செம தில்லா சீனை வெச்சான்யா இந்த படத்துலே. சிவாஜி தியேட்டரை சிவாஜி கிட்டயே காட்டி இதுதான் சாந்தி தியேட்டர் பாத்திருக்கியான்னு சொல்லி சிவாஜியை அடிப்பான் பாரு.டேய் யாரைப் பாத்துடா இந்த கேள்வியை கேக்குறேன்னு ,விட்டாங்க பாரு சவுண்ட்...
தியேட்டரே அலறுச்சு இல்லே...
பின்னாலே,
எவன் கேள்வி கேட்டானோ அவனை புரட்டி எடுப்பாரு சிவாஜி.அப்ப சிவாஜி சொல்லுவாரு ,ஏண்டா என் கிட்டேயே சாந்தி தியேட்டரை பத்தி கேக்கறியான்னு ,ஒரு பன்ஞ் அடிப்பார் பாருங்க. ரசிகர்கள் ஏக ரகளை பண்ண வெச்ச காட்சி...
தமிழ் சினிமாலே கிராமிய சுனாமி படம் பட்டிக்காடா பட்டணமா.ராஜா ஞானஒளின்னு பிரிச்சு மேஞ்சிட்டு இருக்கார் சிவாஜி.
ஏக அலப்பரை பண்ண சீனுக இருக்கு. தடாலடியா போற படங்கள்.சீன் மாத்தி சீன் அட்டகாசம் பண்ற சிவாஜி நடிப்புலே ரசிகர்கள் பெரிய சந்தோசத்துலே இருக்காங்க.
அடுத்ததா P.மாதவன் வந்தார் .மாஸ் மசாலா ஆனா கிராமத்து சப்ஜெக்ட்.ஸ்டைலா போய்ட்டு இருக்கற சிவாஜி படங்களை பாத்து ரசிகர்கள் எல்லாம் இது மாதிரியே இன்னும் வந்தா நல்லா இருக்குமேன்னு நெனச்சுட்டு இருக்காங்க. அந்த நேரத்துலே இந்த கிராமத்து கதை.அதுலயும் சிவாஜி குடுமியெல்லாம் வெச்சுகிட்டு..
ரசிகர்கள் அப்ப இருந்த மூடே வேற.
ஆனா பாலமுருகன் வசனம் மாதவன் டைரக்சன்லே ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு.
Fullல்லா அவுட்டோர்லே படம் .சோழவந்தான் கிராமம்.
படம் எடுத்து முடிஞ்சு தியேட்டர் ஸ்கிரீன்லே பிரசன்ட் பண்றாங்க.
சென்சார் சர்டிபிகேட்லே ஆரம்பிச்சு ஜெயலலிதா இன்ட்ரோ முடிஞ்சு ,கேமரா கிராமத்து பக்கம் தாவும்.ஒரு கும்பத்தை காமிச்சு நடிகர்திலகம் சிவாஜிகணேசன்னு டைட்டில் போடவும்,பேக்ரவுண்ட் மியூசிக் வேற அதிரடியா ஆரம்பிக்கவும் ரசிகர்களோட உற்சாகமும் ஆரம்பிச்சுரும்.
சிவாஜியோட கை கால் நெஞ்சுன்னு ஒவ்வொரு பிரேமா திரையிலே மாறி மாறி விழ ,ஒப்பனைன்னு டைட்டில் போடறப்போ நடிகர்திலகத்தோட முகத்தை காமிப்பாங்க.சிவாஜி உடம்பை தனித்தனியா காமிக்கறது எப்படின்னா ,முதல்லே நெகடிவ் பிலிம் ,அப்படியே அது ஒரிஜினலுக்கு மாறும்.ரொம்ப ரொம்ப வித்தியாசமா பிளாக் ஒண்ட் ஒயிட்லே அட்ரா சக்கைன்னு பார்க்க வைக்கும்.
பாட்டொண்ணு வசனமா கணீர்னு வரும்.
தாயே மகமாயி மனது வைக்க வேண்டுமம்மான்னு ஆரம்பிக்கும்.சிலிர்ப்பா இருக்கும்.இதுக்கும் சிவாஜியை காட்டலே அது வரைக்கும்.
என்னடா இதுசாமி பாட்டு போலிருக்குன்னு நெனச்சு பாத்துட்டு இருந்தா ரெண்டு வரி முடிஞ்சு அடுத்த வரி வருது.
அன்புத் தமிழனுக்கு அருள் புரிய வேண்டுமம்மான்னு.சாமிக்கு ஆரம்பிச்சு சிவாஜிக்கு மாறும் வரியெல்லாம். உடுக்கை அடி மியூசிக் அதிர அதிர பாட்டு வரி மிரட்ட சிவாஜி நெகடிவ்லே இருந்து ஒரிஜினல்லே மாறி மாறி வர டைட்டில்லேயே அட்டகாசம் ஆரம்பிச்சுரும்.
நண்பர்கள் பலர் கொண்டவன் நல்லவன் இவன் வல்லவன்னெல்லாம் பாட்டு ஓட ஓட ..ரசிகர்கள்
அலப்பறைக்கு கேக்கணுமா?
சிவாஜியை குளோசப்லே காட்டி டைரக்ஷன் டைட்டில் கார்டு முடிய,அந்த ஸ்டில் போட்டோ அப்படியே அசைய நடிகர்திலகம் அம்பிகையே ஈஸ்வரியேன்னு ஆட ,ரசிகர்களும் எந்திரிச்சு ஆட ...இப்படியொரு டைட்டிலைத்தான்யா எதிர்பார்த்தோம்னு ரசிகர்களுக்கு செம சந்தோசம்.
ரசிகர்களுக்கு பட்டாசாவே சீனுகளை வெக்கணும்னு முடிவு பண்ணி செஞ்சிருப்பார் மாதவன்.ஊர்த்திருவிழாவுலே ஒரு சண்டைய வெச்சிருப்பார்.கம்புச்சண்டை. கிராம படத்துலே கம்புச் சண்டை இல்லாமலா? தடியெடுத்து வர்ற அடியாளை பாத்து சிவாஜி அடிச்ச பன்ஞ்லே தியேட்டர்லே அலப்பறை தான். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனான்னு ...
கம்பு சுருள்கத்தின்னு சண்டை பரபரன்னு போகும்.
நெனச்சதுக்கு மேலே சீனுக போகும்.ரொம்ப விறு விறுப்பா..
பல காட்சிக போன பின்னாலே, சிவாஜிக்கு தெரியாமே ஜெயலலிதாவுக்கு கல்யாணம் நடக்கும்.
கல்யாண வீட்டுலே புகுந்து பெரிய அதகளம் பண்ணுவார்.
கல்யாண மேடையிலேயே ஏறி ஜெயலலிதாவை தூக்கிட்டு மாட்டு வண்டிலே தூக்கி வருவார் சிவாஜி.படத்தை விறு விறுப்பா காட்டணும்னா சும்மா தூக்கிட்டு வந்ததா காட்ட முடியுமா? ரேக்ளா ரேஸ் மாதிரி ஒரு மாட்டு வண்டி சண்டை .
பத்து பதினைஞ்சு மாட்டு வண்டி துரத்தி வர ,எல்லாத்தையும் சாச்சு சோழ வந்தான் வருவார் சிவாஜி.சரி அடிதடி மாட்டு வண்டி சண்டையா இருக்கும்.இந்த படத்துக்கு முன்னாலே வந்த படங்கள்லே இப்படி ஒரு மாட்டு வண்டி சண்டைய பாத்திருக்க முடியாது.பல கோணங்கள்லே காமரா சண்டையோட சண்டையா புகுந்து விளையாண்டு இருக்கும்.இந்த சண்டை தான் பின்னாலே வந்த பல கிராம படங்களுக்கு ஆரம்ப சுழியா இருந்தது.
சிவாஜி ஜெ கல்யாணம் முடிஞ்சு பாட்டொண்ணு அமைஞ்சது பாருங்க. கேட்டுக்கோடி உருமிமேளம்னு...
எந்த ரசிகன் சீட்டுலே உக்காந்து பாத்தான்.ஒரே குதியாட்டம்தான்.இப்ப வரைக்கும் இதோட லெவலே வேறதான்.கிராமத்து இசை ,வெஸ்டர்ன் மீயூசிக் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி தனித்தனியா ஆட வெச்சிருவார் மெல்லிசைக்கே மன்னர்.
ஆர்கெஸ்ட்ரா ஆளுகளுக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் கம்மியாயிருந்தா இந்த பாட்டை பாடுனா போதும்.துள்ள வெச்சுரும்.
இந்த பாட்டு போட்ட போடுலே கிறக்கத்தோட பாத்துட்டு இருந்த நமக்கு இன்னொரு சரவெடியையும் பத்த வெச்ச மாதிரி ,ஒன் ப்ளஸ் ஒன் மாதிரி அடி என்னடி ராக்கம்மா வேற போட்டு தாக்குச்சு.எந்த சத்தமும் இல்லாமே எல்லாம் இந்த பாட்டுக்களை பாத்திருக்கவே முடியாது.
அதுக்கு பின்னாலே ஜெவோட கும்மாளம் சிவாஜியோட கருத்து மோதல் ..அப்புறம் அம்மா வீட்டுக்கு போற ஜெ...
இப்போ கதை கொஞ்சம் சிட்டிக்கு தாவும்.ஓடிப்போன ஜெவை சிவாஜி கூட்டி வர போவார்.
மூக்கையா சேர்வை மாடர்னா முகேஷ்ஷா மாறிடுவார்.
பட்டிக்காடா பட்டணமான்னு டைட்டில் வெச்சிருக்கு. பட்டிக்காட்டு ராகத்துலே மூணு பாட்டு போட்டாச்சு. பட்டணத்து முகேசுக்கும் ஒரு பாட்டு வெச்சா எப்படியிருக்கும்.அப்படியும் ஒரு பாட்டு போட்டார் விஸ்வநாதன்.
கிழிச்சு தொங்க விட்டுருப்பார்.
ஆனா இது மெசேஜ் சொல்லற பாட்டு. தவறியும் தடம் மாறாது.
மாப்பிள்ளையை வெறுத்தாலும் வாசல்படி தாண்டாதே ..
கோபம் கொண்டு உதைத்தாலும் கொண்டவனை மறக்காதேன்னு சொல்ல வந்த மெசேஜையும் கண்ணதாசன் சொல்லியிருப்பார்.
ஹிப்பிதலை, மாடர்ன் பேன்ட்சர்ட், கூலிங்கிளாஸ்னு
அதுலயும் மாஸ் முகேசா விளையாண்டுருப்பார் சிவாஜி.
ரெண்டு போர்ஷனும் கபடி ஆட்டமா இருக்கும்.எங்கேயெல்லாம் கேப் கிடைக்குதோ அங்க எல்லாம் பந்து பறந்துட்டே இருந்துச்சு.
சிவாஜி ஜெ விவகாரத்துலே வக்கீல் ஒருத்தர் தலையிடுவார். அப்ப சிவாஜி பேசற டயலாக்குக்கு ஆடிப் போயிரும் தியேட்டர்.விவாகரத்து வேங்கடசாமி ,என் விவகாரத்துலே தலையிடாதே சாமிம்பார்..அந்தந்த இடத்துலே இது மாதிரி வசனத்துலே அடிச்சு தூக்கியிருப்பார் பாலமுருகன். அதையும் சிவாஜி குரல்லே கேக்கறப்போ சொல்லணுமா ..
ஆடிக்கறக்கற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடிக் கறக்கற மாட்டை பாடிக் கறக்கணும்.
ஜெவோட கேரக்டர் ரெண்டுங் கெட்டான் ரகம்.
சலிச்சுப் போய் சோழவந்தான் திரும்பிடுவார் சிவாஜி.
இந்த சிச்சுவேசனுக்கு ,
அடி என்னடி ராக்கம்மாவை சோக மெலடியா போட்டிருப்பார் விஸ்வநாதன் .தியேட்டர் அமைதியா இருந்தது இந்த இடம் தான்.ரசிகர்களுக்கும் ரெஸ்ட் வேணுமில்லே.
இதுக்கு பின்னாலே ஒரு சீனு வரும்.பஞ்சாயத்துக்கு
போய்ட்டு வந்த சிவாஜியை பாத்து ,பஞ்சாயத்துலே வரவேற்பு எப்படின்னு ஆயா கேப்பாங்க..
சிவாஜி சொல்லுவாரே அதுக்கு..
இன்னைக்கு பஞ்சாயத்துலே எனக்கு கிடைச்ச வரவேற்பை
பாத்திருந்தா பூரிச்சுப் போயிருப்பேன்னு சொல்ல..
அதை பாக்க நான் வராமே போயிட்டேன்னு ஆயா சொல்ல,
நான் வந்திருக்கேனே ,உயிரோடன்னு ஒரு வசனம் பேசுவார்.குரல்லே ஒலிக்கிற அந்த மாடுலேசன் இருக்கே..அது தான் சிவாஜி ஸ்பெசல்..
வசனங்களை ரொம்ப ரசிக்க வெச்சிருப்பார் பால முருகன்.
ஒரு கிராம படம் மாஸ் படமாவும் கிளாஸ் படமாவும் ஆல் ரவுண்ட் பிளேவுமா டிராவல் பண்ணுன படம் இது.
படத்தோட முடிவு இதுதான்.
பட்டிக்காடா இருந்தாலும் சரி பட்டணமா இருந்தாலும் சரி
தமிழ்மண்ணுன்னு வர்றப்பபோ அது தன்னோட தடம் மாறக் கூடாத கலாச்சாரத்தை முடிவா சொல்லியிருக்கும் இந்த படம்.
இந்த மாதவனை பாருங்க. இந்த படத்துக்கு முன்னாலே செஞ்ச படம் ஞானஒளி. எவ்வளவு டிபரெண்ட்..
எவ்வளவு டேலண்ட் இருந்தா இப்படி பிரசண்ட் பண்ண முடியும். நாமெல்லாம் ஆளை பாத்து எடை போடற ஆளுக.மாதவனை பாத்தாலும் வேற மாதிரி தான் நினைக்க தோணும். அவர் பண்ணுன படங்களை பாத்தா தான் தெரியும். அவரோட திறமை என்னான்னு..சிவாஜியோட டிராவல் பண்றதுன்னா சாதாரணமா...
பட்டிக்காடா பட்டணமா படம் பெட்டி பெட்டியா வசூலை அள்ளி கொட்டுன படம். மதுரை ரெக்கார்ட் எல்லாம் பிளாக் அண்ட் ஒயிட்லே மத்த படங்களுக்கு சான்ஸ் தராத படமா இருக்கு ..
இந்த பட வெற்றி விழாவுக்கு சிவாஜி ஊர்வலமா வந்தப்போ மதுரையெல்லாம் தேர்த்திருவிழா மாதிரி இருந்துச்சு.
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக