தமிழ் சினிமாலே கிட்டத்தட்ட 50 வருஷம் எல்லாவிதமான நடிப்பையும் செஞ்சு ...
வந்த ..வரப்போற ...
நடிகர்களுக்கு எல்லாம் ஒரு டிக்சனிரியா தன்னோட கடமையை பெர்பெக்ட்டா செஞ்ச சிவாஜியை கடவுள் தன் பக்கம் கூப்பிட்டுக்கிட்ட வருஷம் 2001.
நடிப்புலே விஸ்வரூபமான அந்த மகா நடிகனுக்கு சிலை அமைஞ்ச ஊர்கள் எப்போ வெச்சாங்க அப்படிங்கறத சொல்லத்தான் இந்த பதிவு.
சிவாஜி காலமான பின்னாலே தமிழ்நாட்டுலே தான் முதல்லே சிலை வெச்சிருக்கணும். அதுக்கான வாய்ப்பு தமிழ்நாட்டுக்கு கிடைக்கலே. புதுச்சேரி அந்த பேரை தட்டிட்டு போயிடுச்சு. புதுச்சேரி கவர்மெண்ட்டே அந்த காரியத்தை செஞ்சது. அன்னைக்கு புதுச்சேரி முதல்வரா இருந்த ரங்கசாமி அவர்கள் சிவாஜிக்கு முதன்முதலா சிலையை வெச்சு
சிவாஜிக்கு பெரிய கௌரவம் பண்ணிட்டார் .புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு காலத்துலே சிவாஜி மன்ற தலைவரா இருந்தவர் .11.2.2006 லே புதுச்சேரியிலே சிவாஜி சிலையை புதுவை முதல்வரே திறந்து வைச்சார்.பக்கத்து மாநில அரசாங்கமே சிவாஜிக்கு சிலை வெச்சு சிவாஜிக்கு பெருமை சேர்த்துச்சு.சிவாஜி சிலை திறப்பு விழாவையும் பெரிய அளவுலே நடத்தி முடிச்சார் ரங்கசாமி.
2006 ஆம் வருசம் தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் நடந்துச்சு. திமுக தன்னோட தேர்தல் அறிக்கையிலே திமுக ஆட்சிக்கு வந்தால் சிவாஜிக்கு சிலை வைப்போம்னு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்துச்சு.
திமுகவும் அந்த எலெக்ஷன்லே ஜெயிச்சிருச்சு. எலெக்சன் நடந்தது மே மாசம். ஆட்சிக்கு வந்த ரெண்டாவது மாசமே சிவாஜி சிலையை திறக்கறதுக்கு கருணாநிதி முயற்சிகள் செஞ்சார்.இந்த சிலை வைக்கறதுலே தான் எத்தனை பிரச்சினைகள் வந்துச்சு. தமிழ் நாட்டுலே முதன்முதல் சிலை அதுவும் ஒரே சிலை சிவாஜிக்கு வைக்க முயற்சி நடக்கறப்ப எத்தனை பிரச்சினைகளை கொண்டு வந்தாங்க . இந்த பிரச்சினைகள் ஆட்சிலே இருந்த ஒரு அரசாங்கத்துக்கே பெரிய சவாலா இருந்துச்சு. இதை எப்படி சொல்றதுன்னா ,சிலை பிரச்சினை பத்தி கருணாநிதியே பேசுன ஒரு விஷயத்தை சொல்லறப்போ தெரிஞ்சுக்கலாம் .அதாவது இந்த சிலை மட்டும் இந்த இடத்துலே அமையலேன்னா நான் என் உயிரையே விடற சூழ்நிலை ஏற்படும்னு சொன்னாரில்லையா. அதுலே இருந்தே தெரிஞ்சுக்கலாம்.
எப்படியோ எல்லா விஷயத்தையும் சமாளிச்சு சிவாஜிசிலை திறப்பு விழாவை நடத்தி முடிச்சார் கருணா நிதி. அதுவும் பெரிய லெவல்லே .பிரமாண்டமான கூட்டம் நடத்தி இந்த விழாவை நடத்தி முடிச்சார் கருணாநிதி. சிவாஜி சிலையை ஸ்பீடா திறக்க காரணம் சிவாஜி மறைவு நாளான ஜூலை 21 வந்ததாலே அந்த நினைவு நாளிலியே அந்த சிலை திறப்பு விழாவை நடத்திரலாம்னு முடிவு எடுத்ததாலே..
தமிழ்நாட்டுலே இருக்கற சிலைகள்லேயே ரொம்ப கம்பீரமான சிலைன்னா அது அந்த சிவாஜி சிலைதான்.
முதல்லே புதுச்சேரி மாநிலம் .அடுத்து தமிழ்நாடு. ஆந்திரா மாநிலம் சத்தியவாடாவில் உள்ள நகரியில் நடிகர்திலகத்துக்கு சிலை வெச்சு ஆந்திராவிலும் சிவாஜிக்கு சிலை அமைஞ்ச பெருமை கிடைச்சது.ஆந்திரா மாநில சிவாஜி ரசிகர்களே அமைச்ச சிலை இது. இந்த நகரியிலே காமராஜருக்கு பல வருசங்கள் முன்னாலே சிலை வெச்சாங்க. அந்த காமராஜர் சிலையை திறந்து வெச்சவர் சிவாஜி.சிவாஜி காமராஜர் சிலையை திறந்து வைக்க போனப்போ சிவாஜிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அசத்துனவங்க தான் நகரி பகுதி சிவாஜி ரசிகர்கள்.
பல வருஷம் கழிச்சு சிவாஜிக்கும் சிலை வெச்சாங்க.இந்த சிலை திறப்பு விழாவுலே ராம்குமார் விக்ரம்பிரபு எல்லாம் பங்கேற்று சிறப்பு செஞ்சாங்க. விக்ரம்பிரபு முதன்முதலா திறந்த வெளி மேடை விழாவுலே பங்கேற்று பேசுனது இந்த விழாவுலேதான்.இந்த சிலை திறப்பு விழா நடந்தது தேதி:26.3.2017..
மதுரைலே முக அழகரி தலைமையிலே சிவாஜி சிலை திறப்பு விழா மிக பிரமாண்டமா நடந்துச்சு.இந்த சிலை திறப்பு விழா நடந்த தேதி 04.10.2009.மதுரை அம்பேத்கார்1) ரோட்டில் கக்கன் சிலைக்கு பக்கத்துலே சிவாஜி சிலை வைக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர்கள் கமல்ஹாசன் நெப்போலியன் விஜயகுமார் சசிகுமார் வடிவேலு.
2008 ஆம் வருசம் ஆகஸ்டு 15 ம் தேதி தஞ்சாவூரில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை அமைக்கறதுக்கு முயற்சி செஞ்சவர் சசிகலா நடராஜன். இந்த சிலையை திறந்து வெச்சவர் நடிகர் SS.ராஜேந்திரன் ..
19.01.2019 ல் கடலூரில் காமராஜர் சிவாஜிக்கு சிலைகள் வைக்கப்பட்டன. இந்த விழாவுலே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கலந்துகிட்டாங்க.
02.07.2017 ல் வேலூர் மாவட்டம் காங்கேய நல்லூர் காட்பாடியிலும் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டது.மிக பிரமாண்டமான கூட்டம் கூடிய விழாவாக இருந்தது. நடிகர்திலகத்தின் தனிப்பட்ட செல்வாக்கை இந்த சிலை திறப்பு விழா காட்டியது.
மதுரை மேலூரில் சிவாஜி ரசிகர்கள் சிவாஜிக்கு மார்பளவு சிலை வைத்துள்ளார்கள்.இரண்டு பக்கமும் யானை தந்தம் இருப்பது போல்
அமைக்கப்பட்ட வடிவமைப்பு. அன்னை இல்லம் வீட்டில் இருக்கும் தந்தத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது இந்த சிலை.
சிவாஜி ரசிகர்களால் வாணியம்பாடியிலும் ,ஊத்தங்கரையிலும் சிலைகள் வைக்கப்பட்டன.
நாமக்கல்லிலும் சிவாஜி ரசிகர்களால் ஒரு சிலை வைக்கப்பட்டதாக செய்தி உள்ளது. இந்த சிலைகள் வெண்கல சிலைகள் அல்ல.
8.5.2025 ல் திருச்சியில் சிவாஜி சிலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.14 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட சிலை இது.பல பிரச்னைகளுக்கு பிறகு சிவாஜி ரசிகர்களின் கடும் போராட்டத்தால் இந்த சிலை திறக்கப்பட்டது.
சென்னை சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு வணிக வளாகமாக மாற்றியபின் அந்த வணிக வளாகத்தில் நடிகர்திலகத்தின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது.
மெரீனா கடற்கரையில் கருணாநிதியால் வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டு நடிகர்திலகம் சிவாஜி மணி மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. கடற்கரை சிலை சேதம் அடைந்ததால் மணி மண்டபத்தில் வேறு சிலை வைக்கப்பட்டது.
இலங்கை ரசிகர்களும் சிவாஜிக்கு சிலை வைக்க முயற்சிகள் எடுத்ததாக பல வருடங்களுக்கு முன்பாக செய்திகள் வந்தன. ஆனால் அது பற்றி ஆதார பூர்வமாக அறிய முடியவில்லை.
இதுவரை நடிகர்திலகம் சிவாஜிக்கு புதுச்சேரி ஆந்திரா தமிழகம் உள்பட பதினான்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இது நடிகர்திலகம் என்ற கலைஞன் என்பதற்காக மட்டுமல்ல ஒரு சிறந்த தேச தொண்டாற்றியவர் என்பதற்காகவும் இந்த சிறப்பு அமைந்துள்ளது. இனி எந்த நடிகனுக்கும் ,ஏன் எந்த தலைவனுக்கும் கூட இத்தகு சிறப்பும் பெருமையும் அமையாது என்பது உறுதி.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக