1954 லிலே இருந்து 18 வருஷமா சிவாஜிக்கு T.MS பாடிட்டு வர்றார். சிவாஜி குரல் ,
TMS குரல்னு பிரிச்சுப் பாக்க முடியாத ஒரு விஷயம் இது. இந்த சமயத்துலே ஒரு புது பாடகரை சிவாஜிக்கு பாட வெச்சா அது செட்டாகுமா? ரசிகர்கள் ஏத்துக்குவாங்களான்னு ஒரு சந்தேகம் இருக்கத்தான் செஞ்சது. MS.விஸ்வநாதனுக்கு நம்பிக்கை இருந்துச்சு. சிவாஜிக்கு சந்திரபாபு எல்லாம் பாடியிருக்கார். இதையும் சிவாஜி மாத்திருவார்னு ஒரு நம்பிக்கை.புதுசா ரிஸ்க் எடுக்க காரணம் என்னான்னா அந்த பாட்டு ரொம்ப மெலடியான பாட்டு.உச்சஸ்தாயி குரலா இருக்கக் கூடாது. கம்பீரம் சேராம மென்மையான இருக்கணும். அதனாலே சிவாஜிக்கு அந்த புதுப்பாடகரை பாட வெக்க முயற்சிகள் நடந்துட்டு இருந்துச்சு.அந்த புது பாடகரை சுத்தி இருந்தவங்க எல்லாம் பயமுறுத்தி வெச்சிருந்தாங்க. சிவாஜிக்கு பாடணும் ,ரொம்ப கவனம் தேவைன்னு எல்லாம் .இப்படி ஏதாச்சும் செய்வாங்கன்னு தான் பாட்டு ரெக்கார்டிங் நடக்கறதுக்கு முன்னாலேயே சிவாஜி வந்தார்.அந்த பாடகரை கூப்பிட்டு ,நீ உன்னோட பாவத்துலே பாடு,எனக்காக எதையும் மாத்த முயற்சிக்காதே ,நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்.
சிவாஜிக்கு பாட வந்த அந்த பாடகர்தான் SP..பாலசுப்ரமணியம்.அந்த பாட்டு தான் பொட்டு வைத்த முகமோ .படம் சுமதி என் சுந்தரி.அந்த மெலடி அந்த பாட்டுக்கு வேணும்ங்கறதுக்காக தான் SPB உள்ள வந்தார்.
இது பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.அதுக்கு பின்னாலே சிவாஜிக்கு SPB பல பாடல்களை பாடினார். இதெல்லாம் MS.விஸ்வநாதன் மியூசிக் பண்ணுன படங்கள்.
சுமதி என் சுந்தரிக்கு MS.விஸ்வநாதன் செஞ்ச அதே விஷயத்தைதான் இளையராஜாவும் சிவாஜிக்கு பண்ணினார்..தீபம் தியாகம் படங்களுக்கு இசையமைச்ச இளையராஜா அந்த பட பாட்டுகள்லே சிவாஜிக்கு TMSயை பாட வெச்சார்.
1979 லே கவரிமானுக்காக ஒரு பாட்டு .பூப்போலே உன் புன்னகையில்னு பாட்டு.
சின்னவயசு மகள்கிட்டே ஒரு அப்பா தன் பாசத்தை சொல்லற மாதிரி பாட்டு.
இந்த வாய்சும் மெலடியா இருக்கணும் ..குரல் உயர்த்தாத இசை சங்கமத்துலே இந்த பாட்டு போகணும். அதுக்காக இளையராஜா SPB யை பாட வெச்சார்.
பிரமாதமான கிளாசிக் பாட்டா அமைஞ்சது.
இந்த பாட்டுலே சிவாஜி பிரமீளா பேபி பபிதா நடிச்சிருப்பாங்க. இந்த பாட்டு ஷூட்டிங்லே ஒரு ஆச்சர்யமான விஷயம் நடந்திருக்கு.அது என்னான்னு பாக்கறதுக்கு முன்னாலே பூப்போலே உன் புன்னகை பாட்டு சிறப்பை பாக்கலாம்.
சிவாஜி குழந்தைகளுக்காக பாடுன பாட்டுகள் எல்லாம் ஹிட் ஆகியிருக்கு. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாபு பட பாட்டு ,நான் பெற்ற செல்வம் பாட்டு ,முத்துநகையே உன்னை நானறிவேன் என்தம்பி பட பாட்டு ,கேளாய் மகனே உத்தமன் பட பாட்டு,கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வமொன்று இமயம் பட பாட்டு இப்படி நிறைய இருக்கு. அந்த வரிசையிலே தான் இந்த கவரிமான் பட பாட்டு.
சிவாஜின்னாலே கம்பீரமான குரல் தான். அந்த கம்பீரத்தை காட்டாமே ரொம்ப மென்மையா பாடப்பட்ட பாட்டு இது.
வீட்டுலே ஆரம்பிச்சு அப்படியே கார்டன்லே ஆடிப் பாடற மாதிரி காட்சியை எடுத்திருப்பார் SP.முத்துராமன்.
SP. முத்துராமனுக்கு சிவாஜியோட முதல்படம்.
இந்த பாட்டை எழழுதியவர் பஞ்சு அருணாசலம்.
இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியர் இவர்.படத்தை தயாரிச்சவரும் பஞ்சுஅருணாசலம்தான்.
பொதுவா அம்மாவோ அப்பாவோ தங்களோட குழந்தைகளுக்கு பாடற பாடல்கள் சென்டிமென்ட்டாகவும் ,பாட்டும் கொஞ்சம் மெதுவாகவும் ஒரு உணர்ச்சியான தழுதழுக்கற குரல்லே இருக்கும். ஆனாஇந்த பாட்டு அப்படி இல்லே.நல்ல வேகமா போகும்.அதே சமயம் SPBயும் வழக்கமான குரலல்லே இல்லாமே சிவாஜிக்குன்னு ஸ்பெசலா பாடியிருப்பார் .
வழக்கம்போல இல்லாம நல்ல வரிகளைக் கொடுத்திருப்பார் பஞ்சு.முதல் சரணத்தில் வரும், "பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே, மூங்கிலிலே வரும் சங்கீதம் போல் நீ சிரிப்பது காவியமே" ன்னு சிறப்பா இலக்கிய தரமாவும் எழுதியிருப்பார்.
அதுக்கு தகுந்த படி பல இசை கருவிகளையும் வெச்சு இசையமைச்சு இருப்பார் இளையராஜா.பாட்டு ஆரம்பத்துலே வயலின் கிடார்லே ஆரம்பிச்சு அப்புறம் தபேலாவையும் சேத்து ஸ்பீடா கொண்டு போயிருப்பார் இளையராஜா.
முதல் வரி முடிஞ்சு அடுத்த வரியான என் கண்ணே கண்ணின் மணியேன்னு ஒரு இழு இழுப்பார் பாருங்க. அதுதான் சிவாஜிக்கு. கொஞ்சம் கம்பீரத்தை சேத்தது மாதிரி இருக்கும்.
அப்புறம் அந்த பாட்டு காட்சி பெங்களூர் கார்டனுக்கு மாறிடும் .மியூசிக்லே கொஞ்சம் ஸ்பீடு குறையும். புல்லாங்குழல் வயலின் கிடார் எல்லாம் சேந்து பேக்ரவுண்ட்லே ஓடும். சிவாஜி பேபி பபிதா ஓடியாடற மாதிரி காட்சி இருக்கும்.
பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமேன்னு அடுத்த வரி ஆரம்பிக்கும்.பேபி பபிதாவோட சேந்து சிவாஜி ஒரு குழந்தை மாதிரி நடப்பார் பாருங்க. அந்த குதூகலம் அந்த சந்தோசம் அழகா காட்டியிருப்பார்.
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல் நீ சிரிப்பது காவியமேன்னு அடுத்த வரி.ரொம்ப டச்சிங்கா இருக்கும். பாட்டு உருக வெக்கற ஒரு மனநிலைக்கு மாறும்.சிவாஜி ஒரு சின்ன அசைவு டான்ஸ்னு அவ்வளவு அழகா அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி தன்னோட நடிப்பை மேட்ச் பண்ணியிருப்பார்.
அதுலயும் அன்புக்கு நூறு ஆசைக்கு நூறுன்னு வரிக்கு குனிஞ்சு சின்ன டான்ஸ் மூவ்மென்ட்டே நடந்துட்டு வருவாரே..அதெல்லாம் ரொம்ப பரவசமா இருக்கும்.
அம்மாவென்று வரும் கன்றுக்குட்டி தன் தாய்மையை கொண்டாடுது வரியெல்லாம் SPBயே உருகறது தெரியும்.
நெஞ்சோடு பாசம் வந்தாடும்போது கண்ணோரம் ஈரம் ஆறாகுமேன்னு வரி அதுக்கு சிவாஜியோட ரியாக்சன் SBB வாய்ஸ் மாடுலேசன் பஞ்சுவோட வரி இளையராஜாவோடஇசை எல்லாம் சேந்து உணர்ச்சிகரமான பாச நிலையிலே நம்மை பாக்க வெச்சுடும்.
பஞ்சு எழுதுன வரிகள் எல்லாம் இளையராஜாவோட மெட்டுக்கு எழுதுன வரிகள் தான்.
இதுலே பங்கெடுத்தவங்க எல்லாம் முதன்முதலா ஒண்ணா சேந்த கூட்டணி.
குழந்தை பாட்டை தேடறப்போ சந்தோச பாட்டுலே இதுவும் முக்கியமான ஒண்ணு.
இந்த பதிவோட இடையிலே இந்த பாட்டு சூட்டிங்க்லே ஒரு விஷயம் நடந்துச்சுன்னு சொன்னேனில்லையா.
பாட்டுலே சிவாஜி பிரமீளா பேபி பபிதா மூணு பேரும் நடிச்சிருப்பாங்க. சிவாஜி பபிதாவோட பிரமீளா வர்ற மாதிரி காட்சிகள் இருக்கும். ஆனா மூணு பேரும் வர்ற காட்சிகள்லே பிரமீளாவே நடிக்கலேங்கறதுதான் உண்மை. குளோசப் ஷாட்டுலே வர்ற தனிக் காட்சிகள்லே மட்டும் பிரமீளா நடிச்சாங்க.
சிவாஜியும் பேபி பபிதாவும் மட்டும் தான் பெங்களூர் கார்டன்லே நடிச்சாங்க. பிரமீளாவும் போற மாதிரிதான் இருந்துச்சு. பிரமீளாவுக்கு அர்ஜென்ட்டா வேற ஒரு படத்துலே நடிக்க வேண்டிய காரணம் இருந்ததாலே ,லாங் ஷாட்டுலே பிரமீளாவுக்கு பதிலா ஒரு டூப் நடிகையை வெச்சு SP.முத்துராமன் ஷுட் பண்ணினார். பிரமீளாவை அப்புறம் சென்னைலே வெச்சு ஷூட் பண்ணினார். பாட்டுலே மாத்தி மாத்தி காமிச்சு மூணு பேரும் பாட்டுலே நடிச்ச மாதிரி மேட்ச் பண்ணிட்டார். பாட்டு ப்ரிவீயூ பாத்த சிவாஜியே அசந்து போய் ,அடப்பாவி என்னமா மேட்ச் பண்ணியிருக்கேன்னு முத்துராமனை கேட்டாராம்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக