ஒரு நடிகன் கஷ்டப்பட்டு நடிப்பதை இஷ்டப்பட்டு படம் பிடிப்பவர்களே ஒளிப்பதிவு மேதைகள் .
நடிகனின் அழகை குறித்த அளவில் கூட்டிக் கொடுப்பவரும் அந்த மேதைகளே.
360 டிகிரியில் எந்த கோணத்தில் நடிகர்திலகத்தை படம் பிடித்தாலும் அந்த மாபெரும் நடிகனின் நடிப்பை அறிய முடியும்.
இது பல ஒளிப்பதிவு மேதைகள் சொன்னது.
'silhouette' எனப்படும் நிழல்
உருவத்தில் சிவாஜியை படம் பிடித்தாலும் அவரின் போஸ் தனத்துவமாக இருக்கும்.
நடிகர் திலகம் கிட்டத் தட்ட 100 இயக்குநர்கள் , 60 கதாநாயகிகள் , 50 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார் .
எல்லோராலும் தினந்தோறும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்ற விஷயங்கள் தான் இது .
ஆனால் ஒரு படத்துக்கு கண் போல விளங்கும் காமிரா ஒளிப்பதிவாளர்களுடன் அவர் பணிபுரிந்ததை யாரும் பதிவு செய்யதில்லை.
அதற்காகவே இந்த பதிவு.
பராசக்தி படத்தில் பிளாட்பாரத்தில் நின்று போலீசிடம் சிவாஜி பேசும் அந்த காட்சியை பாருங்கள். இருட்டுப் பிண்ணனியில் சிவாஜி போலீஸ் நிற்கும் துல்லிய ஒளிப்பதிவுக்கு சொந்தக்காரர் மாருதிராவ்.உலக நடிகர்களில் மேலான அந்த கலைஞனை படம் பிடித்த முதல் ஒளிப்பதிவு மேதை.
பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் சிவாஜியை லைட் ஷேட் லைட் எபெக்டில் துல்லிய ஒளிப்பதிவில் பிரமாதப்படுத்தியிருப்பார்.
போலீஸ்காரனின் உருவத்தையும் அப்படியே மனதில் நிலை நிறுத்திவிடுவார்.ஆரம்ப காட்சிகளின் முன்னுதாரணங்கள் இவை. படத்தின் ஒவ்வொரு பிரேமும் அழகோவியங்களாக மிளிரும்.ரம்மியமான இயற்கை சூழலை புதுப்பெண்ணின் மனதை தொட்டு பாடலில் வார்னிஷ் பளபளப்புடன் பளபளக்க பார்க்கலாம்.
W.R.சுப்பாராவ். திரும்பிப்பார் படத்தின் ஒளிப்பதிவாளர்.தெள்ளத் தெளிவாக உருவங்களையும் அதில் உணர்ச்சிகளையும் காட்டிய ஒளிப்பாதிவாளர். கறுப்பு வெள்ளையில் நெருடல் இல்லாத கேமரா அசைவுகளில் துல்லியம் காட்டிய மேதை..க்ளைமேக்ஸ் காட்சிக்கு முன்பாக வரும் காட்சிகளில் சிவாஜி பண்டரிபாய் காட்சிகளும் சிவாஜி பேசும் திரும்பிப்பார் என்ற வசன காட்சிகளும் திரையில் ஓட ஓட நெஞ்சில் அவை படமாய் பதியும்.சிவாஜியை படம் பிடித்த மேதைகளில் இவரும் ஒருவர்.
நடிகர்திலகம் நடித்து மூன்று மொழிகளில் வெளியான மனோகரா திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்தவர் P.ராமசாமி.சிவாஜி நடித்த முதல் கற்பனை சரித்திர படம் இது.மாயாஜால மந்திர காட்சிகளை திகிலுடன் காட்டி அசத்தியிருப்பார்.சிவாஜியின் அங்க அசைவுகளை நாம் வியந்து பார்க்க காட்சிப்படுத்தியவர் இவர்.
தூக்குத் தூக்கி படத்தை ஒளிப்பதிவு செய்தவர்
CA.மது சூதன்.
நடிகர்திலகத்தின் 25 , 50 ஆம் படங்களான கள்வனின் காதலி , சாரங்கதாராபடங்களை ஒளிப்பதிவு செய்தவர் என்.ஸி.பாலகிருஷ்ணன்.
JG.விஜயம் என்று ஒளிப்பதிவாளர் பெயரை சொன்னால் அதிக பேருக்கு தெரிமாது. இவர் ஒளிப்பதிவு செய்த சிவாஜி படம் அன்னையின் ஆணை. ஆங்கில படத்தை நினைவு படுத்துவது போல் அன்னையின் ஆணை படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்.
ராமண்ணா எடுத்த பிரமாண்டமான கறுப்பு வெள்ளை திரைப்படம் காத்தவராயன். பிரமாண்டமாக காட்டப்பட்ட கோட்டை கொத்தளங்கள் ,மிரட்டிய மாயாஜால காட்சிகள் நிறைந்த இப்படத் தை ஒளிப்பதிவு செய்தவர் T.K.ராஜாபாதர்.
உத்தமபுத்திரன் படத்தின் ஒளிப்பதிவை காவியம் ஆக்கியவர் வின்சென்ட்.டைட்டிலில் ஆரம்பித்து வணக்கம் கார்டு வரை பிரேம் பை பிரேம் செதுக்கியிருப்பார்.எல்லாமே சொல்லலாம் என்றாலும் ,
நிற்கும் சிவாஜியை இன்னொரு சிவாஜி சுற்றி வரும் ஷாட் பிரமிக்க வைக்கும்.
அந்த கால இரட்டை வேட படங்களில் இந்த மாதிரி
'ட்ரிக் ஷாட் ' எடுப்பது கடினம்.
வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தின் ஒளிப்பதிவை பற்றி சொல்ல வேண்டியதில்லை. இப் படத்தின் ஒளிப்பதிவு டைரக்டர் W.R.சுப்பாராவ் .காமிரா இயக்குனர் கர்ணன்.போர்க்கள காட்சிகளை சிரமத்துடன் படம் பிடித்திருப்பார்கள்.பெரிய வேலை . அதிக உழைப்பு.
தொழிலாளர் பிரச்சினையை பேசிய இரும்புத்திரையின் காமிராமேன் எல்லப்பா.
காவியப்படமான பாசமலர் படத்தை படம் பிடித்தவர் விட்டல்ராவ்.நிறைய காட்சிகளை வேறுபட்ட வித்தியாசமான கோணங்களில் ரசிக்க ரசிக்க படம் பிடித்திருப்பார் இவர்.
நடிகர்திலகத்தின் 75 ஆம் படமான பார்த்தால் பசி தீரும் படத்தை விட்டல் ராவ் ஒளிப்பதிவு செய்திருப்பார்.
போர்க்காட்சிகள் முடிந்து வரும் அந்த மலை பிரதேச காட்சிகள் கண்கள் ரசித்த காட்சிகள்.உள்ளம் என்பது ஆமை பாடலில் சிவாஜியின் நடைக்கு ஏற்றவாறு நடக்கும் காமிரா.
நடிகர்திலகத்தின் காவியங்களில் பலவற்றை படம் பிடித்த பெருமைக்கு சொந்தக்காரர் ஒருவர் WR.சுப்பாராவ். இவருக்கு துணையாக இருந்தவர் கர்ணன். தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த வஉசியின் வரலாற்றை படம் பிடித்தவர்கள் இவர்களே.
தமிழ்சினிமாவின் மகத்தான காவியமான கர்ணன் படத்தை படம் பிடித்தவர் V.ராமமூர்த்தி.
எத்தனை வித விதமான பிரமாண்ட படப்பிடிப்பு ,காமிரா கோணங்கள் என பிரமிப்பூட்டிய ஒளிப்பதிவை செய்தவர் இவர்.
இதற்கு முன் இப்படியொரு படப்பதிவை பார்த்ததே இல்லையே எனும் அளவுக்கு ககாமிராவில் ஜால வித்தை காட்டிய புதிய பறவையின் ஒளிப்பதிவாளர் KS. பிரசாத்.ஹாலிவுட்காரர்களே வியக்கும் அளவுக்கு நமக்கு படம் பிடித்து அசர வைத்தவர் இவர்.இவர்தான் மகா மெகா புராண படமான திருவிளையாடல் படத்துக்கும் பணி புரிந்தார்.தில்லானா மோகனாம்பாள் படத்தின் சிறப்புக்கும் இவரே ஒளிப்பதிவாளர்.
நூறாவது படமான நவராத்திரி படத்தை டபிள்யூ .ஆர் .சுப்பாராவும் , கர்ணனும் ஒளிப்பதிவு செய்தார்கள்.க்ளைமேக்ஸ் காட்சி இவர்களின் திறமைக்கு உதாரணம்.
125 ஆவது படமான உயர்ந்த மனிதன் படத்தை படமாக்கியவர் பி.என். சுந்தரம் காட்சிகளை உயர்ந்த முறையில் காமிராவுக்குள் அடக்கியிருப்பார்.அந்த நாள் ஞாபகம் பாடலில் சிவாஜி வாக்கிங் ஸ்டிக்குடன் நடக்கும் நடை ஒரு சாம்பிள்..
ஆக்சன் படங்களில் உச்சமானதும் அட்டகாசமும் ஆன சிவந்தமண் படத்தை படம் பிடித்து பரமிப்பு ஊட்டியவர் N.பாலகிருஷ்ணன் BA ஆவார்.
150 ஆவது சவாலே சமாளி படத்தை ஒளிப்பதிவு செய்தவர் வின்செண்ட் .ஒரு நல்ல அழகான கிராமத்துக்கு சுற்றுலா சென்று வந்தது போல உணர்வை தந்த படம்.
ஞானஒளி.கறுப்பு வெள்ளையில் அசத்திய ஒளிப்பதிவை செய்தவர் P.N.சுந்தரம் .தங்கபதக்கம் SP.சௌத்ரியை விதவிதமான ஸ்டைல்களில் படம் பிடித்து நம்மை வியக்க வைத்தவரும் இவரே.
நடிகர்திலகத்தை ரசிகர்கள் எண்ணங்களுக்கு ஏற்ப காட்டிய திரைப்படம் ராஜா.படமாக்கியவர் மஸ்தான்.
வசந்தமாளிகை படமாக்கியவர் A.வின்சென்ட்.
ராஜ ராஜ சோழன் W.R.சுப்பாராவ்.முதல் சினிமாஸ்கோப் திரைப்படத்தை முதன்முதலாக படம் பிடித்தவர் இவர்.
175 ஆவது படத்தை அவன்தான் மனிதன் விஸ்வநாத் ராய் ஒளிப்பதிவு செய்திருப்பார்.கண்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த சிங்கப்பூர் காட்சிகள் ,ஊஞ்சலுக்கு பூச்சூட்டி பாடல் ,மனிதன் நினைப்பதுண்டு பாடல் ,
ஆனந்த பவன் அரண்மனையை அழகாக காட்டிய வித்தகர் இந்த விஸ்வநாதராய்.
200 ஆவது படமான திரிசூலம் படத்தை ஒளிநப்பதிவு செய்தவர் கே.எஸ்.பிரசாத் .
காஷ்மீரை கண்களுக்குள் செருகி மனதில் படமாக நிலைக்க வைத்த ஒளிப்பதிவாளர்.
KS.பிரசாத் 225 ஆவது படமான தீர்ப்பு படத்தை ஒளிப்பதிவு செய்தார்.சிவாஜியின் கம்பீரத்தை பல கோணங்களில் காட்டியிருப்பார்.
TS.விநாயகம் 250 ஆவது படமான நாம் இருவர் படத்தை ஒளிப்பதிவு செய்தார்.
சிவாஜியின் 275 ஆவது படத்தை புதிய வானம் ரவி யாதவ் படமாக்கினார்.
இறுதி படம் பூப்பறிக்க வருகிறோம் படத்தை விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்தார்.
இது தவிர நம் நினைவுக்கு வரும் மற்ற காமிரா ஒளிப்பதிவாளர்கள் ,தம்பு
பி.எஸ்.ரங்கா ,பொம்மன் இரானி , ஜித்தன் பானர்ஜி , யூ.ராஜகோபால் , பாபு பாய் மிஸ்த்ரி , ஜி.ஆர்.நாதன் ,
ஜே.ஜி. விஜயம் ,அமிர்தம் ,
முத்துசாமி ,வி.ரங்கா , பாபு , ஸ்ரீராம் வெங்கடரத்னம் , கண்ணன் முதலியோர் நடிகர்திலகம் படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக