நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு .அதுக்குள்ளே என்ன ஆச்சுன்னு ஒரு காமெடி வசனம் பிரபலம்தான்.இதே வசனத்தை ஒரு சீரியஸ் விஷயத்துக்கும் சொல்லும் படி இருக்குது.இளையராஜா TMS பிரச்சினை தான் அது.
சிவாஜி நடிக்க வந்த மூணாவது வருஷமே TMS சிவாஜிக்குத்தான்னு செட்டாயிடுச்சு. தூக்கு தூக்கி படம் மாத்துன விஷயம் அது.அதுலே இருந்து TMS சோட ராஜ்ஜியம் தான்.
வேற பாடகர்கள் எவ்வளவு நல்லா சிவாஜிக்கு பாடினாலும் TMS ஐ கம்பேர் பண்ணி குறை சொல்லாமே இருக்கவே மாட்டாங்க.
54 லே இருந்து TMS எல்லா இசையமைப்பாளர்களோட இசையமைப்புலே பாடியிருக்கார்.
1976 லே இளையராஜா என்ட்ரி ஆகிறார். இளையராஜா இசையிலும் TMS சோட ராஜாங்கம் நடந்துகிட்டுதான் இருந்துச்சு.
1977 லேயே அதாவது இளையராஜா இசையமைக்க வந்த அடுத்த வருஷமே சிவாஜி நடிச்ச தீபம் படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு வந்துச்சு.
சிவாஜியோட படங்களுக்கு வரிசையா இசையமைச்சு வந்தவர் MS.விஸ்வநாதன்.தீபம் படத்துக்கு முன்னாலே பாத்தா நாற்பது ஐம்பது படங்களுக்கு வரிசையா இசையமைச்சிருக்கார். விஸ்வநாதன்.நாலஞ்சு படங்கள் மட்டுமே கே வி மகாதேவன் மற்ற சில பேர் இசையமைச்சு இருக்காங்க.மத்தபடி விஸ்வநாதன் தான் சிவாஜி படங்களுக்கு இசையமைச்சார்.
சொல்லப்போனா ரொம்பவும் பிசியா வேலை செஞ்சுட்டு இருந்தார்.
K. பாலாஜி படங்கள் எல்லாம் MS.விஸ்வநாதன் மியூசிக்.
1977 லே பாலாஜி தான் தயாரிச்ச தீபம் படத்துக்கு ஒரு மாற்றமா இருக்கட்டுமேன்னு இளையராஜாவை புக் பண்ணினார்.இளையராஜா முதல் படமான அன்னக்கிளி பெரிய ஹிட்டாச்சு. 1976 லே என்ட்ரி ஆனவர் இளையராஜா .இளையராஜா சினிமா பீல்டுக்கு வந்த அடுத்த வருஷமே சிவாஜி படத்துக்கு மியூசிக் பண்ண வாய்ப்பு வந்துருச்சு. இது இளையராஜாவோட 11 வது படம்.
பத்ரகாளி 16 வயதினிலே படமெல்லாம் இதுலே .
தீபம் படத்துக்கு இளையராஜா நல்லாவே மியூசிக் பண்ணியிருந்தார்.
அதுக்கு முன்னாலே MS.விஸ்வநாதனே பல படங்கள்லே SPB..ஜேசுதாஸ்னு பாட வெச்சார்.ஆனாலும் இளையராஜா TMS ஐ பல படங்கள்லே பாட வெச்சார்.
TMS கிட்டே ஒரு பிடிவாத குணம் இருக்குது. இந்த பாட்டை இப்படித்தான் பாடணும்னு அவர் பாணியிலே போவார்.சில விஷயங்கள்லே அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டார்.உதாரணமா வசந்த மாளிகை படத்துலே யாருக்காக பாட்டுக்கு ரெக்கார்டிங் ஸ்டுடியோலே எக்கோ வையுங்கன்னு சொல்ல,தயாரிப்பாளர் எதுக்கு வீண் செலவுன்னு மறுத்துட்டார்.எக்கோ வைக்கலேனன்னா நான் பாட மாட்டேன்னு TMS மறுத்துட்டார் .வேற வழி இல்லாமே தயாரிப்பாளர் எக்கோ வெச்ச பின்னாலேதான் TMS பாடுனார்.TMS சொன்ன ஜடியா நல்லாவே வொர்க் அவுட் ஆச்சு.இந்த மாதிரி நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு. ஆனா எல்லா மியூசிக் டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் இந்த மாதிரி விஷயங்களுக்கு ஒத்து போகணுமே. அந்த புரிஞ்சுக்கற உணர்வுலே தான் பிரச்சினைகளே .
இளையராஜாவும் அப்படித்தான். தான் சொல்லறபடிதான் பாடணும் ,சில வார்த்தைகள் வரிகள் இருக்கணும்னு நெனப்பார்.
இளையராஜாவுக்கும் கவிஞர்களுக்கும் பாடகர்களுக்கும் பிரச்சினைகளும் வராமே இல்லே. ஒரு வகையிலே ஈகோன்னு கூட சொல்லலாம்.T.MS சும் சரி ,இளையராஜாவும் சரி இந்த ஈகோ பிரச்சினை சுத்தமா இல்லேன்னு சொல்ல முடியாது.
கலைஞன்னா கர்வம் இருக்கத்தான் செய்யும்.
இது கலைஞர்களை பத்தி பொதுவா சொல்லறதுதான்.
இந்த சின்ன சின்ன சங்கடங்கள் அப்பப்போ வரும் . போகும்.சமயம் பாத்து டென்ஷன் இருந்தா நாக்குலே வார்த்தை மாறிடும்.
நான் வாழ வைப்பேன் படத்துலே சிவாஜி பாடற மாதிரி ஒரு பாட்டு. என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்து பாடுங்கள்னு பாட்டு. அதே படத்துலே எந்தன் பொன் வண்ணமே பாட்டை TMS அற்புதமா பாடியிருப்பார்.என்னோடு பாடுங்கள் பாட்டையும் TMS பாட வெச்சு இளையராஜா ரெக்கார்டிங் முடிச்சுட்டார்.பாட்டுலே TMS வாய்ஸ்லே இளையராஜாவுக்கு திருப்தி இல்லாமே போச்சு.
பாடி முடிச்ச பாட்டை , SPBஐ வெச்சு மறுபடியும் ரெக்கார்டிங் பண்ணினார் இளையராஜா. இது கண்டிப்பா TMS சுக்கு சங்கடத்தையும் வருத்தத்தையும் தராமே இருந்திக்காது. யாரா இருந்தாலும் இதுதான்.
பட்டாக்கத்தி பைரவன் படத்துலே ஒரு டூயட் பாட்டுக்கு சிவாஜிக்கு SPB ஐ பாட வெச்சார்.கவரிமான் படத்துலே Spb ஜஜேசுதாஸை பாட வெச்சார்.சில மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமா நடந்துட்டு இருந்துச்சு.
TMS சுக்கும் சான்ஸ் கொடுத்துட்டுதான் இருந்தார்.
சில சங்கடங்கள் ஈகோ பிரச்சினைகள் மனசளவிலே இலை மறை காயா நடந்துட்டுதான் இருந்துச்சு. ரெண்டு பேர் கிட்டேயும்.
1986 லே பெரிய வெடியா வெடிச்சுச்சு.தாய்க்குஒரு தாலாட்டு படம்.இளமை காலம் எங்கே ,என்று திரும்பும் இங்கேன்னு ஒரு பாட்டு. இந்த பாட்டு புதிய பறவைலே ஹிட்டடிச்ச உன்னை ஒன்று கேட்பேன் பாட்டு மெட்டுலே அமைஞ்ச பாட்டு.
பாட்டோட சில ராக சங்கதிகள் ஆலாபனைகள் குரல் சரீரம் விஷயத்துலே TMS பாடுன முறையிலே சில மாற்றங்ளை சொன்னார் இளையராஜா. TMS அதுக்கு ஒத்து போகலே. நான் தான் இசையமைப்பாளர் நான் சொல்ற படிதான் நீங்க பாடணும்ங்கற அர்த்தத்துலே இளையராஜா சொல்லியிருப்பார் போலே.என்ன நடந்துச்சோ ஏது நடத்ததுச்சோ ..ஒரு வழியா ..எப்படியோ ரெக்கார்டிங் முடிஞ்சிருச்சு...
தாய்க்கு ஒரு தாலாட்டு ஆடியோ கேசட் ரிலீசாச்சு. TMS பாடுன அந்த பாட்டு ரசிகர்களுக்கு சந்தோசமாஇருந்துச்சு.
தாய்க்கு ஒருதாலாட்டு படம் ரிலீசான முதல்நாள் முதல் பாத்துட்டு இருக்கோம்.
படத்துலே இடையிலே TMS சோட லாலாலலாலான்னு ஹம்மிங் வரும். அதோட முடிஞ்சது.பாட்டு வரலே.
இளையராஜா அந்த பாட்டை வெக்ககூடாதுன்னு சொன்னாரா? இல்லை அந்த பாட்டையே ஷூட் பண்ணலையான்னு தெரியலே.
அதோட முடிஞ்சது ரெண்டு பேர் கூட்டணி...
TMS ரொம்ப ஹை பிட்ச்சுலே பாடிப்பாடி அவருக்கு காது கேக்கற சக்தி கம்மியாயிருச்சு. யாராச்சும் எதாவது சொன்னா கூட தனக்கே அட்வைஸ் பண்றாங்களான்னு ,அந்த காது கேளாத தன்மை ,அந்த ஒரு வருத்தம் ,அதனாலே வர்ற கோபம் பிரச்சினைகள் ஏற்பட காரணமா இருந்திருக்கு.
இது ஒரு வகையிலே வருத்தம் தர்ற தகவல்தான்.இந்த தகவலை TMS சின் மகளே சமீபத்துலே ஒரு பேட்டிலே சொல்லியிருந்தார்.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக