்ணன் இடம் சரோஜாதேவி கேட்க ,
அந்த ஸ்கிரீனின் கயிறை கோபாலகிருஷ்ணன் திறக்க விஜயா சிவாஜி கணேசனை விளையாட்டாக சாட்டையால் அடித்து கொண்டு சிவாஜி கத்தி கொண்டே கோபாலகிருஷ்ணனை பார்த்து 👍👍செலன்ஜ் 👍👍 செய்து கொண்டு நாம் நினைத்ததை போல் கதாநாயகி ஏமாந்து விட்டார் என்பதை போல் காட்டி கொண்டு டேய் கோனா-கினா சரோ தான் நீ கேட்டு கொண்டு இருந்த நம்பர் 4 ஹீரோயின்  என கூற சரோஜாதேவி வாயை பிளந்தவாரே அதிர்ச்சியில் நிற்க.. சிவாஜி கணேசன் தனது கையில் பாடல் காட்சியில் பயன்படுத்தும் சாட்டையை எடுத்து குறிபார்த்து சரோஜாதேவி இடுப்பில் அணியபட்டு இருக்கும் இடையாணியை குறி பார்த்து கச்சிதமாக அடித்து தனது கையில் எடுத்தார். 

அதன் பிறகு சரோஜாதேவி அவர்கள் தனது அதிர்ச்சி நிலையில் இருந்து வெளியேறி பாடலில் நடிக்க சில்க் சுடிதார் உடையில்   பாடல் படபிடிப்புக்காக வந்தவுடன் பாடல் காட்சியை பற்றி கோபாலகிருஷ்ணன் சிவாஜி கணேசன்  சரோஜாதேவி இடம் கூறிய போது இந்த பாடல் காட்சி ஏ. சி. திருலோகச்சந்தர் எப்படி வேண்டுமானாலும் படமாக்கட்டும். இந்த பாடல் முழுவதும் சரோஜாதேவி சிவாஜி கணேசனை நினைத்து அவரது காதலையும், அவலமான நிலையையும், வெற்றியையும், விரபதாகத்தையும் வெளிபடுத்த வேண்டும் .அவ்வளவு தான் என்றார். உடனே சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவி இடம் நான் செல்வம் படத்தில் உனக்காகவா நீ எனக்ககாவா என்ற பாடலில் நீங்களும் (சிவாஜி) விஜயாவும் நடிப்பது போல் உணர்வை வெளிப்படுத்தியதை போல் வெளிபடுத்தினால் போதும் என கூறினார். 

உடனே அதன் படியே பாடல் படமாவதை இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் மற்றும் ஒளிப்பதிவாளர் தம்புவும் சரியாக படப்பிடிப்பை ஆரம்பித்தனர். 

மேலும் இந்த பிரம்மாண்டமான செட்டின் நடுவே சரோஜாதேவி பாடல் ஆரம்பத்தில் ஆடும் போது ஒரு ஆர்டீசியன் நீர் ஊற்று இருக்கும் .இது அந்த இடத்தில் அமைக்கப்பட்ட ரியல் ஆர்டீசியசன் நீர் ஊற்று .ஆனால் திருலோகச்சந்தர் அவர்கள் பாடலில் புதுமையை கையாள அந்த ஆர்டீசியன் ஊற்று நீர் வடிகாலில் இருக்கும் நீரை வாட்டர் சப்ளே மோட்டார் மூலம் பக்கத்தில் போடபட்டு இருக்கும் மேடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதை போல் பார்த்து கொண்டார். 

அதற்கு ஒரே காரணம் அந்த மேடை மீது அடி வாங்கும் சரோஜாதேவி மட்டுமே மேலேறி ஆடும் போது சிவாஜி கணேசன் சாட்டை சேவகனாக மாறி சரோஜாதேவியை சாட்டையால் அடித்து பூ பறிக்க வேண்டும். 
அப்போது அந்த காட்சி நீரின் பிரதிபலிப்பில்  தெரிய வேண்டும் என்று தத்ரூபமான காட்சியாக்கினார். 

ஆனால் அந்த சாட்டையடி தான் ஏழு டேக் வாங்கியது .அதில் பத்துக்கும் மேற்பட்ட சாட்டையடி சரோஜாதேவி தோலை பதம் பார்த்து விட்டது, சரி அடி என்று சரோஜாதேவியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 

மேலும் இந்த பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் சரோஜாதேவியை 5 சாட்டையடி 15 சாட்டையடியாக சரோஜாதேவி மீது விழுந்தாலும் ஒரே நாளில் 
இந்த ரிஸ்க்கான பாடல் காட்சியை ஏ. சி. டி, பாலாஜி, கோபாலகிருஷ்ணன், கதாசிரியர் ஏ. எல். நாராயணன், ஜாவர் சீதாராமன் அனைவருக்கும் மன குறை இன்றி மன நிறைவுடன் படமாக்கப்பட்டுவிட்டது. 

இந்த பாடல் இறுதியில் சிவாஜி கணேசன் தனது தம்பி பாலாஜியை அடித்து புத்தி புகட்டும் காட்சியில் பாலாஜி கையில் இருக்கும் கேஸ் லைட்டர் தவறி புல்லில் பற்றி எறிவது போல் காட்சி இருக்கும். 
அதன் பிறகு பாடலின் இறுதியில் சரோஜாதேவி சாட்டையடி விழுந்த முதுகில் ரத்த கட்டு காயமாகிவிட்டது. 

அதை சிவாஜி கணேசன் மருத்துவர் பாலகிருஷ்ணன் மூலம் சரோஜாவுக்கு ஏற்பட்ட வலிக்கு டிஞ்சர் இருந்தால் போடு என கூற காயம் இல்லை இது ரத்தகட்டு இதற்கு ஒரு கை வைத்தியத்தை பாலகிருஷ்ணன் கூற பாடலுக்காக போடப்பட்ட அந்த செட்டின் மேடையில் சரோஜாதேவியை உட்கார வைத்து ஒரு கத்தியில் பாலகிருஷ்ணன் மெழுகுவர்த்தியால் பதமாக சூடுபடுத்தி சரோஜாதேவி முதுகில் வைத்து கத்தியில் கொஞ்சம் தோலை கீறியவுடன் அந்த ரத்தகட்டு முதுகு தோலை பிதுக்கி கொண்டு  வெளியேறிவுடன் சரோஜாதேவி அப்பா என்ற சத்தம் போட மேடையின் கீழ் நிரம்பி இருக்கும் நீரில் அந்த ரத்தபதம் விழுந்தவுடன் சரோ ஆல்யூ ரெடி சக்சஸ் என சிவாஜி கணேசன் கூற அந்த பட குழுவினர் அந்த செட்டில் இருந்து செல்ல செல்ல பாலாஜி பிடித்து போட்ட கேஸ் லைட்டர் நெருப்பு மற்றும் பாலகிருஷ்ணன் சரோஜாதேவி காயம் நீக்க மெழுகுவர்த்தி நெருப்பு எல்லாம் சேர்ந்து கொண்டு அந்த பிரம்மாண்ட செட்டு எறிந்து நாசமானது. 
இதில் அந்த  நீர் ஊற்று நடுவே பொறுத்தபட்ட மோட்டார் முதல் கொண்டு எரிந்து தீக்கிரையானது. 

இதை பற்றி கே. பாலாஜி இடம் கேட்ட போது நம் படத்தின் பாடல் காட்சி மற்றும் படம் மீதான பல டைரக்டர் கண் திருஷ்டி நெருப்பை விட கொடுமையானது என கூற பாடல் படமாகி வெளிவந்த பிறகு என் தம்பி படம் 100 நாள் மேல் ஓடி வெற்றி பெற்று சாதனை படைக்க சிவாஜி கணேசன் கத்தி சண்டை ...
இரண்டு இயக்குனர்கள் மேற்பார்வையால் உருவான தட்டட்டும் கை தழுவட்டும் பாடலுக்காகவே அனைவரும் தியேட்டரில் குவிந்தார்கள் என்றால் யாராலும் மறுக்க முடியாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற