சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜிக்கு சதி

1951 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 4 நாட்கள் திமுக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை NSகிருஷ்ணன் படமாக எடுத்து  சிவாஜியின் இரண்டாவது படமான பணம் படத்தில் சேர்த்து சென்சார் போர்டுக்கு தணிக்கைக்காக அனுப்பி வைத்தார்.சென்சார்போர்டு அதிகாரிகள் படத்துக்கும் அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என சொல்லி தணிக்கை சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டார்கள்.கலைவாணர் சிவாஜியையும் 100 துணை நடிகர்களையும் வைத்துக்கொண்டு ஸ்டுடியோவில் செட் அமைத்து ,வீட்டை விட்டு போகும் கதாநாயகன் ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பது போலவும் ,அந்த இடத்தில் திமுக மாநாடு நடப்பது போலவும் காட்சியை படமாக்கினார்.சிவாஜியும் துணை நடிகர்களும் நடித்த புதிகாக படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை படத்தில் முதலில் காட்டி அதன் பின் மாநாட்டு காட்சிகள் நடப்பது போலே இணைத்து ,பணம் படத்தை மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பினார்.சென்சார் அதிகாரிகள் இந்த முறை எதுவும் சொல்லாமல் தணிக்கை சான்றிதழ் கொடுத்தார்கள்.
பணம் படம் 27.12.52 ல் வெளியான பின் ,சென்னை காமதேனு தியேட்டரில் சிவாஜியின் பெயரில் மயிலாப்பூர் பகுதியில் தொடங்கிய மன்றத்தின் சார்பில் முதல் மன்ற விளம்பரம் வைக்கப்பட்டது.கறுப்பு சிவப்பு நிறம் இணைந்த துணியின் நடுவில் வரையப்பட்ட சிவாஜியின் படத்தை ஒட்டி திரையரங்கில் கட்டியிருந்தார்கள்.இதுதான் சிவாஜி மன்றம் சார்பில் திரையரங்கில் வைக்கப்பட்ட முதல் அலங்காரம்.தஞ்சை ஓரத்தநாடு பகுதியில் திமுக இளைஞர்கள் 'நாத்திகம் கணேசன்  மன்றம்' என்ற அமைப்பை தொடங்கினார்கள்.சிவாஜி பெயரில் தொடங்கப்பட்ட இரண்டாவது மன்றம் இதுவாகும்.
படம் வெளியாகி ஒரு வாரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக தொண்டர்கள் எந்த வித அங்கீகாரமும் இன்றி சிவாஜியின் பெயரில் மன்றங்களை உருவாக்க ஆரம்பித்தார்கள்.திமுகவின் கிளை அமைப்பு போலே சத்தமின்றி உருவான இந்த அமைப்புகள் சில மேல்மட்ட தலைவர்களின் கண்ணை உறுத்த ஆரம்பித்தது.
பராசக்தி வெளியான கால கட்டங்களில் திமுக கட்சி பொதுக் கூட்டங்களில் சிவாஜி கணேசன்  பிரதான ஆற்றலாக உணரப்பட்டார்.திமுகவின் கொள்கை முழக்கங்களை எந்த வித தன்னலமும் இன்றி சிவாஜி வீதி வீதியாக கொண்டு சேர்த்து வளர்த்தார்.

1953 ஆம் ஆண்டு இலங்கை கொழும்பு பகுதியில் ஒரு கூட்டுறவு மருத்துவமனை கட்ட அங்கிருந்த தமிழர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.பராசக்தி படத்தால் உங்கள் புகழ் உச்சத்தில் உள்ளது.நீங்கள் ஒரு கலை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தால்போதும் . அதில் வசூலாகும் பணத்தை கொண்டு நாங்கள் மருத்துவமனையை கட்டி முடித்து விடுவோம் என்று இலங்கை தமிழர்கள் சிவாஜியிடம் உதவி கேட்டார்கள்.தேதியை மட்டும் சொல்லுங்க ,நான் என் குழுவோடு வந்து நடத்திக் கொடுக்கிறேன் என்றார் சிவாஜி. சிவாஜியின் கலைக்குழு இலங்கை வருவதற்கு கூட அவர்களிடம் பண வசதி இல்லை. அவர்களின் முகத்தை பார்த்து அறிந்து கொண்ட சிவாஜி ,நாங்க  தங்கறதுக்கு மட்டும் ஏற்பாடு செஞ்சு கொடுங்க ,மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
சிவாஜியின் நடிப்பில் இருளும் ஒளியும் என்ற நாடகம் நடத்தப்பட்டது.பராசக்தி நாயகன் நடிக்கிறார் என்ற செய்தி பரவியதும் நாடக டிக்கட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.இலங்கையில் அப்படியொரு கூட்டம் யாருக்காகவும் கூடியதில்லை என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.நாடகத்தில் சிவாஜி நடித்து முடித்து மேடை இறங்கிய போது கூட்டத்தில் இருந்து பெரிய ஆரவாரம். பராசக்தி வசனத்தை சிவாஜியை பேசச் சொல்லி சத்தமிட்டார்கள் .
மக்களின் அன்பை புரிந்து கொண்ட சிவாஜி ,ஒரு வார்த்தை கூட மாறாமல் பராசக்தி கோர்ட் சீன் வசன காட்சிகளை பேசினார்.மக்கள் எழுப்பிய கரவொலியால் சிவாஜி வியந்து போனார்.கலை நிகழ்ச்சியில் 28000 ரூபாய் வசூலானது.சிவாஜி அதை அப்படியே கொடுத்து விட்டு சென்னை திரும்பினார்.
சிவாஜியோடு போனவர்கள் விமான செலவையாவது வாங்கியிருக்கலாமே என்றார்கள்.அவங்க நம்ம தொப்புள் கொடி உறவு.அவங்க மருத்துவமனை கட்டத்தான் பாடுபடறாங்க.அதுலே வரவு செலவு  பாக்க கூடாது. இதை நாம கடமையாத்தான் பாக்கணும் என்றார்.

இதற்கு பின்பு திரும்பிப்பார் படம் வெளியானது. பராசக்தி படத்துக்கு பின்பு  சென்சார் அதிகாரிகளுக்கு அதிக தலைவலியை கொடுத்த  படம் இது.ஏகப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு பின்பு படத்தின் சில காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை சான்றிழ் கொடுத்தார்கள்.பராசக்தி வெற்றியை தாண்டும் திரும்பிப்பார் என்று எதிர்பார்த்தார்கள்.அந்தளவு வெற்றியை அடையாவிட்டாலும்  தமிழ் சினிமாவில் ஒரு திருப்பமான படமாக அமைந்தது.சிவாஜிக்கு பெருகிய செல்வாக்கை தனது அரசியல் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் கருணாநிதி.கருணாநிதி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் சிவாஜியையும் இணைத்துக் கொண்டார்.விபரம் அறிந்தவர்கள் இதை கருணாநிதியின் ராஜதந்திரம் என்றார்கள்.

திமுகவின் அரசியல் மாநாடு ஒன்று 1953 ஆம் ஆண்டு கருணாநிதியின் ஏற்பாட்டில் திருவாரூரில் நடந்தது.இந்த மாநாட்டுக்கு சிவாஜியும் நிதி உதவி செய்தார்.தொண்டர்களின் சட்டையில் அண்ணா கருணாநிதி சிவாஜி ஆகிய மூவரின் படங்கள் மட்டுமே மின்னியது.மாநாட்டு மேடையில் அண்ணா கருணாநிதி சிவாஜி நெடுஞ்செழியன் ஈவெகி சம்பத் மதியழகன் ஆகியோர் உட்கார்ந்திருந்தார்கள்.
சிவாஜியை முதலில் பேச சொல்லுங்கள் என்று கூட்டம் சத்தமிட்டது.சிவாஜியை பேச விடா விட்டால் கூச்சல் வரும் என்பதை புரிந்து கொண்ட கருணாநிதி சிவாஜியை முதலில் பேசச் சொன்னார்.
வெள்ளை உடையுடன் மேடையில் சிவாஜியின் முழக்கம் கேட்டு தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்தார்கள்.சிவாஜி பேசி விட்டு அமர்ந்ததும் கூட்டம் கலைய தொடங்கியது .மொத்த கூட்டமும் சிவாஜிக்கு வந்த கூட்டம்  என்பதை அறிந்தனர் தலைவர்கள் .சிவாஜிக்கு எழுந்த இந்த ஆதரவு அலை தலைவர்களுக்கு முகச் சுழிப்பை உண்டாக்கியது.
இப்படி படிப் படியாக எழுந்தது சிவாஜி எதிர்ப்பு அலை.
குறுகிய காலத்தில் வந்து இப்படி விஸ்வரூபமாக வளர்ந்த சிவாஜியின் வளர்ச்சி திமுக மேல் மட்ட தலைவர்களுக்கு பொறாமையை உண்டாக்கியது. இப்படியே விட்டால் தாங்கள் எல்லாம் செல்லாக் காசாகி விடுவோம் என்பதை நினைத்து சிவாஜிக்கு எதிரான சூழ்ச்சிகளில் இறங்கினார்கள்.
சிவாஜியின் பெயரை இருட்டடிப்பு செய்ய தொடங்கினார்கள்.
இந்த சூழலில் திமுக தொண்டர்கள் தமிழகம் எங்கும் சிவாஜி பெயரில் மன்றங்களை புதிது புதிதாக தொடங்க ஆரம்பித்தார்கள்.இது மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போலே இருந்தது.
ஏதோ ஆர்வக் கோளாரால் தான் சிவாஜிக்கு மன்றங்களை தொடங்குகிறார்கள் என இளக்காரமாக அந்த தலைவர்கள் நினைத்து கொண்டிருந்த போது சுமார் மூன்று மாத இடைவெளியில் ஆயிரம் மன்றங்களுக்கு மேல் உருவாகி அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இந்த சூழ்நிலையில் சிவாஜி கருணாநிதி கூட்டணியில் மனோகரா திரைப்படம் உருவானது.பராசக்தி பணம் திரும்பிப்பார் என சமூக களத்தில் பேசிய சிவாஜி வாளெடுக்கும் வீரனாக ,கர்ஜனை குரலில் மனோகரா வசனங்களை பேசி திரையுலகை அதிர வைத்தார். ஒரு தனிக்காட்டு ராஜாவாக சிவாஜி முன்னேறிக் கொண்டிருந்தார்.
சென்னையில் ஒரு வார கலெக்சனாக அதற்கு முந்தைய வசூல் ரெக்கார்டுகளை முந்தியது.
மனோகரா வெளியான திரையரங்குகளில் எல்லாம் சிவாஜி மன்றங்கள் சிவாஜி கொடியை பறக்க விட்டது.
திமுகவின் மேல் மட்ட திலைவர்களுக்கு மனோகரா பட வெற்றியும் வரவேற்பும் அவர்களது நிம்மதியை கெடுத்தது.அரசியலில் விதையாக இருக்கும் தங்களை சிவாஜி என்ற ஆழிப் பேரலை முளைக்காமல் செய்து விடுமோ என்ற பயத்துடன் இருந்தார்கள்.

அண்ணாவின் காதுகளுக்கும் இந்த விஷயம் சென்றது. அண்ணா இந்த விஷயத்தில் மௌனமாவே இருந்தார்.1953 ஆம் ஆண்டு நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சிவாஜி கலந்து கொண்ட போது அங்கும் அவருக்கு இருந்த வரவேற்பை கண்டு அதே கூட்டத்தினர் முணு முணுத்தார்கள்.அப்போதும் அண்ணா மௌனத்துடனே இருந்தார்.

அண்ணாசிவாஜியிடம் காட்டிய பாசம் சுற்றி இருந்தவர்களுக்கு பிடிக்கவில்லை.அவர்கள் திட்டமிட்டு அண்ணாவிடம் இருந்து சிவாஜியை பிரிக்கும் வேலைகளில் இறங்க ஆரம்பித்தார்கள்.
சிவாஜி அரசியலில் உண்மையாக இருந்தவர்.அது அவரின் சுபாவம்.அன்னை ராஜாமணியின் வளர்ப்பு அப்படி.ஆனால் அந்த உண்மைகள் அவரை காத்ததா?
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற