சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

raja film

எல்லாம் இருக்கணும்.எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது.இப்படி செய்த படமே ராஜா! ராஜாவின் ஆட்சியில் குறை இருக்கலாமோ? 
ராஜான்னா ராஜாதான்..
முன்னோடிகள் எல்லாம் பிழியோ பிழியென்று சாரெடுத்து விட்டார்கள்
ராஜாவை.நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது ?யாருடைய பார்வையிலும் ராஜா அழகோ அழகு.
ஒரு புதிய பட டிரெயிலரில் தண்ணீரில் இருந்து வில்லை எடுக்கும் காட்சி வரும்.வில்லை எடுக்கும் போது தண்ணீரும் கனமாக மொந்தமாக வில்லுடன் சேர்ந்து வரும்.ஸ்லோமோஷனில் க்ராபிக்ஸ் டெக்னிகல் உத்திகளில் ஷாட் அமைக்கப்பட்டு பார்ப்பவரை ஈர்க்கும்.ராஜாவை பாருங்கள்...ஒரு பொருளை எடுப்பதாகட்டும்,  கையாள்வதாக ஆகட்டும், கைகளை விரிப்பதில் ,கால்களை வைத்திருப்பதில் வார்னிஷ் முடிந்த வேலைபோல் பளீர்! பளீர்! 
நடிகர்திலகத்துக்கு உவமை என்று எதைக் கூற முடியும்? ராஜாவில் நடிகர்திலகத்தின் பிரசன்டேசனை விக்கிரமாதித்தன் வேதாளம் போல் விடுகதை கதைப் புதிர்களாக ஒரு புத்தகம் போடலாம்.
சிகரெட் பற்றவைக்கும் காட்சி. சிறையில்.லைட்டர்  நீட்டுவார் மனோகர் ..ஆரம்ப அறிமுகமாக காட்சி இது.எவ்வளவு சாதாரணமான காட்சி தான் இது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? ஆனால், ஸ்கிரீனில் காண்பிக்கும் போது அதிரி புதிரி அமர்க்களம் தான்! ரசிகர்களின் கூட்டமிருக்கும் போது, இந்த காட்சியை பெரும்பாலும் சரியாகவே பார்க்க முடியாது.அந்தளவுக்கு சிகரெட் லைட்டருக்கே விசில் பறக்கும், கை தட்டலில் அதிரும்.அலட்டிக் கொள்ளாத நடிப்பு பாணி இதில் முழுதும் ..பளஸ் அட்ரா விசில்  ஸ்டைல்..ஸ்டைல்..ஸ்டைல்..
நின்றால் ஒரு ஸ்டைல்
நடந்தால் ஒருஸ்டைல்
பார்த்தால் ஒரு ஸ்டைல் ...
என்று ஏகத்துக்கும் சர்வ சாதாரணமாய் அள்ளி வீசியிருப்பார்.
போலீஸ்காரனை விரோதம் பண்ணிக்காதே, நண்பனாகவும் பழகாதே, பொதுவா இரு! ஆர் எஸ் மனோகரிடம் சொல்வார்..முதல் டயலாக் இது, படத்தில் நடிகர்திலகத்துக்கு..
அது என்ன அப்படியொரு வாய்ஸ்..ரொம்ப ரொம்ப கவர்ச்சி, காந்தம் அதில்...ரீவைண்ட் பண்ணி பண்ணி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றிருக்கும்.ஆராய்ச்சி செய்தால் ஆயுள்தான் முடியும். அந்தக் குரல் ஒரு ஹிப்னாடிசக் குரல் .

நீ வரவேண்டும் என காத்திருந்தேன்....
வந்தார். வென்றார்.காத்திருக்க வைக்கவில்லை.பாலாஜி படமாச்சே.டாண் என்று ரிலீஸ் ஆகி விட்டது.இதற்கு முன் வந்த பாபுவில் நடித்தவரா? பாபுவில் ,கலர் கலராய் ரசிக்க முடியவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு ராஜா ஒட்டு மொத்த திருப்தி செய்து விட்டது.ராஜாவின் டை பறப்பது போல ரசிகர்களுக்கும் உற்சாகம் பறந்தது.
பாயிண்ட் டூ பாயிண்ட் நான் ஸ்டாப் ரன்னிங் வேக காட்சிகள் தான் படத்தில்.அந்த வேகம் ஆரம்ப காட்சிகளில் இருந்தேதான்.ராஜாவின் என்ட்ரியே 16.30 நிமிடங்கள் கடந்துதான்.
மனோகரின் தகவல்,ஜெ,வை பார்ப்பது ,தன்னை எடை போடும்படி நடித்தல் ,அடுத்து பாலாஜி கும்பல், அதில் இணைதல், பாலாஜி விசாரணை, சேரில் கட்டி வைத்து அடித்தல் ...பாலாஜிக்கு நம்பிக்கை வரும்படியான செட்டப்புகள்,தொடர்ந்து  பாலாஜியின் சந்தேகம் தீரல்......
இதற்கு பின் இப்படியொரு காட்சி அமைப்பு தான் வருமென்று யார் தான் நினைத்திருப்பார்கள்? புலியை கட்டிவைத்து அடித்து பட்டினி போட்டு சில நேரம் கழித்து அப்புலியை விடுவிக்கலாம் என்று பக்கத்தில் போனால், ஆனால் அது அடிபட்ட புலியாயிற்றே? என்ன நடக்குமோ, அது நடக்கும் .நான்கு முனை தாக்குதல், கை வீச்சு ,ஜூடோ கட் ,உதை  என்று அதிரடியோ அதிரடி தான்..உத்திகளில் ,அசைவுகளில்
ஸ்பீடில் அமைக்கப்பட்ட காட்சியமைப்பு அது.ரொம்பவே பெர்பெக்டாக ,அதிரடியில் மாஸ் காட்டியிருப்பார் நடிகர்திலகம்.
இந்த உருவல்தானே 2013 விஸ்வரூபம்...
ரந்தாவிடம் பந்தாவாக பைட் செய்யும் காட்சிகள் வரும் போதுதான் ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் பார்க்கிறோம் என்று ஞாபகம் வரும்.சண்டைக்காட்சி என்பதாலும் அந்த பாணி படம் என்று சொல்லப்பட்டதாலும் தான் அது.அதுவரை ராஜாவின் ஸ்டைல்களால் அரண்ட மனம் வேறு எதையும் நினைக்க தோணவேயில்லை.ஜேம்பாண்டாவது ஒண்ணாவது! ராஜாவுக்கு முன்னே!

எல்லா படங்களையும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாய் செய்வதில்தான் நடிகர்திலகம் விரும்பினார்.அதனால் தான் ராஜாவை போல் அடுத்தது செய்யவில்லை.இதே மற்ற நடிகர்கள் செய்திருந்தால் ராஜா போலவே பத்து படங்கள் வந்திருக்கும்.ஒரு ராஜா! ஒரு அரியாசனம்!!.இது நடிகர்திலகத்தின் கொள்கை ..
கோயில் நகை கொள்ளை பிளான்,அதில் கோகுலத்தில் கண்ணன் இல்லையோ பாடல், நாகையாவின் தவிப்பு, என செல்லும் திரைக்கதையின் முடிவில் தங்கப்பதக்கம் இளமை சௌத்ரீயாக வத்து நிற்பார் ராஜா! புல் போலீஸ் யூனிபார்மோடு.இத்தனை நேரம் ஸ்டைல் காட்டிய ராஜாவா அது! செம அதிர்ச்சி பாலாஜி கூட்டத்திற்கு  மட்டுமல்ல.ரசிகர்களாகிய நமக்கும் தான்.ஆனால் அது நமக்கு இன்ப அதிர்ச்சி!
பின் ரங்காராவை சந்திப்பது, 
நம்பிக்கை பெறுவது என முக்கிய கட்டங்களாய் காட்சிகள் ஒவ்வொன்றும் ஆவலை தூண்டிக் கொண்டேயிருக்கும்.திரைக்கதை ஸ்பீடில் க்ளைமாக்ஸ் வந்து நிற்பதே 
தெரியாது.நீண்ட க்ளைமாக்ஸ் கொண்ட தமிழ் சினிமாக்களில் ஒன்று .எத்தனை ரசனையானது என்பதில் டாப் என சொல்லலாம்.அதிக ஆக்ஷன் இல்லாமல் பேசி பேசியே பல்ஸை எகிற வைப்பார்கள் அத்துணை நடிகர்களும்.தேர்ந்த நடிகர்கள் ...
ஆர் எஸ் மனோகரின் அலறல் 
ரங்காராவின் மிரட்டல்
பண்டரிபாயின் கதறல்
என்று தியேட்டரே அதிறும்.
ராஜாவின் சிரிப்பை என்னவென்று சொல்வது? சொல்லாதவர்கள் தான் யார்? இது போன்ற காட்சிகளில் நடிகர்திலகத்தை தவிர யாரும் நினைவுக்கு வர மாட்டார்கள்.மற்ற காட்சிகள் மட்டும் என்ன? மஞ்சள் கலர்  உடைகளை ஆண்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள். உடுத்தவும் மாட்டார்கள்.ஆனால், நடிகர்திலகத்துக்கு  மட்டும் எப்படி அப்படி அந்த உடை பிரமாதப்படுத்துகிறதோ? 
பண்டரிபாயை அடிக்கையில் ,நடிகர்திலகம் நடிப்பால்  மொத்த க்ளைமாக்ஸையும்
தன் பக்கம் இழுத்து விடுவார்.
ராஜா தீபாவளி படமல்ல.
ஆனால் ரசிகர்களுக்கு அன்றுதான் தீபாவளி!  
🙏🙏🙏
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற