சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

பானுமதி கோபம்


சிவாஜியை சிறந்த நடிகரா தேர்ந்தெடுக்காதீங்க'.வேற ஒருத்தர் பேரை சொல்றோம். அவரையே செலக்சன் பண்ணுனதா அறிவிப்பு செஞ்சுறுங்க.இப்படி ஒரு சிபாரிசு வந்துச்சு தேர்வுக் கமிட்டிக்கு. தேர்வுக் குழுவுலே இருந்த பானுமதி ,கமிட்டி குழுவுலே இருந்தே விலகிட்டாங்க. அது தான் பானுமதி .
சிவாஜி நடிப்பு மேலே அந்தளவு மதிப்பு வெச்சிருந்தவங்க பானுமதி ..
இந்த கேலிக் கூத்து நடந்தது வேற எங்கயும் இல்ல. தமிழ்நாடு அரசு விருது குழு கமிட்டிலே நடந்த கூத்துதான்.

60 வருசமாச்சு திராவிட கட்சிகளோட ஆட்சி.
தமிழகத்திலே   ஆரம்பத்திலே அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தோட  மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.

சிவாஜி கணேசனுக்கு அவரோட வாழ்நாளிலே கடைசி நொடி வரைக்கும் , சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காம செஞ்சதுதான்  ஆட்சி செஞ்சவங்க காட்டிய நன்றிக்கடன்!’
இந்த இடத்துலே தான் நடிகை பானுமதியை பாராட்டணும்.

தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்க போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர்  சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடினவர்   பானுமதி. 

நடந்தது தான்  என்ன?
தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதியும் பங்கு பெற்றார். சிவாஜி நடிச்ச படங்களும் போட்டிக்கு வந்துச்சு.

பரிசளிப்புலே நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுங்கன்னு கேட்டாங்க  அவார்டு கமிட்டியினர்.
சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை தான் வரலையே தவிர பலத்த சிபாரிசு வந்துச்சு .

ஆற்றலுக்கொரு கலைஞன்னு சொன்னா அது சிவாஜிகணேசன்தான்.
சிவாஜி கணேசனுக்கு  நடந்த இந்த அசிங்கத்தை பாத்து சிங்கம் போலே  சிலிர்த்து நின்னாங்க பானுமதி . உடனடியாகப் பதவி விலகினாங்க.. தன்னோட பலமான எதிர்ப்பை காட்டுனாங்க

‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லேன்னா, பேசாம நாகரிகமா தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’னு  சொல்லிடுங்களே. அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.       

என்னைப் பொறுத்த வரையிலே  எத்தனை முறை நான் தேர்வு கமிட்டியில் இருந்தாலும், அங்கே சிவாஜி கணேசன் அவர்களின் படங்கள் தேர்வுக்கு வந்தால், நடிகர் திலகத்தைத் தான் சிறந்த கலைஞராகத் தேர்வு செய்வேன். ஏனெனில்  நடிப்புக் கலையில் அவரே சிறந்தவர்!’

இப்படி அதிரடியா தன் கருத்தை பதிவு செஞ்சவர் பானுமதி.
பானுமதியோட சிறப்பை பேசறப்போ சில தகவல்களை சொல்லியாகணும்.

பானுமதியோட குணம் கட்அண்ட் ரைட்டா பட்டுன்னு சொல்லற குணம் .

1963ல்  பானுமதி நாயகியாக நடிச்சு  மூன்று தமிழ்ப்படங்கள் வெளிவந்துச்சு . அந்த படங்கள் நீண்ட காலத் தயாரிப்பில் இருந்த படங்கள்.

 கலை அரசி, காஞ்சித் தலைவன், நடிகர் திலகத்துடன் அறிவாளி தான் அந்த மூணும். ஆரம்பத்துலே  எதிர்பார்த்த பெரிய வெற்றி அமையலே அறிவாளி படத்துக்கு.  மறு வெளியீடுகளில்லே  நல்லா வசூல் பண்ணுச்சு. 

‘அறிவாளி’ சிவாஜி - பானுமதி நடிதச்ச காமெடி படம். ஆங்கில சினிமாவின் தழுவல். சிவாஜியும் பானுமதியும் போட்டி போட்டு ரசிகர்களை ரசிக்க வெச்சாங்க.

குறிப்பா அவங்க  திருமணக் காட்சி.ஆபாசம்இல்லாத அக்மார்க் காமெடி அமர்க்களமாக அமைஞ்சது.

 பானுமதியோட  இயல்பான குணத்தையொட்டிய கதாபாத்திரம் அந்த அறிவாளி மனோரமா கேரக்டர். அதனால பானுமதியின்  நடிப்பு கொடி கட்டிப் பறந்துச்சு.

அறிவாளியின் சிறப்புக்கு  குமுதம் எழுதிய விமர்சனம் கூட அதை சொல்லுச்சு .
‘நிமிஷத்துக்கொரு சிரிப்பு. நடிப்பில் சிவாஜியும் பானுமதியும் மோதிக்கொள்ள வேண்டும்  என்ற நம் விருப்பம் நிறைவேறியது. மோதலின் முடிவு ட்ரா.
பானுமதியின் வெளிப்படையான ஆர்ப்பாட்டத்துக்கும் கணேசனின் உள்ளடங்கிய தன்னம்பிக்கைக்கும் - வெறுப்பில் பிறந்த பானுமதியின் பரபரப்புக்கும், அன்பில் உதித்த சிவாஜியின் சூழ்ச்சிக்கும் நல்ல பொருத்தம்.  
மூன்று சண்டைப் படங்களால் கலைக்கு நேரக் கூடிய சேதத்தை, ஒரே ஓர் ‘அறிவாளி’யால் ஈடு செய்ய முடியும்.’

குமுதம் ஓஹோவென்று அறிவாளியைப் பாராட்டி விமர்சித்த விதத்தில்  மாற்று முகாம் ரசிகர்கள் நொந்து போனார்கள்.

அப்போது தமிழகமெங்கும் மாற்று முகாம் நடிகரின் 3  படங்கள் ஒரே சமயத்தில் ஓடிட்டு இருந்துச்சு.

இது இப்படின்னா...
மெஜஸ்டிக் ஸ்டுடியோவுக்கு வந்தார் அண்ணா. காஞ்சித்தலைவன் துவக்க விழா! வழக்கமாக வாழ்த்து பெறும்  எம்.ஜி.ஆர்.,- மு.கருணாநிதியைக் கடந்து, அண்ணாவின் நெஞ்சில்  அன்னைக்கு  நிறைஞ்சிருந்தவர் பானுமதி.

‘அன்னை’  படத்தின் தாக்கம் அவர் மனசுலே  குறையாம இருந்துச்சு. மைக்கைப் பிடிச்ச அண்ணா ,
‘பானுமதி அம்மையார் நடிப்பைப் பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்வேன். அவர் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை!’ என்றார்.

காஞ்சித் தலைவன் பட விமர்சனத்தில்...
‘எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் தீண்டாமைக் காதல்! எப்போதும் இரண்டடி இடைவெளி!’  என்று எழுதியது குமுதம்.

1966  குடியரசு தின விழாவுலே பானுமதிக்கும் சிவாஜிக்கும் ஒரே சமயத்தில்  பத்மஸ்ரீ பட்டம் கிடைச்சது. அதையொட்டி  நடிகர் திலகமும், பானுமதியும் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டி, கட்டுரை  எழுதினாங்க.தமிழ் சினிமாவின் மிக அபூர்வ நிகழ்வு அது!

பானுமதி பற்றி நடிகர்திலகம் சிவாஜிகணேசன்  சொன்னது :

‘பத்மஸ்ரீ பானுமதி நடிச்ச படம் ஸ்வர்க்க சீமா. ’பாவுரமா’ பானுமதியாக இதில வந்து, தனக்குனு ஒரு புதிய ஸ்டைலை வளத்துகிட்டு, புகழ் ஏணியிலே இருந்த நேரம்.

அந்த சமயத்தில பெங்களூரில  சக்தி நாடக சபாவினர் முகாமிட்டு, நாடகங்களை நடத்திக்கிட்டிருந்தாங்க.
கம்பெனியில் நானும் ஒரு நடிகன். கவியின் கனவு, ஜீவன், விதி, ராம பக்தி, மனோகரா போன்ற நாடகங்களை அப்போத அங்க  நடத்திக்கிட்டிருந்தோம். மாலையில் நாடகம் நடக்கும். இரவு ஒன்பது மணி சுமாருக்கு முடியும்.

பெங்களூரில் அப்போது  ‘ஸ்வர்க்க சீமா’ படம் போட்டிருந்தாங்க.பானுமதி இதில் பிரமாதமாக நடிச்சிருக்கிறதா சொன்னாங்க., ஒரு நாள் நாடகம் முடிஞ்சதும், இரவு ஒன்பது மணிக் காட்சிக்கு நண்பர்களோட  படம் பார்க்கப் போனேன் .

ஒண்ணு ம் தெரியாத பட்டிக்காட்டுப் பெண் சுப்புலு, பெரிய நடிகையாகி, நாகரிக மங்கை சுஜாதாவாக மாறி விடுவாங்க.
பட்டிக்காட்டு சுப்புலுவாகவும், நாகரீக மங்கை சுஜாதாவாகவும் ஒண்ணுக்கொண்ணு மாறுபட்டு  இரு மாறுபட்ட  வேஷங்களில பானுமதி சிறப்பாக நடிச்சிருந்தார்.

அன்னைக்குத்தான் நான் அவர் நடிச்ச  படத்தை முதன் முதலாகப் பாத்தேன்.
அன்னைக்கே அவர் ஒரு சிறந்த நடிகைங்கற மதிப்பு  என் மனசுலே  வந்துருச்சு.

அப்போ நான் பெண் வேஷம் போட்டு நடிக்கறதுண்டு. பானுமதியோட அந்த நெளிவு சுழிவுகள்லே ஒரு தனி அம்சத்தை பாக்க முடிஞ்சது.

படத்தை ரெண்டு தடவை பாத்தேன் .அவரோட நடிப்புக்காக!
 அதன் பின் வெளியான பானுமதியின்  படங்கள் ஒவ்வொண்ணையும்  பாக்கத் தவறினதே இல்லை!
ஒவ்வொரு படத்திலயும் அவர் நடிப்புத் திறமையில தனிச்சு  நின்னு  நடிச்சத பாக்க முடிஞ்சது.

‘மக்களைப் பெற்ற மகராசி’  படம் ஆரம்பமாச்சு . நானும், அதன் கதாசிரியர் ஏ.பி. நாகராஜனும், இதில் வரும் நாயகனும், நாயகியும் கொங்கு நாட்டுத் தமிழில் பேசி நடிச்சால் நன்றாக இருக்கும்ன்னு அபிப்ராயப்பட்டோம். அதை எல்லாரும் ஆமோதிச்சாங்க.

பானுமதி தெலுங்கு நடிகை. தமிழில் பேசி நடிக்கக் கூடியவர். ஆனாலும் கொங்கு நாட்டுத் தமிழைப் பேசி நடிக்க வேணுமே!

அவர் எப்படிப் பேசி நடிக்க வேண்டும்ன்னு நான் சொல்லிக் கொடுத்தேன். பானுமதிக்கு சொல்லிக் கொடுப்பதில் யாருக்கும் கஷ்டமே இருக்காது.அவர் நொடியில் எதையும் புரிந்து கொண்டு விடுவார்!           

கொங்கு நாட்டுத் தமிழும் சில விநாடிகளிலேயே அவருக்குக் கை வந்த கலையாகி விட்டது. அதை  நானும், அவரும் பேசி நடிக்கும் போது ஒரே தமாஷாக இருக்கும்.

நடிகர் திலகம் பானுமதி பற்றி சொன்னதிலிருந்து சில சுருக்கமான தகவல்கள் இது .

பானுமதி பற்றி சில விஷயம்.
நடிகை பானுமதி நெருங்கிய தோழியா பழகுனது சிவாஜி மனைவி கமலாம்மாவோட. எத்தனையோ நடிகைகளோடநடிச்சிருந்தாலும் கமலா அம்மாவோட இருந்த அன்னியோன்ய நட்பு மாதிரி யாரையும் நெனச்சு பழகுனதில்லே.

பானுமதி சினிமா பீல்டுலே இருந்த எந்த நடிகரோட வீட்டுக்கும் போனதில்லே. அவர் போன ஒரே சினிமா நடிகர் வீடு சிவாஜியோட அன்னை இல்லம் மட்டும்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற