சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி - AL.நாராயணன்

நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு வசனகர்த்தா திரு.A.L.நாராயணன் அவர்கள் வசனம் எழுதிய படங்கள்...

நடிகர்திலகம் சிவாஜியின் அதிக படங்களுக்கு வசனம் எழுயவன் நான் என்று ஆரூர் தாஸ் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆனால் அது தவறான தகவல்.சிவாஜியின் அதிகமான படங்களுக்கு வசனம் எழுதியவர் A.L. நாராயணன்.ஆரூர்தாஸ் சிவாஜிக்கு எழுதிய படங்கள் 28.AL.நாராயணன் எழுதிய படங்களோ 34.
நாராயணன் பேரை சொல்ல ஒரு வார்த்தை போதும் .அவர் எழுதிய வசனத்தில் இருந்தே..
ராஜான்னா ராஜாதான்.ராஜா படத்தின் இந்த பேமஸ் அக்மார்க் பன்ஞ் வசனத்தை எழுதியவர் AL.நாராயணன்.

AL.நாராயணன் நடிகர்திலகம் கௌரவ நடிகராக நடித்து
1956 ல் வெளிவந்த மர்மவீரன் படம்தான் முதன்முதலாக வசனம் எழுதிய சிவாஜி படம்.

அதற்கு பின் 1966 ல் வெளிவந்த தாயே உனக்காக படத்துக்கும் வசனம் எழுதினார்.இதிலும் சிவாஜிக்கு கௌரவ வேடம்தான்..

நாராயணன் எழுதிய  முதல் முழு நீள சிவாஜி படம் என் தம்பி .
வார்த்தைகளில் எந்த சிக்கல்களும் வைக்காத வசனகர்த்தா இவர்.
ஒரு படத்தோட கதையை ஒரு வார்த்தை ஒரு வரின்னு ஏதோ ஒரு இடத்தில்  நச்சென்று வைத்து விடுவது நாராயணனின் ஸ்பெசாலிட்டி.
இந்த என்தம்பி படத்தில் கூட அப்படி ஒரு வசனம் இருக்கும்.எதையும் தட்டி பறிக்கறதிலே தம்பிக்கு ரொம்ப ஆசைன்னு சிவாஜி பேசும் வசனம் வரும்.சிவாஜிக்கு நாராயணன் எழுதிய முதல் முழு நீள படமே பிள்ளையார் சுழியின் பெருத்த சுழியாக அமைந்தது.

நல்ல ஒரு திரைப்படமான லட்சுமி கல்யாணம் படத்துக்கும் வசனம் எழுதினார் AL.நாராயணன்.படம் எப்படி எதார்த்தமாக எடுக்கப்பட்டதோ அது போலவே வசனங்களும் எதார்த்தமாக படத்துக்கு பலம் சேர்த்தது.

என்னோட வலது கரமே ராஜூதான்னு பாலாஜி பேசும் வசனம் திருடன் படத்தில் பிரசித்தமானது. பாலாஜி சிவாஜியின் அசல் நட்பை குறிப்பதாகவே எழுதப்பட்டது.
திருடன் படத்தின் ஸ்டைலிசான காட்சிகளுக்கு பாலீஸ் செய்யப்பட்ட வார்த்தைகளால் வசனத்தை தீட்டினார் AL.நாராயணன்.

தொடர்ந்து பாலாஜி படங்களுக்கு எழுதி சுஜாதா சினி ஆர்ட்ஸின் ஆஸ்தான வசனகர்த்தாவாக ஆனார் இவர் 
என்தம்பி திருடன் படங்களை தொடந்து K.பாலாஜியின் அடுத்த படமாக வந்த எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்துக்கும் வசனம் இவர்தான்.

திருலோகசந்தர் தயாரித்த பாபு படத்துக்கும் வசனம் நாராயணன் தான்.கதையின் போக்குக்கு ஏற்ப இயல்பான வசனங்களை எழுதுவார் நாராயணன்.வார்த்தைகளில் வறுமை வைக்காத வரிகளில் எழுதினார் இப் படத்துக்கு.

K.பாலாஜி தயாரித்த அடுத்த படமான ராஜா படத்துக்கும் நறுக் நறுக்கென சின்னவரி வசனங்களை எழுதி படத்தின் வெற்றிக்கு இவரும் துணை புரிந்தார்.
ராஜான்னா ராஜாதான் வார்த்தை பன்ஞ் ,
சிவாஜி மனோகரிடம் சிறையில் ,போலீஸ்காரங்களை விரோதம் பண்ணிக்காதே ,நண்பனாவும் பழகாதே வசனம் ,
சிவாஜியை சேரில் உட்கார வைத்து ரந்தாவா அடிக்கும் காட்சிகளில் வசனங்கள் என்று நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்.

அது போலவே நீதி திரைப்படத்திலும் நாராயணன் எழுத்து நல்ல பேரை வாங்கி கொடுத்தது.சமூக சிந்தனை கருத்து நிறைந்த வசனங்கள் நிறையவே உண்டு இந்த படத்தில்.நாராயணன் எழுதிய வசனத்திலும் நீதி இருந்தது.

சிவகாமியின் செல்வனுக்கு எழுதினார்.அந்த படத்துக்கு என்ன தேவையோ அதை நிறைவாக செய்தார் நாராயணன்.

என்மகன் ..சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த பாலாஜி படம்.
 எது பேசினாலும்  சுருக்கென்று பேசும் ஏட்டு ராமையாவின் வசனங்கள் ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்டன.

அடுத்தது அன்பே ஆருயிரே. சுமாரான படம் இது என்பதால் பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.

டாக்டர் சிவா படத்துக்கு மிக அருமையாக எழுதியிருந்தார்.பல வசனங்கள் சிறப்பு.பண்டரிபாயிடம் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் தேர்ந்து எடுத்த வார்த்தைகளால் வசனங்களை ரசித்து கேட்க வைத்தது.சுத்தமான மழை நீர் என்று தொடங்கும் ஒரு வசனம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்.

உனக்காக நான் தொழிலாளர் பிரச்சினையை வைத்து எழதப்பட்ட படம். சிவாஜியும் மேஜரும் பேசும் முதலாளித்துவம் தொழிலாளர் வர்க்கம் சம்பந்தப்பட்ட வசனங்களில் அனல் பறந்தது.

K.பாலாஜியின் ஆஸ்தான வசனகர்த்தாவாக விளங்கிய AL.நாராயணன் தொடர்ந்து தீபம் தியாகம் படங்களுக்கும் எழுதினார்.
தியாகம் பட வசனங்கள் மிக சிறப்பாக அமைந்தது.
எச்சில் இலை மேலே பறந்தாலும் எச்சில் இலைதான்...
கோபுரம் மண்ணுலே சாஞ்சாலும் கோபுரம்தான் ..இந்த வசனம் நாராயணனின் எழுத்துக்கு ஒரு உதாரணம்.படம் நெடுக சின்ன சின்ன வரிகளில் வார்த்தைகளில் அசரடித்திருப்பார்.

யாருக்கும் கிடைக்காத ஓர் சிறப்பான வாய்ப்பு நாராயணுக்கு கிடைத்தது என்றால் அது நடிகர்திலகத்தின் 200 வது படமான திரிசூலம் படத்துக்கு கிடைத்த வாய்ப்புத்தான். படம் கமர்ஷியல் என்றாலும் சிவாஜி கேஆர் விஜயா பேசும் டெலிபோன் உரையாடல் வசனம் மிக பிரபலமானது .

தொடர்ந்து நடிகர்திலகத்திற்கு 
நல்லதொரு குடும்பம் எமனுக்கு எமன் ரத்தபாசம் அமரகாவியம் லாரி டிரைவர் ராஜாகண்ணு ஊருக்கு ஒரு பிள்ளை படங்களுக்கு எழுதினார் நாராயணன்.
எமனுக்கு எமன் படத்தில் சிவாஜியுடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார் AL.நாராயணண். இந்த காட்சி சாந்தி தியேட்டரில் எடுக்கப்பட்டிருக்கும்.

நடிகர்திலகத்துடன் இளையதிலகம் பிரபு முதன்முதலாக இணைந்து நடித்த சங்கிலி படத்துக்கும் வசனம் எழுதிய பெருமையை பெற்றார் AL.நாராயணன்.

நடிகர்திலகம் நடித்த 225 வது படமான தீர்ப்பு படத்துக்கும் வசனம் எழுதினார் .
போலீஸ் ஸ்டேசனில் வில்லன் சுதர்சன் சிவாஜியிடம்,எனக்கு டெல்லி வரை செல்வாக்கு இருக்கு எனச் சொல்ல அதற்கு நடிகர்திலகம் நான்டெல்லிக்கே டைரக்டா போன் செய்வேன் என்ற வசனம் தியேட்டரில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

இதற்கு அடுத்ததாக பாலாஜியின் நீதிபதி படத்துக்கும் எழுதினார்.
சிவாஜிக்கு தனித்துவமாக,சூட்டாகும்படியும் வசனங்கள் எழுதுவார் இவர் .இந்த படத்தில் அதற்கு ஒரு உதாரணமான வசனம் இது."என்னை அசைச்சு பாக்கணும்னு நெனச்சா அந்த ஆண்டவனாலே மட்டும்தான்டா முடியும்.வேற யாராலயும் முடியாது".இப்படி பல சுரீர் வசனங்கள் இந்த படத்தில் எழுதினார் நாராயணன்.

கலைஞானம் தயாரித்த மிருதங்கசக்கரவர்த்தி திரைப்படத்துக்கும் வசனம் எழுதி பெருமை சேர்த்தார் நாராயணன்.மிருதங்கம் இனி வாசிக்க மாட்டேன் என சிவாஜி சவால் விட்டுபேசும் காட்சிகள் உள்பட பல காட்சிகளில் சிறப்பாக வசனம் அமைந்திருக்கும்.
"வரம் கொடுத்த சாமி தலையிலேயே பஸ்மாஸ்சுரன் கை வெச்சானாம். அது மாதிரி நான் வளர்த்த சங்கமே என்னை அழிக்க பாக்குதான்னு "சிவாஜி பேசும் வசனம் ஒன்று இது . இது  போலே பல வசனங்கள் நெஞ்சை தைக்கும் படி எழுதியிருப்பார்...

அடுத்த சூப்பர்ஹிட் திரைப்படம் வெள்ளை ரோஜா.
போலீஸ் பாத்திரத்தில் வரும் சிவாஜியின் அறிமுககாட்சியே அசத்தலாக இருக்கும்.குற்றவாளிகளை சிவாஜி விசாரிக்கும் அந்த இன்ட்ரோ காட்சியில் வசனங்களை க்ரைம் கண்ணோட்டத்துடன் விவரித்திருப்பார்.சிவாஜி சொல்லும் அந்த கெட்ட வார்த்தையை மட்டும் தவிர்த்திருக்கலாம்.
போலீஸ் வேடம் பாதிரியார் வேடம் என டபுள் ரோல் செய்த சிவாஜிகளுக்கு ஒன்று மென்மை  ஒன்று அதிரடி என வசனம் எழுதி பிரமாதப்படுத்தியிருப்பார் நாராயணன்.

இதற்கு அடுத்து திருப்பம் நேர்மை படங்களுக்கும் வசனம் எழுதினார்.இளையதிலகம் பிரபுவும் இந்தபடங்களில் நடித்தார்.

சரித்திர நாயகன் வம்சவிளக்கு ,
நடிகர்திலகத்தின் 250 வது படமான நாம்இருவர்  படங்களுக்கும் வசனம் எழுதினார் நாராயணன்...

AL.நாராயணன் நடிகர்திலகத்தின் படத்துக்கு கடைசியாக எழுதிய திரைப்படம் பாரம்பர்யம்.

நடிகர்திலகத்துக்கு AL.நாராயணன் வசனம் எழுதிய  திரைப்படங்கள் வருமாறு :


1.மர்மவீரன்
2.தாயே உனக்காக
 3என் தம்பி
 4.லட்சுமி கல்யாணம்
 5.. திருடன்
  6.. எங்கிருந்தோ வந்தாள்
  7.. பாபு
  8.ராஜா
  9.. நீதி
  10.. சிவகாமியின் செல்வன்
  11.. என் மகன்
12. அன்பே ஆருயிரே
13. Dr.சிவா
14. உனக்காக நான்
15. தீபம்
16. தியாகம்
17. திரிசூலம்
18. நல்லதொரு குடும்பம்
19. எமனுக்கு எமன்
20. ரத்தபாசம்
21. அமரகாவியம்
22. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
23. ஊருக்கு ஒரு பிள்ளை
24.. சங்கிலி
25.தீர்ப்பு
26. நீதிபதி
27... மிருதங்க சக்கரவர்த்தி
28.. வெள்ளை ரோஜா
29.. திருப்பம்
30... நேர்மை
31. சரித்திரநாயகன்
32. வம்ச விளக்கு
33.. நாம் இருவர்
34.. பாரம்பரியம்

செந்தில்வேல்சிவராஜ்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற