சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

அறிவோதயம்

குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமையை வைத்து எடுக்கப்பட்ட நாடகம் அறிவோதயம் :-

1971 ஆம் ஆண்டு அப்போது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனது தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் தொடங்கிய பிறகு அப்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடக்கவிருந்த 1971 நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தமிழக மக்கள் அன்றைய 4 வருட கால திமுக அண்ணா மற்றும் கருணாநிதி ஆட்சியின் மீதான சில பல எதிர்ப்பு நிலை தமிழக மக்கள் மனதில் இருந்தாலும். 

அதைவிட அப்போது அதுவரை மனித மனநிலைகே எதிரியான மதுவிலக்கை விலக்கிவிட்டு இந்தியாவில் மாநில அரசாங்கமே மது விற்பனையை ஏற்று நடத்தலாம் என்ற அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவினால் 1971 ஏப்ரல் 1 தேதி முதல் இந்தியா முழுவதும் மது விற்பனையை தொடங்கியது. 

இந்த மது விலக்கு கொள்கை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கையில் கட்டி காத்த மகாத்மா காந்தியின் உயர்ந்த கொள்கையை வைத்தே பிரதமர் நேருவும் பின்பற்றி வந்தார். 

அதனாலே இந்திய சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து மகாத்மா காந்தியின் உயர்ந்த கொள்கையான மது விலக்கு எதிர்ப்பையே பின்பற்றி வந்த காங்கிரஸ் அருமை தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை அமலில் இல்லை. 

ஆனால் 1967 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நேருவின் மகள் இந்திரா காந்தி காமராஜர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தனது தலைமை பொறுப்பிற்கே சவாலாகி அதிகார போட்டி அரசியல் செய்து விடுவார்கள் என்ற பயத்தால் காமராஜர், நிஜலிங்கப்பா போன்ற தலைவர்கள் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து வந்த பிறகு இந்திரா காந்தியின் சர்வதிகார வெறியாட்டத்தில் கொண்டு வரப்பட்ட காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரான மது விற்பனையை சட்டபூர்வமாக இந்தியா முழுவதும் அமல்படுத்தியது. 

இதை தமிழகத்தில் முன்னணி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒரு முறை அவருக்கு திரையுலகில் நெருக்கமாக இருந்த இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது அண்ணன் முக்தா ராமசாமி மூலம் இந்த நாட்டில் யார் குடித்து மடிந்தாலும் அது பிரச்சனை இல்லை. 

ஆனால் தமிழக மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். 

அதற்கு நீ ஒரு காரியம் செய் ஒரு மது விலக்கு நாடகம் நடத்து என்று காமராஜர் முக்தா ஸ்ரீனிவாசனிடம் கூற உடனே அதை சிர மேல் ஏற்று கொண்டு செயல்பட்டு அறிவோதயம் என்ற பெயரில் நாடக நடிகனாக சிவாஜி கணேசன் மதுபிரியர் ராஜசேகர் கதாபாத்திரத்திலும்,

சரோஜாதேவி விமலா கதாபாத்திரத்திலும் 

நடிகை லட்சுமி அவர்கள் மகள் சுமதி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். 

நாடகத்தின் கதை கரு என்னவென்றால் ராஜசேகர் (சிவாஜி கணேசன்) ஒரு கம்பெனியில் மேனேஜிங் டைரக்டராக வேலை செய்கிறான். 

அவன் அந்த வேலையில் பல மணி நேரம் கணக்கு பார்த்து விட்டு உடலளவும் மனதளவும் சோர்ந்து போகும் நேரத்தில் அவனது கம்பெனியில் வேலை செய்யும் மார்டன் லேடி விமலா சரோஜாதேவி ராஜசேகருக்கு மனவலி மற்றும் தலைவலியை குணமாக்க அதுவரை அவனிடம் இல்லாத மது பழக்கத்தை உருவாக்குகிறாள் 

ராஜசேகர் குடித்து குடித்து தனது வீட்டில் மனைவியும் தனது தாயை இழந்த மகள் சுமதி லட்சுமி அழகான பெண்ணாக வளருகிறாள். 

அதன் பிறகு ராஜசேகர் விமலாவான சரோஜாதேவியை வீட்டிற்கே அழைத்து வந்து வடுகிறான். 

ஆனால் அதை சுமதியான மகள் லட்சுமிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. 

மேலும் விமலாவான சரோஜாதேவி தனது நண்பரான கைலாசம் (எம்.ஆர்.ஆர்) இடம் ராஜசேகர் சொத்துக்களையும் அவளது மகள் சுமதியையும் கடத்தி கொண்டு போய் நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று யோசனை சொல்கிறாள் 

ஆனால் அந்த திட்டம் முழுநேர குடி மயக்கத்தில் இருக்கும் ராஜசேகருக்கு இறுதி வரை தெறியவில்லை.

ஒரு நாள் கைலாசம் தனது மகள் சுமதியை கடத்தி போகும் போது கூட அதை தடுக்க முடியவில்லை. 

பின் கைலாசம் கடத்தி கொண்டு போகும் போதே அவன் கார் விபத்தில் இறந்து சுமதியான லட்சுமி அதிகபடியான காயத்துடன் உயிர் தப்புகிறாள். 

அதன் பிறகு ஒரு நாள் போதை மயக்கம் தெளிந்து தனது தந்தையை பார்க்க வந்த சுமதி ராஜசேகர் இடம் உண்மையை கூற இதற்கு அனைத்திற்கும் காரணம் சித்தி சரோஜாதேவி விமலா என்று தெறிந்த பிறகு பெரும் ஆக்ரோசத்துடன் தேடுகிறான். 

அப்போது வீட்டின் சமையலறையில் சரோஜாதேவியான விமலா ராஜசேகர் சிவாஜி கணேசன் அவர்கள் ஏன் பெண்ணை என்ன செய்தாய் என தெறிந்து தெறியாமலும் கேட்க யோ எனக்கு அதுவெல்லாம் என்னிடம் கேட்காதே எனக்கு எப்போதும் வரும் கடுமையான வயிற்று வலி வந்துள்ளது நான் சுக்கு கிசாயம் வைத்து கொண்டு உள்ளேன் என்று கூற அடி பாவி உன் மகள் மாதிரி வளர்ப்பேனு தான் சுமதியை உன்னிடம் கொடுத்தேன் அதற்கு இப்ப என்ன யா நைட் ஆனால் அப்பா அப்பா என்று கத்தி கொண்டு வருவாள் என்று எலக்காரமாக பதிலளிக்க பெண் பிள்ளைகள் பணம் சம்பாதிக்க வக்கில்லை. 

அதற்கு நான் என் பாட்னரிடம் கொடுத்து உன் பொண்ணு சுமதியை நல்லை விலைக்கு விக்க சொல்லிடேன் என கூற உடனே கோபத்தில் சேகர் அங்கிருந்த விஸ்கி பாட்டிலை உடைத்து கண்ணீருடன் கதறி கொண்டு விமலா அருகே வரும் போது இன்னும் விளையாட்டாகவே சரோஜாதேவி அவர்கள் ரொம்ப கத்தாத உன் பொண்ணு ஒன்றும் கண்ணகி இல்லை சும்மா வா வா கத்தாம போய் தூங்கு உன் நெஞ்சுவலியை விட இப்ப எனக்கு இருக்குற வைத்துவலி அதிகம் என்று எடுத்து எறிந்து பேச உடனே சரோஜாதேவி விமலா பின் அருகே வந்த ராஜசேகர் சிவாஜி கணேசன் அவர்கள் நான் இனி விஸ்கி குடிக்க மாட்டேன்

உன் உயிரை குடிக்க போறேன் என்று கூறியவுடன் சேகர் கூறி கொண்டே விமலாவான சரோஜாதேவி வயிற்றில் குத்தியவுடன் சிவாஜி கணேசன் குற்றவாளி என்ற ஒரு சலனம் இருந்தாலும் தனது மகளை நம்பி தாயாக வளர்க்க சொன்ன பேயான விமலாவை குத்தி கொலை செய்த சந்தோஷத்தில் சிவாஜி கணேசன் முகத்தில் ஒரே சிரிப்பு மற்றும் சரோஜாதேவி வயிற்றில் குத்தியவுடன் அதிகமான சத்தம் இல்லாமல்  தனது வயிற்றில் பாட்டில் குத்தியவுடன் ஏற்பட்ட ரத்தம் சிவாஜி கணேசன் முகத்தில் கொடூரமாக பீச்சி அடித்த போது அந்த ரத்த வெள்ளத்தில் சரோஜாதேவியை பார்த்து உன் வயிற்று வலி மட்டுமல்ல இந்த குடும்பத்திற்கே பிடித்த வயிற்று வலி தீர்ந்தது என்று சிவாஜி கணேசன் கூற நாடகம் முடிந்தது. 

இந்த அறிவோதயம் நாடகம் குடியால் ஏற்படும் தீமையை பார்த்து பாராட்டிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இந்த நாடகம் மதுவிலக்கு கொள்கைக்கு ஏற்றவாறு சிறப்பாகவே இருந்தது என மனதார பாராட்ட சிவாஜி கணேசன், சரோஜாதேவி, லட்சுமி ஆகியோரையும் மனமார பாராட்டி மாலை அணிவித்தார். 

மேலும் இதை சில பல கதையம்சங்களை மாற்றி அருணோதயம் என்ற பெயரில் அந்ந வருடமே முக்தா ஸ்ரீனிவாசன் மற்றும் ராமசாமி படமாக எடுக்க படத்தின் கதாபாத்திரத்திங்கள் நாடகத்தில் இருந்து வேறு வேறாக சம்பந்தமே இல்லாத வாரு இருந்தாலும். 

அருணோதயம் படத்தின் மைய கருவே மதுவிலக்கை பற்றியானது தான் ஆனால் இதில் கதாநாயகன் சிவாஜி கணேசன் அவர்கள் மதுபிரியரை போல் நடித்திருப்பார் தனது மைத்துனர் முத்துராமன் அவர்களை மது பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு 

ஆனால் அந்த அறிவோதயம் நாடகத்தில் சிவாஜி கணேசன் ராஜசேகர் கதாபாத்திரம் மற்றும் சரோஜாதேவி விமலா கதாபாத்திரம் அருணோதயம் படத்தில் கொஞ்சம் கூட சிங் ஆகாமல் ஒரு காதல் ஜோடியாகவே முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களால் காண்பிக்கப்பட்டது. 

ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராமல் போனதற்கு ஒரே காரணம் அதற்கு முன் கொஞ்சம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த தங்கைகாக திரைப்படம் வெளிவந்த பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருந்ததாலும் அந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் & லட்சுமி அண்ணன் தங்கை பாசமும் இந்த திரைப்படத்தில் அதே சப்ஜெக்ட்டில் இருந்ததாலும் ரசிகர்கள் ஏற்கவில்லை. 

ஆனால் சிவாஜி கணேசன் அவர்கள் அருணோதயம் திரைப்படம் வெளியிட்டு விழாவில் சரியாக போகாததிற்கு கூறிய காரணம் தான் காலத்தால் மறுக்க முடியாதது 

அதை அப்போது மேடையில் இருந்த அப்படத்தின் இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசனை பார்த்து நீயும் உன் அண்ணன் ராமசாமியையும் தவிர இந்த திரைப்படத்தில் மையமாக பணியாற்றிய நான், மாப்பிள்ளை (முத்துராமன்), குரங்கு பைய (சோ), இசையமைப்பாளர் (கே. வி. எம்), பாடலாசிரியர் (கண்ணதாசன்) அனைவரும் குடி பழக்கத்தில் வெற்றி கண்டவர்கள் இதில் நாங்கள் எல்லாம் சேர்ந்து நாட்டு மக்களை குடிக்காதே என்று கூறி விழிப்புணர்வாக படம் எடுத்தால் யார் எற்பார் என்று பேசியது தான் நிதர்சனமாகவே பார்க்கப்பட்டது. 

இந்த ரசனையில் மையல் கொண்ட ஸ்ரீனிவாசனும் ராமசாமியும் தான் அடுத்து சிவாஜி கணேசனை வைத்து இயக்கவிருந்த தவப்புதல்வன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ராஜசேகர் என்ற பெயரை மாற்றி நிர்மல் கதாபாத்திரத்தை ஒரு மார்டன் யூத் மேனாக கிளப் மியூசிக் டான்சராகவும், இரவு 6 மணிக்கு மேல் மாலை கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனாக காட்டினார் 

அந்த சரோஜாதேவி ஏற்று நடித்த வில்லி விமலா கதாபாத்திரத்தை சி. ஐ. டி. சகுந்தலாவிற்கு வழங்கி விமலா என்ற பிளாக் மெயிலராக காட்டினார். 

இருந்த போதிலும் முக்தா ஸ்ரீனிவாசன் மற்றும் அவர் அண்ணன் ராமசாமிக்கு அந்த இடத்தில் அறிவோதயம் நாடகத்தில் நடித்த விமலா கதாபாத்திர சரோஜாதேவியை தவிர வேறு யாரையும் பொருத்தி பார்க்க முடியவில்லை என்று அந்த இயக்குனர் சகோதரர்களே பலமுறை கூறியிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற